Tuesday, November 8, 2022

தோழர் தினா உடனடியாக புகார் அளித்தார்

ரெம்பாவ்  பொதுச் சந்தையில்  பொதுக் கழிப்பறை பழுது,

தோழர் தினா  உடனடியாக  புகார் அளித்தார் (9 நவம்பர் 2022 )



இன்று காலை Rembau பொதுச் சந்தைக்கு மக்களைச் சந்திக்க சென்ற Rembau பாராளுமன்ற வேட்பளரான தோழர் தினா, அங்கு உள்ள பொதுக் கழிவறையில் தண்ணீர் ஓடாமல் தேங்கி இருந்ததுடன், அக்கழிப்பறை  பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள், புகார்  தெரிவித்தபோது போது அவர் அதிர்ச்சியடைந்தார். 

இன்று காலை அப்பகுதியில்,  அங்குள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் வணிகர்களை சந்திக்க   நடைபயணம் மேற்கொண்டபோது திடீரென ஒரு வியாபாரி, தோழர் தினாவை  அழைத்தார். ஒரு மாதமாகியும் அதிகாரிகள் சரி செய்யாமல் கைவிடப்பட்டிருக்கும் கழிவறையின் மோசமான நிலையைப் காட்டுவதற்காக அந்த  வியாபாரி தோழர் தினகரனை அழைத்தார், 



தோழர் தினா நிலையை கண்டறிந்து  உடனடியாகச் செயல்பட்டு, புகார் அளிக்க தனது குழுவுடன் ரெம்பாவ் மாவட்ட மாநகர மன்றத்திற்கு  விரைந்தார். அதிகாரி Faez என்பவரிடம் அது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக, அவர்களிடத்தில்  குறைவான பணியாளர்களே  இருப்பதாகவும், ஆனால் அங்கு ஏற்பட்டுள்ள பிரசனையை கையாள  ஆட்களை ஏற்பாடு செய்ய முயற்சிப் படும்  என்றும் அங்கு கூறப்பட்டது. சம்பந்தப்படட இடத்தில் மறுசீரமைப்பு பணிகளை செய்யும் போது  தாமும் உடன்  இருக்க வேண்டும் என்பதற்காக, பொதுச் சந்தைக்கு கவுன்சில் எப்போது செல்லும் என்பதை தெரிவிக்குமாறு தோழர் தினா கேட்டுக் கொண்டார்.

ரெம்பாவ்  பொதுச் சந்தை அன்றாட பயன்பாட்டுக்கு தேவையான ஒரு அடிப்படை வசதி, சீரான பராமரிப்பின்றி இப்படி புறக்கணிக்கப்படுவது மிகவும் வருத்தமாக உள்ளது என்று பி.எஸ்.எம் கவலை தெரிவித்து.  

Meja Media Bilik Gerakan PSM P131 Parlimen Rembau 12.30PM


No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...