Tuesday, April 28, 2026

மே 1 2026, தொழிலாளர் நாள் பிரகடனம்

                                  மே 1 2026 பிரகடனம்

தொழிலாளர்களே ஒன்றுபடுவோம்- போரை தவிர்ப்போம், ஊழலை எதிர்ப்போம்

இந்த ஆண்டு, மே 1 தொழிலாளர் தினக் கொண்டாட்டம், பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் போர்களால், நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்கும் ஊழலால் மற்றும் மக்களும் தொழிலாளர் வர்க்கமும் கொண்ட ஒற்றுமையை அச்சுறுத்தும் பலவீனமான  வேற்றுமையால் சூழப்பட்டுள்ளது.  2026 ஆம் ஆண்டிற்கான மே 1 தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தின் கருப்பொருள்: தொழிலாளர்களே ஒன்றுபடுவோம்போரை தவிர்ப்போம், ஊழலை எதிர்ப்போம்.”

உலகளாவிய நிலைத்தன்மையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் தொழிலாளர்களே பிரதான சக்தியாகவும் அரணாகவும் உள்ளனர்.

உலகளாவிய அரசியல் நிச்சயமின்மையும் நாட்டின் நிர்வாகத் துறையில் காணப்படும் குறைபாடுகளும் கவலைக்கிடமான சூழலில், இந்த ஆண்டின் தொழிலாளர் தினக் கருப்பொருள், தொழிலாளர்களின் கூட்டு வலிமை என்பது பொருளாதாரத்தின் உந்து சக்தி மட்டுமல்ல, அது உலக அமைதியையும், ஊழல் மற்றும் முறைகேடுகளற்ற ஒரு பணிச் சூழலையும் கோரும் ஒரு தார்மீகக் குரலும் கூட என்பதை வலியுறுத்துகிறது. எந்தவொரு இன மோதலும், ஊழலையும் போர்களையும் எதிர்க்கும் மக்களின் சக்தியை மட்டுமே பலவீனப்படுத்தும்.

இன ரீதியான நடத்தை, ஊதியக் கோரிக்கைகள், விலைக் கட்டுப்பாடுகள், மானியங்களைத் தக்கவைத்தல், ஒரு சிலருக்கு மட்டுமே பயனளிக்கும் பெருநிறுவனங்களின் முறைகேடான உறவுமுறைச் சார்புநிலை போன்ற மிக முக்கியமான தேசியக் கோரிக்கைகளில் கவனம் செலுத்துவதிலிருந்து தொழிலாளர்களின் கவனத்தைத் திசைதிருப்பிப் பிரித்துவிடும்.

தொழிலாளர்கள் ஒன்றுபடுவோம்என்ற கருப்பொருள், ஆயுத விற்பனையாளர்களுக்கும் தொழிலாளர் பிரிவினையின் பின்னால் மறைந்து செயல்படும் ஆட்சியாளர்களுக்கும் நன்மை தரக்கூடிய போர், ஊழல் மற்றும் இனவாதத்திற்கு எதிராக மக்கள் கைகோர்க்க வேண்டும் என்பதற்கான ஓர் அழைப்பாகும்.

எனவே, 1 மே 2026 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாங்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:

 

1. ஒற்றுமையை வலுப்படுத்துதல்
i. இன மற்றும் மத உணர்வுகளை பயன்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தும் அனைத்து முயற்சிகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

ii. இனப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஒற்றுமைக்கான உரையாடல் ஒரு அரணாக அமைய வேண்டும்.

 

2. தொழிலாளர்கள் போரை நிராகரிக்கின்றனர்

i. ஈரான், உக்ரைன், ஏமன் ஆகிய நாடுகளில் நடக்கும் போர்களையும், பாலஸ்தீனம் மற்றும் போர்கள் தீவிரமாக நடைபெறும் அனைத்து இடங்களிலும் நடக்கும் இனப்படுகொலையையும் நிறுத்த வேண்டும்.

ii. போர் நிதியளிப்பவர்களுக்கு வழங்கப்படும் ஆதரவை நிறுத்த வேண்டும். சர்வதேச போர் கப்பல்கள் இந்த நாட்டின் கடற்பரப்பில் நங்கூரமிடுவதற்குத் தடைவிதிக்கப்பட வேண்டும்.


iii. வளைகுடா பகுதிகளில் நடைபெறும் போர்கள், பெருநிறுவனங்களுக்கும் அரசியல் உயர்வுவகுப்பினருக்கும் மட்டுமே நன்மை அளிக்கின்றன; அதே நேரத்தில் தொழிலாளர்களை அது பாதிக்கின்றது, குறிப்பாக விநியோகச் சங்கிலி பாதிப்புகள் மற்றும் பெட்ரோல்/டீசல் விலை உயர்வால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பது  உள்ளிட்டவையாகும்.

 

3. தொழிலாளர்கள் ஊழலை எதிர்க்கின்றனர்

i. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (SPRM) தலைவர் Azam Baki அவர்கள் பணியிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ii. பெருநிறுவன மாஃபியா நடவடிக்கைகளை விசாரிக்க ஒரு சுயாதீன விசாரணை ஆணையம் (RCI) அமைக்கப்பட வேண்டும்.

iii. ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர், தற்போது இருப்பது போல் பிரதமருக்கு மட்டும் பதிலளிக்காமல், நாடாளுமன்றத்திற்கே பதிலளிக்கக் வேண்டியவராகவும் இருக்க வேண்டும்.

 

4. தொழிலாளர் உரிமைகள்

i. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க,, மேலும் யதார்த்தமான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

ii. வேலை பாதுகாப்பும், ஒப்பந்த (கான்ட்ராக்ட்) முறையின் நீக்கமும்: நிரந்தர மற்றும் தொடர்ச்சியான பணியிடங்களுக்கு ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும்.

iii. முதியோர் ஓய்வூதிய திட்டம்: ஓய்வு வயதை அடையும் அனைத்து மலேசியர்களுக்கும் மாதாந்திர ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்.

iv. தொழிற்சங்க உரிமைகள்: தொழிற்சங்கங்களை அமைப்பதை எளிதாக்கி, தொழிற்சங்கங்கள் பாதிக்கப்படாமல் இருக்கப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

v. மாற்றுத்திறனாளி (OKU) வேலைவாய்ப்பு உரிமைகள்: அனைவரும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவமான பணியாளர்கள் அமைப்பை உருவாக்கும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு திட்டங்கள் மூலம் வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும்.

vi. பராமரிப்பு வேலை (Care Work)  ஒரு தேசியப் பங்களிப்பாக அங்கீகரித்தல்: பெண்கள் மற்றும் குடும்பங்கள் மேற்கொள்ளும் பராமரிப்பு பணியின் பங்களிப்பை பொருளாதார ஆதரவின் மூலம் அங்கீகரித்து மதிக்க வேண்டும்.

