1990-ஆம் ஆண்டு ஜின்ஜாங் உத்தாராவில் வசித்திருந்த இவர்களுக்கு,
மாற்று இடமாக ஶ்ரீ அமானில் உள்ள டிபிகேஎள்
மலிவு விலை வீட்டை ஒரு லாபகரமான நிமந்தனையுடன்
வழங்கி இட மாற்றம் செய்திருக்கிறது மாநகரமன்றம். அதாவது மூன்றிலிருந்து ஐந்த ஆண்டுகளுக்குள்
மலிவு விலை வீட்டைக் கட்டிகொடுத்து கொடுப்பதாக வாக்குறுதி அப்போது வழங்கப்பட்டது. தற்போது
அந்த வாக்குறுதிக்கான ஆயூல்காலம் 28 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ஜின்ஜாங் உத்தாரா
மக்களுக்கு நல்ல செய்தி செல்லவிருப்பதாக மாநகர மன்றம் கூறியது. அவர்களுக்கான வீடுகள்
கட்டி முடிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர்கள் அங்கு இடம் பெயரலாம் என்று மநகர மன்றம்
கூறிய நம்பிகை வார்த்தைகளை நம்பி, சொந்த வீடு கிடைக்கப்போகும் கனவோடு சந்தோஷமாக இருந்தவர்களுக்கு
ஏமாற்றமே மிஞ்சியது.
கிடைக்கப்போகும்
வீட்டுக்காக எந்தப் பணத்தையும் செலுத்த வேண்டாம் என்றும் மாநகர மன்றம் எல்லா உதவிகளையும்
மக்களுக்குச் செய்யும் என்றும், வயது வரம்பின்றி உங்களுக்கு வங்கியில் கடனுதவி பெற்றுத்
தருவதற்கும் மாநகர மன்றம் உதவும் என்றும் வாக்குறுதிகள் வழங்கியதின் பேரில் அவர்கள்
நம்பைகையுடம் இருந்திருக்கின்றனர். மேலும், மாநகர மன்றம் கொடுத்த ஒப்பந்த கடிதத்தில்
அவர்கள் 6 மாதகாலத் தவணை வாடகையை செலுத்தினால் போதும் என்றும் இந்தக் கால இடைவெளியில்
வங்கியில் கடனுதவி பெற்று தந்துவிடுவோம் என்று மாநகர மன்ற அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
அதற்கான எல்லா ஆவணங்களையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.
அதுக்குறித்து விவரிக்கிறார் சீலா..
மாநகர மன்றத்தினர்
கூறிய புதிய வாக்குறுதி இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில், சிலருக்கு வங்கிக் கடனுதவி
உறுதியானது. ஆனால், அதை என்னக்காரணம் என்று கூறாமல் SPWP அதிகாரிகள் நிராகரித்துவிட்டார்கள். சில குடும்பங்களுக்கு வீடு
குறித்த எந்தக் கடிதமும் அனுப்பப்படவில்லை. உரிமப் பத்திரம், எஸ்எம்பி என எதுவும் கொடுக்கப்படவில்லை.
ஆனால், குடியிருப்பாளர்களான நாங்களோ வீடு தொடர்பான வழக்கறிஞர் பத்திரத்தில் கையப்பமிட்டதுடன், வங்கியில்
வீட்டிற்கான பணமும் செலுத்த தொடங்கினோம். சிலர் முழுப்பணத்தையுமே செலுத்தினார்கள்.
ஏதோ நம்பிகையுடன் தொடர்ந்த எங்களின் சொந்த வீட்டுக் கனவின்மீது 10 மாதங்களில் மண் விழுந்தது. .நாங்கள் மாநகர மன்றத்திடம்
3000 ரிங்கிட் கடன் கொண்டிருப்பதாக நீதிமன்ற கடிதம் எங்களைத் தேடி வந்தது. ஏன் என்ற
கேள்வியை குடியிருப்பாளர்கள் கேட்டதற்கு, எங்களின்…. ரத்து செய்துவிட்டதாக கூறினார்கள்.
நாங்கள் மொத்தமாக
1,600 குடும்பங்கள் இந்த வீட்டிற்காக காத்திருந்தோம். தற்போது 991 குடும்பம்தான் எஞ்சி
இருக்கிறோம். எங்களுக்கு வழங்கிய உடன்படிக்கையின் வழி நாங்கள் 6 மாதங்கள் புதிய வீட்டிற்கான
தவணைப் பணத்தை செலுத்துகிறோம். அதற்கு மேல் எங்களை செலுத்தச் சொல்லும் பணத்தை அகற்றியாக
வேண்டும். SPWP எங்களுக்கு அதிகமான வட்டியை
விதிக்கிறார்கள். 6.5 விழுக்காடு வட்டிப்பணத்தை பி40-கீழ் இருக்கும் குறைந்தபட்ச சம்பளத்தைக்
கொண்டிருக்கும் எங்களால் அவ்வளவு பெரிய அளவிலான வட்டியை செலுத்த சாத்தியப்படுமா என
அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். இயலாததால்தானே நாங்கள் மாநகர மன்றத்தின் மலிவு விலை
வீட்டில் வசிக்கிறோம். இன்றும் நாங்கள் மாநகர மன்றத்தை நம்பித்தான் வாழ வேண்டிய நிர்பந்ததில்
இருக்கிறோம்.
இங்களின் இந்தப் பிரச்சனைக்கு தீர்வுக் காணும் நோக்கில் டத்தோ பண்டாரை சந்தித்து ஒரு கடிதத்தை கொடுக்க நாங்கள் மாநகர மன்றத்தின் முன்பு கூடியிருக்கிறோம். எங்கள் கடிததைக் கண்டு நல்லதொரு பதிலை அவர் கொடுப்பார் என்று நம்பைகையுடம் இருக்கிறோம்.. இவ்வாறு ஸ்ரீ ஆமான் ஜின்ஜாங் உத்தாரா பிபிஆர் வீடமைப்பின் பொதுநல இயக்க துணை செயலாளர் சீலா கூறினார்.
இவர்களின் இந்தப்
போரட்டத்திற்கு ஆதாரவளித்திருக்கும் பிஎஸ்எம்-சேர்ந்த அருட்செல்வன், மக்களுக்கான இந்தப்
பிரச்சனையை மநகர மன்ற அதிகாரிகள் விரைந்து தீர்வுக் காண வேண்டும் என்று பிஎஸ்எம் எதிர்பார்ப்பதாக
கூறினார். இந்த மக்களின் மறியலுக்குப்
பிறகு, மாநகர மன்றத்தின் அதிகாரி முகமட் ஜஸ்னி பெற்றுக்கொண்டார். ஆனால், அவர் பத்திரிகையாளர்களை
சந்திக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment