Sunday, June 29, 2025

குழந்தைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தீவிரமாக இல்லை


மலேசியா சோசியலிச கட்சி (பிஎஸ்எம்) சமீபத்தில் முகநூலில் வெளிவந்த பெடோபிலியா பிரச்சினையின் மீது நடவடிக்கை எடுப்பதில் தகவல் தொடர்பு அமைச்சு மற்றும் பன்னூடக ஆணையம் காட்டிய தாமதத்தை கடுமையாக கண்டனம் செய்கிறது. இன்னும் கவலைக்குரியது என்னவென்றால் சம்பந்தப்பட்ட முகநூல் குழு 12000க்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கியது. இதை வெறும் சிறிய பிரச்சனையாக கடக்காமல், சமூகத்தின் அவலங்களை நிரூபிக்க கூடிய அறிகுறியாக பார்க்கப்பட வேண்டும்.

அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்திடமிருந்து இந்த தீவிரமான பிரச்சனைக்கு உடனடி நடவடிக்கை தேவை. இருப்பினும், இச்சம்பவத்தை குறித்து தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாஹ்மி பாட்ஸில் அல்லது குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி சுக்ரியிடமிருந்தும் முறையான அறிக்கைகள் வெளியிடப்படவில்லை.

மலேசியா அமைச்சகம் குழந்தைகளின் பாதுகாப்பை குலைய செய்யும் நடவடிக்கைகளை எதிர்த்து செயல்படுவதில் ஏன் தீவிரமாக இல்லை? ஊடகம் அறிக்கைகள் இந்த முகநூல் குழு 2014-இருந்து உள்ளதாக தெரிவித்துள்ளது.  ஆனாலும் ஏன் எம்சிஎம்சி முன்னரே கண்டறிந்து குழுவை முடக்க தவறிவிட்டது? தீங்கு விளைவிக்கும் மின்னிலக்க உள்ளடக்கத்தை கண்காணிப்பதின் செயல்திறன் எங்கே?

அரசியல் பிரச்சினைகள் எதிர்கொள்ளும்போது அரசாங்கம் பெரும்பாலும் விவேகமாகவும் துடிப்பாகவும் இருக்கிறது. ஆனால், சமூகத்தில் அதிகமாக பாதுகாப்பு தேவைப்படக்கூடிய குழந்தைகளின் பிரச்சனைகளில் ஏன் தீவிரமோ ஈடுபாடோ காட்ட மறுக்கிறது?

பி.எஸ்.எம் கோரிக்கைகள்:

1. இந்த குழுவின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் காவல்துறை முழுமையான விசாரணை நடத்தி, சட்டம் 792 குழந்தைகள் மீது பாலியல் குற்றங்கள் 2017 கீழ் குற்றச்சாட்டு நிறுவப்பட வேண்டும்.

2. இந்தக் குழுவின் செயல்பாடுகளை முன்னதாக கண்டறிய தவறியதற்கான காரணங்களை பற்றி எஸ்கேஎம்மும் (SKMM) மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளும் தெளிவான விளக்கம் வழங்க வேண்டும்.

3. இத்தகைய பிரச்சனைகளை கையாள அரசுக்கு வழிகாட்ட, மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (SUHAKAM) ஆணையர் தலைமையில் ஒரு சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும்.




எழுத்து : தோழர் காந்திபன்  நந்த கோபாலன் (பி.எஸ்.எம் மத்திய செயலவை உறுப்பினர்)

தமிழில் : மோகனா 

Tuesday, June 24, 2025

மக்களின் வாழ்க்கை எளிதாக இருக்க வேண்டும், இல்லையா?

 


சட்ட அமைச்சர் அசாலினா ஒத்மான் பணி ஓய்வு வயதை 65ஆக உயர்த்த வேண்டும் என்றும், அது ஆசியான் நாடுகளுடன் ஒத்துவர வேண்டும் என்றும் கூறியதைக் குறித்தே நான் பேசுகிறேன். ஆனால், இது தேவையான கொள்கையா? நம்முடைய நாடு முன்னேறிக் கொண்டிருக்கையில், மக்கள் ஓய்வுபெற்ற பிறகு மேலும் ஓய்வு நேரம் பெற்றுவிட்டு சுலபமாக வாழக்கூடாதா?

ஏன் நம்முடைய உள்நாட்டு கொள்கைகளை ஆசியான் நாடுகளுடன் ஒத்துபோக வைத்தாகவேண்டும் என்று எனக்கு புரியவில்லை. சிங்கப்பூர் தவிர அனைத்து ஆசியான் நாடுகளும் பெரிய உலகளாவிய நிறுவனங்களால் மலிவான உழைப்பைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் ஒவ்வொரு ASEAN தொழிலாளியின் சேமிப்பும் குறைகிறது, இதனால் முதுமையில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இது அவர்களின் முதிய வயதில் பிரச்சனைகளை உருவாக்குகிறது.

இந்த பிரச்சனையைத் தீர்க்க, பெரும் லாபங்களை வாங்கும் முதலாளிகளை நோக்காமல், ஊழியர்களை ஓய்வு பெறாமல் தள்ளிக்கொண்டு செல்ல அரசு முயற்சி செய்கிறது. இப்போது கூட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். பலர் உடல் நலமின்றி இருந்தாலும், வாழ்க்கையை நடத்த வேலை செய்யத் தவிர வேறெது வழியுமில்லை – ஏனெனில் அவர்களது பிள்ளைகளுக்கு கூட போதிய வருமானம் இல்லை.

முதலாளியின் நோக்கிலிருந்தும் பார்த்தால், ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது பல பிரச்சனைகளை உருவாக்குகிறது. முதிர்ந்த ஊழியர்கள் தொடர்ச்சியாக வேலை செய்ய வேண்டி வருகிறது; இதனால் அவர்களுக்குப் பதிலாக புதியவர்கள் வளர முடியாமல் போகிறது. பல நிறுவனங்கள், பதவி உயர்வுக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படுவதால், திறமையான ஊழியர்கள் வேறு இடங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. ஓய்வு வயதை உயர்த்தினால் இளம் தலைமுறைக்கு மேலதிக பொறுப்புகளை பெறும் வாய்ப்பு தாமதமாகிறது.

ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களின் நலனில் அரசாங்கம் அக்கறை கொண்டிருந்தால், மலேசிய சோசலிசக் கட்சி பரிந்துரைக்கும் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்க வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் மாதத்திற்கு RM500 வழங்கப்படும் தொகை அவர்களின் வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட ஓரளவு உதவும்.

இறுதியாக, வயதானவர்கள் ஓய்வெடுக்கட்டும். அவர்கள் கண்ணியமாக ஓய்வு பெறுவதற்கு போதுமான சமூகத் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை அதிகரிக்கவும். இளைய தலைமுறையின் வேலைவாய்ப்பை குறைத்து அவர்களை சுரண்டக்கூடாது.  வெளிநாடுகளில் இருந்து நாம் எடுக்கும் பாடம், நமது மக்களின் நலனுக்கேற்ப இருக்கட்டும்.

எழுத்து : தோழர் அர்வீந்த் கதிர்செல்வன் (பி.எஸ்.எம் மத்திய செயலவை உறுப்பினர்)

தமிழில் : யோகி




Tuesday, May 13, 2025

வாசிப்பும் அது தொடர்பான விவாதமும் குற்றம் அல்ல (PSM அறிக்கை)

PSM அறிக்கை - வாசிப்பும் அது தொடர்பான விவாதமும் ஒரு குற்றம் அல்ல: அறிவை வளர்க்கும்  புத்தகங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும், அச்சுறுத்தப்படக்கூடாது.

டந்த சனிக்கிழமை  டத்தாரான் மெர்டேகாவில் நடந்த,  Buku Jalanan என்ற வாசிப்பு தொடரில், வாசிப்பு கலாச்சாரத்தை சீர்குலைக்கும் விதமாகவும், அது தொடர்பான விவாத நடவடிக்கையை தடுக்கும் விதத்திலும் காவல்துறை மற்றும் கோலாலம்பூர் மாநகர மன்றம் (DBKL) நடந்துக்கொண்டது கண்டிக்கதக்கது என மலேசிய சோசலிஸ்ட் கட்சி (PSM) அறிவுறுத்துகிறது. 

(NYF எனும் தேசிய இளைஞர் கூட்டமைப்பு குழு இது குறித்து கூறுகையில்.... 

காவல்துறையும் DBKL- அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட இளைஞர்களை நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு கலைந்து செல்ல உத்தரவிட்டதாக கூறினர்.  இந்த நடவடிக்கை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்றும் அதோடு கூட்டம் கூடும் சுதந்திரம் மற்றும் சிந்தனை சுதந்திரம் குறித்த அரசாங்கத்தின் அணுகுமுறையை இது  நிரூபிக்கிறது என்றும் அந்த இளைஞர்கள் கருத்துரைத்திருக்கின்றனர். 

டத்தாரான் மெர்டேகா போன்ற பொது இடங்களில் அனுமதியின்றி ஒன்றுகூடுவது, விவாதிப்பது மற்றும் அறிவுசார் செயல்பாடுகளை மேற்கொள்வது மக்களின் உரிமை என்பதை இவ்வேளையில் PSM வலியுறுத்த விரும்புகிறது. வாசிப்பு மற்றும் கலந்துரையாடல் நடவடிக்கைகளுக்காக "அனுமதி அல்லது தகவல் கடிதங்களை" கோரும் காவல்துறையின் நடவடிக்கை சட்டப்படி  அடிப்படையற்றது மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகவும் இருக்கிறது. 

இந்த நிகழ்ச்சியை நிறுத்தியதோடு,  கண்காணிக்கவும் செய்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் DBKL அதிகாரிகளின் செயலானது, இளைஞர்களுக்கு எதிராக விடுத்த ஒரு வகையான மிரட்டலாகும். உண்மையில், இது கோலாலம்பூர் சர்வதேச புத்தகக் கண்காட்சி (KILF) 2023 இன் தொடக்க உரையில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் இளைஞர்களுக்கு விடுத்த அழைப்பிலிருந்து நேரடியாக முரண்படுகிறது, 

"என்னை நம்புங்கள், நீங்கள் ஒரு மனிதனாகவும், மனித இரக்கத்தைப் பற்றிப் பேசுபவராகவும், மதிப்புகள், ஒழுக்கங்கள் மற்றும் அறிவு கொண்டவராகவும் இருக்க விரும்பினால், நீங்கள் தீவிரமாக வாசிக்கும் மரபைத் தொடங்க வேண்டும்." என்றார் அவர். 

இத்தகைய வெளிப்பாடுகள் வெறும் அலங்கார வார்த்தைகளாக இருப்பது கவலையளிக்கும் ஒரு முரண்பாடாகும், அதே நேரத்தில் இந்த அழைப்புகளுக்கு ஆதரவளிக்கும் இளைஞர்களை அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு தடுக்கப்படுகிறார்கள்.

புத்தகங்களைப் படிக்க அனுமதி கோரும் சட்டப்பூர்வ அதிகாரத்தையும், வாசிக்கும் இளைஞர்களை 10 மணிக்கு கலைந்து செல்ல உத்தரவிடுவதற்கான காரணத்தையும் காவல்துறையும் DBKL-ம் விளக்க வேண்டும். எதிர்காலத்தில் பொது இடங்களில் அறிவுசார் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிப்பதை காவல்துறையும் DBKL-ம் நிறுத்த வேண்டும்.

ஒரு காலத்தில் சீர்திருத்தவாதி என்று பெருமைப்பட்டுக் கொண்ட அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம், இப்போது அதன் புதிய கூட்டாளியான பாரிசான் நேஷனல் பயன்படுத்திய அடக்குமுறை மற்றும் தந்திரங்களை மீண்டும் மீண்டும் செய்துகொன்டிருக்கிறது. இம்மாதிரியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இளைஞர்களுடன் PSM  கை கோர்த்து நிற்கிறது, மேலும் அனைத்து மலேசியர்களும் கலந்துரையாடல், வாசிப்பு மற்றும் விவாதங்களுக்கு பொது இடங்களைத் தொடர்ந்து பயன்படுத்துமாறும் PSM   கேட்டுக் கொள்கிறது. 

எழுதியவர்: காந்திபன் நந்த கோபாலன் (மத்திய செயற்குழு உறுப்பினர்)

தமிழில் : யோகி

Tuesday, April 22, 2025

பொது சுகாதாரத்திற்கு பவாணி பரிந்துரைக்கும் 3 விஷயங்கள்

 


ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் (இடைத்தேர்தல்)   மலேசிய சோசலிசக் கட்சியின் (PSM) வேட்பாளர் பவாணி KS, நேற்று (21/4/2025) ஆயேர் கூனிங்  கிராமப்புற மருத்துவமனை முன் ஒரு சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அந்தக் சந்திப்பில் பொது சுகாதார அமைப்பு தொடர்பான பிரச்சினைகளை பவாணி எடுத்துரைத்தார்.