 

5. சுகாதாரம்

i. இலவச மற்றும் தரமான சுகாதார சேவை: அரசு மருத்துவமனைகளின் பட்ஜெட்டை உயர்த்தி, மக்கள் தொடர்ந்து சிறந்த இலவச சிகிச்சை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளிலிருந்து தனியார் துறைக்கு நிபுணர்கள் வெளியேறுவதைத் (brain drain) தடுக்க, மேலும் பல அரசு மருத்துவமனைகளைக் கட்ட வேண்டும் மற்றும் புதிய தனியார் மருத்துவமனைகளின் கட்டுமானத்திற்கு 5 ஆண்டுகளுக்குத் தடை (ஒத்திவைப்பு) விதிக்க வேண்டும்.

ii. KKM  திட்டத்தை நிறுத்துதல்: அரசு மருத்துவமனைகளில் தனியார்மயமாக்கல் திட்டங்களை (அரசு மருத்துவமனைகளில் தனியார் பிரிவுகள் போன்றவை) செயல்படுத்துவதை எதிர்க்க வேண்டும். ஏனெனில், இத்திட்டங்கள் பணக்கார மற்றும் ஏழை நோயாளிகளுக்கு இடையே சிகிச்சையில் பாகுபாட்டை உருவாக்குகின்றன.

iii. அனைவரையும் உள்ளடக்குதல்: அகதிகள், புலம்பெயர்ந்தோர் மற்றும் விளிம்புநிலை சமூகத்தினர் சுகாதார சேவைகளைப் பெறுவதில் பாகுபாடு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

 

6. வீட்டுவசதி

 

i. வீட்டுவசதி உரிமைகளுக்கு உத்தரவாதம் மற்றும் கட்டாய வெளியேற்றங்களுக்குத் தடை: நகர்ப்புறக் குடியேறிகள், பழங்குடி மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மர்ஹைன் சமூகத்தினரின் எந்தவொரு கட்டாய வெளியேற்றத்தையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். எந்தவொரு மேம்பாட்டு திட்டமும் செயல்படுத்தப்படுவதற்கு முன், மாற்று குடியிருப்புகள் வழங்கப்படுவது கட்டாயமாக இருக்க வேண்டும்.

ii. மக்கள் வீடமைப்பு திட்டம் (PPR) செயல்படுத்துதல்: அரசாங்கம் முக்கியமான இடங்களில் மக்கள் வீடமைப்பு திட்டங்களை முன்னுரிமையுடன் செயல்படுத்தி, நியாயமான, தரமான மற்றும் மக்கள் வாங்கக்கூடிய அல்லது வாடகைக்கு ஏற்ற விலையில் வீடுகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்; இதன் மூலம் ஒவ்வொரு குடிமகனும் வசதியான குடியிருப்பு பெறும் உரிமை பாதுகாக்கப்படும்.

 

7. குடிபெயர் தொழிலாளர்கள் மற்றும் அகதிகள்

i. குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கான சம உரிமைகள்: நவீன அடிமைத்தனம் மற்றும் சுரண்டலிலிருந்து குடிபெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும்.

ii. அகதிகள் மற்றும் தஞ்சம் கோருவோருக்கான வேலை உரிமை அங்கீகாரம்: நாட்டில் உள்ள அகதிகளுக்கும் தஞ்சம் கோருவோருக்கும் வேலை செய்யும் உரிமையை அரசு வழங்க வேண்டும்.

iii. தொழிலாளர் குடிபெயர்வு தொடர்பான முழுமையான தேசிய கொள்கை: தொழிலாளர் குடிபெயர்வை நிர்வகிக்கும் வகையில் ஒரு விரிவான தேசிய கொள்கை  அமல்படுத்தப்பட வேண்டும்.

 

8. உணவு பாதுகாப்பும் பொருள்களின் விலை கட்டுப்பாடும்

i. பொருள்களின் விலை கட்டுப்பாடு: அன்றாட தேவைக்கான பொருள்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மேலும், மக்கள் பயனடையும் வகையில் மானிய (subsidy) வழங்கலை மீண்டும் திறமையாகவும் நேரடியாகவும் அமல்படுத்த வேண்டும்.

ii. விவசாய உரிமையும் உணவு பாதுகாப்பும்: விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது நிலங்களில் இருந்து வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட வேண்டும். நீண்ட காலமாக விவசாயம் செய்து உள்ளூர் உணவு உற்பத்திக்கு பங்களித்து வரும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரை அங்கீகரித்து, அவர்களுக்கு நில மானியங்களை வழங்க வேண்டும்.

 

9. மனித உரிமைகள்

i. ஊடக சுதந்திரமும் மக்கள் குரலும்: தகவல் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்க, அச்சுச் சட்டத்தையும் தகவல் தொடர்புச் சட்டத்தின் பிரிவு 233-ஐயும் ரத்து செய்ய வேண்டும்.

ii. கல்வி சீர்திருத்தமும் மாணவர் உரிமைகளும்: மாணவர்களை கட்டுப்படுத்தும் AUKU சட்டம் மற்றும் அதற்கு ஒத்த சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். கல்விக் கடன் (PTPTN) நீக்கப்பட வேண்டும். அதேவேளை, குடிபெயர்ந்த குழந்தைகள் மற்றும் அகதிகள் உட்பட அனைவருக்கும் உள்ளடக்கிய இலவசக் கல்வி அமல்படுத்தப்பட வேண்டும்.

iii. தேசத்துரோகச் சட்டத்தையும், மக்களின் பேச்சுரிமை மற்றும் குடிமை உரிமைகளைக் கட்டுப்படுத்தும் அனைத்துக் கடுமையான சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்.

iv. பாலின சமத்துவம்: விரிவான சட்ட சீர்திருத்தத்தின் மூலம் பாலினம் அல்லது பாலியல் நோக்கஅடிப்படையிலான எந்தவொரு ஒடுக்குமுறையையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

v. குழந்தைகள் பாதுகாப்பு: குழந்தைகளின் உரிமைகள் மீதான உலகளாவிய உடன்படிக்கையின்படி (CRC), குழந்தைகளின் உரிமைகள்  முழுமையாக பாதுகாக்கப்பட்டும் உறுதி செய்யப்பட்டும் இருக்க வேண்டும்.

 

10. பழங்குடி மக்கள்

i. மலேசியாவில் உள்ள பழங்குடி மக்களின் பாரம்பரிய நில உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும். அவர்களுக்கு நிரந்தர நில உரிமை (hak milik kekal) வழங்கப்பட்டு, தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் உள்ள பழங்குடி மக்களின் நில ஒதுக்கீடுகளின் (rezab) நிலை மேலும் வலுப்படுத்தப்பட செய்ய வேண்டும். பழங்குடி மக்களின் நில வளர்ச்சி திட்டங்கள், அவர்களின் விருப்பம், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.

