Monday, October 25, 2021

12 - வது மலேசியா திட்டம் - மலேசிய சோசலிசக் கட்சியின் கருத்து மற்றும் எதிர்வினை

 

12 - வது மலேசியா திட்டம் பற்றிய

மலேசிய சோசலிசக் கட்சியின் கருத்து மற்றும் எதிர்வினை

அக்டோபர்- 25

அண்மையில் 12-வது மலேசிய திட்டத்தை பிரதமர் தாக்கல் செய்திருந்தார். 2025-ஆம் ஆண்டு வரை நடப்பில் இருக்கும் சில திட்டங்களும்,  புதிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் புதிய மேம்பாட்டுத் திட்டங்களும் செயற்படும். இந்நிலையில் பிரதமர் டத்தோஶ்ரீ சப்ரி யாக்கோப் வெளியிட்ட 12வது மலேசியத் திட்டத்தில் மலேசிய சோசலிசக் கட்சி சில கருத்துகளையும் முரண்பாடுகளையும் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.


அது தொடர்பான மகஜர் ஒன்றையும் இன்று பிரதமர் துறை அலுவலகத்தில் அக்கட்சி சமர்பித்தது.

இது தொடர்பாக பேசிய மலேசிய கட்சியின் தேசிய தலைவர் டாக்டர் ஜெயகுமார், மலேசிய திட்டம் என்பது நாட்டுக்கும் நாட்டு மக்கள் தொடர்பாகவும் நடப்பில் இருக்கிற  முக்கியமான  பிரச்சினைகளை அரசாங்கத்தின் அணுகுமுறை எப்படி இருக்கிறது என்பதை  கோடிட்டுக் காட்டும் ஒரு திட்டமாகும். இந்நிலையில் தற்போது அமலுக்கு வந்திருக்கும் 12-வது மலேசிய திட்டத்தில், பிரதமர் துறையின் கீழ் இயங்கும் பொருளாதார திட்டமிடல் பிரிவின் கவனத்திற்கு ஆறு முக்கியமான சிக்கல்களை நாங்கள் குரிப்பிட விரும்புகிறோம். மலேசியா எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்கும் உத்திகள் மற்றும் பரிந்துரைகளை மேலும் வலுப்படுத்த இந்த கோரிக்கைகள்  உதவும் என்பது எங்களின்  நம்பிக்கை என்று அவர் கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் பிரதமர்துறை அலுவலகத்தில் காலை 11 மணியளவில் மிக தெளிவாக எழுதப்பட்ட 9 பக்கம் கொண்ட மகஜரை, பிரதம துறை அதிகாரியான டத்தோ இர்வானிடம் கைகளிக்கப்பட்டது. குறிப்பிட்ட மகஜரில் முன்வைக்கப்பட்ட 6 கோரிகைகள் பின்வருமாறு…

1.   1. தொழிலாளர்களின் இழப்பீட்டுப் பங்கு  அதிகரிக்க வேண்டும்.

2.   2. B40-மக்கள் பிரிவு  மத்தியில் தொழிலாளர் இழப்பீடு பிரிவை (BPP) அதிகரிப்பதற்கான முயற்சிகளை 12-வது மலேசியத் திட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறிவிட்டது.

3.   3. "மலிவு வீடு" என்ற சொல் பற்றிய குழப்பம்.

4.  4.  மலிவு விலை வீடுகள் தொடர்பான இலக்குகளை அடைவதில் அரசாங்கம் தீவிர அக்கறை காட்டவில்லை.

5.   5. மருத்துவச் சேவைகளின் விலை அரசுக்கு நிதிச்சுமை என்ற அணுகுமுறை குறைக்கப்பட வேண்டும்.

6.   6. 12-வது மலேசியத் திட்டத்தில் "கிரீன்வாஷிங்" கூறுகள்

மேற்குறிப்பிட்டிருக்கும் 6 விஷயங்களில் 12-வது மலேசியத் திட்டத்தில் திருத்திகரமான திட்டம் இல்லாததால் இந்தக் கோரிகைகளை பி.எஸ்.எம் முன்வைத்திருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

 

 

Wednesday, October 20, 2021

குறைந்தபட்ச சம்பள உயர்வு பற்றி நல்ல செய்தி வரும் - டத்தோஶ்ரீ சரவணன்


 யதார்த்தம் VS  நம்பிக்கை- இரண்டாம் நாள் மார்ஹேன் கலந்துரையாடல்

 கூடிய விரைவில் குறைந்தபட்ச  சம்பள உயர்வு பற்றி நல்ல செய்தி வரும்     - டத்தோஶ்ரீ சரவணன்

இன்று, உலகின் அனைத்து நாடுகளும் தொற்றுநோய்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றன. ஆனால் நம் நாட்டில், இப்பிரச்னைகளோடு  அரசியல் நெருக்கடியும் இணைந்துள்ளது  என்று  மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.  மர்ஹான் குழுவினரோடு தொழிலாளர்கள் தொடர்புடைய மேலும் 4 குழுக்களான மலேசிய சர்வதேச தொழிற்சங்க கவுன்சில் (UNI-MLC), அரசு மருத்துவமனை தொழிலாளர் சங்கம், தெற்கு மண்டல மின்னணுவியல் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு ஒப்பந்த தொழிலாளர் ஒருங்கிணைப்பு குழு (JPKK) ஆகிய இயக்கங்களுடன் இணைந்து, தொழிலாளர் குரல்: யதார்த்தம் மற்றும் நம்பிக்கை என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் டத்தோஸ்ரீ எம். சரவணன் பேசினார்.  