"பொது சுகாதார சேவைகள் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வந்தாலும், சாதாரண குடிமக்களுக்கு இது மிக முக்கியமான அடிப்படைத் தேவை என்பதால், நான் ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பொது மக்கள் எளிமையாக பொது சுகாதாரத்தை அணுக உதவும் விஷயங்களைச் செய்வேன்" என்று பவாணி கே.எஸ் கூறினார்.

ஆயர் கூனிங் சட்டமன்ற உறுப்பினராக பவாணி கே.எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்  செய்யவிருக்கும் மூன்று விஷயங்களைப் பட்டியலிட்டார்:

1. ரஹ்மா பண பங்களிப்பு (STR) மற்றும் ரஹ்மா அடிப்படை பங்களிப்பு (SARA) பெறுபவர்களுக்கு 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு சுகாதார பரிசோதனைகளை நடத்துவதற்காக மலேசிய சுகாதார அமைச்சகம் (MOH) ஏற்பாடு செய்த ஒரு திட்டமான PeKa B40 திட்டத்தை ஊக்குவித்தல். ஏனென்றால், இந்தத் திட்டத்தை அணுகத் தகுதியுடைய பலர் இன்னும் இதைப் பயன்படுத்தவில்லை.  தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆயர் கூனிங் சட்டமன்ற பகுதியில் உள்ள கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் குழுவுடன் (JPKK) இணைந்து பணியாற்றுவேன். அங்குள்ள குடியிருப்பாளர்கள் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும், நோய்கள் ஏதேனும் இருந்தால் ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காணவும், நோய் தொடர்பான எதிர்மறை விளைவுகள் அல்லது சிக்கல்கள் ஏற்படுவதற்கு முன்பே சிகிச்சை பெறவும் அது உதவும். 


2. SOCSO ஆல் ஏற்பாடு செய்யப்படும் இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் (SKSSR) இல்லத்தரசிகள் பங்கேற்க ஊக்குவிப்பேன். SKSSR என்பது இல்லத்தரசிகள் இயலாமைக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் சமூக காப்பீடு ஆகும். இந்தத் திட்டத்தில் பதிவு செய்யும் ஒரு இல்லத்தரசிக்கு வருடத்திற்கு RM120 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காப்பீடு செய்யப்பட்ட ஒருவருக்கு விபத்து அல்லது  இயலாமையை ஏற்படுத்தும் நோயால் பாதிக்கப்பட்டாலோ, SOCSO காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்கும்.


3. புதிய தனியார் மருத்துவமனைகள் கட்டுவதற்கு தடை விதித்தல். தாம் சட்டமன்ற உறுப்பினராக  ஆக தேர்ந்தெடுக்கப்பட்டால், எந்தவொரு தனியார் மருத்துவமனை கட்டுமானத்திற்கும் நில ஒப்புதல்களை வழங்குவதை நிறுத்துமாறு சட்டமன்றத்தில் முன்மொழிவேன்.  அரசு மருத்துவமனைகளில் இருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் இடம்பெயர்வதைக் குறைப்பதற்கும், பொது மருத்துவமனைகளில் மக்கள் சிறந்த சிகிச்சை பெறுவதை உறுதி செய்வதற்கும், புதிய தனியார் மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகளை முடக்குவது முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.


பொது சுகாதார அமைப்பைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் PSM எடுக்கும்  முயற்சிகள், முன்னதாகவே PSM கட்சியின்  முக்கிய நிகழ்ச்சி நிரலில் இடம் பிடித்திருக்கிறது என்றும் பவானி வலியுறுத்தினார்.

குறிப்பிட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் PSM தேசியத் தலைவரான டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், தேசிய துணைத்தலைவர் அருள்செல்வன் மற்றும் PSM மத்திய குழு உறுப்பினர்களும்  கலந்து கொண்டனர்.

"ஆரம்ப நிலையிலேயே நோய்களைக் கண்டறிவது முக்கியம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக பலர், குறிப்பாக குறைந்த வருமானக் கொண்ட  மக்கள், நோயறிதலைப் கண்டறிவதில் தாமதத்தை ஏற்படுத்துகின்றனர்," என்று டாக்டர் ஜெயக்குமார் கூறினார். "அரசு ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் நிதி ஒதுக்கீடு காரணமாக ஏற்படும் நெரிசல் காரணமாக, பொது மருத்துவமனைகளில் நீண்ட நேரம் காத்திருக்கும் பிரச்சனையை சாதாரண குடிமக்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது சரியான நோயறிதலைப் பெறுவதில் தாமதத்தையும் ஏற்படுத்துகிறது."

"பெரும்பாலான குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில், கடுமையான நோயின் காரணமாக குடும்பத்தில் ஒருவருக்கு தீவிர சிகிச்சையில் இருக்கும்போது, அக்​​குடும்பம் இரண்டு வருமானம் ஈட்டும் நபர்களை இழக்கும், இதனால் அவர்களின் வாழ்க்கை நிலைமைகள் மேலும் மோசமடைகின்றன," என்று டாக்டர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார். "எனவே, மக்கள் முன்கூட்டியே நோயறிதல் மற்றும் போதுமான சிகிச்சையைப் பெற பொது சுகாதார சேவைகளை மேம்படுத்துவது முக்கியம்" என்றார் அவர். 



Sunday, April 20, 2025

சொத்து விவரங்களை அறிவித்தார் ஆயர் கூனிங் இடைத் தேர்தல் வேட்பாளர் பவாணி


ஆயர் கூனிங் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​பாரிசான் நேஷனல் (BN)) மற்றும் பெரிகாத்தான் நேஷனல் (PN)) ஆகிய இரண்டு வேட்பாளர்களும் தங்கள் சொத்துக்களை அறிவிக்குமாறு பிஎஸ்எம் வேட்பாளர் பவாணி கேஎஸ் சவால் விடுத்திருக்கிறார். 

ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி, அவரது மொத்த நிகர சொத்துக்கள் RM21,248 என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இந்தச் சொத்தானது, அவரின் மாத வருமானம், செலவுகள் மற்றும் கடன்கள் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் பவாணி கூறினார்.

"ஊழல் பிரதிநிதிகளை நாங்கள் விரும்பவில்லை என்பதை இந்நேரத்தில் முன்னிலைப்படுத்த விரும்புகிறோம். மக்கள் பிரதிநிதியாக மாறுவதற்கு முன்பு, ஒரே ஒரு காரை மட்டுமே பயன்படுத்தும் ஒருவர், திடீரென்று ஒரு சொகுசு காரை எப்படி மாற்றி பயன்படுத்த முடியும்?"

"அதனால்தான் PSM ஒவ்வொரு ஆண்டும் தங்கள் சொத்துக்களை அறிவிப்பது முக்கியம் என வழியுறுத்தி வருகிறது. எனவே, BN வேட்பாளர் யூஸ்ரி பக்கீர் மற்றும் PN வேட்பாளர் அப்துல் முஹைமின் மாலேக் ஆகியோரும் அவர்களின் சொத்து விவரங்களை அறிவிக்குமாறு நான் சவால் விடுகிறேன்," என்று அவர் தாப்பாவில் உள்ள சுல்தான் நஸ்ரின் முய்சுதீன் ஷா மசூதிக்கு அடுத்துள்ள காலை சந்தை முற்றத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பவாணி கூறினார்.



மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு,  ஆயர் குனிங் சட்டமன்ற உறுப்பினரின் சொத்துரிமை அதிகரித்ததா இல்லையா என்பதை மக்கள் அறிந்து கொள்வதற்காக இந்த சவாலின் பொருத்தப்பாடு முன்வைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

39 வயதான பவானி, தனது சட்டப்பூர்வ அறிவிப்பில், RM27,000 மதிப்புள்ள பெரோடுவா பெஸ்ஸா காரையும், RM1,499 மதிப்புள்ள ஹானர் X9B ஸ்மார்ட்போனையும் வைத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார், இதன் மொத்த மதிப்பு RM28,499.

"வருமானம் மற்றும் செலவுகளுக்கு, என்னிடம் RM583 ரொக்கம் உள்ளது, அதே நேரத்தில் பல வங்கிக் கணக்குகளில் மொத்த சேமிப்பு RM20,638 உள்ளது."

தனக்கு கார் கடன் RM13,139 மற்றும் கல்வி கடன் RM14,750 இன்னும் இருப்பதாக பவாணி கூறினார்.

" அனைத்தையும் கூட்டியும் கழித்தும் கணக்கிடும்போது  நிகரத் தொகையாக தனது சொத்தின் மதிப்பு  RM21,248 என மதிப்பிடப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார், தோழர் பவானி RM5,000 மாத வருமானம் கொண்ட ஒரு வழக்கறிஞரும் என்பது இங்கு குரிப்பிடதக்கது.

பி.எஸ்.எம் தேர்தல் களத்தில் இறக்கும் தமது வேப்பாளர்களின் சொத்து விவரங்களை எந்த ஒளிவும் மறைவும் இன்றி பொதுவில் அறிவிப்பதை ஒரு கலாச்சாரமாகவே கொண்டிருக்கிறது. அந்த வகையில் இம்முறையும் தம் கடப்பாட்டை நிறைவேற்றியிருக்கும் வேளையில், மற்ற கட்சி வேட்பாளர்கள் தங்களி சொத்து விவரங்களை அறிவிக்கும் திராணி கொண்டிருக்கிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

Monday, March 10, 2025

களப்பரியாத போராளி, தோழர் சாந்தா காலமானார் (1975 - 2025)

சமூக ஆர்வாலர், ஓர் ஆசிரியர்,  முற்போக்கான குரல் மற்றும் எங்கள் ஜொகூர் கிளையின் முக்கிய தலைவருமான தோழர் சாந்தா லெட்சுமி பெருமாள் அவர்களின் உயிர் பிரிந்தது, பி.எஸ்.எம் குடும்பத்தை தாளாத துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.  

சாந்தா ஒரு துணிச்சலான போராளியாவார். எப்போதும் தன்னம்பிக்கையுடனும் தனது முடிவில் உறுதியுடனும் இருக்கும் ஒரு தோழர். தமிழ் மொழி ஆழுமையை பெற்ற சாந்தா, அவரின் எழுத்துப் பணியின் மூலம் கட்சியில் பல படைப்புகளை எழுதியுள்ளார். கட்சியில் தமிழ் மொழி படைப்புகளை எழுதுவது மட்டுமல்லாமல், தமிழ் மொழிபெயர்ப்பாளாராகவும், தமிழ்ப் படைப்புகளை திருத்துபவராகவும் தனிச்சிறந்து விளங்கியவர். 

அவரும் அவரது இணையர் மோகனும் ஜொகூரில் செம்பருத்தி இயக்கத்தை 2006-ஆம் ஆண்டில் உருவாக்கினர். மேலும், சாந்தா மலேசியக்கினி (Malaysiakini) தமிழ் பிரிவில் பணியாற்றியும் உள்ளார். 2009-ஆம் ஆண்டு, அவர் மோகனுடன் ஜொகூரில் பி.எஸ்.எம் கிளையைத் தொடங்கினார். அங்கு அவர் செயலாளராக பதவி வகுத்தார். 2020-ஆம் ஆண்டு, காரைநகர் நட்புறவு மையம் தொடங்கப்பட்ட போது சாந்தா அந்த முயற்சிக்கு முன்னோடியாகவும் முதுகெலும்பாகவும் விளங்கினார். இந்த மையம் மாணவர்களுக்கும், சமூக மேம்பாட்டிற்கும் உதவக்கூடிய களமாக கங்கார் பூலாயில் இன்றுவரை  செயல்பட்டு வருகிறது.

மேலும், இலங்கையில் உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டு நம் நாட்டிற்கு தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர் அகதிகளை ஆதரிப்பதிலும், அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்குவதிலும், இங்கு சோஸ்மா கைதிகளுக்கான நீதி போராட்டங்களில் ஈடுபடுவது போன்ற உன்னத சேவைகளிலும் தன்னை முழு மூச்சாக ஈடுபடுத்தி கொண்டவர். இப்படித்தான், மோகனையும் 1999-ஆம் ஆண்டு, சாந்தா ஜொகூரில் ஆசிரியர் பயிற்சியிலிருந்த போது சந்தித்தார். போராட்ட களபணியில்தான் இவர்களின் காதலும் பூத்தது. 



சாந்தா, 16 ஜூன் 1975-இல் தெலுக் இந்தானில் பிறந்தார். அவரின் தகப்பனார் பெருமாள், வீட்டுக் கட்டிட ஒப்பந்தக்காரர் மற்றும் அவரின் தாயார் லீலாவதி. இத்தம்பதியருக்கு பிறந்த மூத்த மகள்தான் சாந்தா. அவருக்கு 4 உடன்பிறப்புகள் இருந்தனர், துரதஷ்டவசமாக அவர்களில் மூன்று பேர் இவருக்கு முன்பே காலமாகிவிட்டனர். 

சாந்தா தனது ஆரம்பக் கல்வியை எஸ்.ஆர்.ஜே.கே லாடாங் சசெக்ஸ் (Ladang Sussex), தெலுக் இந்தான் மற்றும் எஸ்.எம்.கே டத்தோ சாகோர் லங்காப்பில் (Sagor Langkap) அவரது இடைநிலைக் கல்வியையும் பெற்றார். அவர் ஜொகூர் பாருவில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியான மொஹமட் காலித்தில் (Mohd Khalid) படித்து பட்டம் பெற்றார். இங்குதான் அவர் மோகனைச் சந்தித்தார், இறுதியில் இருவரும் 27-5-2001 அன்று மென்டகாப் பஹாங்கில் திருமணம் செய்து கொண்டனர்.

சாந்தா பல தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அவைகளில் எஸ்.ஆர்.ஜே.கே கங்கர் புலாய் ஜொகூர், எஸ்.கே. சுங்காய் மற்றும் எஸ்.கே. சிலிம் ரீவர் அவரின் கடைசி பள்ளியாக அமைந்தது. அங்கு மே 2023-இல் தனக்கு புற்றுநோய் கொண்டிருப்பது தெரியவரும்வரை ஆசிரியர் பணியில் இருந்தார். படிப்பு சொல்லிக் கொடுக்கும் சக ஆசிரியர்கள் போலில்லாமல், தமிழ் பள்ளிகளை மேம்படுத்துவதற்காகவும் பாடுபட்டார்.

கடந்த இரண்டு ஆண்டு, சாந்தா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தார், அவரின் எல்லா நற்செயல்களும் செயலற்று போனது. அவரது உடல்நிலை குறைவின்போது அவரது இணையரான மோகன் மற்றும் சகோதரி ஜெயாவின் சிறந்த கவனிப்பு மற்றும் ஆதரவு இருந்த போதிலும், சாந்தாவின் உடல்நலம் சரிந்து பல நாட்கள் அவர் படுக்கையிலேயே இருந்தார். அவருடைய மரணம் அவரை வேதனையிலிருந்து விடுவித்து இருக்கலாம். சாந்தா துணிச்சலாக  மரணப் படுக்கையிலும் போராட்டத்தை தொடர்ந்தாலும், அனைத்தும் இன்று காலை 11:44 மணிக்கு சிலிம் ரிவர் மருத்துவமனையில் ஒரு முடிவிற்கு வந்தது. 

போராட்டவாதிகள் எப்போதும் புதைக்கப்படுவதில்லை, அவர்கள் விதைக்கப்படுகிறார்கள் என்பார்கள். அவ்வகையில் சாந்தாவும் நமது நினைவில் விதைக்கப்படுவார். எங்கள் போராட்டத்தில் அவர் ஒளியின் கலங்கரை விளக்கமாக இருந்திருக்கிறார். வாழ்க்கை அவருக்குக் குறுகியதாகிவிட்டது. ஆனால் அவருடைய செயல்பாட்டை அறிந்தவர்கள், தொடர்ந்து சாந்தாவின் களவேலைகளைப்பற்றி பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். 

தோழர் சாந்தாவிற்கும் எங்களின் வீரவணக்கங்கள். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு உதவியாக இருந்து, சிறப்பாக கவனித்துக் கொண்ட அவரது இணையர் மோகன், சகோதரி ஜெயா மற்றும் அவரது பெற்றோர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் போராட்டங்களை நாங்கள் தொடர்வோம், ஓய்வெடுங்கள் தோழரே.


S Arutchelvan

5.23pm 9-3-2025

தமிழில் : சிவரஞ்சனி

சர்வதேச பெண்கள் நன்னாள்– ஒரு சுருக்கமான வரலாறு

                                            


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8, சர்வதேச பெண்கள் நன்னாளைக் குறிக்கிறது. இந்த அர்த்தமுள்ள நாள் பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை நிலைநிறுத்தப் போராடிய அனைத்து பெண்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பெண்கள் நன்னாள் ஒரு தீவிர மற்றும் புரட்சிகர வரலாற்றைக் கொண்டுள்ளது. பெண்கள் நன்னாள் உண்மையில் 100 ஆண்டுகளுக்கு முன்பு சோசலிச இயக்கத்திலிருந்து பிறந்தது.


தீவிர தோற்றம்

                                         

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், விரைவான முதலாளித்துவ பொருளாதார அமைப்புகளின் விரிவாக்கத்திற்காகவும் லாபத்திற்காகவும் அதிகமான பெண்கள், தொழிலாளர்களாக மாற்றப்பட்டனர். விரிவான பெண் பாட்டாளி வர்க்கத்தின் முன்னேற்றம் அவர்கள் பெண் சுதந்திரத்தைக் கோர வழியமைத்தது. ஐரோப்பாவில் அந்த நேரத்தில் இடதுசாரி தொழிலாளர் கட்சியான ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி (எஸ்.பி.டி) ஜெர்மனியில் உள்ள சோசலிச பெண்கள் இயக்கத்தை உருவாக்கியது. பெண்கள் தலைமையிலான எஸ்.பி.டி பணியகம் 1891 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஜெர்மன் இடதுசாரி நபரான கிளாரா ஜெட்கின் இந்த அமைப்பின் முக்கிய தலைவராக ஆனார். எஸ்.பி.டி மகளிர் பணியகம் நிறுவப்பட்ட போது பிரஷ்யன் மற்றும் ஜெர்மனியில் உள்ள பெண்கள் அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ளவோ அல்லது கட்சிகளில் சேரவோ தடை விதிக்கப்பட்டு இருந்தது.

