அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான சமீபத்திய மோதலின் தீவிரம் மிகக் கடுமையாகவும் மற்றும் ஆபத்தானதாகவும் இருப்பதை யாரும் உணராமல் இல்லை.
டொனால்ட் ட்ரம்பின் நிகழ்த்தியிருக்கும் படுகொலையாக பார்க்கப்படும் ஈரானிய தளபதி காசெம் சுலேமானீ மரணம், போரை தூண்டிவிடும் ஒரு பொறுப்பற்ற செயல். மேலும் அதிகரித்திருக்கும் பதட்ட நிலையானது மூன்றாம் உலகப்போரை தூண்டி விடுமோ என்ற அச்சம் கூடியதாக இருக்கிறது.
1979ஆம் ஆண்டிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையில் உட்பூசல் தொடர்ந்தாலும் 2018-குப் பிறகு அதாவது அணுஆயுத திட்டத்தை குறைத்துக் கொள்ளும் ஒப்பந்தத்திற்கு இரான் வழங்கிய ஒப்புதலை கலைத்து புதிய ஒப்பந்தத்திற்கு டிரம்ப் நெருக்குதல் கொடுத்ததால் இரு நாடுகளுக்கும் பகைமை உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கிறது.
கடந்த இரண்டு சகாப்தங்களாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான அமெரிக்கா தலைமையிலான போர் மில்லியன் கணக்கான மக்களுக்கு தீவிர பயங்கரவாதம், பேரழிவு, துயரம் மற்றும் துன்பங்களை கொண்டு வந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஈரானுக்கு எதிரான போரும் ஈராக்கில் மற்றொரு இராணுவ மோதலும் நிலைமையை மேலும் மோசமடையவைக்கும். இவற்றின் சாராம்சமாக பிஎஸ்எம் கண்டன கூட்டம் அமைந்தது.
பி எஸ் எம் கண்டனத்தில் முழங்கிய மேலும் சில விஷயங்கள் ....
- அமெரிக்காவிலிருந்து வரும் போர்க்குணமிக்க செயல்களுக்கும் போர்க்குணமிக்க சொல்லாட்சிக்கும் ஒரு முடிவு;
- ஈராக்கிலிருந்து அமெரிக்க துருப்புக்களை உடனடியாக திரும்பப் பெறுதல்;
- மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மற்றொரு போரைத் தவிர்க்க ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் கட்டுப்பாடு;
- ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு முடிவு;
No comments:
Post a Comment