முன்னதாக வறுமை ஒழிப்பு தினத்தை பாமர மக்களுக்கான ’ தொடர் கருத்தரங்கில் 7 வெவ்வேறு பிரிவுகளில் மெய்நிகர் வழியாகவும் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில், முகநூல் தளத்திலும் zoom வழியாகவும் இணைவதற்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

 


UNI-MLC-யைச் சேர்ந்த  டத்தோ முகமது ஷாஃபி மம்மாலின் உரையோடு நிகழ்ச்சி தொடக்கம் கண்டது. கோவிட் பெறுந்தொற்று காரணத்தினால்    வணிக நடவடிக்கைகள் முடக்கியதோடு  நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். தொழிலாளர்களுக்கு எதிரான பாகுபாட்டைத் தவிர்ப்பதற்காக தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து அரசாங்கத்தால் ஓர் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் டத்தோ ஷஃபி பரிந்துரைத்தார். தொழிலாளர்களைப் பாதுகாக்க தொழிலாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்றார் அவர்.

பின்னர்  டத்தோஸ்ரீ எம். சரவணன் தனது அதிகாரப்பூர்வமான  உரையை நிகழ்த்தினார்.  உரையின்  போது தொழிலாளர்கள் மற்றும் அது சார்ந்திருக்கும் தொழில்துறைக்கு உதவுவதற்காக அவரது அமைச்சகம் நடத்திய பல்வேறு முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். இருப்பினும், தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் நலன்களை சமநிலைப்படுத்தும் ஒரு முக்கியமான பணி தனக்கு இருப்பதையும் அவர் ஒப்புக் கொண்டார், ஏனெனில் இந்த இக்கட்டான காலகட்டத்தில்  ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதால் நாட்டில் எந்த தொழிற்துறையும் முடங்கிவிடக்கூடாது என்பதை உறுதி செய்யும் பொறுப்பும் அவருக்கு உள்ளது என்பதை அவர் தெளிவு படுத்தினார்.

ஆன்லைன் வழியாக பெறப்பட்ட 10,000 க்கும் மேற்பட்ட புகார்கள்  விண்ணப்பத்தை அமைச்சகம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்றும், ஊழியர்களின் அடையாளத்தை பாதுகாக்க இது சிறந்த நடவடிக்கை என்றும் அதே நேரத்தில் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார். பல வழக்குகளை இந்த வழியில் தீர்க்க முடிந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

குறைந்தபட்ச ஊதிய விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்திலும், ‘பாமர மக்களுக்கான’ கலந்துரையாடல் முதல் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் கூடிய விரைவில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு குறித்த நல்ல செய்தி வரும் என்று அமைச்சர் கூறினார். குறைந்தபட்ச ஊதியத்தின் மறு மதிப்பீடு 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட வேண்டும். தொழிலாளர்களின் கவலைகளைக் கேட்டறிய அவரது அலுவலக கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

தொடக்க அமர்வுக்குப் பிறகு, தொடர்ந்து 4 குழு உறுப்பினர்களின் குழு விவாதம் நடைபெற்றது. முதல் குழு உறுப்பினரான தெற்கு மண்டல மின்னணுவியல் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த முகமது சாலே, சில முதலாளிகளின் பொறுப்பற்ற அணுகுமுறை மற்றும் குழப்பமான அதே வேளையில் சிக்கலான SOP-களின் காரணமாக பல தொழிலாளர்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டனர் என்று கூறினார். தொழிற்சங்க உறுப்பினர்களை 30% அதிகரிப்பை அடைய முந்தைய அரசாங்க முன்மொழிவுக்கு என்ன நடந்தது என்று அவர் கேள்வி எழுப்பினார். காரணம்  இன்று 7%-க்கும் குறைவான தொழிலாளர்கள் மட்டுமே தொழிற்சங்க உறுப்பினர்களாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து, சபா மாநிலத்தின் வங்கிகள் தொழிற்சங்கத்தின் தலைவரான மார்கரெட் சின், பேசியபோது, அவர் வங்கி ஊழியர்களின் பிரச்சனையை விவரித்தார், குறிப்பாக தொற்றுநோய்களின் போது டிஜிட்டல் மயமாக்கல் வங்கியின் முக்கிய நிகழ்ச்சி நிரலாகும், இது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அதே நேரத்தில் ஊழியர்களின் பணிச்சுமையையும் அதிகரிக்கும். இதனால் பணியாளர்களை இந்தத் திட்டம் பாதிக்கிறது. இந்த நிலை பல்வேறு பணிகளை (பல்பணி) சுமக்கும் ஊழியர்களின் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது என்று தெரிவித்தார்.

