Thursday, October 8, 2020

நாட்டின் முதல் வரலாற்று வெற்றி...


செப்டம்பர் 28, 2020 அன்று, மேல்முறையீட்டு நீதிமன்றம் விதவைகளுக்கு ஒரு வரலாற்று முடிவை வழங்கியது.

கணவர் இறந்த பிறகு ஓய்வூதியம் கோரி விதவையாக இருக்கும் சீனப் பெண்மணியான லம் குன் தை சொக்சோ நிறுவனத்திடம் விண்ணப்பம் கோரியுள்ளார். அவரது திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்படாததால் அவரது கோரிக்கையை சொக்சோ  நிராகரித்தது. இந்த வழக்கில் வேறு எந்த தரப்பினரும் இந்த உரிமைகளை கோரவில்லை என்றாலும், லோம் குன் டாயின் கூற்றை சொக்சோ தொடர்ந்து நிராகரித்தது.

 லம் குன் தாய் சொக்சோ-வின் மேல் வழக்கு தொடர்ந்து உயர்நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று 2017-ல் குறிப்பிட்ட அந்த வழக்கில் வென்றார், அதன் பிறகு சொக்சோ, அவ்வழக்கை  மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது. இறுதியாக, மேல்முறையீட்டு நீதிமன்றம் சோக்சோவின் முறையீட்டை நிராகரித்து  லம் குன் தை-யிடம்  ஓய்வூதிய கோரிக்கையை கொடுக்கும்படி உத்தரவிட்டது.

 இந்த முடிவானது மலேசியாவில் ஒரு வரலாற்று முடிவாகும். இந்த முடிவானது தொழிலாளர் வர்க்கத்திற்கு நன்மைகளைத் தருகிறதா என்பதை அறிய, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை பிஎஸ்எம் அதன் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. அந்தச் சந்திப்பில் லம் குன் தை மற்றும் அவரது வழக்கறிஞர் பி.என். மணிமேகலை கலந்துக்கொண்டு விளக்கமளித்தனர்.



(ஊழியர்கள் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 என்பது ஒரு சமூகப் பாதுகாப்புச் சட்டமாகும். இது மனிதநேயம் மற்றும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டதோடு நவீன சமூக பாதுகாப்புக் கருத்துக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.)

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...