இன மற்றும்
தேசியவாதக் கதைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பல்வேறு நெருக்கடிகள், அதோடு அடக்குமுறை ஏற்படுத்தும் அரசாங்கத்தால் பல தடைகள் சோசலிசக் கட்சியை நோக்கி எறியப்பட்ட போதிலும், பி.எஸ்.எம் அத்தடைகளைத் தாண்டி வர்க்க வேறுபாடுகளை முன்னணியில் வைக்கும் பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது.
INS செய்தி
நிறுவனத்துடனான நேர்காணலில் பேசிய
பி.எஸ்.எம்
கட்சியின் பொதுச்செயலாளர் சிவராஜன்
சோசலிச தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்கான சவால்கள் அச்சுறுத்தலாக இருந்தாலும், கட்சி அதன் பாதையில் இருந்து ஒருபோதும் விலகாது. மில்லியன் கணக்கான உரிமையற்ற மலேசியர்கள் இன அடிப்படையிலான
அரசியலிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்ற வலுவான விருப்பத்துடன் இருக்கிறார்கள். ஊழல் அற்ற அரசியல், பரஸ்பர மரியாதை மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் ஒரு தேசத்தை நாம் உருவாக்க வேண்டும். பி.எஸ்.எம் பல தசாப்தங்களாக அத்தயாரிப்பில்தான் இருக்கிறது.
(INS இணைய செய்தி
நிறுவனம் மற்றும்
தோழர் சிவராஜனுடனான நேர்காணலிலிருந்து…)
INS: மலேசியா இடதுசாரி பொதுடைமை அரசியல் இயக்கங்களின்
நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. மலேசியாவில் இடதுசாரி அரசியல் சித்தாந்தத்தின் வரலாறு
இன்று எங்களுக்கு அறிமுகமாகியுள்ள PSM-யின் மீட்சியை எவ்வாறு அமைத்துக்கொண்டது என்ற
சுருக்கமான வரலாற்று பார்வையை பகிர்ந்து கொள்ளுங்கள்.
Sivarajan A: நம் நாட்டை பொருத்தமட்டில் இடதுசாரி இயக்கங்கள்
என்றவுடன் சில அரசியல் சார்புடையவர்கள் சொல்வதைப் போல பலவாறான புனைவு வரலாறுகள் வளமாக
கூறப்பட்டிருக்கும். ஆனால் நிதர்சனத்தில் அவ்வாறு இல்லை. இன்னும் சொல்லப்போனால் மலேசியாவில்
(அன்றைய மலாயாவில்) ஆரம்பகால அரசியல் இயக்கங்களில் ஒன்றாகவும் முதன்மையான இடதுச்சாரி
கட்சியாகவும் 1930-இல் நிறுவப்பட்ட மலாயா கம்யூனிஸ்ட் கட்சி (MCP) விளங்கியது.
அதே காலகட்டங்களில் தான் உள்ளூர் மக்கள் அனைவரும் இந்தோனேசிய
கம்யூனிஸ்ட் கட்சியின் (ICP) எழுச்சியால் ஈர்க்கப்பட்டு, அதே வழியில் ஒரு தேசியவாத
போராட்டத்தை வளர்க்க முயன்றனர். இதன் நீட்சியாக 1938-இல் இப்ராஹிம் யாக்கோப் மற்றும்
ஈஷாக் ஹாஜி முஹம்மத்தின் கூட்டு முயற்சியால் இளம் மலாய்காரர்கள் கூட்டமைப்பு
(Kesatuan Melayu Muda) தோற்றுவிக்கப்பட்டது. இதுவே இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய
பெரிய இடதுச்சாரி தேசியவாத இயக்கமாக விளங்கியது.
பின்னாளில், போரும் காலனித்துவத்தின் முடிவும் நாட்டில் அரசியல்
சித்தாந்தங்களையும் இயக்கங்களையும் வினையூக்கியது. இது API, BATAS, AWAS, MATA போன்ற
சில முக்கியமான இயக்கங்களுடன் மலாயாவில் இடதுசாரி பொதுவுடைமை சார்பு கொண்ட இன்னப்பிற
அரசியல் இயக்கங்களின் முழுப் பெருக்கத்தைக் கண்டது. மலாய்க்காரர் அல்லாத இடதுசாரி அரசியல்
சித்தாந்தகளுடன் கைகோர்த்ததின் பலனாக பான்
மலாயன் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (Pan Malayan Federation of Trades
Union), மலாயன் ஜனநாயக ஒன்றியம் (Malayan Democratic Union) போன்ற மாபெரும் சக்திகள்
உருப்பெற்றன.
