Thursday, April 29, 2021

இன்று ஏப்ரல் 30, மலேசிய சோசலிச நாள்..

 மலேசிய சோசலிச  கட்சி ஒரு வரலாற்றுப் பார்வை 




2008 - 10 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் பிஎஸ்எம் பதிவு பெற்ற கட்சியாக  உருமாறியது.

2009 - ஆசியாவின் 3 கட்சிகளில் ஒரு கட்சியாக  பி.எஸ்.எம்-மை, வெனிசுலாவில் நடந்த 5 -வது சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள  Hugo Chavez  அழைப்பு விடுத்தார். 


2010 - 40 ஆண்டுகளாக வேலைவாய்ப்புச் சட்டத்தில் உள்ள  மிகக் கொடூரமான திருத்தம் ஒத்தி வைக்கப்படுவதாக மனிதவள அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் பிஎஸ்எம் மறியல் போராட்டங்கள்  நடத்தவிருப்பதால் அந்த சட்டத்தை ஒத்திவைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

2011 - மலாயா கம்யூனிஸ்ட் கட்சியை - புதுப்பித்து, மாமன்னருக்கு எதிர்த்துப் போராடியதாக பிஎஸ்எம் மத்திய குழுவின் 6 உறுப்பினர்கள் அவசரகால சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு  கைது செய்யப்பட்டனர். இவ்வாறான  அவதூறு அவர்கள் மீது பரப்பப்பட்டது.

2012 - பி.எஸ்.எம் மற்றும் ஜெரிட் (JERIT) ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியச் சட்டம் ஒரு செயலாகி ஏப்ரல் 30 அன்று பிரதமரால் அறிவிக்கப்பட்டது. அதில் அவர்கள் வென்றனர்.

2013 - பி.எஸ்.எம் முதன்முறையாக  பி.எஸ்.எம் சின்னத்தை பயன்படுத்தி செமெனி மற்றும் ஜெலப்பாங்கில் பொதுதேர்தலில்  போட்டியிட்டது.

2014 -  சுதந்திரத்திற்கு பிறகு, மலேசிய வரலாற்றில் மிகப்பெரிய மே தினத்தை பி.எஸ்.எம் முன் ஏற்பாடு செய்தது. இது ஒரு பிஎஸ்எம்-இன் மாபெரும் முயற்சியாகும்.



2015 – 100 க்கும் மேற்பட்டவர்களால் ஜி.எஸ்.டி-க்கு எதிராக போராட்டத்தை நடத்தியவர்களில் 88 க்கும் மேற்பட்டோரை   கிளானா ஜெய சுங்க அலுவலகம் கைது செய்தனர். அவர்களில் பெரும்பாலோர்  பிஎஸ்எம் உறுப்பினர்களாவர். ஜிஎஸ்டிக்கு எதிரான மிக தேவையான போராட்டம் அது.

2016 - தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக பிஎஸ்எம் ஏற்பாடு செய்த அரசியல் பாடமான,  விரிவான மார்க்சிச பாடத்தை ஐஜிபி ரத்து செய்தது.

2017 - பணியாளர் காப்பீட்டு திட்டத்திற்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது - பிஎஸ்எம் பிரச்சாரத்தின் மற்றொரு வெற்றி அது.

2018 - பிஎஸ்எம் தனது சொந்த சின்னத்தை பயன்படுத்தி பொது தேர்தலில் பல இடங்களில் போட்டியிட்டது. அதாவது 5 மாநிலங்களில் 4 நாடாளுமன்றத்திற்கும் 12 சட்டமன்றத்திற்கும் நின்றது.    

2019- கட்சி நிறுவப்பட்டதிலிருந்து தலைவராக இருந்த டாக்டர்.  நசீர், 2007  கட்சியின் தீர்மானத்திற்கு ஏற்ப, 21- வது பிஎஸ்எம் மாநாட்டில் டாக்டர் ஜெயக்குமாரிடம் தலைமைத்துவத்தை ஒப்படைத்தார்.

2020 - பிஎஸ்எம் ட்ரோலாக் பிரகடனத்தை அறிமுகப்படுத்தியது - அது 2030 வரை பிஎஸ்எம் எதிர்காலத்திற்கான திட்டங்கள் கொண்டது.

Thursday, April 8, 2021

வீட்டுக்கடனும் பட்டதாரிகளின் சம்பளக் குறைவும்



நாட்டின் KDNK கணக்கின் ஏற்ப குடும்பங்கள் வைத்திருக்கும் கடன் சுமார் 93.3% என உயர்ந்துள்ளதாக மலேசிய மத்திய வங்கி (Bank Negara Malaysia) தனது மாத அறிக்கையில் வெளியிட்டுள்ளது. பட்டதாரிகளின் சம்பளம் RM2000-RM2500 இருந்து இப்பொழுது ஏறத்தாழ RM1500 இறங்கி உள்ள இந்நிலையில் அரசாங்கம் மௌனம் காத்து வருவது வருத்தம் அடைய செய்கிறது.

 

2.       இந்நிலை வருவதற்கான காரணம் Covid-19 பெருந்தொற்று மட்டுமே காரணம் ஆகி விட முடியாது என்பதே எங்கள் கருத்து. மாறாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் தனியார் மயமாக்குதல் மற்றும் பெரும் முதலாளிகளுக்கும் வங்கிகளுக்கும் பெரும் இலாபத்தை ஈட்டி தர செய்யும் செயல் திட்டங்களே இன்று பொருளாதாரம் நலிவு அடைந்ததற்கான காரணங்கள் என்பதே எங்களது பார்வை.

 இந்த பொருளாதார மந்த நிலைக்கு தாராளவய முதலாளித்துவமே காரணம் என்றாலும், பி. எஸ். எம் மற்றும் பி. எஸ். எம் இளைஞர் அணியும் இந்த Covid காலகட்டத்தில் மக்களை உதவும் வகையில் பல செயல் திட்டங்களை அணுகுமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டு வருகிறது.

 

4.       அரசாங்கம் மக்களுக்கு குறிப்பாக B40 குடும்பங்களுக்கும் தனி நபர்களுக்கும் கடன் செலுத்துவதில் கட்டாய ஒத்திவைப்பைப் பிரகடனம் படுத்த வேண்டும். இந்த செயல் திட்டம் பொருளாதார மந்த நிலையில் ஏழை மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த செயல் திட்டத்தின் மூலம் மக்களின் கையிருப்பில் அதிகம் பணம் இருப்பதால் உணவு, சுகாதாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள ஏதுவாக இருக்கும். சிறு தொழில் மற்றும் உள்ளூர் பொருளாதாரமும் வீழ்ச்சி அடையாமல் பார்த்து கொள்ளலாம். இந்த கடன் ஒத்திவைப்பை அரசாங்கம் ஏன் செயல் திட்டமாக அறிவிக்க தயங்குகிறது எனும் கேள்வி அனைவருக்கும் உண்டு. பொருளாதார மந்த நிலையிலும் வங்கிகள் தொடர்ந்து இலட்சம் இலட்சமாக இலாபம் ஈட்டும் இவ்வேளையில் இந்த செயல் திட்டம் வங்கிகளுக்கும் சுமையாக இருக்க போவது இல்லை என்பதே உண்மை.

 கடந்த 5 வருடங்களாக, இந்த வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்க்கொள்ளும் வழியாக அரசாங்கம் மக்களுக்கு புதிய திறன் மற்றும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டி பல பட்டறைகளை நடத்தி வருகிறது. இந்த அணுகுமுறை வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைத்ததாக ஒன்றும் தெரியவில்லை. ஒரு பட்டதாரியின் ஆற்றல் வேலை சந்தையின் தேவைகளுக்கும் ஒத்து போவதில்லை என்றால் மாற்றம் நிகழ வேண்டிய இடம் பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் தான். குறிப்பாக முதலாளிகளுக்கு ஊக்கத்தொகை கொடுப்பது என்பது முற்றிலும் பயனற்ற ஓர் அணுகுமுறையாகவே இங்கு இருக்கிறது என்பதே உண்மை. இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் வேலை உத்தரவாதத் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும். திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைகளுக்கு அவ்வப்போது ஏற்றவாறு வாழ்க்கை ஊதியம் வழங்கப்பட வேண்டும். வாழ்க்கை ஊதியம் 2017-இல் RM2700 என மலேசிய மத்திய வங்கி அறிவித்திருந்தது. இப்பொழுது அது RM3000 கூட இருக்கலாம்.

 

6.       வேலையை அரசாங்கம் எப்படி உருவாக்கலாம்

   நமது நாடு பசுமை தொழில்நுட்பத்தில் தொடர்ந்து பின் தங்கி வருகிறது. தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளுக்கும் மேம்படுத்துதலுக்கும் அரசாங்கம் செலவிடலாம். மேம்படுத்துவதன் வழியாக உற்பத்திக்கு தொழிற்சாலைகள் திறக்கலாம். அதனைப் பயன் படுத்தும் இடங்களில் பராமரிப்பு பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படும். இதனைத் தவிர்த்து, சமூக சேவகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நாட்டில் நிலவி வரும் பிரச்சனைகளை நேரில் சென்று தீர்த்து வைக்கவும் ஆவணப்படுத்தும் வேலைகளுக்கும் இங்கு பெரிய தேவை இருகின்றது. நாட்டின் சுகாதார துறைகளிலும் கல்வி துறைகளிலும் அதிகமானவர்களை வேலையில் சேர்ப்பது. இவ்வாறான புதிய சிந்தனைகளுடன் வேலையில்லா திண்டாட்டத்தை அணுகினால் மட்டுமே தீர்வை நோக்கி பயணம் செய்ய முடியும். இந்த அரசாங்க  உத்தரவாத வேலை திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு குடுப்பது மட்டும் அல்லாமல் சம்பளம் குறைவாக குடுத்து மக்களின் உழைப்பைச் சுருண்டும் முதலாளிகளுக்கும் நெருக்கடி குடுக்கும். தனியார் நிறுவனங்களும் தரமான வேலையை நல்ல சம்பளத்துடன் உருவாக்கி குடுப்பார்கள் வேறு வழி இல்லாமல்.

மாற்றியமைக்கப்பட்ட உலகளாவிய வருமான திட்டத்தை செயல் படுத்துமாறு பி. எஸ். எம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. வேலை இழப்பு மக்களின் தவறு கிடையாது. இதற்காக யாரும் பசியில் வாடும் நிலமை ஏற்பட கூடாது. வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வேளையில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் குறிபிட்ட தொகையை மக்களுக்கு குடுக்கலாம்.

 

8.       Perikatan அரசாங்கத்தின் அலட்சிய போக்கை பி. எஸ். எம் இளைஞர் அணி கண்டிக்கிறது. சம்பளத்தைப் பார்க்காமல் வேலை இருந்தாலே போதும் என்ற அறிவுரை இலட்சக்கணக்கில் சம்பாரிக்கும் அரசியல்வாதிகள் தொடர்ந்து அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே போராடும் மக்களுக்கு அறிவுரை கூறுவது அரசியல் பலத்துடன் வரும் ஆணவத்தின் வெளிப்பாடே.

தொடர்ந்து நாம் அன்னிய முதலீடுகளை நம்பி வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொண்டிருந்தால் வேலையில்லாத் திண்டாட்டத்தை அழிக்க முடியாது. ஊக்குவிப்பு தொகை, வரி விலக்கு முதலாளிகளின் பையில் பணம் சேருவதற்கு ஏனோ இலகுவாக இருக்கலாம், ஆனால் மக்களுக்கு நல்லதாக ஒன்றும் தெரியவில்லை. புதிய அணுகுமுறை இல்லாவிடில் இந்த பிரச்சினைக்குத் தீர்வு இல்லை!







 – காந்திபன் நந்தகோபாலன்பிஎஸ்எம் இளைஞர் அணி செயலாளர்.

-

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...