Tuesday, July 22, 2025

குறைந்தபட்ச சம்பளம் RM1,700 போதுமா?

குறைந்தபட்ச சம்பளம் RM1,700 போதுமா?

அக்டோபர் 18, 2024 அன்று மக்கள் மன்றத்தில்  2025-ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, ​​பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை மாதம் ஒன்றுக்கு RM1,500 லிருந்து RM1,700 ஆக உயர்த்த அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக அறிவித்தார். பிப்ரவரி 1, 2025 முதல்,  ஐந்து தொழிலாளர்களுக்குக் குறைவான பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் முதலாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் RM1,700 ஊதியத்தை அமுல்படுத்துவது 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு ஆகஸ்ட் 1, 2025 முதல் அது நடைமுறைக்கு வரும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.

மனிதவள அமைச்சரான ஸ்டீவன் சிம், டிக்டோக்கில் ஒரு பிரச்சார வீடியோவில் ,சமீபத்திய குறைந்தபட்ச ஊதிய உயர்வை "நல்ல செய்தி" என்று விவரித்தார், தற்போது இருக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை சரிசெய்தல் மலேசியாவில் 4.37 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் என்றும் அவர்களில் 80% பேர் மலேசிய குடிமக்கள் என்றும் அவர் கூறியிருந்தார். மனிதவளத்துறை அமைச்சர் வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, மலேசியாவில் 4 தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்சம் ஒரு தொழிலாளி மட்டுமே குறைந்தபட்ச ஊதிய சம்பளம் பெறுகிறார்.

மிகக் குறைந்த வருமானம் பெறும் தொழிலாளர்கள், வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதாலும், அதோடு அதிகரித்து வரும் வாழ்க்கை அழுத்தத்தை சமாளிக்கவும், அவர்கள் ஊதிய உயர்வை எதிர்பார்க்கிறார்கள், மேலும் இந்த குறைந்தபட்ச சம்பளத்தை சரிசெய்தல் காரணமாக, அவர்கள் பல மாதங்களாக இந்த "நல்ல செய்திக்காக" காத்திருக்கிறார்கள். முன்னதாக தேசிய ஊதிய ஆலோசனை கவுன்சில் சட்டத்திற்கு அரசாங்கம் இணங்கியிருந்தால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, குறைந்தபட்ச ஊதிய ஆணையை மதிப்பாய்வு செய்யும் 25-வது பிரிவு சட்டத்தின் கீழ்,  கடந்த மே 2024 இல் இந்த ஊதிய தாதிகரிப்பு நடந்திருக்க வேண்டும், என்பதை தெளிவாகக் கூறுகிறது.

குறைந்தபட்ச ஊதியத்தை RM200 ரிங்கிட் அதிகரிப்பு என்ற அறிவிப்பு செய்து 5 மாதங்கள் தாமதமாகத்தான் அதை செயற்பாட்டுக்கு கொண்டுவரும் அதே வேளையில்,  ஐந்துக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட முதலாளிகளால் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களை  இது கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அத்தொழிலாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட அவ்வூதியத்தை பெற 9 மாதங்கள் காலதாமத கெடு வைப்படுக்கிறது. அப்படியென்றால் அவர்களின் குறைந்தபட்ச ஊதிய உயர்வு 15 மாதங்கள் இழக்கப்படும் என்பதையும் அறிக!

குறைந்தபட்ச ஊதியத மாற்றத்தில் தாமதம் ஏற்பட்டிருப்பதைத் தவிர, நாம் எழுப்ப வேண்டிய மற்றொரு கேள்வி: குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு RM1,700 போதுமா? இந்த குறைந்தபட்ச ஊதியத்தில் நம் நாட்டில் உள்ள கீழ்நிலைத் தொழிலாளர்கள் எளிமையாகவும் கண்ணியமாகவும் வாழ முடியுமா?

 

தற்போதைய குறைந்தபட்ச ஊதிய விகிதம், இன்றைய வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ள போதுமானதாக இல்லை

 

மலேசியா சோசலிசக் கட்சியின் (PSM) துணைத் தலைவர் எஸ். அருட்செல்வன், அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான மடானி அரசாங்கம், குறைந்தபட்ச ஊதிய விவகாரத்தில்,  தனியார் துறை தொழிலாளர்களுக்கு துரோகம் இழைத்ததாக விமர்சித்திருக்கிறார்.

நாட்டின் வறுமைகோட்டில்  உள்ள தொழிலாளர்கள், அறிவித்திருக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணப்பால், தாங்கள்  ஏமாந்து போய்விட்டதாக உணருகிறார்கள்,'' என்றார் அவர். மேலும் அவர் பேசுகையில் "9 மாத காலத் தாமதத்துடன் செயல்படுத்தப்படும் குறைந்தபட்ச ஊதியமான RM1,700 வெள்ளி, தற்போதைய பணவீக்கத்தின் உண்மையான அதிகரிப்பின் விளைவை ஈடுசெய்ய முடியாது" என்று தெரிவித்தார். 

பட்ஜெட் 2025 சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு, குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை மாதத்திற்கு குறைந்தபட்சம் RM2,000 ஆக உயர்த்துமாறு PSM பலமுறை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

"மலேசியாவில் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கான  பட்ஜெட் வழிகாட்டி 2022/2023", மலாயா பல்கலைக்கழகத்தின் சமூக நல ஆராய்ச்சி மையத்துடன் (SWRC) இணைந்து,  பணியாளர்களின் சேம நிதி வாரியம் (EPF) வெளியிட்ட அறிக்கையை ஆராய்ந்தால், கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிக்கும், பொதுப் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தும் ஒரு நபரின் மதிப்பிடப்பட்ட மாதாந்திர செலவுகள் RM1,930 ஆகும், மேலும் அவர் கார் வைத்திருந்தால், மாதாந்திர செலவுகள் RM2,700 ஆக இருக்கும். குழந்தை இல்லாத திருமணமான தம்பதிக்கு மதிப்பிடப்பட்ட மாதச் செலவுகள் RM4,630 ஆகும். தம்பதியரில் இருவருமே வேலை செய்தால், ஒவ்வொரு நபரும் வாழ்க்கைக்கு போதுமானதாக இருக்க அவர்கள் மாதத்திற்கு RM2,315 சம்பளம் பெற வேண்டும் என்று அர்த்தம். திருமணமான தம்பதியருக்கு ஒரு குழந்தை இருந்தால், அவர்களுக்குத் தேவைப்படும் மாதச் செலவு RM5,980, அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு மாதம் RM6,890 தேவை என்கிறது அந்த அறிக்கை.

கிள்ளான் பள்ளத்தாக்கு ஒரு பெருநகரப் பகுதியாக இருப்பதால் அங்கு வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகமாக இருக்கலாம்.  சிறிய நகரங்களைக் குறித்து அந்த ஆய்வு சொல்வது என்ன? இரண்டு குழந்தைகளுடன் திருமணமான தம்பதியினர் கோலதிரங்கானுவில் வசிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு மாதத்திற்கு RM5,610 தேவை; அவர்கள் அலோர்ஸ்டாரில் வசிப்பவர்கள் என்றால், அவர்களுக்கு மாதம் 5,430 ரிங்கிட் தேவைப்படும் (இணையாக, கணவன் மனைவி இருவரும் வேலை செய்தால் ஒரு நபருக்கு ரிம2,715 சம்பளம் பெற வேண்டும்).

கோலதிரங்கானுவில் (மாதம் 1,630 ரிங்கிட்) அல்லது அலோர்ஸ்டாரில் (மாதம் 1,530 ரிங்கிட்) வசிக்கும், சொந்த வாகனம் இல்லாத ஒரு தனி நபருக்கு குறைந்தபட்ச சம்பளம் மாதத்திற்கு RM1,700 போதுமானது. பிரச்சனை என்னவென்றால், கோலதிரங்கானு மற்றும் அலோர்ஸ்டார் நகரங்களில் பரவலாக வேலை வாய்ப்புகள் உள்ளதா? அப்படி இருந்திருந்தால் அங்குள்ள இளம் பிரமச்சாரிகள் கிள்ளான் பள்ளத்தாக்கு அல்லது வேறு பெரிய நகரங்களுக்கு வேலை தேட வேண்டிய அவசியமில்லை அல்லவா? மேலும், அங்கு வசிப்பவர்கள் தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்தத் தேவையில்லாத அளவுக்கு உள்ளூர் பொதுப் போக்குவரத்து அமைப்பு மிகவும் சரியானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் உள்ளதா?