சமூக பேரணியில் கிளாரா ஜெட்கின் பெண்களின் பங்கேற்பு இல்லாமல் வர்க்க அடக்கு முறையிலிருந்து தொழிலாளர்களை வெளியேற்றி போராட்டத்தை வெல்ல இயலாது என்று வாதிட்டார். கிளாரா தலைமையில், ஜெர்மன் பெண்கள் இயக்கம் விரிவடைந்தது. எஸ். பி.டி குழு 1907-களில் 10500 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 1913-களில் 150,000 மேற்பட்ட பெண்கள் எஸ்.பி.டி இணைந்தார்கள். கிளாரா ஜெட்கின் வழி நடத்திய எஸ்.பி.டி முதலாம் உலகப்போரில் பங்கெடுப்பதா அல்லது அரசாங்கத்திற்குத் துணை நிற்பதா என்ற கேள்வியினால் பிளவு ஏற்பட்டது. ஜெட்கின், கார்ல் லிப்க்னெக்ட், ரோசா லக்சம்பர்க், லூயிஸ் கோஹ்லர் மற்றும் பல எஸ்.பி.டி தலைவர்கள்  தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்களும் இருக்காது என எஸ்.பி.டி அரசாங்கத்திற்கு வாக்குறுதி அளித்ததை இவர்கள் நிராகரித்தனர். ஏக பத்திய போரில் ஜெர்மனியின் ஈடுபாட்டை எதிர்த்தார். மேலும் முதலாம் ஆண்டு அனைத்துலக சோசலிச பெண்கள் மாநாட்டை ஏற்பாடு செய்தார்.

1908-களில் அமெரிக்காவின் நியூயார்க்கில் 30,000 வேலை நிறுத்த போராட்டத்தில் துணி உற்பத்தி தொழிற்சாலை தொழிலாளர்கள், பெரும்பாலும் புலம் பெயர்ந்த பெண்கள் வேலை நேரங்களைக் குறைக்க, ஊதிய உயர்வு மற்றும் வாக்களிக்கும் உரிமைகள் கோரி நகரத்தில் அணிவகுத்துச் சென்றனர். வேலை நிறுத்த போராட்டம் மூன்று மாதங்களுக்கு நீடித்தது, தொழிலாளர்கள் தங்களின் பெரும்பாலான கோரிக்கைகளை வென்றனர். அமெரிக்கா சோசலிசக் கட்சி (எஸ்பிஏ)ஆல் நிறுவப்பட்ட மகளிர் தேசிய குழு அந்த நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாள் பெண் உரிமைகளுக்காகப் பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்தது. பிப்ரவரி 28, 1909 அன்று எஸ்பிஏ "தேசிய பெண்கள் நாள்" நடவடிக்கையை ஏற்பாடு செய்தது.  அந்த நேரத்தில் வேலை நிறுத்தம்  மற்றும் வாக்குரிமை கோரி போராடிய பெண்களின் மீது மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட தொழிற்சாலைகளின் மீது எதிர்ப்பு வெடித்தது.

அமெரிக்காவில் நடந்த எதிர்ப்பு போராட்டம் ஐரோப்பாவில் சோசலிச தலைவர்களை சர்வதேச பெண்கள் நன்னாளை வழிநடத்த ஊக்கப்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 26-27, 1910 அன்று, டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடத்திய இரண்டாவது சர்வதேச சோசலிச மகளிர் மாநாட்டின் போது, ​​ஜெர்மன் சோசலிச தலைவர் லூயிஸ் ஜீட்ஸ் ஒவ்வொரு ஆண்டும் "சர்வதேச பெண்கள் நன்னாள் " கொண்டாடும் திட்டத்தை முன்மொழிந்தார் அதை கிளாரா ஜெட்கின் ஆதரித்தார். 17 நாடுகளைச் சேர்ந்த 100 இடதுசாரி பெண் ஆர்வலர்கள் கலந்து கொண்ட மாநாட்டில், பெண்கள் உட்பட அனைவருக்கும் சமத்துவம் மற்றும் வாக்களிக்கும் உரிமைக்காகப் போராடுவதற்கான இந்தத் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். அந்த நேரத்தில் சர்வதேச மகளிர் தினத்திற்குப் பயன்படுத்தப்படும் முழக்கம் "பெண்களுக்கு வாக்களிப்பது சோசலிசத்திற்கான போராட்டத்தில் எங்கள் பலத்தை ஒன்றிணைக்கும்" என்பதாகும்.

பெண்களுக்கு உலகளாவிய வாக்களிப்புக்காகப் போராடுவதற்கான உத்திகளைப் பற்றி விவாதிப்பதோடு மட்டுமல்லாமல், கோபன்ஹேகனில் உள்ள சோசலிச பெண்கள் மாநாட்டில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான சமூகப் பாதுகாப்பையும் விவாதித்தது. இதில் மகப்பேறு மற்றும் சுகாதார பாதுகாப்பு, போர் மற்றும் சமாதான பிரச்சினைகள், பேரினவாதத்திற்கு எதிரான பெண்களின் கடமைகள், ஒரு நாளைக்கு 8 மணிநேர வேலைக்கான கோரிக்கைகள் மற்றும் இரவு வேலைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.


ரஷ்ய புரட்சி

                         

அந்த நேரத்தில் கோபன்ஹேகனில் நடந்த சோசலிச மகளிர் மாநாட்டில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஜவுளி தொழிலாளர்களின் பிரதிநிதியாக இருந்த ரஷ்யப் புரட்சிகர நபரான அலெக்ஸாண்டரா கொல்லோன்டாய் எழுதினார், “கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்கள் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சி கோபன்ஹேகன் மாநாட்டின் தொடக்கத்தில் கணிசமாகக் காணப்பட்டது. ஸ்டட்கார்ட்டில் (அதாவது, 1907 ஆம் ஆண்டில் முதல் சோசலிச மகளிர் மாநாடு நடைபெற்றது), பிரதிநிதிகளின் எண்ணிக்கை 52 ஆக இருந்தது, ஆனால் இன்று, கோபன்ஹேகனில் சுமார் 100 பேர் இருந்தனர் மற்றும் 17 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். சோசலிச கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பிரதிநிதிகள், சங்கங்கள் மற்றும் பெண் சங்கங்களுடன் வர்க்கமாக ஒன்றிணைந்தனர்.”