அடுத்து, அரசு மருத்துவமனை தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தொழில்துறை தொடர்பு அதிகாரியான தோழர் செல்வம் பேசுகையில், 1960 களில் ஒரு முறை ரயில்வே தொழிலாளர் சங்கம் (KTMB) எதிர்த்த ஒப்பந்த அமைப்பின் வரலாறு குறித்து விவரித்தார். 1981 இல் பிரதமராக இருந்த தனியார்மயமாக்கலின் தந்தை டாக்டர் மகாதீர் முகமட் அவர்களால்தான்  தொழிலாளர்  ஒப்பந்த முறை பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டது. நிரந்தர பணியாளர்கள் எவ்வாறு தங்கள் வேலை பாதுகாப்பு உரிமைகளை இழக்கிறார்கள் என்றும் ஒப்பந்த முறையின் கீழ் நிரந்தர பணியாளர்கள் எவ்வாறு வைக்கப்படுகிறார்கள் என்பதையும் தோழர் செல்வம் சுட்டிக்காட்டினார். ஒப்பந்த வேலை தற்காலிக அல்லது இடைக்கால வேலைக்கு மட்டுமே இருக்கும் வேலைவாய்ப்பு சட்டம் 1955 இன் கீழ் இது விதி மீறல் ஆகும் என்று அவர் மேலும் விளக்கம் கொடுத்தார்.

இறுதி பேச்சாளராக ஒப்பந்த தொழிலாளியான புவான் வர்தா இப்ராகிம் பேசினார். பெர்லிஸ் மாநிலத்தில் பள்ளி துப்புரவு தொழிலாளியாக வேலை செய்யும் அவர், குறைந்த சம்பளம் மற்றும் சம்பள உயர்வு இல்லாத பிரச்சினையை பகிர்ந்து கொண்டார். EPF செலுத்தாதது, சட்டவிரோத ஊதியக் குறைப்பு போன்ற ஒப்பந்ததாரர்களின் தொழிலாளர் சட்ட மீறல்களையும் புவான் வர்தா வெளிப்படுத்தினார்.  ஒப்பந்த முறையை ஒழித்தால் மட்டுமே இந்த B40 தொழிலாளர்களை வறுமையிலிருந்து விடுவிக்க முடியும் என்று தமது உரையில் அவர் வாதிட்டார்.

தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வேலை பாதுகாப்பு ஆகியவை பறிபோகாமல் இருக்க ஒரு சிறந்த சூழலை உருவாக்க தொழிலாளர்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்ற உறுதியுடன், சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிறைவடைந்தது.

Tuesday, October 19, 2021

பூர்வக்குடி மக்களின் நில ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது

 

சமூக ஆர்வலர்களின் முன்னெடுப்பில், இணையம் வழியாக நடத்தப்பட்ட ‘பாமர மக்களுக்கான ’ தொடர் கருத்தரங்கில், நான்காம் நாள் சந்திப்பில் (அக்டோபர் 15, 2021) COVID-19- இன் போது பூர்வக்குடி மக்களின் நில ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது என்ற தலைப்பில் உரையாடப்பட்டது.

கருத்தரங்கில் பேச்சாளர்களாக வாதிட்ட கிட்டத்தட்ட அனைவருமே,  பழங்குடியினர் சமூகத்தின் உரிமைகள் மற்றும் நலன்கள் கூட்டாட்சி அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன என்பதை ஒப்புக்கொண்டாலும் உண்மையில் பூர்வக்குடிகளின் நில அபகரிப்பு மீதான அத்துமீறல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட விவகாரங்கள்  அதிகரித்து வருகிறது என்பதை பதிவு செய்தனர். நிலப் பிரச்சினைகள் மற்றும் நிலச் சட்டங்கள் தொடர்பாகவும் இந்தக் கருத்தரங்கில் பேசப்பட்டது.

Centre for Orang Asli Concerns (COAC) எனும் பழங்குடியினர் மையத்தின் மூத்த செயற்பாட்டாளரான  கோலின் நிக்கோலஸ் பேசுகையில் நமது நாடு கோவிட் -19 நடமாட்டக் கட்டுப்பாட்டு நிலையில் இருந்தபோதும், பூர்வக்குடிகளின் நில ஆக்கிரமிப்பு மற்றும் வனங்களில் மரம் வெட்டுதல் உள்ளிட்ட வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை தெளிவான ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கருத்தரங்கில் தீபகற்பத்தைச் சேர்ந்த பூர்வக்குடி போராட்டவாதிகளும், சபா சரவாக் மாநில பூர்வக்குடி போராட்டவாதிகளும் இவர்களோடு 80-க்கும் மேற்பட்ட சமூக ஆர்வளர்களும் கலந்துகொண்டனர். குறிப்பாக Jaringan Kampung Orang Asli Semenanjung Malaysia (JKOASM) அமைப்பின் தலைவர் திஜா யோக் சோபில், சபா மாநிலத்தின் Pacos Trust அமைப்பைச் சேர்ந்த காலூஸ் அஃதோய், Jaringan Orang Asal Se-Malaysia (JOAS) அமைப்பின் முன்னாள் தலைவர் யூஸ்ரி அச்சோன்,  சரவாக் மாநிலத்தின் Majlis Adat Istiadat Sarawak அமைப்பைச் சேர்ந்த முன்னாள் துணைத் தலைவர் நிக்கோலஸ் பாவின், Sahabat Alam Malaysia (SAM) அமைப்பைச் சேர்ந்த ஷாமிளா அரிஃபின் இவர்களோடு Centre for Orang Asli Concerns (COAC) அமைப்பைச் சேர்ந்த  கோலின் நிக்கோலஸ் மற்றும் மனித உரிமை வழக்கறிஞரான சித்தி காசிம் ஆகியோர் பிரதான பேச்சாளராக  இந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர். 

கோலின் மற்றும் காலஸ் ஆகிய இரண்டு ஆர்வலர்கள் பேசுகையில், வழக்கத்தைவிட 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் COIVD-19 தொற்றுநோய் 45 % கடுமையாக இருந்த நேரத்தில் பூர்வக்குடிகளின் நில ஆக்ரமிப்பு  தீவிரமாக நடந்ததை விவரித்தனர்.  கோவிஸ் -19 க்கு முன்னர் வழங்கப்பட்ட நில உரிமையை அடிப்படையாகக் கொண்ட ஆக்கிரமிப்பு பணிகள், கோவிட் தொற்றின்போதும் நடந்து கொண்டிருந்தன என்று காலஸ் தனது அவதானிப்புகளின்படி விளக்கினார். இதற்கிடையில், பல லாரிகள் மரம் வெட்டும் பகுதியில் இருந்து மரங்களை எடுக்க தயாராக இருப்பதைக் காட்டும் வீடியோவையும் அந்நிகழ்ச்சியில கோலின் பதிவுசெய்தார்.

நமது நாட்டில், அதாவது தீபகற்பம், சரவாக் மற்றும் சபா ஆகியவற்றில் மூன்று வெவ்வேறு வழக்கமான நில உடைமை சட்டங்கள் கொண்டிருப்பதை  மிக கவனமுடன் இந்தக் கருந்தரங்கில் பேசப்பட்டது.  அதேவேளையில் அனுபவமில்லாத தீபகற்ப நீதிபதிகளால் சரவாகில் நிலம் தொடர்பான வழக்குகளிலும் அளிக்கப்பட்டிருக்கும் அலட்சியமான தீர்ப்புகளை அவர் சுட்டிக்காட்டினார்.

திஜாவும் யூஸ்ரியும் பேசும்போது  நில ஆக்கிரமிப்பு தொடர்பாக போராடாத பூர்வக்குடிகளை  குற்றம் சாட்டவோ அல்லது கேள்வி கேட்கவோ முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளனர். வழக்கமான நில ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைக்கும் ஒரு பூர்வக்குடி கிராமத்தில் உள்ள ஓரிரு பழங்குடியினரை, பழங்குடி நில ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஒரு பெரிய பூர்வக்குடி குழுவுடன் சமப்படுத்த முடியாது. தங்கள் குடும்ப வருமானத்திற்காக நிலத்தின் ஆக்கிரமிப்பாளர்களின் கீழ்  சில பூர்வக்குடி மக்கள் வேலை செய்கின்றனர்.  தங்கள் வருமான ஆதாரத்தை இழந்த பழங்குடி மக்களும் உள்ளனர்.

டுரியான் தோட்டங்கள் பூர்வக்குடிகளுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கிறதா அல்லது அது ஓர் அச்சுறுத்தலாக இருக்கிறதா என்ற கேள்விக்கு, தீபகற்பத்தில் உள்ள பழங்குடி ஆர்வலர்கள் கூற்றுப்படி, வன நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால், அங்கு மேலும் - மேலும் தீமைகள் ஏற்படுவதாகவும் அவர்களின் வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு அதிக சிக்கல்கள் ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து ஷாமிலா பேசுகையில், பூர்வக்குடிகளின் “பூர்வீகம்” மற்றும்  "பூர்வீக நிலம்” என்ற வார்த்தையின் பொருள் மற்றும் அர்த்ததை விளக்கினார், ஏனெனில் பூர்வக்குடிகளின் சட்டத்தின் கீழ் பூர்வீக நிலம் அங்கீகரிக்கப்பட்டது. பூர்வக்குடிகளின் பூர்வீக நிலமானது, பெறுநிருவனங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் மரம் வெட்டுதலுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து தோட்டங்கள் மற்றும் சுரங்கங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. தமது பூர்வீக நிலங்களைப் பாதுகாத்த பழங்குடி மக்களின் பெரும் போராட்டத்தையும் அவர் விவரித்தார், அப்போராட்டத்தில் பலர் நீண்ட காலமாக சிறையில் இருந்தனர், ஆனால் அந்த விவகாரங்கள் ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. “பெர்சே” போராட்டத்தில் அதன் ஆர்வலர்கள் குறுகிய காலத்திற்கு மட்டுமே சிறையில் இருந்தபோதிலும் பெரும் விளம்பரத்தைப் பெற்றனர் என்று அவர் ஒரு ஒப்பீடு செய்தார்.

 

62% மலேசியர்கள் முறையான சமூகப் பாதுகாப்பு காப்புறுதி பெறவில்லை. - யாசின் அகமட்



சமூக ஆர்வலர்களின் முன்னெடுப்பில், அக். 12 முதல் 17 வரை, ‘பாமர மக்களுக்கான ’ கருத்தரங்கு இணையம் வழியாக நடந்துகொண்டிருக்கிறது. மார்ஹேன் கலந்துரையாடல் 

மூன்றாம் நாள்...

நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் உரிமைகள் நிலைநாட்டப்படவில்லை; இவை எல்லா இடங்களிலும் முறைசாரா தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் விஷயங்கள். தாமதமான சேவைக்கு நீங்கள் திட்டும் இ-ஹெயிலிங் டிரைவர்கள் மற்றும் உணவு விநியோகம் செய்பவர்களில் தொடங்கி அதிகாலையில் நாசி லெமாக் விற்கும் பெண்மணி,  பிறருக்கு எல்லாவித அலங்காரங்களையும் முடித்த பின்னும் எந்தவித மாற்றமும் இல்லாத ஒப்பனை கலைஞர்கள், ஒருபோதும் வெளியிடாத பிரசுரங்களுக்கு முடிவில்லாமல் எழுதுகிற எழுத்தாளர்கள், நாள் முழுதும் உணவில்லாமல் உழைக்கிற மேடை நாடக இயக்குனர்கள், வெளிச்சமில்லாத இடங்களில் காயங்களுடன் காத்திருக்கும் பாலியல் தொழிலாளர்கள் போன்ற தொழில் செய்யும் மக்களை பற்றித்தான் நாம் பேசியாக வேண்டும். ஆனால், அவர்களை இந்த நாடு புறக்கணிக்கிறது. 

இவர்களின் சவால்கள் மற்றும் எதிர்காலம்  குறித்துத்தான் கபுங்கன் மர்ஹேன் மன்றத்தில் கிக் தொழிலாளர்கள் என்ற  தலைப்பில் பேசப்பட்டது. JPTF (முறைசாரா தொழிலாளர்களின் கூட்டணி) மற்றும் சோசியலிச இளைஞர்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் முறைசாரா தொழிலாளர்களான இ-ஹேலிங் டிரைவர் மற்றும் பாலியல் தொழிலாளர் சமூகத்தின் பிரதிநிதி போன்றவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.இரண்டு மணி நேர கலந்துரையாடலில் =, முறைசாரா தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சுமைகள் , அவர்கள் எதிர்நோக்கும் பாகுபாடுகள் குறித்து பேசப்பட்டதோடு முறைசாரா தொழிலாளர் துறையின் பகுப்பாய்வு  மற்றும் மலேசியாவில் அனைத்து முறைசாரா தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரமும்  தொடங்கப்பட்டது.

KWSP யின் அறிக்கையின்படி, 62% உழைக்கும் வயதுடைய மலேசியர்களுக்கு எந்த முறையான சமூகப் பாதுகாப்பு காப்புறுதியும் இல்லை.இந்த 62% உழைக்கும் வயது மலேசியர்கள் முறைசாரா தொழிலாளர்களாக உள்ளனர்.மேலும், முறையான துறைகளில் பணிபுரிபவர்களுடன் ஒப்பிடும்போது பல பொருளாதார சவால்களுக்கு ஆளாகியுள்ளனர். வேலைவாய்ப்பு சட்டம் 1955 இன் கீழ் குறைந்தபட்ச சட்டபூர்வமான நன்மைக்கு உத்தரவாதம் இல்லை, குறைந்தபட்ச ஊதியத்திற்கு உத்தரவாதம் இல்லை, தொழிலாளர் பாதுகாப்பு இல்லை, தொழிற்சங்க பேரம் பேச தொழிலாளர் உரிமைகள் இல்லை போன்றவை பல  சவால்களை உருவாக்கியுள்ளன.

பாலியல் தொழிலாளர்களின் சிக்கல்களை கையாளும் சமூக செயல்பாட்டாளர்களான சீட்  அறக்கட்டளையை சேர்ந்த ஜேன் மற்றும் நாஷா, பாலியல் தொழிலாளர்கள் குண்டர் கும்பல், வாடிக்கையாளர்கள் மற்றும் காதலர்களால் கொடுமை  மற்றும் கொலை செய்யப்படுதல் போன்ற இன்னல்களை எதிர்நோக்குகிறார்கள் என கூறினர்.இவை முறைசாரா தொழிலாளர்களின் ஒரு பிரிவான இவர்கள் எதிர்நோக்கும் உண்மையான வாழ்வு. இவர்கள் பெரும்பான்மை சமூகத்தால் ஒதுக்கப்படுகின்றனர். 

இதற்கிடையில் இ-ஹெயிலிங் தொழிலாளர்களின் அவலமும் பகிரப்பட்டது. இ-ஹெயிலிங் தொழிலாளர்களான சியோங், மணி மற்றும் முவாஸ் ஆகிய மூவர் தங்கள் வேலையைப் பற்றி பேசினார்கள்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் அடிப்படைத் தேவையாகக் கருதப்படும் சமூகப் பாதுகாப்பு இந்த தொழிலாளர்களுக்கு இல்லாத ஒன்று. E- ஹேலிங் உணவு விநியோகஸ்தர் முனாஸ் இஷாக், மின்-ஹெயிலிங் டிரைவர்கள் தங்கள் நிறுவனத்தால் ஒரு பொருளைப் போல நடத்தப்படுவதாகவும் அவர்களில் பாதுகாப்பு அவர்களது உரிமை கருதப்படவில்லை என கூறினார்.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் கொரோனா தொற்றுநோய் காரணமாக, பல இ-ஹேலிங் டிரைவர்கள் முதல் பாலியல் தொழிலாளர்கள்  வரை  முறைசாரா தொழிலாளர்களாக இருக்க வேண்டியிருந்தது.குறிப்பாக திருநங்கைகளுக்கு,  சிறுபான்மை சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பது அவர்களுக்கு சமூகத்தில் மிகக் குறைந்த வாய்ப்பை வழங்குகிறது.கொரோனா நோய்த்தொற்றுக்கு முன்பு அழகுசாதன நிபுணர்கள், சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களாக இருந்தவர்கள் நிலையற்ற பொருளாதாரம் காரணமாக பாலியல் வேலையை நாட வேண்டியிருந்தது. மேலும் பாலியல் தொழிலாளர்களாக இருப்பதன் மூலம், மேலே சொன்னது போல் அவர்கள் இப்போது பல்வேறு பாகுபாட்டிற்கு ஆளாகியுள்ளனர்.