 

பேங்க் நெகாரா மலேசியா 2018-ல் வெளியிடப்பட்ட ஆய்வில்,  அந்தக் காலக்கட்டத்தில் கோலாலம்பூரில் வசிக்கும் தனிநபர் ஒருவருக்கு தேவைப்படும் குறைந்தபட்ச வாழ்க்கை ஊதியம் மாதத்திற்கு RM2,700 ஆக இருக்கிறது என்றது, இரண்டு குழந்தைகள் கொண்ட திருமணமான தம்பதியருக்கு மாதத்திற்கு RM6,500 தேவைப்படும் என்றது. அதன் பிறகான 6 ஆண்டுகளில், வாழ்க்கைச் செலவு சிறிதும் அதிகரிக்கவில்லை என்று கருதினால்கூட, தற்போது அறிவித்திருக்கும் குறைந்தபட்ச சம்பளம் RM1,700, திருமணம் ஆகாத ஒருவருக்கு எளிமையான வாழ்க்கை வாழ  இன்னும் மாதம் ஒன்றுக்கு 1,000 ரிங்கிட் பற்றாக்குறையாக இருக்கிறது அல்லவா?

 

கோலாலம்பூரில் பேங்க் நெகாராவின் குறைந்தபட்ச வாழ்க்கை ஊதியத்தின் மதிப்பீடு மிக அதிகமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், குறைந்தபட்ச ஊதியத்தை கணக்கிடுவதில் தேசிய ஊதிய ஆலோசனை தொழில்நுட்பக் குழு பயன்படுத்தும் சூத்திரத்தையும்  ஆய்வுக்கு உட்படுத்தலாம். இந்த குறைந்தபட்ச ஊதியக் கணக்கீட்டு சூத்திரம் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள வருமானம் (PGK), சராசரி ஊதியம், உற்பத்தித்திறன் வளர்ச்சி, நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) மற்றும் வேலையின்மை விகிதம் போன்றவற்றை நிர்ணயிக்கும் காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. இந்த சூத்திரத்தின்படி, குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு RM2,444 ஆக இருக்க வேண்டும் என்கிறது.

நகர்ப்புறங்கள் மற்றும் நகர்புறங்கள் அல்லாத இடங்களை ஒப்பிட்டால், நகர்ப்புறங்களில் வாழ்க்கைச் செலவு அதிகமாக இருக்கும்; அங்கு குறைந்தபட்ச ஊதியம் RM2,568 ஆக இருக்க வேண்டும். நகர்புறங்கள் அல்லாத இடங்களில் குறைந்தபட்ச ஊதியம் RM1,884 ஆக இருக்க வேண்டும். அப்படிப்பார்த்தால், இது இன்னும் நடைமுறைக்கு வராத 2025-ல் குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை விட RM184 அதிகமாக உள்ளது.

மக்களுக்கு உண்மையாக தேவைப்படும் மாத வருமானம் தொடர்பாக பல்வேறு அம்சங்களைப் பரிசீலித்த பிறகு, இந்தக் காலக்கட்டத்தில் அதிக வாழ்க்கைச் செலவு மற்றும் ஊதிய உயர்வுகளை வழங்க முதலாளிகள் தயக்கம் காட்டுவதையும் கண்டு கொண்ட பி.எஸ்.எம் குறைந்தபட்ச ஊதியத்தை மாதம் ஒன்றுக்கு RM2,000 என்ற விகிதத்தில் நிர்ணயம் செய்வதில் கொஞ்சம்கூட சமரசம் செய்துக்கொள்ளாத நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இருப்பினும், ஏமாற்றம் என்னவென்றால், "மக்களின் வறுமையை ஒழிக்க" விரும்புவதாகக் கூறப்படும் மடானி அரசாங்கம், மாதத்திற்கு குறைந்தபட்ச ஊதியத்தை RM1,700 மட்டுமே அறிவித்திருக்கிறது.

இ.எஸ்.எம்-மின் கோரிக்கையான குறைந்தபட்ச ஊதியம் RM2,000

முன்மொழிவு "பழமைவாத" கருத்தாகக் கூறப்பட்டால், மடானி அரசாங்கம் குறைந்தபட்ச ஊதியத்தை RM1,700 ஆக உயர்த்திய "நல்ல செய்தியும்" நிச்சயமாக தீவிர பழமைவாதமானதுதான்.

அன்வார் இப்ராஹிம் அறிவித்த அதே 2025 வரவுசெலவுத் திட்டத்தில், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு RM2,115 ஆக நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகிதத்துடன் ஒப்பிடும்போது, தனியார் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதம் RM1,700 என்பது மிகவும் குறைவாகும். அனைத்து அரசு ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச வருமானமாக மாதம் 2,115 ரிங்கிட்டை அரசு நிர்ணயம் செய்யுமானால், ஒரே நாட்டில் வசிக்கும் மற்ற தொழிலாளர்களுக்கு அது ஏன் இருக்க முடியாது? இது ஆதரவா அல்லது தொழிலாளர்களிடம் ஏற்றத்தாழ்வா?

இந்த நேரத்தில் மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற அரசுக் கட்டிடங்களில் துப்புரவுத் தொழிலாளர்களாகவும், காவலாளிகளாகவும் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்களை மறந்துவிடாதீர்கள். அவர்கள் நமது அரசாங்க வளாகத்தை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க சேவை செய்கிறார்கள், ஆனால் அதே கட்டிடத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களை விட அவர்களுக்கு மிகவும் குறைந்த,  குறைந்தபட்ச ஊதியம்தான் வழங்கப்படுகிறது, ஏனெனில் அவர்கள் அரசாங்கத்திற்காக செய்யும் வேலை தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு குத்தகை முறையில் வேலை செய்கிறார்கள்.

1990 களில் மகாதீர் 1.0 நிர்வாகத்திலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட தனியார்மயமாக்கல் கொள்கையால், வேலை பாதுகாப்பு இல்லாதது மற்றும் குறைந்த ஊதியத்துடன் தொடர்ந்து அழுத்தம் கொண்ட பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள். இதற்கும் "மக்கள் நலனுக்கும்" எந்த சம்பந்தமும் இல்லை.

 

மலேசியாவில் குறைந்தபட்ச ஊதியத்தின் சுருக்கமான வரலாறு:

குறைந்தபட்ச ஊதியம் என்பது அரசாங்கத்தின் மரியாதை அல்ல, ஆனால் தொழிலாளர்களால் போராடி பெறப்பட்ட அடிப்படை வேலை பாதுகாப்பு

நமது நாட்டில் குறைந்தபட்ச ஊதியத்தின் வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம்.

குறைந்த பட்ச ஊதியம் என்பது இன்று நம் நாட்டின் சட்டத்தின்படி கட்டாயமாக இருக்க வேண்டும், இந்த சட்டமானது வானத்தில் இருந்து விழுந்த ஒன்றல்ல, அரசாங்கத்தில் உள்ள உயரதிகாரிகள் திடீரென தூக்கத்திலேயே உணர்ந்து எழுந்து கொடுத்ததல்ல.  கார்ப்பரேட் முதலாளிகள் திடீரென்று தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்காக வருந்தி அல்லது குற்ற உணர்ச்சியடைந்து கொடுத்ததும் அல்ல. தொழிலாளர்கள் உட்பட, தொழிலாளர்களின் அவலநிலை குறித்து பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராடி வந்ததால்தான், 2013ம் ஆண்டு, முதன் முதலாக நமது நாட்டில் குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த முடிந்தது.

நமது நாட்டில் குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸால் (MTUC) 1990-களிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது. 1999-ல் MTUC-யின் பொதுக் கூட்டத்தில் பேசிய அப்போது பிரதமராக இருந்த மகாதீர் முகமட், தொழிலாளர்களுக்கு மாதம் 1,200 ரிங்கிட் சம்பளம் கிடைக்க வேண்டும் என்று கூறினார்.  ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, டாக்டர். மகாதீர் தனது தொழிலாளர் தின செய்தியில், அரசாங்கத்தால் குறைந்தபட்ச ஊதியமாக RM1,200 மாதம் நிர்ணயம் செய்ய முடியாது, ஏனெனில் ஊதியத்தை மிக அதிகமாக உயர்த்துவது நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க வழிவகுக்கும் என்றார் அவர். 1999-ம் ஆண்டு டாக்டர் மகாதீர் சொன்ன அந்த வார்த்தைகளின் வழி ஒன்று தெளிவாகிறது, யு-டர்ன்களில் நிபுணத்துவம் பெற்ற நம் நாட்டின் நம்பர் ஒன் அரசியல்வாதியாக அவர் அந்த நேரத்தில் பொதுத் தேர்தலுக்கு முன் தொழிலாளர்களை ஏமாற்ற பேசிய வெறும் தந்திரமாகும். ஏனெனில் அவர் 4-வது பிரதமராக இருந்த 22 ஆண்டுகளில் குறைந்தபட்ச ஊதியம் அமல்படுத்தப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