அப்போதைய மலாயாவின் காலனித்துவ எஜமானர்களாக இருந்த ஆங்கிலேயர்கள்,
உண்மையிலேயே பல இனக் கூட்டணி மக்கள் அரசியலமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இடது
PUTERA-AMCJA கூட்டணியை புறக்கணித்து, மலாய் தீவிர தேசியவாதிகள் மற்றும் அரச சார்புடையவர்களுடன்
ஒரு ஒப்பந்தம் செய்து சுதந்திரத்தை அவர்களின் கைகளில் ஒப்படைத்தனர். எனவே புதிய சுதந்திர
நாட்டில் பல தசாப்தங்களாக தங்கள் நலன்களைப் பாதுகாக்கின்ற பிரித்து ஆட்சி செய்யும்
(divide-and-rule) கொள்கையை அவர்கள் மலாயாவில் காலணியத்துக்கு பின்பும் தொடர செய்தனர்.
இதனால் மலாயா இடதுசாரி வழியில் தொடர்ந்து செல்ல தவறவிட்டது.
இந்தக் கொள்கையுடன் இணைந்து, ஆங்கிலேயர்கள் 1948 முதல் 1960
வரை மலாயா கம்யூனிஸ்ட் கட்சி (Malayan Communist Party)-க்கு எதிராக "மலாயன் எமர்ஜென்சி"
என்ற பெயரில் ஆயுத மோதலில் ஈடுபட்டனர். இது ஒரு அறிவிக்கப்படாத போராக இருந்தபோதிலும்
பிரிட்டிஷாரும் அவர்களது உள்ளூர் நேச சக்திகளும் போரின் போது காப்பீட்டாளர்கள் பணம்
செலுத்த மறுத்ததால் இதனை போர் என்று வகைப்படுத்த மறுத்தனர்.
எமர்ஜென்சிக்கு பிந்தைய காலக்கட்டத்தில் உள்ளூர் அரசாங்கம்,
முதலில் பெரிகாத்தான் நேஷனல் பின்னர் பாரிசான் நேஷனல் (BN), என இன அரசியலில் கட்டமைக்கப்பட்ட
இரண்டு அரசியல் கூட்டணிகளும் மாறி மாறி இடதுசாரி இயக்கங்களை ஒடுக்குவதைத் தொடர்ந்தன.
மேலும் மாற்று அரசியல் கட்டமைப்புகளின் அனைத்து கூறுகளையும் அகற்றும் விதமாக வரலாற்றை
மீண்டும் எழுதுவதைத் தொடர்ந்தது இன்னும் மோசமாக இருந்தது.
ஆனால், மலாயா/மலேசியா மக்கள் மாற்று அரசியல் கட்டமைப்பு என்ற எண்ணத்தை விடவில்லை. பல்வேறு இடதுசாரிகள் சிவில் சமூக அமைப்பு(CSOs)களாகவும், ஆர்வலர்களாகவும், செயல்பாட்டாளர்களாகவும், பொதுவுடைமை ஒளியை முழுவதுமாக அணைந்துவிடாமல் பாதுகாத்தனர். இறுதியாக 1990-களில் பனிப்போர் முடிவுக்கு வந்தபோது, இந்த பல்வேறு அமைப்புகளும் தனிநபர்களும் தங்களை PSM-ஆக மறுசீரமைத்துக் கொண்டனர்.
இத்தகைய அரசியல் நிறுவனம் அவர்களுக்கு இணையான பலம் படைத்த எதிர்
சித்தாந்த வைரிகளுக்கு எளிதாக வழிவிடவில்லை. அவர்களின் காலனித்துவ எஜமானர்களிடமிருந்து
பெறப்பட்ட பிரித்தாளும் கட்டமைப்புக்கு எதிரான சோசலிசத்தின் சக்தி வாய்ந்த ஒருங்கிணைக்கும்
சித்தாந்ததை அங்கீகரிப்பதில் தயக்கம் காட்டினர். இதனால், பி.எஸ்.எம் (PSM)-ஐ பதிவு
செய்து ஒப்புதல் பெறுதல் வரை (1998-2008) ஒரு முழு தசாப்தமே எடுத்தது. ஆனால் இறுதியில்
அரசியல் அங்கீகாரத்தையும் கருத்தியலை வெளிப்படையாக பேசும் உரிமையைப் பெறவும் நமது நிலையான
மற்றும் அர்ப்பணிப்பு உந்துதலால் பி.எஸ்.எம் (PSM) அங்கீகரிக்கப்பட்டது.