முறைசாரா தொழிலாளர் சமூகத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு பகுப்பாய்வு நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாகும். முறைசாரா தொழிலாளர்களின் ஒரு சிறிய மாதிரியின் பின்னூட்டத்தின் அடிப்படையில் பின்வருபவை முன்னிலைப்படுத்தப்பட்டன; கணக்கெடுப்பின்படி முறைசாரா தொழிலாளர்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் அவர்களின் பாதி வருமானத்தை கூட எட்டவில்லை  மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

பெரும்பாலானவர்களுக்கு, KWSP அல்லது PERKESO போன்ற எந்த சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழும் முறைசாரா தொழிலாளர்கள் பாதுகாக்கப்படவில்லை. மேலும், கணக்கெடுக்கப்பட்ட முறைசாரா தொழிலாளர்கள் அரசாங்கத்தின் உதவியுடன் கூட அவர்களின் எதிர்காலம் நிச்சயமற்றது என்று தெரிவித்தனர். முறைசாரா தொழிலாளர்களாக இருப்பதால் அவர்கள் பாதுகாப்பாக இல்லை. 

கணக்கெடுப்பு முறைசாரா தொழிலாளர்களிடமிருந்து கோரிக்கைகளையும் சேகரித்தது. சம்பாதித்த ஊதியத்தை உயர்த்துவது ,அவர்களுக்குத் தேவையான சமூகப் பாதுகாப்பை வழங்குவது மற்றும் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டாத  தங்கள் தொழிலாளர்களை வெளிப்படையாக துஷ்பிரயோகம் செய்யும் நிறுவனங்களுக்கு கவனம் செலுத்துவது ஆகியவை மிக முக்கியமான கோரிக்கைகளாகும்.

பாலியல் தொழிலாளர்களின் பிரதிநிதியின் கோரிக்கைகளில் ஊக்கத்தொகை மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய அரசாங்கத்தின் உதவி மற்றும் பாலியல் தொழிலில் இருந்து அவர்களை வெளியேற்றுவது ஆகியவை அடங்கும்.

முறைசாரா தொழிலாளர்கள் பொருளாதாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவர்களின் இருப்பு சமூகத்தின் பார்வையில் இருந்து மறுக்க முடியாத ஒன்று மற்றும் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பு அளவிட முடியாதது. ஆனால் அவர்கள் மீதான பாகுபாடு மற்றும் துஷ்பிரயோகம் என்று வரும்போதும் , வாழ்வாதாரம் என வரும்போதும் மிக சுலபமாக புறக்கணிக்கப்பட்டு விடுகின்றனர்.சமூகத்தில், இதுபோன்ற அப்பட்டமான அநீதிகளை நாம் ஏன் கவனிக்காமல் இருக்க அனுமதிக்கிறோம்?கபுங்கன் மர்ஹேன் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து குடிமக்களும் சமுதாயத்தில் அவர்கள் எந்தப் பங்கை வகித்தாலும், அவர்களுக்கு ஒரு சிறந்த நிலை தேவை என்று நாங்கள் கோருகிறோம். அது போதுமான ஊதியம் இல்லாத  ஈ-ஹேலிங் டிரைவர்கள் முதல்,நல்ல எதிர்காலம் அமையாதா என காத்திருக்கும் பாலியல் தொழிலாளர்கள் பொருளாதாரத்தை தாண்டி முக்கியமானவர்கள்.

அனைத்து முறைசாரா துறைகளும் சேர்ந்து குரல் கொடுத்து தங்கள் சுமையை பகிர்ந்து கொள்ளும் ஒரு தளமாக டெலிக்ராம் செயலி குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்த முதிய முயற்ச்சிக்கு ஆதரவு தர விரும்புவோர் இணையலாம்.இணைப்பு பின்வருமாறு : https://t.me/jptf_psm 

 

“பி40 பிரிவுக்கு வீடு:சாத்தியமா அல்லது கனவா?


சமூக ஆர்வலர்களின் முன்னெடுப்பில், அக். 12 முதல் 17 வரை, ‘பாமர மக்களுக்கானகருத்தரங்கு இணையம் வழியாக நடந்துகொண்டிருக்கிறது. மார்ஹேன் கலந்துரையாடல் முதலாம் நாளில்....

பி.40 பிரிவுக்கு ஒரு வீடு அமையுமா என்பதின் அர்த்தம் என்ன? வீடு மற்றும் ஏழ்மை தொடர்பான கலந்துரையாடலில்  சாமானிய மக்களின் வீடுகளை விற்பனை சந்தையிலிருந்து  வெளியேற்ற வேண்டும் . வீட்டுவசதி என்பது அடைப்படை உரிமை .  லாபத்தை முன்னிலைப்படுத்தும் வர்த்தகம் அல்ல என்ற கோட்பாட்டினை முன்னிருத்தி பேசப்பட்டது.

 “பி40 பிரிவுக்கு வீடு:சாத்தியமா அல்லது கனவா? என்ற தலைப்பில்  அந்த கலந்துரையாடல் தொடங்கியது.  இந்தச் சந்திப்பு கூட்டத்தில் சூம் செயலி மற்றும் முகபுத்தகத்தின் வழி 160 பேருக்கு மேல் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்வு சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது.


சந்திப்பு கூட்டத்தில் ஏழ்மை மற்றும் வீட்டுவசதி குறித்து பேச்சாளர்கள் பேச துவங்கினர். வீடு வாங்குவதில் பாமர மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள், குறைந்த விலை வீடுகளில் இருக்கும் தரக்குறைவு, வசதி குறைவான வீடமைப்பு மற்றும் நீண்ட கால வீட்டு கடன் போன்றவை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. தோட்ட தொழிலாளர்களின் பிரதிநிதியாக கலந்துகொண்டவர் நெடுங்காலமாக குறைந்த சம்பளம் எவ்வாறு அவர்களை சொந்த வீடு வாங்க வழியில்லாமல் செய்திருந்தது எனவும் குறைந்தபட்ச ஊதியம் மிக சமீப காலமாகத்தான் கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் கூறினார்.

மேலும் அவர் தோட்டங்களை விட்டு வெளியேற விரும்பவில்லை எனவும் அரசு அவர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அந்த வீடமைப்பு திட் டம் மாத தவணை (sewa  beli ) கீழ் கொடுக்கப்படவேண்டும் என பரிந்துரைத்தார். உணர்ச்சிகரமாக பேசிய அவர் குடியேறியர்கள் ஆக்கிரமைப்பாளர்கள் அல்லர் எனவும் வீட்டுரிமைக்காக தோட்ட மக்கள் தொடர்ந்து குரல் கொடுப்பதோடு வீட்டுப் பிரச்சினையை எதிர்த்து போராட அனைவரும் முன்வர வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து, இளைஞர்களின் பிரதிநிதியாக கலந்துக்கொண்ட நபர் எவ்வாறு இளைஞர்கள் பலர்  வீட்டு மாத தவணை  கட்ட முடியாமல் சிரமப்படுகிறார்கள் என்பதை விளக்கினார். பி40 பிரிவில் இருக்கும் இளைஞர்கள் தங்களுடம் சேர்த்து  தங்களது பெற்றோர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என வலியுறுத்தினார். அவர் இளைஞர்கள் சம்பள உயர்வுக்காகவும் போராட வேண்டும் என கூறினார்.

மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பின் பராமரிப்பு குறித்து பேசுகையில்  நகராட்சி மன்றத்திடம் பராமரிப்பு பொறுப்பை வழங்குவதற்கும் ஒரே வரி செலுத்தும் முறைக்கும் பலர் சம்மதம் தெரிவித்தனர் . வீட்டுரிவசதி குறித்து குரல் கொடுப்பவர்கள் சாமானிய மக்களாக இருக்கும் பட்சத்தில் அவை மக்களின் அடிப்படை  உரிமையாக பார்க்கவேண்டுமே தவிர லாபத்தை முன்னிலைப்படுத்தும் வியாபார நோக்கத்த்தோடு பார்க்கக்கூடாது . தொடர்ந்து பேசிய இளைஞர்களின் பிரதிநிதி, பாமர மக்களுக்கான வீடமைப்பு திட்டத்தில்  சில முக்கியமான விடயங்களை வலியுறுத்தினார்.

 

1.RM100,000 க்கு கீழான மலிவு வீடுகளை உருவாக்குங்கள்

2.அதிக பிபிஆர் வாடகை வீடுகளை உருவாக்குங்கள்

3.கட்டாயத்தின் பேரில் வெளியேற்றப்படுவதை நிறுத்துங்கள்

4. பாமர மக்களின் வீடமைப்பு திட்டத்தின்  கீழ் உருவான விடைகளை ஏலம் விடாதீர்கள்.

5.குறைந்த விலை கொண்ட குடியிருப்புகளை பராமரிப்பது நகராட்சி மன்றத்தால்  கையகப்படுத்தப்படுத்தப்பட வேண்டும்.

6. பி40/எம்40 மக்களுக்கான வீட்டுமனை திட்ட அமைப்பை (trust bina ) உருவாக்குங்கள். தனியார் மேம்பாட்டாளர்களுக்கு கொடுக்க கூடாது.

அடுக்குமாடி குறியிருப்பின் பராமரிப்பு குறித்தும் சந்தை விலையில் ஒரு வீட்டை வாங்குவதற்கு போதுமானதாக சம்பளமின்மை குறித்தும்  சந்திப்பு கூட்டம்  முழுதும் அடிக்கடி விவாதிக்கப்பட்டது. தற்போதைய காலக்கட்டத்தில் வீட்டு விலை சாமானிய மக்களின் திறனுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது எனவும் அரசு இவ்விவகாரத்தில் தலையிட மக்கள் குரல் எழுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

 

 

Thursday, October 7, 2021

சமூக ஆர்வலர்களின் முன்னெடுப்பில், அக். 12 முதல் 17 வரை, ‘பாமர மக்களுக்கான ’ கருத்தரங்கு

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மார்ஹேன் அணி (Gabungan Marhaen), மார்ஹேன் ஒன்றுகூடல் (Himpunan Marhaen) கருத்தரங்கு நிகழ்ச்சியை ஐந்து நாள் விழாவாக ஏற்பாடு செய்துள்ளது. 

(மார்ஹேன் என்பது – சாமானிய மக்கள் அல்லது பாமர மக்கள்   அல்லது  ஓரங்கட்டப்பட்ட மக்கள் என்று அறியப்படுகிற   – விவசாயிகள், மீனவர்கள், உடல் உழைப்புச் சார்ந்த தொழிலாளிகள் உள்ளிட்டவர்களை  குறிப்பதாகும்…)

“இந்தத் தொற்றுநோய் காலத்தின் போது, சாமானிய மக்கள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைக்க ஒன்றிணைவதற்கான ஒரு தளமாக இது அமையும்.

“ஒரு வருடத்திற்கும் மேலாக, அடித்தட்டு மக்கள் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, இந்த ஐந்து நாள் கருத்தரங்கு அந்தப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த உள்ளது. அதே சமயம், மலேசிய அரசியல் தளத்தில் அவர்களையும் முக்கிய விளையாட்டாளர்களாகக் காட்டவுள்ளது,” என்று  ஏற்பாட்டாளர்களில் ஒருவரான, பிஎஸ்எம் துணைத் தலைவர் எஸ் அருட்செல்வன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

தேசிய அரசியலில், “இனம், மதம் மற்றும் அதிகாரப் பறிப்பு” ஆகியவற்றின் ஆதிக்கம், அடிமட்ட ஆர்வலர்களாலும் சமூகங்களாலும் எழுப்பப்படும் குரல்களையும் அவர்களின் பணிகளையும் பெரும்பாலும் மறைத்துவிடுகிறது என்று அருட்செல்வன் கூறினார்.

கலை பயிற்சியாளரும், நடுவருமான ரோஷீன் பாத்திமா, இந்த விழாவின் போது நடத்தப்படும் கருத்தரங்குகள், மலிவு விலை வீடுகள், ‘கிக்’ பொருளாதாரத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் உணவு பாதுகாப்பு பிரச்சினைகள் போன்ற இன்னும் பல விஷயங்களை முன்னிலைப்படுத்தும் என்றார்.

2017-இல் உருவாக்கப்பட்ட மார்ஹேன் அணி, அடிமட்ட மக்கள், சமூகம் மற்றும் தொழிற்சங்கக் கூட்டணிகள், என ஒத்த கருத்துகொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அடிமட்ட சமூகங்களின் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களின் கூட்டணியாகும்.

இந்தக் கூட்டணி, அனைத்து மார்ஹேன் சமூகங்களையும், வேலைத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் இணைத்து, பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.



அதன் உறுப்பினர்களில், அரசு ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு (ஜேபிகேகே – Jaringan Pekerja Kontrak Kerajaan), பண்ணை தொழிலாளர்கள் ஆதரவு செயற்குழு (ஜே.எஸ்.எம்.எல். – Jawatankuasa Penyokong Pekerja Ladang), நகர முன்னோடிகள் மற்றும் வீடு கூட்டணி (ஜிபிபிபி – Gabungan Peneroka dan Perumahan Bandar), குறைந்த விலை அடுக்குமாடி வீடு செயற்குழு, விவசாயிகள் கூட்டணி, ஓராங் அஸ்லி / பூர்வக்குடி சமூகங்கள், சுற்றுச்சூழல் கூட்டணி மற்றும் முறைசாரா துறை தொழிலாளர்கள் கூட்டணி ஆகியவை அடங்கும்.

இயங்கலை கூட்டங்கள்

செய்தியாளர் சந்திப்பில், அக்கூட்டணியினர் இணைந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 2019-ம் ஆண்டு முழுவதும், பல அடிமட்ட கூட்டமைப்புகளை நிறுவி செயல்பட்டதாகவும், அரசாங்கத்திற்குப் பல கோரிக்கைகளைச் சமர்ப்பித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பிப்ரவரி 2020-இல், கோவிட் -19 தொற்றுநோயின் தொடக்கமும் ஷெரட்டன் நகர்வால் ஏற்பட்ட அரசியல் ஏமாற்றமும் அக்குழுவின் கோரிக்கை முயற்சிகளில் அரசாங்கத்தின் கவனத்தைக் கொண்டு வருவதைக் கடினமாக்கியது.

நாட்டைச் சீரழித்துள்ள அரசியல் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, மக்கள் மற்றும் அடிமட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள இயக்கங்கள் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்க இது சரியான நேரம் என்று உணர்ந்ததாக அருட்செல்வன் கூறினார்.

‘மார்ஹேன் ஒன்றுகூடல்’ நிகழ்ச்சி, அக்டோபர் 12 முதல் 17 வரை, ஒவ்வொரு நாளும், வெவ்வேறு கருப்பொருளுடன், இயங்கலை கருத்தரங்கு வடிவில் நடைபெறும்.

அக்டோபர் 4-ஆம் தேதி நிலவரப்படி, 160 தனிநபர்கள் இந்த ஒன்றுகூடல் விழாவில் பங்கேற்கப் பதிவு செய்துள்ளதாக அக்கூட்டணி தெரிவித்துள்ளது.

இயங்கலை கருத்தரங்கு ஒன்றுகூடலில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் இங்கு பதிவு செய்யலாம்.

மேலதிகத் தகவல்களுக்கு @GabunganMarhaen முகநூல் பக்கத்தை நாடவும்.

நன்றி: மலேசியாகினி 

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...