இம்முறை பிஎஸ்எம் தைப்பூசத் தினத்தை முன்னிட்டு எல்லா மாநிலங்களிலும் தன் செயற்பாடுகளை துரிதப்படுத்தியது. கடவுள் இல்லை என்றும் பக்தி இல்லையென்றும் தைப்பூசம் அவசியமான ஒன்றா என்ற கேள்விகளை மக்களிடம் கேட்டு குழப்பத்தை ஏற்படுத்துவது சோசலிச பணியல்ல. மாறாக, மக்கள் அதிகமாக கூடுகிற இடங்களில், அவர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சில விஷயங்களை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான பணியை பிஎஸ்எம் இம்முறை மேற்கொண்டது. குறிப்பாக காடுகளை பாதுகாத்தல், பருவநிலை நெருக்கடி பிரகடனம், சோஸ்மாவுக்கு எதிரான கையெலுத்துப் பிரச்சாரம் என மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
சிலாங்கூர் பத்துமலையில் சோஸ்மாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் தோழர் சிவரஞ்சனியுடன் தோழர் யோகியும் களமிரங்கினார். சோஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் 12 பேர்களின் விடுதலைக்கு ஒரு மில்லியன் கையெழுத்து சேமிக்க வேண்டிய நெருக்கடியில் தற்போது இப்பிரச்னை இருக்கிறது. ஒரு வாரமாக கூடாரம் அமைத்து கையெழுத்து பிரச்சாரம் செய்துக்கொண்ட குழுவினருக்கு சில மணி நேரங்கள், சோசலிச கட்சியை சேர்ந்த அவ்விரு தோழர்களும் பிரச்சாரம் செய்து கையெலுத்தினை பெற்றுத்தந்தனர். மேலும், மலேசிய சோசலிச தமிழ் சஞ்சிகை அங்கு மக்களுக்கு அறிமிகப்படுத்தப்பட்டது.
பேராக் சுங்கை சிப்புட் பகுதியில் மக்களுக்காக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. சட்டவிரோதமாக மரங்களை வேட்டையாடும் பிரச்சனை தொடர்பான விழிப்புணர்வு முகாமாகவும் அது அமைந்தது.
ஜொகூர் மாநிலத்தில் இளைஞர் படையின் துணையுடன் தோழர் மோகன், சோஸ்மாவுக்கு எதிரான கையெத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின் அந்தக் கையெழுத்து ஏடுகள் சுவாராம் இயக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அங்குள்ள மக்களுக்கும் சோசலிச தமிழ் நாளிதழ் அறிமுகப்படுத்தப்பட்டது. சினிமா, விளம்பரம், வியாபாரமற்ற அந்த நாளிதழை மக்கள் ஆர்வமுடன் கவனித்தனர்.
தைப்பூச விழாவையொட்டி சில பிரச்சார நடவடிகைகளை பிஎஸ்எம் மேற்கொண்டாலும், அதில் அரசியல் நோக்கத்தையோ சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையையோ எதையும் கொண்டிருக்கவில்லை. பக்தர்களை எவ்விதத்திலும் பாதிக்காமலும், அவர்களுக்கு இடையூறு செய்யாமலும் மிகப் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துக்கொள்வதும் இடம் பொருள் ஏவல் குறித்த தெளிவும் பிஎஸ்எம் கொண்டிருக்கிறது.
குறிப்பு: தைப்பூசத்தில் என்னை சந்தித்த இளம் குறுத்து இப்படி கேட்டான். அக்கா மக்களுக்கு உதவி செய்யனும் என்றால் என்ன செய்யனும்.
யோகி: (வாடா என் தங்கமே...) முதலில் வாசிப்பதை ஏற்படுத்தனும். நாட்டில் நடக்கும் விஷயங்களை நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் அது ஏன் நடந்தது நடக்கிறது என்பதற்கான கேள்வியை கேட்கனும். கேள்விகள்தான் பதிலை திறப்பதற்கான ஒரு திறவுக்கோள். எப்போதும் மக்களுக்காக வாதாட துணிந்து வர வேண்டும். இப்போது வாசிக்கனும்.
No comments:
Post a Comment