Tuesday, September 21, 2021

செவ்வணக்கம் தோழர் அலெக்ஸ்

 


இன்று காலை மாரடைப்பால் காலமான தோழர் அலெக்ஸ்  ஃபால் ராஜின் குடும்பத்திற்கு  பி.எஸ்.எம்  மிகுந்த வருத்தத்துடன் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. தோழர் அலெக்ஸ், பேராக் நகரில் கட்சியின்  நீண்டகால உறுப்பினராவார். அவர் PSM Buntong  மற்றும்  PSM Sg Siput இன் உறுப்பினராக இருந்தவர். அவர் முழு மனதுடன் கட்சிக்காக உழைத்தார்.  பிஎஸ்எம் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பது குறித்து அவருக்கு எப்போதும் ஆக்கபூர்வமான கருத்துகள் இருந்தன.  விவாதங்களும் செய்யக்கூடியவராகவும் அவர் இருந்தார். 

பேராக் மாநிலத்தில் பி.எஸ்.எம் கால் பதித்த தொடக்கத்தில் பல இளைஞர்கள் கட்சியில் உறுப்பினராக சேர்வதற்கு தோழர் அலெக்ஸ் காரணமாக இருந்தார் என பி.எஸ்.எம்  செம்மோர்  தொகுதியைச் சேர்ந்த தோழர் நாகேன் தெரிவித்தார். அவருடன் கட்சி தொடர்பாக ஈடுபட்ட விவாதங்களையும் நீண்ட நாள் நட்பையும்  அவர் நினைவுக்கூர்ந்தார்.  பி.எஸ்.எம் முன்னெடுத்தப் பல போராட்டங்களில் தோழர் அலெக்ஸ் கலந்துகொண்டு போராடியிருக்கிறார். பிஎஸ்எம் தோழர்களுக்கு, தோழர் அலெக்ஸ்-சின் இழப்பு பேரிழப்பு மட்டுமல்ல ஈடுசெய்ய முடியாத இழப்பும் ஆகும்.  

பி.எஸ்.எம், செவ்வணக்கத்தை அவருக்கு சமர்பிக்கிறது.

No comments:

Post a Comment

இடைத்தரகர்களை நீக்குவது சரி - ராணி ராசையா

PSM அறிக்கை - 10 பிப்ரவரி 2026 அந்நிய தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பில், இடைத்தரகர்களை நீக்குவது சரியான திசையில்  எடுத்துவைக்கும் படிகட்டுகள்  புலம...