Tuesday, September 21, 2021

செவ்வணக்கம் தோழர் அலெக்ஸ்

 


இன்று காலை மாரடைப்பால் காலமான தோழர் அலெக்ஸ்  ஃபால் ராஜின் குடும்பத்திற்கு  பி.எஸ்.எம்  மிகுந்த வருத்தத்துடன் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. தோழர் அலெக்ஸ், பேராக் நகரில் கட்சியின்  நீண்டகால உறுப்பினராவார். அவர் PSM Buntong  மற்றும்  PSM Sg Siput இன் உறுப்பினராக இருந்தவர். அவர் முழு மனதுடன் கட்சிக்காக உழைத்தார்.  பிஎஸ்எம் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பது குறித்து அவருக்கு எப்போதும் ஆக்கபூர்வமான கருத்துகள் இருந்தன.  விவாதங்களும் செய்யக்கூடியவராகவும் அவர் இருந்தார். 

பேராக் மாநிலத்தில் பி.எஸ்.எம் கால் பதித்த தொடக்கத்தில் பல இளைஞர்கள் கட்சியில் உறுப்பினராக சேர்வதற்கு தோழர் அலெக்ஸ் காரணமாக இருந்தார் என பி.எஸ்.எம்  செம்மோர்  தொகுதியைச் சேர்ந்த தோழர் நாகேன் தெரிவித்தார். அவருடன் கட்சி தொடர்பாக ஈடுபட்ட விவாதங்களையும் நீண்ட நாள் நட்பையும்  அவர் நினைவுக்கூர்ந்தார்.  பி.எஸ்.எம் முன்னெடுத்தப் பல போராட்டங்களில் தோழர் அலெக்ஸ் கலந்துகொண்டு போராடியிருக்கிறார். பிஎஸ்எம் தோழர்களுக்கு, தோழர் அலெக்ஸ்-சின் இழப்பு பேரிழப்பு மட்டுமல்ல ஈடுசெய்ய முடியாத இழப்பும் ஆகும்.  

பி.எஸ்.எம், செவ்வணக்கத்தை அவருக்கு சமர்பிக்கிறது.

Tuesday, September 14, 2021

தேசிய மறுசீரமைப்பு - மலேசியாவுக்கு ஒரு மாற்று வழி

 

கோவிட் நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு பி.எஸ்.எம் புரட்சிகரமான திட்டத்தை பரிந்துரைக்கிறது…

தேசிய மறுசீரமைப்பு - மலேசியாவுக்கு ஒரு மாற்று வழி

"மக்களின் கோரிக்கை எளிதானதே"

 

2020 இல் கோவிட் -19 தொற்றுநோய் தாக்கியதிலிருந்து மலேசியாவின் நிர்வாகக் கட்டமைப்பும்,  சமூக -பொருளாதாரம் மற்றும் அரசியலும் மிக மோசமாக பலவீனங்கள்  அடைந்திருக்கிறது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக பாரிசன் நேஷனால்  கையாளப்பட்டு, பின்  22 மாத குறுகிய ஆட்சியில் பக்காத்தானால் தொடர்ந்த  புதிய தாராளவாத பொருளாதார அமைப்பு, இந்த தொற்றுநோய் காலத்தில் பெரும்பான்மை மக்களை பாதுகாக்கத் தவறிவிட்டது.

பெருநிறுவன  மற்றும்  முதலாளித்துவ சார்பு  முறை மற்றும் அது பாணியிலான  ஆட்சி பல ஆண்டுகளாக சமூக பாதுகாப்பு வலையமைப்பின் அடித்தளத்தை பலவீனப்படுத்தியுள்ளது. இதன் காரணங்களால்  பல்வேறு சமூக -பொருளாதார அழுத்தங்களுக்கு மக்களும் தள்ளப்பட்டுள்ளனர்.

நாம் ஒற்றுமையாக இந்த தொற்றுநோயிலிருந்து மீள்வது மட்டுமல்லாமல், இந்தக்காலத்தில் சமூக பாதுகாப்பு வலையமைப்பின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கும் எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கும்  நாம் தயாராக இருக்க வேண்டும். அப்படியென்றால், இதுபோன்ற தோல்விகளை சமாளிக்க நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

2020-ல் தொற்றுநோய் போதனை

மக்கள் அனுபவித்த மற்றும் அனுபவிக்கும் துன்பத்தைத் தவிர, இந்த தொற்றுநோய் சில முக்கியமான பாடத்தையும் நமக்குக் கற்பிக்கிறது;

அ) எந்த நெருக்கடி வந்தாலும், B40 பிரிவு ஏழை மக்கள் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை சந்திப்பார்கள். COVID-19 தொற்றுநோய் தொடர்பான நெருக்கடி பணக்காரர்களையோ அல்லது ஏழைகளையோ அடையாளம் காணவில்லை.  என்றாலும், குடும்ப வருமானம், வீடு, வேலை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை COVID-19 தாக்கத்தின்போது ஒரு குடும்பத்தின்  தற்காப்பை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அனுபவம் காட்டுகிறது.

ஆ)  நிரந்தரமாகக் கருதப்பட்ட  வேலைகள் மற்றும் வாழ்வாதார ஆதாரங்கள் கண் இமைக்கும் நேரத்தில் மறைந்துவிடுகிறது.  ஒரு நல்ல சமூகப் பாதுகாப்பு  தொடர்பு  இல்லாமல், மக்கள் வறுமையில் மூழ்கி இருக்கிறார்கள்.  பல M40 குடும்பங்கள் இப்போது B40 நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள், அவர்கள் பணிநீக்கம் செய்யப்படும்போது  தங்கள் வருமான ஆதாரத்தை சேர்த்தே இழக்கிறார்கள்.

இ) தனியார் மற்றும் பெருநிறுவனம் சார்ந்த தொழில்கள் நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் மிக முக்கியமான நிறுவனங்களாகக் கூறப்படும் அதே வேளையில், நாடு தொற்றுநோய் நெருக்கடியால் பாதிக்கப்படும்போது, ​​ மக்களுக்கு ஆதரவளித்தவர்களாக இருப்பவர்கள் அரசு மருத்துவமனை மற்றும் அரசு நிறுவனங்கள்தான். தனியார் மருத்துவமனை துறையும் சுகாதார சுற்றுலா துறையும் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கவில்லை.

ஈ) அடிப்படை வசதிகளை வழங்குவதற்கான பொருளாதாரத் துறையின் பங்கு நெருக்கடி காலங்களில் மக்களுக்கு (இன்றியமையாதது) மிக முக்கியமானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  சிறு வியாபாரிகள், விவசாயிகள், பராமரிப்பு தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், குப்பை  எடுப்பவர்கள், லாரி டிரைவர்கள், பொருட்கள் விநியோகம் செய்பவர்கள் உள்ளிட்டோர் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். உள்ளூர் விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டால் அதோடு இறக்குமதி செய்யப்படும் வேளாண் பொருட்களும் பாதிக்கப்படும்  பட்சத்தில்,  மக்களுக்கான உணவு பாதுகாப்பு துண்டிக்கப்படும்.

உ) மக்களிடம்   நல்ல சூழல் கொண்ட வீடு இருந்தால் மட்டுமே கோவிட் -19 நோய்த்தொற்றிலிருந்து விலகி இருக்கவும் நிர்னயிக்கப்பட்ட SOP கள் மற்றும் நிபந்தனைகள் செயல்படுத்தவும் முடியும். தனிமைப்படுத்தலின் போது 650 -சதுர –அடி கொண்ட பிபிஆர் வீட்டில் வசிக்கும்  ஒருவரும் டாமான்சாராவில்  சொகுசு பங்களாவில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஒருவரையும்  ஒப்பிடும்போது, இருவருக்கும்  நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.  நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடும் முக்கியம்.

ஊ) கோவிட் -19 சுகாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு மக்களுக்கு பலமில்லை  என்றால், அதைவிட  பல மடங்கு மோசமாக இருக்கும் காலநிலை நெருக்கடியை எப்படி எதிர்கொள்வார்கள்? எனவே, கட்டுப்பாடற்ற மரம் வெட்டுதல், நதி மாசுபாடு, கனிம சுரங்க பிரச்சனை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்.

