Monday, October 17, 2022

உலக வறுமை ஒழிப்பு தினம் 2022

மலேசிய சோசலிசக் கட்சி பண்ணாட்டு ரீதியிலான உலக வறுமை ஒழிப்பு நாளை 17/10/2022 அன்று முன்னெடுத்தது


''உலக வறுமை ஒழிப்பு தினத்தை அனுசரிக்கும் அதே வேளையில், இன்னும் சில நாட்களிம் நாம் 15-வது தேசிய பொதுதேர்தலையும் சந்திக்க உள்ளோம். இதை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் பாமர மக்களின் கூட்டணியைச் (மார்ஹைன்) சேர்ந்த நாங்கள்,  அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் வேட்பாளர்களையும் பாமர மக்களின் நல்வாழ்வுக்காக  கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கையை வைக்கிறோம். 

மேலும், நாட்டில் வறுமையை ஒழிக்க சரியானதொரு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். 

கோவிட் காலக்கட்டத்தில் நாட்டு மக்களின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக பாதிக்கப்பட்டுள்ளது. M40 நிலையில் இருந்த மக்கள்  B40 நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். B40  நிலையில் இருந்த மக்களில் பெறும்பான்மையினர் B20 நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் சூழலை ஆராய வேண்டும். 

இன்னும் தெளிவாக சொல்லப்போனால் 5.6% இருந்த நாட்டின் ஏழ்மை விகிதாச்சாரம் 8.6% உயர்ந்துள்ளது. இந்த நிலையை கலைவதற்கும் பாமர மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கைகொடுக்க வேண்டும்.'' பாமர மக்களின் கூட்டணி கேட்டுக்கொண்டது. 



No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...