குறைந்த பட்ச ஊதியம் நம் நாட்டில் போட்டித்தன்மையை இழக்கச் செய்யும், முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள், பொருளாதாரம் பாதிக்கப்படும் மற்றும் இது போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி குறைந்தபட்ச ஊதியத்தை செயல்படுத்த மறுத்தது அரசு. அதே நேரத்தில், அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு வசதிகள் மற்றும் சலுகைகளை தொடர்ந்து வழங்கி வந்தது. உதாரணத்திற்கு கார்ப்பரேட் வரி விகிதம் 1970 களில் 40% ஆக இருந்து 1980 களில் 35% ஆகவும், பின்னர் 1990 களில் 30% ஆகவும் 2001 க்குள் 28% ஆகவும் கணிசமாகக் குறைக்கப்பட்டது, கார்ப்பரேட் வர்க்கம் நல்ல லாபம் ஈட்டவும் ஆனால் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து குறைந்தபட்ச ஊதியம் வழங்க  தளம் இல்லாமலும் வைத்திருந்தது.

 

ஏப்ரல் 19, 1999 அன்று, தோட்ட பாட்டாளிகள் ஒருங்கிணைப்பு குழு (JSML) ஆதரவுடன் 2,000க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் குறைந்தபட்ச மாத ஊதியம் 750 ரிங்கிட் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு அணிதிரண்டனர். மே 1, 1996 முதல்  தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் கோரி  பிரச்சாரத்தைத் தொடங்கியது தோட்ட பாட்டாளிகள் ஒருங்கிணைப்பு குழு.

ஜூன் 1999, நாடாளுமன்றத்தின் முன் விவசாயத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய 2 மாதங்களுக்குப் பிறகு, மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி (MIC) அதோடு அந்த காலக்கட்டத்தில் ஆட்சியில் இருந்த பாரிசான் நேஷனல் (BN) கட்சி, ஒன்றிணைந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு RM900 முதல் RM1,000 வரை மாத சம்பளம் கோரி அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பித்தன. அதனைத்தொடர்ந்து 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம்,  அரசாங்கம் தோட்டத் துறையில் மாதாந்திர சம்பளத்தின் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதாக அறிவித்தது.

இருப்பினும், பிப்ரவரி 8, 2001 அன்று, மலாயன் விவசாய உற்பத்தியாளர்கள் சங்கம் (MAPA) மற்றும் பண்ணை தொழிலாளர்களின் தேசிய சங்கம் (NUPW) இடையேயான கலந்துரையாடலில் தோட்டத் தொழிலாளர்களின் மாத ஊதியக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக அரசாங்கம் அறிவித்தது. அதாவது தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் RM325 மட்டுமே, இது வறுமைக் கோட்டின் வருமானத்திற்கும்  கீழே உள்ளதாகும்.

 

பல்வேறு தரப்புகளின் பிரச்சாரங்கள் மற்றும் அழுத்தங்களுக்குப் பிறகு, தேசிய அளவில் அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் வழிமுறையை ஏற்படுத்துவதற்காக, தேசிய ஊதிய ஆலோசனை கவுன்சில் சட்டம் 2011 (சட்டம் 732) இறுதியாக அரசாங்கம் இயற்றியது. ஜனவரி 1, 2013 முதல் குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என்ற ஆணையை 16 ஜூலை 2012 அன்று  அரசு வெளியிட்டது.  தீபகற்ப மலேசியாவிற்கு குறைந்தபட்ச ஊதியம் மாதம் ஒன்றுக்கு RM900 ஆகவும், சபா, சரவாக் மற்றும் லாபுவானுக்கு மாதம் 800 ரிங்கிட் ஆகவும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், 5 அல்லது அதற்கும் குறைவான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளால் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நடைமுறைப்படுத்துவது ஜூலை 1, 2013 அன்று தொடங்கியது, இது 6 மாதங்களுக்குப் பிறகாகும், தவிர அதை செயல்படுத்துவதற்கான காலத் தாமதம் மேலும் நீட்டிக்கப்பட்டது. அப்போதிருந்து, 5 அல்லது அதற்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட முதலாளிகளால் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் பெரும்பாலும் மற்ற தொழிலாளர்களை விட மிக தாமதமாகவே குறைந்தபட்ச ஊதிய உயர்வைப் பெற்றுவருகின்றனர்.