இந்த முக்கியமான படிப்பினைக்கு ஏற்ப, பிஎஸ்எம் தேசிய மீட்சிக்கான மாற்று செயல் திட்டத்தை முன்வைத்து -நாட்டின் மாற்று வழியை வலியுறுத்தி "மக்களின் கோரிக்கை எளிதானதே"  என்ற கருப்பொருளை பரிந்துரை செய்கிறது.

இந்த ஆவணத்தின்  முன்மொழிவுகள் மலேசியாவுக்கு நியாயமான, நிலையான மற்றும் சமமான வளர்ச்சியை நோக்கி ஒரு புதிய முன்னுதாரணத்தை வழங்குகிறது. 

 

இந்த தேசிய மீட்சித் திட்டம் 5 முக்கிய அடுக்குகளை அடிப்படையாகக் கொண்டது;

 1 - வலுவான சமூக பாதுகாப்பு

2 - வேலை உத்தரவாதத் திட்டம்

3 – மக்களுக்கான வீட்டு உரிமை

4 - பொது சுகாதார சேவைகளை மேம்படுத்துதல்

5 -  பேரிடர் காலத்தை உடனடியாக கையாளுதல்

 

மேற்குறிப்பிட்ட இந்த 5 அடுக்குகளின்  சுறுக்கம்..

1 - வலுவான சமூக பாதுகாப்பு

-         அடிப்படை வருமான உத்தரவாத திட்டம்

-         அரசின் கீழுள்ள தனியார் ஒப்பந்த  தொழில் முறை திட்டத்தை நீக்க வேண்டும்

-         தொழிலாளர் மற்றும் SOCSO சட்டங்களில் திருத்தங்கள்

-         வேலைவாய்ப்பு- காப்பீட்டு திட்ட சீர்திருத்தம்

-         மூத்த குடிமக்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம்

 

2 - வேலை உத்தரவாதத் திட்டம்

-         பசுமை தொழில்துறையில் வேலை வழங்குதல்

-         விவசாயத்தில் வேலை வாய்ப்

-         புகளை அதிகரிக்கவும்

-         பொது சுகாதார மையங்களை அதிகப்படுத்துதல்  

-         பொது சுகாதார வசதிக்கான ஆராய்ச்சிக்கூடங்களை மேம்படுத்துதல்மருத்துவ & மருந்தியல் ஆய்வுகள்

-         சமூக பணியாளர்கள் சேர்க்கப்படவேண்டும்

-         பராமரிப்பாளர்கள் மற்றும் ஆரம்ப கல்வி

-          வேலை நேரங்களின் மாற்றம்

-         GLC -களில் பங்கு

-         தொழிலாளர் பாகுபாடு எதிர்ப்பு சட்டம்

 

3 – மக்களுக்கான வீட்டு உரிமை

 

- B20 பிரிவு மக்களுக்கு PPR வீட்டை உருவாக்கவும்

- மக்களுக்கான  வீடுகளை சந்தையில் இருந்து அகற்று

- கட்டாய வெளியேற்றத்தை நிறுத்து - மாற்று வீட்டிற்கான சலுகைகள் வழங்கு

- ஒரு மக்கள் குடியிருப்பு அறக்கட்டளையை (லாப நோக்கமின்றி) உருவாக்க

- குறைந்த விலை கொண்ட குடியிருப்புகளை அரசு பராமரிக்கவும்

 

4 - பொது சுகாதார சேவைகளை மேம்படுத்தவும்

- பெர்கசா பொது சுகாதார சேவைகள்

- நாள்பட்ட நோய்களைத் தடுக்க GP- களை ஈடுபடுத்துங்கள்

- புலம்பெயர்ந்தவர்களுக்காக லெவியைப் மருத்துவ செலவுகளுக்கு பயன்படுத்தவும்

- அறுவை சிகிச்சை உபகரணங்கள் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படவேண்டும்

பொது மருத்துவமனை மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சிறப்பு மருத்துவர்களாக இடம்பெயர்வதை கட்டுப்படுத்துங்கள்

- மருத்துவமனை மாநியத்தை அதிகப்படுத்தவும்

- தரமான சுகாதார சேவைகள், பெரும்பாலான மக்களுக்கு சமூக ஊதியம்.

