நாட்டின் KDNK கணக்கின் ஏற்ப குடும்பங்கள் வைத்திருக்கும் கடன் சுமார் 93.3% என உயர்ந்துள்ளதாக மலேசிய மத்திய வங்கி (Bank Negara Malaysia) தனது மாத அறிக்கையில் வெளியிட்டுள்ளது. பட்டதாரிகளின் சம்பளம் RM2000-RM2500 இருந்து இப்பொழுது ஏறத்தாழ RM1500 இறங்கி உள்ள இந்நிலையில் அரசாங்கம் மௌனம் காத்து வருவது வருத்தம் அடைய செய்கிறது.
2. இந்நிலை வருவதற்கான காரணம் Covid-19 பெருந்தொற்று மட்டுமே காரணம் ஆகி விட முடியாது என்பதே எங்கள் கருத்து. மாறாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் தனியார் மயமாக்குதல் மற்றும் பெரும் முதலாளிகளுக்கும் வங்கிகளுக்கும் பெரும் இலாபத்தை ஈட்டி தர செய்யும் செயல் திட்டங்களே இன்று பொருளாதாரம் நலிவு அடைந்ததற்கான காரணங்கள் என்பதே எங்களது பார்வை.
4. அரசாங்கம் மக்களுக்கு குறிப்பாக B40 குடும்பங்களுக்கும் தனி நபர்களுக்கும் கடன் செலுத்துவதில் கட்டாய ஒத்திவைப்பைப் பிரகடனம் படுத்த வேண்டும். இந்த செயல் திட்டம் பொருளாதார மந்த நிலையில் ஏழை மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த செயல் திட்டத்தின் மூலம் மக்களின் கையிருப்பில் அதிகம் பணம் இருப்பதால் உணவு, சுகாதாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள ஏதுவாக இருக்கும். சிறு தொழில் மற்றும் உள்ளூர் பொருளாதாரமும் வீழ்ச்சி அடையாமல் பார்த்து கொள்ளலாம். இந்த கடன் ஒத்திவைப்பை அரசாங்கம் ஏன் செயல் திட்டமாக அறிவிக்க தயங்குகிறது எனும் கேள்வி அனைவருக்கும் உண்டு. பொருளாதார மந்த நிலையிலும் வங்கிகள் தொடர்ந்து இலட்சம் இலட்சமாக இலாபம் ஈட்டும் இவ்வேளையில் இந்த செயல் திட்டம் வங்கிகளுக்கும் சுமையாக இருக்க போவது இல்லை என்பதே உண்மை.
6. வேலையை அரசாங்கம் எப்படி உருவாக்கலாம்?
நமது நாடு பசுமை தொழில்நுட்பத்தில் தொடர்ந்து பின் தங்கி வருகிறது. தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளுக்கும் மேம்படுத்துதலுக்கும் அரசாங்கம் செலவிடலாம். மேம்படுத்துவதன் வழியாக உற்பத்திக்கு தொழிற்சாலைகள் திறக்கலாம். அதனைப் பயன் படுத்தும் இடங்களில் பராமரிப்பு பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படும். இதனைத் தவிர்த்து, சமூக சேவகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நாட்டில் நிலவி வரும் பிரச்சனைகளை நேரில் சென்று தீர்த்து வைக்கவும் ஆவணப்படுத்தும் வேலைகளுக்கும் இங்கு பெரிய தேவை இருகின்றது. நாட்டின் சுகாதார துறைகளிலும் கல்வி துறைகளிலும் அதிகமானவர்களை வேலையில் சேர்ப்பது. இவ்வாறான புதிய சிந்தனைகளுடன் வேலையில்லா திண்டாட்டத்தை அணுகினால் மட்டுமே தீர்வை நோக்கி பயணம் செய்ய முடியும். இந்த அரசாங்க உத்தரவாத வேலை திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு குடுப்பது மட்டும் அல்லாமல் சம்பளம் குறைவாக குடுத்து மக்களின் உழைப்பைச் சுருண்டும் முதலாளிகளுக்கும் நெருக்கடி குடுக்கும். தனியார் நிறுவனங்களும் தரமான வேலையை நல்ல சம்பளத்துடன் உருவாக்கி குடுப்பார்கள் வேறு வழி இல்லாமல்.
மாற்றியமைக்கப்பட்ட உலகளாவிய வருமான திட்டத்தை செயல் படுத்துமாறு பி. எஸ். எம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. வேலை இழப்பு மக்களின் தவறு கிடையாது. இதற்காக யாரும் பசியில் வாடும் நிலமை ஏற்பட கூடாது. வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வேளையில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் குறிபிட்ட தொகையை மக்களுக்கு குடுக்கலாம்.
8. Perikatan அரசாங்கத்தின் அலட்சிய போக்கை பி. எஸ். எம் இளைஞர் அணி கண்டிக்கிறது. சம்பளத்தைப் பார்க்காமல் வேலை இருந்தாலே போதும் என்ற அறிவுரை இலட்சக்கணக்கில் சம்பாரிக்கும் அரசியல்வாதிகள் தொடர்ந்து அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே போராடும் மக்களுக்கு அறிவுரை கூறுவது அரசியல் பலத்துடன் வரும் ஆணவத்தின் வெளிப்பாடே.
தொடர்ந்து நாம் அன்னிய முதலீடுகளை நம்பி வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொண்டிருந்தால் வேலையில்லாத் திண்டாட்டத்தை அழிக்க முடியாது. ஊக்குவிப்பு தொகை, வரி விலக்கு முதலாளிகளின் பையில் பணம் சேருவதற்கு ஏனோ இலகுவாக இருக்கலாம், ஆனால் மக்களுக்கு நல்லதாக ஒன்றும் தெரியவில்லை. புதிய அணுகுமுறை இல்லாவிடில் இந்த பிரச்சினைக்குத் தீர்வு இல்லை!
,
– காந்திபன் நந்தகோபாலன்பி. எஸ். எம் இளைஞர் அணி செயலாளர்.
-
No comments:
Post a Comment