2013-ல் குறைந்தபட்ச ஊதியம் RM900 என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றென தொழிற்சங்கங்கள், JERIT மற்றும் PSM போன்ற சமூக அமைப்புகளால் குரல் எழுப்பப்பட்டன. ஏனென்றால், 2013 இல் கோரப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகிதம் மாதத்திற்கு RM1,200 ஆக இருந்தது (2008 முதல் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை இது), மேலும் அந்த விகிதம் முழு நாட்டிற்கும் தரப்படுத்தப்பட வேண்டும்.

குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்திய பிறகு முதல் மதிப்பாய்வு மற்றும் குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை சரிசெய்தல் 1 ஜூலை 2016 அன்றுதான் நடைமுறைக்கு வந்தது. இது நிலுவைத் தேதியை விட 18 மாதங்கள் தாமதமாகும். குறைந்தபட்ச ஊதிய ஆணை 2016, தீபகற்ப மலேசியாவிற்கு மாதத்திற்கு RM1,000 ஆகவும், சபா, சரவாக் மற்றும் லாபுவானுக்கு மாதத்திற்கு RM920 ஆகவும் குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை நிர்ணயித்தது. இது கடந்த 8 ஆண்டுகளில்  கோரப்பட்ட மாதத்திற்கு RM1,200 என்ற குறைந்தபட்ச சம்பள விகிதத்தை இன்னும் எட்டாத நிலையாகும். ஆனால், சமூக குழுக்களிடமிருந்து குறைந்தபட்ச ஊதிய கோரிக்கைகள் ஏற்கனவே அந்த காலக்கட்டத்தில்  மாதத்திற்கு RM1,500 ஆக அதிகரித்திருந்தன.

 

2018-ல் அறிவிக்கப்பட்ட இரண்டாவது குறைந்தபட்ச ஊதிய மறுசீரமைப்பு,  6 மாதங்கள் தாமதமாக அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில், 2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னனியை தோற்கடித்து ஆட்சிக்கு வந்த பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) அரசாங்கம், குறைந்தபட்ச ஊதியத்தை ரிம50 மட்டுமே உயர்த்தி ரிம1,050 ஆக அறிவித்தது. இந்த அறிவிப்பு MTUC, சமூக குழுக்கள் மற்றும் PSM உட்பட தொழிற்சங்கங்களின் எதிர்ப்பைத் தூண்டியது. MTUC மற்றும் PSM ஒரு கூட்டணியாக இணைந்து17 அக்டோபர் 2018 அன்று நாடாளுமன்றத்தின் முன் RM1050 ரிங்கிட் எதிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்தன. மக்களின் வற்புறுத்தலின் விளைவாக, அந்த நேரத்தில் PH அசாங்கம் குறைந்தபட்ச ஊதிய (திருத்த) ஆணை 2018 மூலம் RM50 உயர்த்தி RM1,100 ஆக சம்பளத்தை  உயர்த்தியது. அதன் புதிய விகிதம் ஜனவரி 1, 2019 முதல் நடைமுறைக்கு வந்தது. அந்த நேரத்தில் குறைந்தபட்ச ஊதிய மாற்றத்தில் செய்யப்பட்ட ஒரு மாற்றம் என்னவென்றால், குறைந்தபட்ச ஊதிய விகிதம் முழு நாட்டிற்கும் தரப்பட்டது, மேலும் குறைந்தபட்ச ஊதிய விகிதத்தில் அது வேறுபாடு வைக்கவில்லை.  அடுத்த குறைந்தபட்ச ஊதிய சீரமைப்பு 1 பிப்ரவரி 2020 அன்று ‘குறைந்தபட்ச ஊதிய ஆணை 2020’ மூலம் நடைமுறைக்கு வந்தது, RM100 ரிங்கிட் ஏற்றப்பட்டு மாதத்திற்கு RM1,200 -டாக அதிகரிக்கப்பட்டது.  ஆனால் மாநகர மன்றம் அல்லது மாநகர சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 57 பகுதிகளுக்கு மட்டுமே அது வழங்கப்பட்டது. கிராமப்புறங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இன்னும் குறைந்தபட்ச ஊதியமாக RM1,100 மட்டுமே வழங்கப்படுகிறது.

 

தேசிய ஊதிய ஆலோசனைக் குழுவின் கீழ் உள்ள தேசிய ஊதியக் கலந்தாய்வு தொழில்நுட்பக் குழுவிடம் ஜூலை 2021 இல் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு குறிப்பாணையில் குறைந்தபட்ச ஊதியத்தை மாதத்திற்கு RM1,800 ஆக உயர்த்த வேண்டும் என்று PSM பரிந்துரைத்தது. 2022 இல் குறைந்தபட்ச ஊதிய சரிசெய்தல் குறைந்தபட்ச ஊதிய விகிதத்தில் கணிசமான அதிகரிப்பைக் கண்டது,  RM300 ரிங்கிட் அதிகரிக்கபட்டு மாதம் RM1,500 ஆக குறைந்த பட்ச ஊதியம் அதிகரித்ததுடன் அது 1 மே 2022 முதல் நடைமுறைக்கும் வந்தது. இருப்பினும், குறைந்தபட்ச ஊதிய விகிதமான RM1,500ஐ நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் இன்னும் பல்வேறு நெகிழ்வுத்தன்மையை முதலாளிகளுக்கு வழங்கியது.

 

உண்மையில், அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு புதிய குறைந்தபட்ச ஊதிய விகிதத்தின்படி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது காரணம்  அரசுக்கும் ஒப்பந்ததாரருக்கும் இடையேயான ஒப்பந்தம்  புதுப்பிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

சமீபத்திய குறைந்தபட்ச ஊதிய மாற்றம் மே 2024 இல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், மீண்டும் 9 மாதங்கள் தாமதம் ஆனது. PSM மற்றும் அரசாங்க ஒப்பந்த தொழிலாளர்கள் ஒருகிணைப்பு குழு (JPKK),  பரிந்துரைத்த RM2,000 வெள்ளிக்கும் குறைவாக உள்ளது சமீபத்திய குறைந்தபட்ச சம்பளம்.

 

மக்களின் நல்வாழ்வுக்கும் பொருளாதார மீட்சிக்கும் குறைந்தபட்ச வாழ்க்கை ஊதியம் முக்கியமானது.

 

குறைந்த பட்ச ஊதியம்,  மிகக் குறைவாக இருக்கலாம் என்று நினைக்கும் நபர்கள் நம்மிடையே இருக்கலாம், ஏனென்றால் குறைந்தபட்சம் என்பது "குறைவானது", பின்னர் குறைந்தபட்ச ஊதியத்தை முடிந்தவரை குறைவாக வைத்திருப்பது ஒரு பிரச்சனையல்ல என்று அவர்கள் நினைக்கின்றனர். இது ஒரு தவறான அனுமானம் மட்டுமல்ல மனிதாபிமானமற்றது. அதோடு சமூகத்தை முன்னேற்றும் எண்ணம் அது கொண்டிருக்கவில்லை.

குறைந்த பட்ச ஊதியம் என்பது, தொழிலாளர்கள் எளிமையான வாழ்க்கையை வாழவும், தொடர்ந்து பணியாற்றுவதற்கு அவர்களின் ஆற்றலை மீண்டுருவாக்கவும் செய்யும் ஒரு படிநிலையாகும். எனவே, ஒரு தொழிலாளிக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் அவரது வாழ்க்கை மற்றும் குடும்பத்தை ஆதரிக்க போதுமானதாக இருக்க வேண்டும், வாழ்க்கையை பாதிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஊதியமாக இருக்ககூடாது.