 

5 -  பேரிடர் காலத்தை உடனடியாக கையாளுதல்

- 100% புதுப்பிக்ககூடிய ஆற்றல் நுகர்வு

  - பெட்ரோலியத் தொழிலில் இருந்து மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும்

  - பொது போக்குவரத்து தீவிரமாக மேம்படுத்த வேண்டும்

- தனியாருக்கு காட்டில் மரம் வெட்டுதல் மற்றும் சுரங்கத் தடை


இந்தப் புரட்சிகரமான திட்டத்தை ஒரு நீண்டகால பிரச்சாரமாக மலேசிய சோசலிசக் கட்சி முன்னெடுக்க உள்ளது.  இதன் அறிமுக விழா மெய்நிகர் வழி கடந்த செம்படம்பர் 9-ஆம் தேதி கட்சியின் தேசியத் தலைவர் டாக்டர் ஜெயகுமார் தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது . 

 

12-வது மலேசியத் திட்டத்தில் இனம் சார்ந்த பரப்புரையைத் தடை செய்ய வேண்டும்- பிஎஸ்எம்


மலேசிய சோசலிசக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் சரண்ராஜ், 12-வது மலேசியத் திட்டத்தில் இனம் சார்ந்த பரப்புரையை விமர்சித்தார்.

சில “இனம் சார்ந்த உயரடுக்குவாதிகள்”, இந்தியச் சமூகத்திற்காக 12-வது மலேசியத் திட்டத்தை வகுப்பதில் பரப்புரை செய்து வருவதாகவும், ஆனால் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் அவர் சந்தேகம் கொண்டிருப்பதாகவும் ஷரன் கூறினார்.

“இவர்கள் தங்களை வளப்படுத்திக் கொள்வதற்காக, மக்களின் வறுமையை இன மயமாக்குகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

மலேசிய இந்தியர் உருமாற்றத் திட்டம் (மித்ரா), இந்தியச் சமூகத்திற்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் அரசு நிறுவனம், சமூகத்திற்காக RM500 மில்லியன் ஒதுக்கீடு செய்திருப்பதாக ஷரன் குறிப்பிட்டார், ஆனால் அது உண்மையில் அந்தக் குழுவிற்கு உதவியதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.




“RM500 மில்லியனைக் கொண்டு, முதுமை காலத்தில் வீட்டு வசதி இல்லாமல், பாதுகாப்பற்றிருக்கும் 5,000 குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கியிருக்கலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

அரசாங்கத்தில் குத்தகை அடிப்படையில் பணியாற்றும் 250,000 துப்புரவுப் பணியாளர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் இந்த நிதி மிகவும் தேவைப்படுவதாக சரண் கூறினார்.

அரசாங்க சேவையில் வேலைக்கமர்த்த வேண்டியதற்குப் பதிலாக, அவர்கள் தனியார் நிறுவனங்களில், குத்தகை அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.

அரசாங்கக் குத்தகை பணியாளர்கள் வலையமைப்பின் (ஜெ.பி.கே.கே.) கூற்றுபடி, அரசு பள்ளிகளில் பாதுகாவலர்களை நிர்வகிப்பதற்காக, தனக்கு நெருக்கமான ஒப்பந்தக்காரர்களுக்கு அரசாங்கம் ஆண்டுக்கு 1.5 பில்லியன் ரிங்கிட் செலுத்துகிறது.

வாரத்திற்கு 84 மணிநேரம் பணிபுரியும் 40,000 பாதுகாவலர்களின் ஒட்டுமொத்த ஊதியம் சுமார் ரிம 1 பில்லியன் மட்டுமே ஆகும்.

“அடிப்படையில், இந்த ஒப்பந்ததாரர்கள் அரசாங்கத்தின் சார்பாக குறைந்தபட்ச ஊதியத்தைச் செலுத்த 500 மில்லியன் ரிங்கிட் கமிஷன்களைப் பெறுகிறார்கள்,” என்று அவர் கூறினார். 

“இந்த வேலைகளை மீண்டும் தேசியமயமாக்குவதன் மூலம், அரசுக்கு நெருக்கமான ஒப்பந்தக்காரர்களின் பிரீமியத்தை மறுவிநியோகம் செய்து, வறுமையிலிருக்கும் ஊழியர்களை மீட்பதற்காக, அவர்களின் ஊதியத்தை உயர்த்தலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, இனப் பிரச்சினைகளைத் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்த முயலும் உயரடுக்கு வர்க்கத்தைச் சரண் கடுமையாக சாடினார்.

