Tuesday, November 24, 2020

கள்ளக் குடியேறிகளுக்கும் இலவச மருத்துவ சோதனை

                                             



கோலாலம்பூர், நவ 25 

போதுமான ஆவணங்கள் இல்லாமல் நாட்டில் வேலை செய்து கொண்டிருக்கின்ற அந்நியத் தொழிலாளர்களுக்கும் இலவச மருத்துவ பரிசோதனைகளை, செய்து தர வேண்டும் என்று மலேசிய சோசலிச கட்சியின் தலைவர் டாக்டர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்.

கோவிட் 19 தொற்று காரணமாக அந்நியத் தொழிலாளர்கள் அதிகமாக பாதிப்படைந்து வருகின்றனர். கள்ளக் குடியேறிகளுக்கு எதிராக நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் அதிகமான அந்நியத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் அவர்களையும் மனிதாபிமான முறையில் நடத்த வேண்டும். கள்ளக் குடியேறிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து தரப்பட வேண்டும்.

கட்டுமானம், தயாரிப்பு, தோட்டத் தொழில், விவசாயத்துறை தொழில்களில் வேலை செய்து வருகின்ற கள்ளக் குடியேறிகளுக்கு அடுத்தாண்டு ஜூன் 30-ஆம் தேதிவரை சலுகைகளை வழங்க வேண்டும்.

பொது மன்னிப்பின் கீழ் அவர்களை தங்கள் தாயகங்களுக்கு திரும்ப அனுமதி தரவேண்டும் என்றும் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.  

No comments:

Post a Comment

ஊழல் மற்றும் மக்களின் பண விரயத்திற்கு எதிரான வட்டமேசை கலந்துரையாடல்

  PSM பத்திரிகை அறிக்கை – 16 ஜூன் 2026 PSM, MUDA மற்றும் இன்னும் சில அமைப்புகள் இணைந்து உரையாடியதில், 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் தே...