 

11. சுற்றுச்சூழல்

i. காலநிலை அவசரநிலை மற்றும் முன்னேற்பாடு (Adaptasi Iklim): காலநிலை அவசரநிலையை அறிவித்து, வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் போன்ற இயற்கை பேரிடர்களிலிருந்து விளிம்புநிலை சமூகங்களை பாதுகாக்கும் வகையில் சிறப்பு நிதியுடன் தேசிய ஏற்பாட்டு திட்டத்தை (Pelan Adaptasi Nasional) விரைவாக செயல்படுத்த வேண்டும்.

ii. ஆற்றல் மற்றும் உண்மையான தீர்வுகள்: தூய்மையான மற்றும் மலிவு விலையிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு உடனடியாக மாற வேண்டும். பயனற்றதும், உள்ளூர் சமூகங்களின் நில உரிமைகளுக்கு அச்சுறுத்தலாகவும் உள்ள போலி காலநிலை தீர்வுகளை (CCUS மசோதா போன்றவை) நிராகரிக்க வேண்டும்.

iii. ஆபத்தான திட்டங்களை நிறுத்துதல்: அரிய மண் கனிம அகழ்வு, மக்கள் வசிக்கும் பகுதிகளில் எரிவாயு உலைகள் அமைத்தல், அணுசக்தி, கடல் மீட்பு, உணர்திறன் மிக்க பகுதிகள் மற்றும் மலைச்சரிவுகளில் மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட, சுற்றுச்சூழலுக்கும் உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் திட்டங்களை நிறுத்த வேண்டும்.

iv. மாசு மற்றும் கழிவு கட்டுப்பாடு: வெளிநாட்டுக் கழிவுகளின் இறக்குமதியையும் திறந்தவெளி எரிப்பையும் நிறுத்த வேண்டும். பொது சுகாதாரத்தை உறுதி செய்ய, மாசுபாடு தடுப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

 

12. செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு

i. செயற்கை நுண்ணறிவு யுகத்தில் வேலைப் பாதுகாப்பு: தானியக்கமயமாக்கலால் பாதிக்கப்படக்கூடிய துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு முற்போக்கான மறுதிறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம், செயற்கை நுண்ணறிவு மனித வேலைகளின் தொடர்ச்சிக்கு அச்சுறுத்தலாக அமையாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.

 

இந்தப் பிரகடனத்தை ஆதரிக்கும் அமைப்புகளின் பட்டியல்

 

  1. AKSI
  2. Centre of Independence Journalism
  3. Gabungan Marhaen
  4. HARAM
  5. HAYAT
  6. Jentayu
  7. Kesatuan Pengawal Keselamatan Kespa
  8. Liga Mahasiswa Malaysia
  9. Mandiri
  10. Parti MUDA
  11. Parti Rakyat Malaysia (PRM)
  12. Parti Sosialis Malaysia (PSM)
  13. Persatuan Sahabat Wanita Selangor (PSWS)
  14. Suaram
  15. Tenaganita
  16. WAO

Monday, April 27, 2026

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தை கலைத்து, மீண்டும் மக்களிடமே ஒப்படையுங்கள்!

 PSM அறிக்கை - 27 ஏப்ரல் 2026 



நெகிரி செம்பிலானில் நிலவும் அரசியல் நெருக்கடி தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. காரணம், UMNOBarisan Nasional கூட்டணி, Aminuddin Harun தலைமையிலான Pakatan Harapan மாநில அரசுக்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது. இதன் விளைவாக, மாநில அரசுக்கு தற்போது 17 மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு மட்டுமே உள்ளது; ஆனால் பெரும்பான்மை அரசை அமைக்க குறைந்தது 19 இடங்கள் தேவைப்படுகிறது. அதேவேளை, Perikatan Nasional, புதிய மாநில அரசை அமைப்பதற்காக பாரிசான் நேஷனலுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக முன்மொழிந்துள்ளது.


ஒரு புதிய தேர்வை மேற்கொள்வதற்கான முடிவை மக்களிடமே திருப்பிக் கொடுத்து, PH கண்ணியமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு பிரதிநிதியோ அல்லது அரசியல் கட்சியோ, கீழிருந்து மக்களின் விருப்பங்களைக் கேட்காமல், தன்னிச்சையாகத் தங்கள் சொந்த ஏற்பாடுகளைச் செய்து, விருப்பப்படி இணைந்தும் பிரிந்தும் அதிகார விளையாட்டில் ஈடுபடக் கூடாது.


தற்போது மாநில சட்டமன்றத்தை கலைப்பது, எதிர்காலத்தில் மாநில ஆட்சியை வழிநடத்துவதற்கான Pakatan Harapan-இன் எதிர்காலத் தலைமைக்கு ஓர் ஆபத்தை விளைவித்தாலும், ஆதாயம் தேட முயலும் அரசியல்வாதிகளுக்கு ஜனநாயகம் ஒரு பகடைக்காயாக மாறுவதிலிருந்து காப்பாற்றுவதற்கான ஒரு கௌரவமான நடவடிக்கையாக இது அமையும்.


நெகிரி செம்பிலானுக்கு தனித்துவமான மற்றும் மதிக்கப்படும் பாரம்பரிய வழக்கங்கள்  இருந்தாலும், மக்களின் ஆணையின் பேரில் நிற்கும் ஒரு மாநில அரசின் முயற்சிகளுக்கு அவை தடையாகவோ அல்லது இடையூறாகவோ இருக்காது என்று நம்பப்படுவதையும் நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். மக்களின் குரல் மேலும் புனிதமானதாகவும், இறையாண்மை கொண்டதாகவும் மாறி, அதற்குக் கீழ்ப்படியவும் பாதுகாக்கவும் வேண்டும்.

வெளியிட்டவர்: தினகரன் சுப்பிரமணியம், PSM நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர்

Monday, April 20, 2026

புவி நாள் 2026 – சிறப்பு கட்டுரை

காலநிலை நெருக்கடி, நிராகரிக்கப்பட வேண்டிய உலகளாவிய முதலாளித்துவத்தின் ஒருபரிசு


வெள்ளம், வறட்சி, காட்டுத்தீ மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை இன்றைய காலத்தில் நம்முடைய கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் காலநிலை நெருக்கடியின் வெளிப்பாடுகளாகும். முதலாளித்துவப் பொருளாதார அமைப்பால் உருவாக்கப்பட்ட காலநிலை நெருக்கடியுடன் தொடர்புடைய பல்வேறு இயற்கை பேரழிவுகள், உலகின் பல பகுதிகளில் மனித சமுதாயத்தின் வாழ்வாதாரத்தையும் சூழலியலையும் அழித்து வருகின்றன.

தொழில்துறை புரட்சிக்காலத்திலிருந்து எரிபொருள் (fossil fuel) மீது அடிமையாகிப் போன மூலதனவாதம், முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போது மிக அதிக அளவில் கார்பன் டையாக்சைடு வெளியேற்றியுள்ளது; இதனால் உலக வெப்பமயமாதல் (global warming) என்ற நிகழ்விற்கு காரணமாகி, உலக மக்களின் வாழ்வாதாரத்தையே அச்சுறுத்துகிறது.

2022 ஆம் ஆண்டில் மட்டும் 37.1 பில்லியன் மெட்ரிக் டன் கார்பன் டையாக்சைடு வெளியேற்றப்பட்டது; இது 1850 ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்ட 204 மில்லியன் மெட்ரிக் டனுடன் ஒப்பிடும்போது சுமார் 182 மடங்கு அதிகமாகும். அதே காலகட்டத்தில், உலகின் சராசரி வெப்பநிலையும் சுமார் 1.4 °C அளவுக்கு உயர்ந்துள்ளது.

உலக வானிலை ஆய்வு நிறுவனத்தின் (WMO) கூற்றுப்படி, எட்டு தரவுத் தொகுப்புகளின் பகுப்பாய்வில், இரண்டு தரவுத் தொகுப்புகள் 2025-ஆம் ஆண்டை கடந்த 176 ஆண்டுகளில் இரண்டாவது வெப்பமான ஆண்டாகவும், மற்ற ஆறு தரவுத் தொகுப்புகள் அதனை மூன்றாவது வெப்பமான ஆண்டாகவும் தரவரிசைப்படுத்தியுள்ளன. இந்த எட்டு தரவுத் தொகுப்புகளுமே, 2023-2025 காலகட்டமே மிகவும் வெப்பமான மூன்று ஆண்டு காலமாகும் என்றும், அப்போது சராசரி வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தை விட 1.48 °C அதிகமாக இருந்தது என்றும் காட்டின. இதற்கிடையில், 2015 முதல் 2025 வரை உள்ள காலப்பகுதி, அனைத்து தரவுகளிலும் பதிவான மிக அதிக வெப்பமான பதினொன்று ஆண்டுகளைக் கொண்டதாகும்.

மற்றொரு வகையில் கூறினால், கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில், நாம் தற்போது மிக அதிக வெப்பமான தசாப்தத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

உலக வெப்பமயமாதல் இயற்கை பேரழிவுகளை மேலும் மேலும் தீவிரமாக உருவாக்குகிறது. இருப்பினும், அதன் தாக்கம் அனைவருக்கும் சமமாக இல்லை. செல்வந்தர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் பெரும் லாபத்திற்காக பூமியின் இயற்கை வளங்களை தொடர்ந்து சுரண்டிக் கொண்டிருக்கையில், வறுமையில் வாழும் பலர்—குறிப்பாக பெண்கள், பழங்குடியினர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்கள் உட்பட,அதன் விளைவுகளை அதிகமாகச் சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்; இது ஏற்கனவே குறைந்த நிலையில் உள்ள அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் பாதிக்கிறது. வேறுவிதமாகக் கூறினால், பணக்காரர்கள் காலநிலை நெருக்கடியை உருவாக்குகிறார்கள், ஆனால் ஏழைகள் அதன் பாதிப்பைத் தாங்கிக்கொள்கிறார்கள். இதற்கிடையில், உலகின் பல அரசுகள் இன்னும் பில்லியன் கணக்கில் நிதியை எரிபொருள் (fossil fuel) நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கி வருகின்றன; அந்த நிதி, காலநிலை நெருக்கடியைத் தீர்க்க பயன்படுத்தப்பட வேண்டியது தவிர, சுற்றுச்சூழலை அழிக்கும் செயல்களுக்கு அல்ல.

 

புதைபடிவ எரிபொருட்களைச் (fossil fuel)  சார்ந்த தொழில்துறைப் பொருளாதாரத்துடன், குறுகிய காலத்தில் அழிவுக்கும் உயிர் இழப்புக்கும் காரணமாக விளங்கும் இராணுவத் துறையும் சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு 'பங்களிக்கிறது'. உலகளாவிய இராணுவச் செலவினம் 2024-ல் 2.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது; கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் இராணுவச் செலவினம் அதிகரித்து வருகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA), உலகிலேயே மிகப்பெரிய இராணுவச் செலவினம் கொண்ட நாடாக இருந்து, 2024 ஆம் ஆண்டில் மட்டும் 997 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிட்டுள்ளது; இது உலகளாவிய மொத்த செலவின் சுமார் 37% ஆகும். ரஷ்யா–உக்ரைன் போர் முதல், காசாவில் சியோனிச இஸ்ரேல் ஆட்சி மேற்கொள்ளும் இனப்படுகொலை குற்றங்கள், மேலும் அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தும் போர் வரை, இவை அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் ஹோர்முஸ் நீரிணை (Selat Hormuz) கடல் பாதையில் விதிக்கப்பட்ட தடைகள், இன்னும் பெருமளவில் எரிபொருள்களில் சார்ந்துள்ள உலக பொருளாதாரத்தில் ஆற்றல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. பல நாடுகளில் மக்கள் அதன் எதிர்மறை விளைவுகளை ஏற்கனவே அனுபவித்து வருகிறார்கள்; இதேவேளை, எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்கள் மேலும் அதிக லாபத்தைப் பெறுகின்றன.

வளங்களைச் சுரண்டும் முதலாளித்துவ அமைப்பானது, உலகெங்கிலும் உள்ள மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமல்லாமல், வறுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக அநீதி மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடிகளை உருவாக்கும் உலகளாவிய முதலாளித்துவத்தின் கீழ் நிகழும் மனிதச் செயல்பாடுகளால், பூமியில் உள்ள விலங்குகளும் தாவரங்களும் கூட பேரழிவின் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. இன்றைய உலகத்தை அச்சுறுத்தும் காலநிலை நெருக்கடி, உலகளாவிய மூலதனவாதத்தின் ஒரு “பரிசு” ஆகும். ஆனால், அந்த “பரிசு” யாரும் ஏற்றுக்கொள்ள விரும்பாத, உறுதியாக நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று.

சுற்றுச்சூழல் நெருக்கடி என்பது மனித வாழ்விற்கு அச்சுறுத்தலாக விளங்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு நெருக்கடியாகும். மக்களையும் புவியையும் விட இலாபத்திற்கே முன்னுரிமை அளிக்கும் ஒரு சமூக-பொருளாதார அமைப்பு இன்றும் நிலவுவதால், சுற்றுச்சூழல் நெருக்கடி தொடர்ந்து நீடிக்கிறது. எரிபொருள் (fossil fuel) நிறுவனங்கள், தாங்களே உருவாக்கிய இந்த நெருக்கடியிலிருந்தே தொடர்ந்து லாபம் ஈட்டிக் கொண்டிருக்கின்றன; அதேவேளை, உலகம் முழுவதும் உள்ள அடித்தட்டு மக்கள் எரிபொருள் எரிப்பின் விளைவாக உருவாகும் துன்பங்களையும் சுமைகளையும் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

உலகின் செல்வந்தர்களான 1% பேர், உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்குச் சமமான கார்பனை வெளியிடுகின்றனர். இந்தக் கார்பன், அவர்களின் தனிப்பட்ட ஜெட் விமானங்கள் மற்றும் ஆடம்பரப் படகுகளிலிருந்து மட்டுமல்லாமல், தங்களை மேலும் வளப்படுத்திக் கொள்வதற்காகப் புதைபடிவ எரிபொருட்களில் அவர்கள் செய்யும் முதலீடுகளிலிருந்தும் உருவாகிறது. மேலும், முன்னர் ஏழை நாடுகளைக் காலனித்துவப்படுத்தியது உட்பட, இயற்கை வளங்களை அகழ்ந்தெடுத்துச் சுரண்டுவதன் மூலம் தங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்ட இன்றைய பணக்கார நாடுகள், உலக தென்பகுதி நாடுகளுக்குத் தாங்கள் செலுத்த வேண்டிய காலநிலை கடனைத் திருப்பிச் செலுத்த இன்னமும் மறுக்கின்றன.

 

COVID-19 பெருந்தொற்றுக் காலத்தில், உலகம் முழுவதும் உள்ள அரசுகளும் சமூகங்களும், அதற்கு முன்பு சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட மாற்றங்களை மேற்கொள்ள முடியும் என்பதை காட்டின. அவ்வாறானே அவசரமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடிந்தது. அதேபோல், சுற்றுச்சூழல் நெருக்கடியை சமாளிக்கவும் நாம் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். கடியைச் சமாளிக்கவும் நம்மால் அதையே செய்ய முடியும். காலநிலை நெருக்கடி என்பது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல, மாறாக அது உலகளாவிய முதலாளித்துவத்தில் உள்ளார்ந்திருக்கும் சமூக அநீதிகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது. நமது அரசாங்கங்கள் நமது பொருளாதாரங்களை மறுசீரமைத்து, அனைவருக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்த வேண்டும். பெரும் பணக்காரர்களின் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் நெருக்கடியின் சவால்களை எதிர்கொள்வதில் ஏழைகளுக்கான ஆதரவை அதிகரிக்கவும் அரசாங்கங்கள் இப்போதே செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி புவி நாளாகக் கொண்டாடப்படுகிறது. மாசுபடுத்தும், வளங்களை அகழ்ந்தெடுக்கும் மற்றும் சுரண்டும் பொருளாதார நடவடிக்கைகளால் நமது சுற்றுச்சூழல் அழிக்கப்படுவதிலிருந்து அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை புவி தினம் நம் அனைவருக்கும் நினைவூட்டுகிறது. ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல; மாறாக, அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் உள்ளிட்ட அதிகார அமைப்புகள், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் உலகை அச்சுறுத்தும் சுற்றுச்சூழல் நெருக்கடியைச் சமாளிப்பதற்குமான பொறுப்பிலிருந்து தங்களைக் கைகழுவிக்கொள்ளாமல் இருப்பதை உறுதிசெய்ய, நாம் தினமும் முயற்சி செய்ய வேண்டிய ஒரு தொடர்ச்சியான கடமையாகும்.

 

 

 

 

Sunday, March 15, 2026

நாடற்ற சிறுவர்கள் குற்றவாளிகள் அல்ல.

 PSM அறிக்கை – 16 மார்ச் 2026

நாடற்ற சிறுவர்கள் குற்றவாளிகள் அல்ல. நிகோவை உடனடியாக விடுதலை செய்யுங்கள்!

Parti Sosialis Malaysia (PSM), பஜாவ் லாவுத் சமூகத்தைச் சேர்ந்த நாடற்ற  மாணவரான  Niko Ansboy கைது செய்யப்பட்டதை கடுமையாக கண்டிக்கிறது. தகவல்களின்படி, நிகோ 15 மார்ச் அன்று Kota Kinabalu நகரிலுள்ள ஒரு ஷாப்பிங் மாலில், ஏழை சமூகத்திற்காக நோன்பு பெருநாள் பொருள்கள் வாங்கும் நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பெறப்பட்ட தகவல்களின் படி, நிகோ அந்த ஷாப்பிங் மாலில் தனது ஆசிரியருடன் Sekolah Alternatif பள்ளி ஏற்பாடு செய்த நலத்திட்ட நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். ஆசிரியர் நிகழ்ச்சிக்கான அனுமதி கடிதத்தை போலீசாருக்கு காட்ட முயன்றபோதும், அந்த விளக்கம் பொருட்படுத்தப்படவில்லை. அதன் பின்னர் நிகோவுக்கு கைவிலங்கு போடப்பட்டு Ibu Pejabat Polis Daerah Kepayan காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் பள்ளி நிர்வாகத்திற்கு நிகோ அடையாள ஆவணம் இல்லாத காரணத்தால் லாக்கப்பில் வைக்கப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஒரு தொண்டு நிறுவனத்தில் பங்கேற்ற ஒரு மாணவர் (மைனர்) தடுத்து வைக்கப்படுவதை PSM தீவிரமாகக் கருதுகிறது. நிக்கோ ஒரு குற்றவாளி அல்ல. நிக்கோ ஒரு தொண்டு நிறுவனத்தில் பங்கேற்கவும், மற்ற இளம் மாணவர்கள் போலவே நோன்பு பெருநாளை கொண்டாடுவதன் மகிழ்ச்சியை அனுபவிக்கவும் மட்டுமே விரும்பிய ஒரு மாணவர். 'நாடற்ற' மாணவரை கைவிலங்கு போட்டு தடுத்து வைத்தது, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த அதிகாரிகளின் உணர்திறன் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.

மலேசியா, 1995 ஆம் ஆண்டு United Nations Convention on the Rights of the Child (UNCRC) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடாகும். எனவே அதன் எல்லைகளுக்குள் உள்ள அனைத்து குழந்தைகளும் பாகுபாடு இல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பொறுப்பு அரசுக்கு உள்ளது. இதில் கல்வி பெறும் உரிமை, காரணமின்றி கைது செய்யப்படாமல் பாதுகாக்கப்படும் உரிமை, மற்றும் குடியுரிமை அல்லது சட்ட நிலைமை எதுவாக இருந்தாலும் மனித மரியாதையுடன் நடத்தப்பட வேண்டிய உரிமை ஆகியவை அடங்குகின்றன. நிகோவின் கைது இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை உணர்வுக்கே முரணானதாகும். 

ஒரு மாணவரை கைது செய்து ரிமாண்ட் செய்வது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். அதோடு, சமூகத்தின் மிகவும் பாதிப்புக்குள்ளான மக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதற்கான மிகக் கவலைக்கிடமான செய்தியையும் அது தெரிவிக்கிறது.

ஒரு வயது குறைந்த மாணவரிடம் ஆவணங்கள் இல்லை என்பதற்காக அவரை குற்றவாளியாக நடத்தக்கூடாது. நாடற்ற குழந்தைகள் செயல்முறை தோல்வியால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று PSM வலியுறுத்துகிறது. அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்க வேண்டும், சபாவில் நாடற்ற சிறுவர்களின் பிரச்சினையைத் தீர்க்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

போலீசார் இளம் மாணவர்களின் உரிமைகளை மதித்து, இளம் மாணவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். Parti Sosialis Malaysia (PSM), Niko Ansboy உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், Sekolah Alternatif மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தல் நடவடிக்கைகளையும் போலீசார் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோருகிறது.

வெளியிட்டவர்: கேசவன் பார்வதி, கல்வி ஆர்வலர், மலேசிய சோசலிசக் கட்சி (PSM)

Thursday, March 5, 2026

SOCSO 24 மணி நேர பாதுகாப்பை அமல்படுத்துவதை விரைவுபடுத்துங்கள்

PSM அறிக்கை – 6 மார்ச் 2026 -

SOCSO 24 மணி நேர பாதுகாப்பை அமல்படுத்துவதை விரைவுபடுத்துங்கள்: தொழிலாளர்களின் உரிமைகளை தாமதப்படுத்தாதீர்கள்!

ஆர். சரத்பாபு ராமன்

Parti Sosialis Malaysia (PSM), புதிய மனிதவள அமைச்சரை, கடந்த ஆண்டின் இறுதியில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட Akta Keselamatan Sosial Pekerja 1969 திருத்தத்தின் கீழ் உள்ள 24 மணி நேர பாதுகாப்பை உடனடியாக அமல்படுத்துமாறு வலியுறுத்துகிறது. இந்த திருத்தம் Pertubuhan Keselamatan Sosial (PERKESO) திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.

இந்த திருத்தம் தொழிலாளர் வர்க்கத்திற்கு மிகப் பெரிய மற்றும் நேர்மறையான முன்னேற்றமாகும். இருப்பினும், அது உடனடியாகவும் தெளிவாகவும் அமல்படுத்தப்படாவிட்டால், தொழிலாளர்களுக்கு எந்த நிஜமான பயனையும் வழங்காது. எனவே, கொள்கை அறிவிப்புகளிலிருந்து நிர்வாக நடவடிக்கைகளுக்கு இப்போது கவனம் மாற வேண்டும் என்று PSM வலியுறுத்துகிறது.

மலேசியாவில் 16 மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.  அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு  தொழிலாளர்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட (formal) துறையில் பணியாற்றி PERKESO-க்கு பங்களிப்பு செலுத்துகின்றனர். இதன் பொருள், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நிதிக்கு தொடர்ந்து பங்களித்து வருகின்றனர்; அந்த நிதி விபத்து அல்லது காயம் போன்ற துரதிர்ஷ்டமான சூழ்நிலைகளில் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்க வேண்டும்.

அரசுக் கொள்கை நோக்கில், 24 மணி நேர பாதுகாப்பு என்பது வெறும் நலத்திட்டம் அல்ல. தொழிலாளர்கள் விபத்து அல்லது காயத்தால் பாதிக்கப்படும் போது குடும்பங்கள் பொருளாதார ரீதியாக சிதைவடையாமல் பாதுகாக்கும் ஒரு முக்கியமான அமைப்பாகும். வலுவான சமூகப் பாதுகாப்பு அமைப்பைக் கொண்ட நாடுகள் பொதுவாக பொருளாதார நெருக்கடிகளுக்குப் பிறகு விரைவாக மீள்கின்றன; ஏனெனில் குடும்பங்களின் வருமானம் முழுமையாக துண்டிக்கப்படாமல் தொடர முடிகிறது.

Pertubuhan Keselamatan Sosial நிறுவனம், Abdul Razak Hussein தலைமையிலான காலத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான சமூக பாதுகாப்பு அமைப்பாகும். தொழிலாளர்கள் செலுத்தும் பங்களிப்பு நிதி, அவர்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்க பயன்படுத்தப்பட வேண்டும்; மிகக் கடுமையான விதிமுறைகள் அல்லது நிர்வாக விளக்கங்களால் அது தடுக்கப்படக் கூடாது.

எனவே, Parti Sosialis Malaysia புதிய மனிதவள அமைச்சரிடம் பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கோருகிறது:

  1. 24 மணி நேர பாதுகாப்பு அமலுக்கு வரும் தெளிவான தேதியை அறிவிக்க வேண்டும்.

  2.  உரிமைகோரல் (claim)  அமைப்பைத் தயாரிப்பதற்கான ஒரு திட்டத்தை முன்வைக்கவும், வழக்குகளை மதிப்பிடும் அதிகாரிகள் போதுமானதாகவும் தயாராகவும் இருப்பதை உறுதி செய்யவும்.

  3. தேசிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி, தொழிலாளர்கள் தங்கள் புதிய உரிமைகளை புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும்.

தொழிலாளர்களின் உரிமைகள், நிர்வாகத் தாமதங்களால் ஒத்திவைக்கப்படக் கூடாது. இந்த பாதுகாப்பை உடனடியாக அமல்படுத்துவது அரசின் பொறுப்பாகும்.

எழுதியவர்: ஆர். சரத்பாபு ராமன், PSMதொழிலாளர் பிரிவு ஒருங்கிணைப்பாளர்.

Monday, March 2, 2026

“சீரழிந்த கலாசாரம்" மத விவகார துணை அமைச்சரின் கூற்றுக்கு சோசலிச இளைஞர் பிரிவு பதிலடி

 PSM அறிக்கை – 3 மார்ச் 2026

மத விவகார துணை அமைச்சர்  “சீரழிந்த கலாசாரம்” என LGBTQIA சமூகத்தை குறிப்பிட்ட கருத்துக்கு சோசலிச இளைஞர் பிரிவு  பதிலடி

மத விவகாரங்களுக்கான துணை அமைச்சர் YB Sen. Puan Marhamah Binti Rosli அவர்கள் LGBTQIA+ சமூகத்தை “சீரழிந்த கலாசாரம்” என குறிப்பிட்ட சமீபத்திய கருத்துக்களை சோசலிச இளைஞர் பிரிவு  கடுமையாக எதிர்க்கிறது. இத்தகைய பேச்சுகள் வெறும் அவமதிப்பானது மட்டுமல்ல; அது மனிதாபிமானமற்றது, பழித்தூற்றலை வலுப்படுத்துகிறது, பாகுபாட்டைச் சட்டப்பூர்வமாக்குகிறது, மேலும் ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சமூகத்தினருக்கு எதிரான விரோதத்தைத் தூண்டும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.