பாலின-வர்க்கத்தின் கேள்வியில் ஜெட்கின் மற்றும் கொலோன்டாய் எடுத்த அரசியல் நிலைப்பாடு, அந்த நேரத்தில் அவர்களின் கட்சித் தலைமைக்கு முரணானது. காரணம் அவர்கள் வர்க்க போராட்டத்தில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், இந்த இரண்டு இடதுசாரி நபர்களும் பெண்களின் சுதந்திரம் ஒரு பரந்த வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

ஒரு வருடம் கழித்து, 1911 இல், சர்வதேச பெண்கள் நன்னாள் முதல் முறையாகக் கொண்டாடப்பட்டது. முதல் சர்வதேச பெண்கள் நன்னாள் மார்ச் 19, 1911 அன்று கொண்டாடப்பட்டது. இந்த தேதி ஜெர்மன் பெண்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஏனெனில் 1848 ஆம் ஆண்டில் அதே நாளில், அந்த நேரத்தில் ஜெர்மன் ஆயுதக் கிளர்ச்சியை எதிர்கொண்ட பிரஷ்யன் ராஜா, பல சமூக சீர்திருத்தங்களுக்கு உறுதியளித்திருந்தார், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை இதில் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

 1911 ஆம் ஆண்டில் சர்வதேச பெண்கள் நன்னாள்ற்கு முன்னர் ஜெர்மனி முழுவதும் ஒரு மில்லியன் சிற்றேடுகள் விநியோகிக்கப்பட்டன. முதல் சர்வதேச பெண்கள் நன்னாள் கொண்டாட்டத்தை ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொண்டாடினர். அந்த நாளில் அணிவகுத்துச் செல்வோர் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை, பெண்களுக்கான உரிமை, பொது பதவிகளை வகிக்கும் உரிமை, வேலை செய்வதற்கான உரிமை, பாலியல் அடிப்படையிலான பாகுபாட்டை நிறுத்துவது போன்ற கூற்றுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். ஆரம்பத்தில், சர்வதேச பெண்கள் நன்னாள்  வேலைநிறுத்த போராட்டங்கள் , அணிவகுப்புகள் மற்றும் உரிமைகோரல்களுடன் ஆர்ப்பாட்டங்களுடன் கொண்டாடப்பட்டது. அந்த நேரத்தில் மிகவும் தீவிரமானதாகக் கருதப்பட்டது.

1917 ஆம் ஆண்டில், அந்த நேரத்தில் ரஷ்ய தலைநகரில் ஒரு பெண் தொழிலாளி, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் (அந்த நேரத்தில் பெட்ரோகிராட் என்று அழைக்கப்படுகிறது), சர்வதேச பெண்கள் நன்னாளை வேலைநிறுத்த போராட்டங்களுக்காகவும் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காகவும் நடத்தினார். உலகப் போரில் ரஷ்ய ஜார் பேரரசின் ஈடுபாட்டையும், அந்த நேரத்தில் ஜார் அரசாங்கத்தால் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளையும் எதிர்த்து, ஆர்ப்பாட்டத்தில் கொண்டு வரப்பட்ட கோரிக்கைகள் "ரொட்டி மற்றும் அமைதி". ரஷ்ய பெண் தொழிலாளர்கள் 1913 முதல் சர்வதேச பெண்கள் நன்னாளைக் கொண்டாடத் தொடங்கினார்கள்.

1917 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடந்த பெண்கள் நன்னாள் ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 23 அன்று ஜூலியன் நாட்காட்டியின்படி (இது கிரிகோரியன் நாட்காட்டியின் படி மார்ச் 8) கூறியது, அங்குப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் இறுதியாக ஜார் அரசாங்கத்தைக் கைவிட்டு பிப்ரவரி புரட்சியைத் தூண்டின. துணி நிறுவன தொழிலாளர்கள், பெரும்பாலும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள பெண்கள், மற்ற தொழிலாளர்களின் ஆதரவைப் பெறப் பிரதிநிதிகளை அனுப்பத் தொடங்கினார்கள். இதனால் வெகுஜன வேலைநிறுத்தங்களைத் தூண்டினார்கள், பின்னர் அனைத்து தொழிலாளர்களும் ஜார் ஆட்சி விழும் வரை தெருக்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். ரஷ்ய சாம்ராஜ்யத்தின் அரசாங்கத்தைக் கைவிட்டு, அமைப்புக்கு எதிரான பெண்கள் போராட்டத்தின் சக்தியைக் காட்டிய பெரும் அரசியல் நடவடிக்கை.

சர்வதேச பெண்கள் நன்னாள் கொண்டாட்டம் ஒரு புரட்சியைத் தூண்டியது, இது தன்னலக்குழுக்களின் சக்தியை உடைத்து, தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியைத் தூண்டியது, இது சர்வதேச பெண்கள் நன்னாளின் அசல் ஊக்கமாகும்.

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில் பெண்களின் உரிமைகள் உணரப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன், உலக பெண்கள் நன்னாள் கொண்டாட்டம் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சமத்துவத்திற்கான போராட்டத்தில் பெண்களுக்கு ஒரு சர்வதேச ஒற்றுமை நாளாகத் தொடர்கிறது.

பெண்களின் புரட்சிகர கொண்டாட்டம்

                               

அக்டோபர் 1917 புரட்சியின் பின்னர் மார்ச் 8 ரஷ்யாவால் அதிகாரப்பூர்வமாக வரவேற்கப்பட்டது. ரஷ்ய புரட்சியின் தலைவரான விளாடிமிர் லெனின், 1922 ஆம் ஆண்டில் சர்வதேச பெண்கள் நன்னாளை விடுமுறை என்று அறிவித்து ஜெட்கின் அழைப்பிற்கு பதிலளித்தார்.

ஸ்பெயினில், பிப்ரவரி 1936 இல் தேர்தலில் ஒரு பிரபலமான வெற்றியைத் தொடர்ந்து, அப்போதைய வளமான ஸ்பானிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான இசிடோரா டோலோரஸ் இபிரூரி கோமேஸ், மார்ச் 8, 1936 அன்று மாட்ரிட்டில் ஆயிரக்கணக்கான பெண்கள் பாசிச அச்சுறுத்தலை எதிர்த்து இரண்டாவது ஸ்பானிஷ் குடியரசை நிலை நாட்ட ஒன்று கூடினர்.

சீனாவில், கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் 1922 இல் பெண்கள் நன்னாள் கொண்டாடத் தொடங்கினர், பின்னர் 1949 இல் சீன மக்கள் குடியரசு உருவான பிறகு, மார்ச் 8 ஒரு முறையான விடுமுறையாக அறிவிக்கப்பட்டது, பெண் தொழிலாளர்கள் அரை நாள் விடுமுறையைப் பெறுகிறார்கள்.

1960களில் மேற்கத்திய நாடுகளில் பெண்ணிய இயக்கத்தின் இரண்டாவது ஆலையின் போது, பல இடதுசாரி மற்றும் ஆர்வலர்கள் பாலிய பாகுபாடு மற்றும் ஆணாதிக்கத்திற்கும் எதிராக உரிமைக்குரலை எழுப்பினார்கள். அதே நேரத்தில் பெண்களின் உரிமைகளை நிலை நிறுத்துவது சர்வதேச பிரதான அரசியலின் ஒரு பகுதியாக மாறியது.