“இந்தத் தார்மீக மற்றும் அறிவார்ந்த சிந்தனையில்லாத இன உயரடுக்கினர், பிளவு மற்றும் ஆதிக்கத்தை கொண்டு சமூகத்தில் ஒட்டுண்ணிகளாக இனவெறியை நுழைத்து விளையாடுகிறார்கள்.

“அவர்கள் இனவெறி மற்றும் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டுவதில்லை, ஏனெனில் இது சமுதாயத்தைக் கொள்ளையடிக்க அனுமதிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.


நன்றி: மலேசியா இன்று (செப்டம்பர் 13) 

அமைச்சர் அந்தஸ்தில் சிறப்பு தூதர் பதவி, மக்கள் வரிபணத்திற்குக் கேடு- பிஎஸ்எம்

 

அமைச்சர் அந்தஸ்தில் பல சிறப்பு தூதர்களை, பிரதமருக்காக மீண்டும் நியமிப்பது நாட்டின் பணத்தை வீணடிக்கும் செயல் என்று மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) விமர்சித்துள்ளது.

பிஎஸ்எம் மத்தியச் செயற்குழு உறுப்பினர் சரண்ராஜ், நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் வேளையில், இந்த நியமனம் பொது நிதியை வீணடிப்பதாக உள்ளது என்றார்.

“பிரதமருக்கான சிறப்பு தூதர் பதவியும், விஸ்மா புத்ரா மற்றும் மலேசிய வெளிநாட்டு தூதரகங்களில் உள்ள இராஜதந்திரிகள் பதவியும் ஒன்றுடன் ஒன்று இணைகிறது.



“பொருளாதார வீழ்ச்சியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளபோது, அரசியல்வாதிகளுக்கு இதுபோன்ற தேவையற்ற பணிகளை வழங்கி, வரி பணத்தை வீணாக்குவது நயவஞ்சகச் செயலாகும்,” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் கூறினார்.

நேற்று, மலேசிய அரசாங்கம், நாட்டின் அரசியல் கட்சிகளின் மூன்று தலைவர்களை, பிரதமரின் சிறப்பு தூதர்களாக தக்கவைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டது, முந்தைய பிரதமர் முஹைதீன் யாசின் நிர்ணயித்தபடி.

செப்டம்பர் 1-ஆம் தேதி, முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் மூன்று தலைவர்கள், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், சரவாக் முற்போக்கு ஜனநாயகக் கட்சி (எஸ்.பி.டி.பி.) தலைவர் தியோங் கிங் சிங் மற்றும் சரவாக் ஐக்கிய மக்கள் கட்சியின் துணைத் தலைவர் ரிச்சர்ட் ரியோட் ஜீம் ஆவர்.

மாராங் எம்.பி.யான அப்துல் ஹாடி, மத்தியக் கிழக்கிற்கும், சீனாவுக்கு தியோங்கும் (பிந்துலு), கிழக்கு ஆசியாவுக்கு ரியோட்டும் (செரியான்) பிரதமரின் சிறப்பு தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு, மலேசியாவின் எட்டாவது பிரதமராக பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசின் நியமிக்கப்பட்ட பிறகு, அந்த மூன்று எம்.பி.க்களும் தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.



ம.இ.கா. தலைவர் பதவியை இராஜினாமா செய்வதில் சாமிவேலுவைச் சமாதானப்படுத்த, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், பிரதமருக்கான சிறப்பு தூதர் பதவியை அறிமுகப்படுத்தினார் என்று சரண் கூறினார்.

சாமிவேலு ஜனவரி 1, 2011-ல், பிரதமருக்கான முதல் சிறப்பு தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, டிசம்பர் 6, 2010-ல், ம.இ.கா. தலைவர் பதவியை இராஜினாமா செய்தார்.

“பிரதமருக்கான சிறப்புத் தூதர் ஒரு மாதத்திற்கு ரிம 27,000 சம்பளத்தைப் பெறுகிறார். 2011-ம் ஆண்டு முதல், 8 தனிநபர்கள் கிட்டத்தட்ட 330 மாதாந்திர சம்பளமாக ரிம 9 மில்லியன் சம்பளத்தைக் திரட்டியுள்ளனர்,” என்று அவர் கூறினார்.


நன்றி: மலேசியா இன்று (செப்டம்பர் 4) 

சிலாங்கூர் எம்பி மீது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு – பிஎஸ்எம் பரிந்துரை


சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, கோல லங்காட் உத்தாரா வனக்காப்பு (எச்.எஸ்.கே.எல்.யூ.) விலக்குதலை இரத்து செய்ய தவறினால், சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரைப் பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) முன்மொழிந்துள்ளது.

இன்று ஓர் அறிக்கையில், பிஎஸ்எம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நெருக்கடி பிரிவு தலைவர் டாக்டர் டேரன் ஓங் சுங் லீ, வனத்தைப் பாதுகாப்பதற்காக கடந்த ஆண்டு நவம்பரில் சிலாங்கூர் மாநிலச் சட்டசபையின் ஒருமனதான தீர்மானத்தை அமிருடின் மதிக்கவில்லை என்று கூறினார்.

கடந்த மே மாதம் எடுக்கப்பட்ட முடிவு, மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் அறிவிக்கப்பட்டது; வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் காலநிலை நெருக்கடி குறித்த அக்கறை மற்றும் பூர்வக்குடிகளின் உரிமைகளை மீறுதல் ஆகியவற்றைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.



கடந்த ஆண்டு செப்டம்பரில், இந்த விவகாரம் குறித்த பொது விசாரணையை இந்த முடிவு கேலி செய்கிறது, தொழிலதிபர்களிடம் பரப்புரை செய்வதற்காக வெளிப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகள் இதன்வழி புறக்கணிக்கப்பட்டன என்று ஓங் கூறினார்.

“நிச்சயமாக, சிலாங்கூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில், திறமையான மந்திரி பெசார் வேட்பாளர்கள் நிச்சயமாக இருப்பார்கள்,” என்று ஓங் கூறினார்.

இதற்கிடையில், சிலாங்கூர் அரசாங்கம் தங்கள் முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களை ஓங் வலியுறுத்தினார்.



“அவர்கள் அதனைச் செய்வதில் தோல்வியடைந்தால், பாஸ் மற்றும் அம்னோ தலைமையிலான மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட காட்டு மரங்களை வெட்டுதல் மற்றும் சுரங்க நடவடிக்கைகளை விமர்சிக்கும் அனைத்து தார்மீக உரிமைகளையும் அவர்கள் இழந்துவிட்டனர்,” என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் 30-ம் தேதி நடந்த சிலாங்கூர் ஆட்சிகுழு அமர்வின் கேள்வி பதில் அங்கத்தின் போதுதான், மே மாதம் தயாரிக்கப்பட்ட எச்.எஸ்.கே.எல்.யூ.-இன் வனக்காப்பு விலக்கு வெளிப்பட்டது.

மே 5-ம் தேதி, 17/2021-வது மாநில நிர்வாக மன்ற (எம்.எம்.கே.என்.) கூட்டத்தில், முடிவு எட்டப்பட்ட பிறகு, இந்த விலக்கு செய்யப்பட்டது; சிலாங்கூர் மாநில வனவியல் சட்டம் 1985, (விண்ணப்பம்) பிரிவு 12 சட்டத்தின் கீழ், மே 19-ம் தேதி, 18-வது எம்.எம்.கே.என். கூட்டத்தில், 536.70 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கிய இது உறுதிப்படுத்தப்பட்டது,.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், கோல லங்காட் உத்தாரா நிரந்தர வனக் காப்பகத்தை மேம்படுத்த இரண்டு நிறுவனங்கள் – திதியான் ஜூதாரியா சென். பெர். (Titian Jutaria Sdn Bhd) & மெந்தெரி பெசார் இன்கோபரெடட் சிலாங்கூர் (Menteri Besar Incorporated Selangor) (எம்.பி.ஐ. சிலாங்கூர்) – முன்மொழிந்ததாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.


நன்றி: மலேசியா இன்று (செப்டம்பர் 1) 

‘பேரம் பேசுவதை’ நிறுத்திவிட்டு, கோவிட் -19 நெருக்கடியைச் சமாளிக்கவும்"- பிஎஸ்எம்

அடுத்த மாதம், மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகப் பிரதமர் முஹைதீன் யாசின் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து, அரசியல்வாதிகள் “பேரம் பேசுவதில்” மும்முரமாக இருக்கிறார்கள் என்று மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) கருதுகிறது.

பிஎஸ்எம் துணைத் தலைவர், எஸ் அருட்செல்வன், நாட்டைத் தொடர்ந்து அச்சுறுத்திவரும் கோவிட் -19 தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சிகளை அந்நடவடிக்கை பாதிக்கக்கூடாது என்றார்.

அந்த ஒரு மாத காலம், இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் ஹிஷாமுடின் ஹுசைன் ஆகியோருக்கு, அம்னோவில் தங்கள் நிலையை வலுப்படுத்திக்கொள்ள இடமளிக்கும் என்றும் அவர் கூறினார்.

“அநேகமாக, அம்னோவையும் அதன் தலைவர் அஹ்மத் சாஹிட் ஹமிடியையும் நிலைகுலைக்கும் முயற்சிகள் நடக்கலாம் அல்லது அவரை ஆதரிப்பவர்கள், பிரதமருக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளவும் செய்யலாம்.


“என்ன நடந்தாலும், மக்கள் கோவிட் -19 நெருக்கடி முடிவடைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். அரசியல்வாதிகள் அதிகாரத்திற்காகப் போட்டியிடும் நேரத்தில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.

“இந்த அரசியல்வாதிகள், மக்களை வீட்டில் உட்காரச் சொல்கிறார்கள், ஆனால் அவர்கள் தொடர்ந்து எல்லா இடங்களிலும் கூட்டங்களை நடத்துகிறார்கள், எந்தவொரு விளைவுகளையும் சிந்திக்காமல் எஸ்.ஓ.பி.க்களை மீறுகிறார்கள்.

“அரசியல் நெருக்கடி மற்றும் அதிகார வெறி பிடித்த அரசியல்வாதிகளால், மக்கள் சலிப்படைந்துள்ளனர் என்பது உண்மைதான். தொற்றுநோயைச் சமாளிக்க தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டதாக அவர்கள் உணர்கிறார்கள். இறுதியில், கோவிட் -19 இந்த அரசாங்கத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

அதிகாரத்தைத் தக்கவைக்கும் முயற்சியில், பொது நிறுவனங்கள் மற்றும் சேவைகளை மீற வேண்டாம் என்று அரசுக்கு அருட்செல்வன் எச்சரிக்கை விடுத்தார்.

“போலீஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), உள்நாட்டு வருவாய் வாரியம் மற்றும் சுகாதார அமைச்சு போன்ற அனைத்து பொது நிறுவனங்களும் சேவைகளும் நடுநிலையாக இருப்பதாகவும் ஜனநாயகத்தின் கொள்கைகளை நசுக்க அவை உதவாது என்றும் பிஎஸ்எம் நம்புகிறது.

“ஆளும் கட்சி நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, ஜனநாயகத்தின் கொள்கை எப்போதும் பலிகடாக்கப்படுகிறது. முந்தைய நிர்வாகங்களில் இது நடந்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று நேரடி ஒளிபரப்பான சிறப்பு செய்தியில், முஹைதீன் இன்னும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டிருப்பதாகவும், மக்களவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தனது நிர்வாகத்தின் சட்டபூர்வமான தன்மையைத் தீர்மானிக்கத் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

முஹைதீனுக்கான ஆதரவை திரும்பப் பெற்ற “போதுமான” அம்னோ எம்.பி.க்கள் இருக்கிறார்கள் என்று ஜாஹிட் அறிவித்ததைத் தொடர்ந்து இது வெளியானது.

சாஹிட் தவிர, 10 அம்னோ எம்.பி.க்கள் அச்செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.


நன்றி: மலேசியா இன்று (ஆகஸ்ட் 5) 

5 தோட்டத்தின் தொழிலாளர்களுக்கு வெற்றி

உலு சிலாங்கூர் மற்றும் கோலாசிலாங்கூரில் உள்ள 5 தோட்டங்களின் 25 ஆண்டுக்கால வீடு தொடர்பான போராட்டத்தை தீர்ந்துவிட்டதாக அமைச்சர் ...