அரசியல் அழுத்தம் அல்லது பொதுமக்கள் அதிருப்தி அதிகரிக்கும் தருணங்களில், குயர் சமூகத்தை எளிதான பலிகடாவாக பயன்படுத்தும் ஒரு கீழ்மையான அரசியல் முறை காணப்படுவதை நாங்கள் கவலையுடன் கவனிக்கிறோம். அடையாள அரசியலை ஆயுதமாக்குவது, பொறுப்பேற்க வேண்டிய தேசிய பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திருப்புகிறது.

இந்த நடைமுறை பின்வரும் நிகழ்வுகளில் தெளிவாகத் தெரிகிறது:



மே–ஜூலை 2025

Rafizi Ramli மற்றும் Nik Nazmi Nik Ahmad ஆகியோரின் ராஜினாமாவை மையமாகக் கொண்டு பொதுமக்கள் கவனம் திரும்பியிருந்த நிலையில், மத விவகார அமைச்சர், ஒரு பாலியல் சுகாதார விழிப்புணர்வு பயிலரங்கை விசாரிக்க வேண்டுமெனக் கோரினார் — அதற்கு கூட்டாட்சி சட்டம் அல்லது ஷரியா சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படையும் இல்லை. அதே காலகட்டத்தில், கிளந்தானில் நடைபெற்ற தனியார் கூடுகை ஒன்று “கே பார்ட்டி” என சோதனை செய்யப்பட்டு சித்தரிக்கப்பட்டது. பின்னர் சிவில் சமூகம் மற்றும் சுகாதார அமைச்சகம் அது HIV விழிப்புணர்வு நிகழ்ச்சி என்பதை தெளிவுபடுத்தின.


நவம்பர்–டிசம்பர் 2025

சபா மாநிலத் தேர்தலால் ஏற்பட்ட கூட்டாட்சி அரசியல் பின்னடைவுகளின் போது, பினாங்கு மற்றும் கோலாலம்பூரில் ஆண்கள்-மட்டும் (men-only )சோனா மையங்களில் சட்ட அமலாக்கத்தினர் மிகப் பெரிய அளவில் சோதனைகள் நடத்தினர். “ஒழுக்கக்கேடான செயல்கள்” என்ற கோணத்தில் செய்தித் தலைப்புகள் வெளிவந்தபோதிலும், அதன் பின்னர் குறைந்த அல்லது எந்த வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை.


ஜனவரி–பிப்ரவரி 2026

Azam Baki தொடர்பான ஊழல் விவகாரங்கள் மற்றும் நிறுவனப் பொறுப்புணர்வு குறித்த பொது ஆய்வுகள் தீவிரமானபோது, கவனம் திடீரென  ஓரினச்சேர்க்கையை வேலை அழுத்தத்துடன் இணைக்கும் கூற்றுக்கள் மற்றும் மத விவகார அமைச்சர்களால் LGBTQ+ மக்களை "மாறுபட்ட கலாச்சாரம்" என்று முத்திரை குத்துவது குறித்து கவனம் திரும்பியது.


இந்த நிகழ்வுகள் அனைத்தும், LGBTQ+ சமூகத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளும் கருத்துக்களும், மலேசியர்களின் கவனத்தை ஊழல் மற்றும் மோசமான அரசியலிலிருந்து திருப்புவதற்கான நெறிப்படுத்தப்பட்ட கலக்கத்தை (moral panic) தூண்டுவதே நோக்கமாக இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.

அரசின் வளங்கள், உண்மையான சேதங்களை எதிர்கொள்ள முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் — அதாவது சுரண்டல், துஷ்பிரயோகம், மனிதக் கடத்தல், வன்முறை, ஊழல் மற்றும் அமைப்புசார் சமத்துவமின்மை. இவை மக்களின் பாதுகாப்பையும் நலனையும் நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினைகள்.

சர்வதேச பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், மலேசியாவின் வெளிநாட்டு கொள்கை நிலைப்பாடுகள் குறித்த கவலைகளும் நிலவுகின்றன. இத்தகைய நேரத்தில், நெறிமுறைக் கலக்கத்தை தூண்டி கவனத்தைத் திருப்புவது, பொது பொறுப்புணர்வை மேலும் பலவீனப்படுத்தும்.

அரசாங்கம் தங்கள் அறிக்கைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்களின் வார்த்தைகள் சமூக மனப்பான்மையை வடிவமைக்கின்றன, மேலும் பதட்டங்களைத் தணிக்கலாம் அல்லது பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை நோக்கி வன்முறையை தூண்டலாம்..

மலேசிய அரசியலில் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் இத்தகைய தந்திரங்களுக்கு இடமிருக்கக் கூடாது.

Pemuda Sosialis, பலிகடா அரசியலிலிருந்து விலகி, நீதி, சமத்துவம் மற்றும் பொறுப்புணர்வு அடிப்படையிலான கொள்கைகளுக்கு மாறுமாறு வலியுறுத்துகிறது.


எழுதியவர்: பு யான் கேய், Rainbow Troupe, சோசலிச இளைஞர் பிரிவு 

SOURCES

May-July 2025:

- Malaysian Ministers Quit in Blow to Anwar’s Government, 28 May 2025 -

https://www.bloomberg.com/news/articles/2025-05-28/malaysia-economy-minister-rafizi-to-resign-effective-june-17 

- Malaysia Kini: No legal grounds to probe LGBTQ+ workshop, says LFL, 1 June 2025 - https://m.malaysiakini.com/news/744959?s=08 

- Not a 'gay party' but a HIV awareness event, 22 July 2025 -

https://www.nst.com.my/news/nation/2025/07/1248515/not-gay-party-hiv-awareness-event 

November-December 2025:

- Sabah’s Nov 29 election will test Malaysia’s federal maturity, 29 November 2025 - https://www.ucanews.com/news/sabahs-nov-29-election-will-test-malaysias-federal-maturity/111080 

- Malaysia PM faces electoral setback as allies fall in Sabah state polls, 30 November 2025 - 

https://www.reuters.com/world/asia-pacific/malaysia-pm-faces-electoral-setback-allies-fall-sabah-state-polls-2025-11-30/ 

- Senior citizen among 13 nabbed in Penang sauna raid, 29 November 2025 - https://www.nst.com.my/news/regional/2025/11/1326944/senior-citizen-among-13-nabbed-penang-sauna-raid 

- ‘Men only’ KL spa raid: 171 freed after court rejects remand bid in ‘victimless’ case, 30 November 2025 -

https://www.straitstimes.com/asia/se-asia/men-only-kl-spa-raid-171-get-off-scot-free-after-court-rejects-remand-bid-in-victimless-case 

January-February 2026:

- Malaysians lampoon minister over stress-gay link: ‘they never work hard in parliament?’, 28 January 2026 - 

https://www.scmp.com/week-asia/politics/article/3341504/malaysians-lampoon-minister-over-stress-gay-link-they-never-work-hard-parliament 

