பிப்ரவரி 2,
பிஎஸ்எம் மற்றும்
புக்கிட் செராக்கா தோட்ட கால்நடை விவசாயிகளின்
ஏற்பாட்டில், பொங்கல் விழா அவர்களின் தோட்டத்திலேயே மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தற்போது சைம் டர்பி நிறுவன பராமரிப்பில் இருக்கும் தோட்டங்களில், அதன் அதிகாரிகள் கால்நடைகள் வளர்பதற்கு தடைவிதித்திக்க பரிந்துரைப்பதுடன் அதற்கான
காலக்கெடுவையும் வைத்திருக்கிறது சைம் டர்பி நிறுவனம். இதற்காக கால்நடை
விவசாயிகள் தங்கள் மனவருத்ததை தெரிவித்திருபதுடன், சைம் நட்பியின் இந்த நிலைப்பாட்டை
மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இந்த விவகாரத்தை
முன்னிருத்தி புக்கிட் செராக்கா தோட்டத்தில்
மக்கள் பொங்கல் செய்யப்பட்டது. கால்நடை விவசாயிகளின்
ஆதரவில் பி எஸ் எம் முன்னெடுத்த இந்த பொங்கல்
விழாவில் நம் பாரம்பரியம் சார்ந்த நிகச்சிகளும் விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
தொடக்கமாக பறை மற்றும்
உருமியடித்து நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தொடக்க உரையை புக்கிட் செராக்கா தோட்ட தமிழ்ப்பள்ளியின்
முன்னால் தலைமையாசிரியர் ஶ்ரீவாசன் வரவேற்புரையை வழங்கினார். தொடர்ந்து பிஎஸ்எம் மார்ஹைண்ட்
பிரிவைச் சேர்ந்த தோழர் விஜயகாந்தி தலைமையுரையை வழங்கினார். அதில் அவர் கால்நடை விவாசயிகளின்
பிரச்னைக்கு பிஎஸ்எம் என்றும் கைகொடுத்து உடன் நிற்கும் என்று உறுதி கூறினார். அவரைத்தொடர்ந்து
இந்நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளராக அமானா கட்சியை சேர்ந்தவரான ஆசிரியர் ஸம்ரி வாழ்த்துரை
வழங்கினார்.
சிறுவயதில் பொங்கல் விழாக்களில் தாம் கலந்துகொண்ட அனுபவம் தொடர்பாக நியாபங்களை
அவர் மக்களோடு பகிர்ந்துக்கொண்டார். மேலும், கால்நடை விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை
தாம் நன்கு அறிந்திருப்பதாகவும் அவர் கூறினார். அவரைத்தொடர்ந்து கோலசிலங்கூர் பாராளமன்ற
உறுப்பினர் அன்பரசன் வாழ்த்துரை வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து
பிஎஸ்எம் கட்சியின் தேசிய பொது செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் பேசுகையில், பல தலைமுறைகளாக
கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் தோட்ட தொழிலார்களுக்கு அரசாங்கத்தை சார்ந்த நிறுவனமான சைம் டர்பி நிறுவனம் தற்போது பெரிய நெருக்குதலை
கொடுத்துக் கொண்டிருக்கிறது. கால்நடைகளை தோட்டத்தில் வளர்க்க கூடாது என்று அறிவித்திருப்பதுடன்,
அத்தொழிலை முழுமையாக தொழிலார்கள் கைவிடக்கூடிய நெருக்கடியை அந்நிறுவனம் ஏற்படுத்தி
வருகிறது. இம்மாதிரியான விஷயங்கள் நாட்டு மக்களுக்கு பக்கத்தான் அரசாங்கத்தின் மீது
எதிர்மறையான பார்வையை ஏற்படுத்துகிறது. ஒரு நேரத்தில் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்
என்று கூறிக்கொண்டு விவசாய மக்களை விரட்டியடிப்பது,
கால்நடை வளர்பவர்களை வாழவிடாமல் துரத்துவதும் ரொம்பவும் விசித்திரமாக இருக்கிறது. உழவர்கள்
நல்லவிதமாக இருந்தால்தான் நாட்டு மக்களுக்கு நல்ல உணவு கிடைக்கும். எனவே விவசாய பிரச்சனையை
நாட்டின் அனைத்து மக்களும் தனது சொந்த பிரச்சனையாக கருதி விவாய மக்களுக்காக ஈடுபடும்
போராட்டங்களில் கைகொடுக்க வேண்டும் என அவர் கூறினார்.
பின் வந்திருந்த
பிரமுகர்களுக்கு நினைவு பரிசு வழகப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொங்கல் வைக்கப்பட்டது.
பால் பொங்கிய பிறகு, பொது மக்களும் பிரமுகர்களும் தங்கள் கோரிக்கைகளை கூறி சட்டியில்
அரிசியை போட்டனர். மக்கள் கூடியிருந்து இந்தப்
பொங்கலை வைத்தது பார்ப்பதற்கு ரொம்பவும் அழகாக அமைந்தது.
அதனைத்தொடர்ந்து
தோட்டத்து இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்த போட்டி விளையாட்டுகள் தொடங்கின. சட்டி உடைத்தல்,
தோடரணம் பின்னுதல், சரம் தொடுத்தல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல், பலூன் வெடித்தல்
சிறியவர் முதல் பெரியவர் வரை வந்திருந்த அனைவரும் போட்டிகளில் பங்கெடுத்தனர். அவர்கள்
அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் பிஎஸ்எம் கட்சியின் தேசிய துணைத்தலைவர் உரையாற்றினார். 60 ஆண்டுகளாக தோட்டத்தில் வசிக்கும் ஒரு தாய்.. தற்போது தான் ஓய்வு பெறப்போகும் வேளையில் இந்ததோட்டத்தை விட்டு நான் எங்கே போவது என்ற கேள்வியை அந்த நிகழ்ச்சியில் முன்வைத்தது தொடர்பாக அருட்செல்வம் உரையாற்றினார். இம்மதிரியான உரிமை போராட்டத்தை தோட்ட பாட்டாளிகள் தொடர்ந்து சந்துத்து வரும் வேளையில் உரிமையை போராடிதான் பெற வேண்டும் என்று அருள் தனது உரையில் தெரிவித்தார். புக்கிட் செரக்கா தோட்டம், புக்கிட் பெருந்தோங் தோட்டம், நைகல் கார்டன் தோட்டம், மேரி தோட்டம் மற்றும் சுற்று வட்டார மக்கள் இந்தப் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment