Sunday, May 23, 2021

டாக்டர் ஜெயகுமார் ஊத்தான் மெலிந்தாங்கில் போட்டியிடுவதை ஆதரிக்கிறோம்...

சுங்கை சிப்புட் கிளையின் செய்தி அறிக்கை


கடந்த 16/5/2021, தமிழ் மலர் நாளிதல் செய்தியில், முன்னாள் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினரும், மலேசிய சோசலீஸ்ட் கட்சியின் தேசிய தலைவருமான டாக்டர் ஜெயகுமாருக்கு ஊத்தான் மெலிந்தாங் மக்களின் ஆதரவும், ஊத்தான் மெலிந்தாங் தொகுதியில் போட்டியிட கோரிக்கை விட்டது வரவேற்க்கத்தக்கது. டாக்டர் குமாரின் மக்கள் சேவைக்குக் கிடைத்த அங்கீகாரம். இதற்கு பி.எஸ். எம் கட்சி  நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

கொள்கையின் அடிப்படையில் செயல்படும் பி.எஸ்.எம், வான்குடை வேட்பாளரை ஆதரிப்பதில்லை. ஒரு தொகுதியில் போட்டியிடும் முன் அந்த தொகுதியில் குறைந்தப்பட்ச காலம்  சேவையாற்றி, அத்தொகுதி மக்களின் தேவையறிந்த ஒருவரை வேட்பாளரை நிறுத்தவதை பி.எஸ்.எம் கட்சி நம்புகிறது. அதையே இன்று வரை செயல்படுத்துகிறது. ஆகவே, ஊத்தான் மெலிந்தாங் மக்களின் தேவை இதுவென்றால், அங்கே பி.எஸ்.எம் கட்சியின் கிளை தொடங்கி மக்கள் சேவையில் ஈடுபாட சம்பந்தப்பட்ட மக்கள் முன்வர வேண்டும். இதுவே ஜனநாயத்தை நிலைநிறுத்தும், அதே வேளையில் கட்சி தாவலை தடுக்கும்.

கடந்த பொது தேர்தலில் பரிசான் நேசனல் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் அலையில், தனித்து நின்ற பி.எஸ்.எம் கட்சியின் டாக்டர் குமார் தோல்வியுற்றார், ஆனால் இன்னமும் சுங்கை சிப்புடில் சேவையாற்றி வருகிறார். சுங்கை சிப்புட் பி.எஸ்.எம் கிளை இன்றளவும் திறம்பட துடிதுடிப்புடன் மக்கள் சேவையாற்றிவருகிறது. இத்தொகுதியில் டாக்டர் குமாரின் சேவையை மக்கள் நாடும் அதே வேளையில் டாக்டர் குமார் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எதிர்பாப்பு தொகுதி மக்களிடையே உயர்ந்துள்ள வேளையில், நம்பிக்கை கூட்டணி பி.எஸ்.எம் கட்சிக்கு வழி விட்டு பொது தேர்தலில் தொகுதியின் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற பேச்சும் மக்களிடையே காணப்படுகிறது. 


இறுதியாக, தேர்தலில் போட்டியிடுவது மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நம்பிக்கை கூட்டணியுடன் பி.எஸ்.எம் கட்சியின் மத்திய செயலவை தொடங்கியிருக்கும் வேளையில், சுங்கை சிப்புட் தொகுதியின் பி.எஸ்.எம் கட்சி, சுங்கை சிப்புட் கிளை கடந்த 30 ஆண்டுகளாக இந்த மண்ணில் தனது சேவையைத் தொடரும் என கிளைத் தலைவர் திரு மா.அகஸ்தியன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...