- Bukit Aman records statement from Albert Tei over allegations involving Azam Baki, 29 January 2026 

https://www.thestar.com.my/news/nation/2026/01/29/bukit-aman-records-statement-from-albert-tei-over-allegations-involving-azam-baki 

-Malaysian minister calls for royal probe into anti-graft body’s ‘corporate mafia’ claims, 24 February 2026 - 

https://www.straitstimes.com/asia/se-asia/malaysia-minister-calls-for-top-level-probe-into-anti-graft-bodys-corporate-mafia-claims 

- Deputy minister says LGBT should be called ‘deviant culture’ to avoid normalisation, 26 February 2026 - 

https://www.malaymail.com/news/malaysia/2026/02/26/deputy-minister-says-lgbt-should-be-called-deviant-culture-to-avoid-normalisation/210509

Monday, February 9, 2026

இடைத்தரகர்களை நீக்குவது சரி - ராணி ராசையா

PSM அறிக்கை - 10 பிப்ரவரி 2026

அந்நிய தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பில், இடைத்தரகர்களை நீக்குவது சரியான திசையில்  எடுத்துவைக்கும் படிகட்டுகள் 


புலம்பெயர் தொழிலாளர்களை நேரடி நியமனம் மூலம் ஆட்சேர்ப்பு செய்வதிலிருந்து இடைத்தரகர்களை நீக்கும் மனிதவள அமைச்சரின் திட்டங்களை Parti Sosialis Malaysia (PSM) ஆதரிக்கிறது. (தி ஸ்டார், 4/2/2026).

G2G (அரசிடமிருந்து அரசுக்கு) அந்நியத் தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு முறைகளில் இடைத்தரகர்களின் பங்கினை நீக்குவது, மேலும் தொழிலாளர் இடம்பெயர்வு குறித்த முழுமையான கொள்கை — இவை அனைத்தும் 11-ஆவது மலேசியத் திட்டத்தின் (2016–2020) பகுதிகளாக இருந்தும், ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 

அந்நியத் தொழிலாளர்களை நாம் அதிகமாகச் சார்ந்திருப்பதாலும், ஒரு வளர்ந்து வரும் நாடாக நாட்டின் நற்பெயர் இவ்விவகாரத்தில்  தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் சூழலில், இதுபோன்ற சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவது சரியான நேரமாகும். ஆனால், ஆட்சேர்ப்பு செயல்முறையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என அமைச்சர் கூறும் இடைத்தரகர்கள் யார்? இந்த முயற்சி உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில், சிறிய முகவர்கள் மட்டுமின்றி, அரசியல் தொடர்புகள் கொண்ட முக்கிய நபர்களையும் இதில் சேர்த்தே நீக்க வேண்டும்; ஏனெனில் அவர்கள்தான் நமது நாட்டில் அந்நிய தொழிலாளர்கள் விவகாரம் இந்த அளவுக்கு சீர்கெட்ட நிலைக்கு செல்லக் காரணமாக உள்ளனர்.

நீண்ட காலமாக மிக ஏழ்மையின்பாதிப்புகளில் இருக்கும் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்துவரும் இந்த முக்கியமான இடைத்தரகர்களை அகற்றுவது எளிதானது அல்ல. இதை வெற்றிகரமாக நிறைவேற்ற மனித வள அமைச்சகத்திற்கு (HRM) அமைச்சரவையும் பிரதமரும் வழங்கும் ஒருங்கிணைந்த  ஆதரவு அவசியமாகும்.


எனினும், ஆட்சேர்ப்பில் இடைத்தரகர்கள் இல்லாதிருப்பது மட்டுமே புலம்பெயர் தொழிலாளர்கள் சுரண்டலிலிருந்து முழுமையாக விடுபடுவார்கள் என்பதற்கான உத்தரவாதமல்ல என்பதை உணர்வது முக்கியம். 2023/2024 ஆம் ஆண்டுகளில் நடந்த ஒதுக்கீட்டு மோசடி (quota fraud) ஊழலை பார்த்ததுபோல், தொழிலாளர்களை ஏமாற்றும் சங்கிலிகளில் சில முதலாளிகளும் நேரடியாக ஈடுபடுகின்றனர். இவ்வாறான விஷயங்கள் முழுமையாகத் தெரிந்திருந்த போதிலும், HRM உட்பட்ட நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக தலையிட தேவையான அதிகாரமின்றி பலவீனமாக இருந்தன. எனவே, HRM உருவாக்கும் புதிய அமைப்பில், தொழிலாளர்களுக்கு வழிகாட்டும் ஏற்பாடுகளும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்க பயனுள்ள புகார் அளிக்கும் வழிமுறைகளும் கட்டாயமாக இடம்பெற வேண்டும்.


மலேசியா அந்நியத் தொழிலாளர்கள் விவகாரத்தில்  ஊழல், சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதை சீர்செய்ய பல நடவடிக்கைகள் தேவை; அதில் முக்கியமானது, உள்ளூர் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காகவே புலம்பெயர் தொழிலாளர்கள் வரவேற்கப்பட வேண்டும் என்ற அதன் ஆரம்ப நோக்கத்திற்கு இந்த முறையை மீட்டெடுப்பதாகும் — அதாவது, உள்ளூர் தொழிலாளர்களுடன் போட்டியிடாமல், அவர்களுக்கு துணைபுரிவதற்காக என்ற புரிதலை ஏற்படுத்த வேண்டும். மேலும், நாட்டின் மொத்த செயல்பாட்டிலுள்ளமந்நியத் தொழிலாளர்கள் எண்ணிக்கையை கணக்கிடும் போது, ஆவணமற்ற தொழிலாளர்களையும் அகதிகளையும் (அவர்களும் பொருளாதாரத்தில் பங்களித்து வருகிறார்கள்) சேர்த்துக் கொள்ள வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் அதிகப்படியான எண்ணிக்கையை, அனைத்து தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியை பலவீனப்படுத்தும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படக்கூடாது.

புலம்பெயர் தொழிலாளர்களின் நேரடி நியமனம் நிச்சயமாக சரியான திசையில் எடுக்கப்படும் ஒரு படி தான். ஆனால், அதற்கு தொழிலாளர் இடம்பெயர்வு குறித்த முழுமையான கொள்கை, அமலாக்கத்திற்கான போதுமான நிதி ஒதுக்கீடுகள், மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பயனுள்ள நிவாரணம் பெறும் உரிமை அமைப்பு ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும்.

எழுதியவர்: ராணி ராசியா, PSM புலம்பெயர் தொழிலாளர் பிரிவு

மே 1 2026, தொழிலாளர் நாள் பிரகடனம்

                                   மே 1 2026 பிரகடனம் தொழிலாளர்களே ஒன்றுபடுவோம்- போரை தவிர்ப்போம், ஊழலை எதிர்ப்போம் இந்த ஆண்டு , மே 1 தொழி...