சர்வதேச பெண்கள் நன்னாள் அங்கீகரிக்கப்பட்டது

1975களில் சர்வதேச பெண்கள் நன்னாள் சர்வதேச ரீதியாகக் கொண்டாடப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) அறிவித்தது.அந்த ஆண்டு, மெக்சிகோவின் தலைநகரான மெக்சிகோ நகரில் முதல் உலக மகளிர் மாநாடு நடைபெற்றது, மேலும் "பெண்களின் சமத்துவம் குறித்த மெக்சிகன் பிரகடனத்திற்கும் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு அவர்கள் அளித்த பங்களிப்புக்கும்" ஒப்புதல் அளிக்கப்பட்டது.

1977 ஆம் ஆண்டில், ஐ.நா. அதிகாரப்பூர்வமாக மார்ச் 8 ஐ சர்வதேச மகளிர் தினமாக அங்கீகரித்தது, மேலும் அதன் உறுப்பினர்களை அந்நாளைக் கொண்டாட அழைத்தது. 1979 ஆம் ஆண்டில், ஐ.நா பொதுச் சபை பெண்களின் உரிமைகளைக் கோடிட்டுக் காட்டிய ஒரு முக்கியமான சர்வதேச ஆவணமான பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவது குறித்த மாநாட்டை (CEDAW) நடைபெற்றது. மலேசியா நாடு 1995 இல் (CEDAW) கையெழுத்திட்டது.

1980 ஆம் ஆண்டில், இரண்டாவது உலக மகளிர் மாநாடு டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்றது. பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான வரலாற்று குறிப்பானை CEDAW என்று மாநாடு ஒப்புக் கொண்டுள்ளது. 3 துறைகளில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் என்றும் மாநாடு ஒப்புக்கொண்டது: 


i.       கல்விக்கான எளிய அணுகல்;

ii.     பெண்களுக்கு வேலை வாய்ப்புகள்;

iii. சுகாதார சேவைகள் மெக்சிகோவில் நடந்த முதல் மாநாட்டில் 

கோடிட்டுக் காட்டப்பட்ட இலக்குகளை அடையப் பெண்களுக்கு முக்கியம். 

மூன்றாம் உலக மகளிர் மாநாடு 1985 ஆம் ஆண்டில் கென்யாவின் நைரோபியில் நடைபெற்றது. அரசியலமைப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் போன்ற பெண்களின் சமத்துவத்தை அளவிடக்கூடிய பகுதிகளை மாநாடு கோடிட்டுக் காட்டியது; சமூக பங்கேற்பில் சமத்துவம்; அரசியல் பங்கேற்பில் சமத்துவம்; மற்றும் முடிவெடுக்கும் செயல்முறை. பாலினத்துடன் தொடர்புடைய பகுதிகள் மட்டுமல்லாமல், மனித நடவடிக்கைகளின் அனைத்து பகுதிகளிலும் பெண்கள் பங்கேற்க வேண்டும் என்றும் மாநாடு ஒப்புக்கொண்டது.

1995 ஆம் ஆண்டில், நான்காவது உலக மகளிர் மாநாடு சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவத்தின் கொள்கைகளைக் கோடிட்டுக் காட்டும் ஐ.நா. தீர்மானம் பெய்ஜிங் பிரகடனத்திற்கு மாநாடு ஒப்புதல் அளித்தது. செயலுக்கான தளம், ஒரு வரலாற்றுச் செயல் திட்டமும் உலகின் 189 அரசாங்கங்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது, 12 முக்கியமான பகுதிகளில் கவனம் செலுத்தியது, மேலும் ஒவ்வொரு பெண்ணும் அரசியல், கல்வி, வருமானம் கிடைக்கப் பெறவும் மற்றும் வன்முறை மற்றும் பாகுபாட்டிலிருந்து விடுபட்ட ஒரு சமூகத்தில் கூட வாழ்வது போன்ற சுயாதீனமான தேர்வுகளைச் செய்யக்கூடிய ஒரு உலகத்தைக் கற்பனை செய்தனர்.

சர்வதேச பெண்கள் நன்னாளின் தீவிர உணர்வை மீட்டெடுக்க இது நேரம்

உலகெங்கிலும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மொத்தம் 27 நாடுகள் சர்வதேச மகளிர் தினத்தை ஆப்கானிஸ்தான், கியூபா, கம்போடியா, நேபாளம், ரஷ்யா, வியட்நாம் மற்றும் சாம்பியா உள்ளிட்ட பொது விடுமுறை நாட்களாக அமைத்தன.

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் அதன் தீவிர அரசியல் தோற்றத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது, பாலின சமத்துவமின்மையை உருவாக்கும் முதலாளித்துவ மற்றும் ஆணாதிக்க சமுதாயத்தின் அடிப்படையில் தொடாமல் "பெண்களின் தியாகத்தைப் பாராட்ட" இன்று அதை மாற்றியுள்ளனர்.

எவ்வாறாயினும், சமீபத்திய ஆண்டுகளில் சர்வதேச பெண்கள் நன்னாளின் தீவிர உணர்வை மீட்டெடுப்பதற்கான முயற்சியை நாம் காணலாம், குறிப்பாகப் பெண்கள் தினத்தில் பெண்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர்.

பெண்ணிய இயக்கத்தில் அலைகளின் புதிய அலை வளர்ந்து வருகிறது, பாலின வன்முறைகளான மீ.டு பிரச்சாரம் மற்றும் மெனோஸ் இயக்கம் (யாரும் குறைவாக இருக்க முடியாது) போன்றவற்றுடன், பெருகிய முறையில் கடுமையான அரசியலின் சகாப்தத்தில் பெண்கள் விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. சர்வதேச மகளிர் தினத்தின் அடிப்படை உணர்வை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது, இது முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் பாலின சமத்துவத்திற்கான போராட்டத்தை அணிதிரட்டுவதாகும்.


கட்டுரையாளர்: தோழர் சொன் காய்

தமிழில் : தோழர் மோகனா

                     





குழந்தைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் தீவிரமாக இல்லை

மலேசியா சோசியலிச கட்சி (பிஎஸ்எம்) சமீபத்தில் முகநூலில் வெளிவந்த பெடோபிலியா பிரச்சினையின் மீது நடவடிக்கை எடுப்பதில் தகவல் தொடர்பு அமைச்சு மற்...