மிகக் குறைந்த ஊதியத்தைப் பெறும் தொழிலாளர்கள், ஒவ்வொரு நாளும் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள் அல்லது அவர்களின் சொற்ப வருமானத்தை ஈடுகட்ட மற்ற பகுதி நேர வேலைகளைக் கண்டறிவார்கள். இது தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும், அதனால் அவர்கள் இளம் வயதிலேயே பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும், மேலும் கடுமையான சோர்வு காரணமாக திடீரென இறக்கக்கூடும். அதுமட்டுமின்றி, ஊழியர்களின் அற்ப ஊதியத்தை ஈடுகட்ட அதிக நேரம் உழைக்க வேண்டியிருப்பதால், அவரது உடல்நிலை மோசமடைந்தால், பணியாளர் உற்பத்தித்திறனும் பாதிக்கப்படும். "வேலை-வாழ்க்கை சமநிலை" என்பது குறைந்தபட்ச ஊதியத்தை மட்டுமே பெறும் கீழ்நிலைத் தொழிலாளர்களிடையே இருக்க வாய்ப்பில்லை, மேலும் இது சில உயர் வருமானக் குழுக்களின் "சலுகையாக" மட்டுமே உள்ளது.

குறைந்தபட்ச ஊதிய விகிதம் அதிகமாக இருந்தால், முதலாளிகள் நஷ்டம் அடைவார்கள், முதலீட்டாளர்கள் ஓடிவிடுவார்கள் என்று சிலர் கூறலாம். இந்த பார்வையை ஒரு உண்மைக் கதையுடன் எதிர்க்கலாம்.

ஹென்றி ஃபோர்டு என்ற பெயரை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த ஹென்றி ஃபோர்டு அமெரிக்காவில் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தை நிறுவிய ஒரு பெரிய தொழிலதிபர். 1914 ஆம் ஆண்டில், அதாவது 110 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த கார் உற்பத்தி நிறுவனத்தின் முதலாளி, தான் வேலைக்கு அமர்த்தும் தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை 2.34 அமெரிக்க டாலர்களில் இருந்து 5 அமெரிக்க டாலர்களாக (இன்று சுமார் 152 அமெரிக்க டாலர்கள் அல்லது RM660 க்கு சமம்) உயர்த்த முடிவு செய்தார். 114% மடங்கு அதிகரிப்பு. ஃபோர்டு தாராள மனப்பான்மையாலும், தொண்டு  அல்லது தனது தொழிலாளர்களை நேசித்தோ அவ்வாறு செய்யவில்லை; மாறாக, பொருளாதாரக் கொந்தளிப்பு காரணமாக தனது நிறுவனம் திவாலாவதைத் தடுக்க அவர் அவ்வாறு செய்தார். லாப நோக்குடைய முதலாளி, திவால் விளிம்பில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் அதன் ஊழியர்களின் ஊதியத்தை இன்னும் அதிகரிப்பு செய்வது கொஞ்சம் விந்தையல்லவா? இருப்பினும், தனது வணிகத்தை காப்பாற்ற பெரிய முதலாளிகளின் சூட்சமம் மிகவும் எளிமையானது: அவர் தனது தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தும் போது, அதிக வருமானம் பெறும் ​​அவருடைய தொழிலாளர்களே தொழிற்சாலையில் உற்பத்தி செய்யும் கார்களை வாங்குவதற்கு  விரும்புவார்கள்  என்று அர்த்தம். இதனால் அவரது கார்களை விற்க ஒரு பெரிய சந்தை உருவாகிறது. மேலும், அதிகப்படியான சம்பள உயர்வு அந்த ஃபோர்டு தொழிற்சாலையில் அதிக ஊழியர்கள் வேலைக்கு வருவதற்கு முட்டிமோதிக்கொண்டிருந்தனர். அதிகமான தொழிலாளர்களால் தொழிற்சாலைகளின் உற்பத்தியும் அதிகரிக்க முடிந்தது.  சம்பள உயர்வின் விளைவாக, ஃபோர்டு நிறுவனத்தின் வணிகம் வளர்ந்து வந்தது, மேலும் அவரது ஊழியர்களின் ஊதிய உயர்வு காரணமாக அவரது வணிகத்தின் விரிவாக்கத்தில் இருந்து ஹென்றி ஃபோர்டு என்ற முதலாளியின் லாபத்தில் பெறும் பணக்காரர் ஆனார்.

 

 


No comments:

Post a Comment

மலேசிய சோசலிசக் கட்சியின் 27-வது தேசியப் பேராளர் மாநாடு

மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) ஊடக அறிக்கை – 28 ஜூலை 2025 - கட்சியின் 27-வது தேசியப் பேராளர் மாநாடு- அரசியல் களத்தில் மூன்றாம் அலைய...