புதிய
சகாப்தத்திற்கான புதிய வழித்தடம்…
INS: BN, PH மற்றும் PN அரசியல்வாதிகளின் தற்போதைய நிலைப்பாடுகளுக்கு எதிராக, பல மலேசியர்கள் குறிப்பாக இளைய வாக்காளர்களின் ஏமாற்றத்தையும் அதிருப்தியும் கருத்தில் கொண்டு, பி.எஸ்.எம்
இதை எவ்வாறு பயன்படுத்தி வாக்குகளாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?
ஆ.சிவராஜன்: சோசலிச மற்றும் கம்யூனிசத்திற்கு எதிரான BN பிரச்சாரத்தின் கொள்கைகளை இளைய
தலைமுறையினர் சுமப்பதில்லை. ஆனால் இதைச் சொல்லும் நேரத்தில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற
மலேசியர்கள் எவ்வாறு சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் உணர்கிறார்கள் என்பதற்கும் இடையே
இன்னும் வேறுபாடு உள்ளது.
எனவே
இந்த முற்போக்கு சிந்தனைகள் மற்றும் கொள்கைகளை
21- ஆம்
நூற்றாண்டின் சோசலிச சிந்தனைகளாக நாம் தொகுக்க வேண்டும். ஆனால் இதன் முதல் பணி வாக்காளர்களை, குறிப்பாக 18-21 வயதுக்குட்பட்ட வாக்காளர்களை, அவர்களின் அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். அது கட்சியின் சின்னம் மற்றும் அதன் சொல்லாட்சியின் அடிப்படையில் இருக்ககூடாது.
2008, 2013 அல்லது 2018 பொதுத் தேர்தல்களுடன் ஒப்பிடும்போது நாங்கள் மேற்கொள்ளும் இந்தப் பணி இப்போது மிகவும் சாத்தியமானதாகத் தெரிகிறது, ஏனெனில் இரண்டு அரசியல் பிளவுகளிலிருந்தும் முதலாளித்துவ அரசியல்வாதிகள் மக்களுக்கு என்ன வழங்குகிறார்கள் என்பதை மக்கள் அனுபவித்திருக்கிறார்கள். மலேசிய சமூகம் (மக்கள்) BN –PN மற்றும் அவர்களது கூட்டணிகளின் குணாதிசயங்களை நன்கு அறிந்திருக்கிறார்கள், அவை அனைத்தும் ஒரே மாதிரியாக பிளவுபடுத்தும் இன மற்றும் நவ-தாராளவாத கொள்கை நிரலுடன் ஆட்சி செய்கின்றன.
பக்காத்தான் ஹராப்பான் (PH) அதன் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலையும் ஒரு கேலிக்கூத்தாகதான் அம்பலப்படுத்தியுள்ளது. அவற்றின் மூலதன சார்பு, முதலீட்டு உந்துதல் மற்றும் வணிக-நட்பு நிர்வாகத்தின் காரணமாக,
PH கோட்டையான பினாங்கு மற்றும் சிலாங்கூர் ஆகிய இரண்டு மாநிலங்கள் 2008 முதல் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டு வருகின்றன. பல சமயங்களில் அவர்களின் சீர்திருத்தக் கொள்கைகள் மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகிறது. பினாங்கு கடல் மீட்புத் திட்டம், சிலாங்கூர் வடக்கு கோலா லங்காட் வனப் பகுதி அழிப்பு போன்ற சமீபகாலமாக சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
எனவே
இரண்டு எதிரெதிர் முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கு இடையில் நமது கருத்தியல் மாற்றத்தை முன் வைப்பதே சவாலாக உள்ளது. அனைத்து விஷயங்களிலும் மக்களின் நலன்களை உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், பெருவணிகங்களைக் கண்காணிப்பதற்கும் ஒரு புதிய 3-வது முற்போக்கு இடது தொகுதிக்கான அவசரத் தேவை இருக்கிறது என்ற கருத்தியலை நாம் உருவாக்க வேண்டும்.
எனவே
சீர்திருத்தம் மற்றும் உறுதியான கொள்கைகளை நோக்கிய மலேசியாவிற்கு ஒரு புதிய இடதுசாரி சிந்தனைக்கொண்ட ஒப்பந்தத்தை வழங்கும் ஒரு தீவிரமான பிரச்சாரத்துடன் இதைச் செய்ய நாங்கள் உத்தேசித்துள்ளோம். மக்களை அவை திறம்பட சென்றடைய முடிந்தால், நல்ல கொள்கைகளை உருவாக்குவதற்கு சோசலிசவாதிகள் பங்களிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ள தொகுதிகளில் அவர்களுக்கு வாக்குகளை வழங்குவதை இலக்காகக் கொள்ளலாம்.
INS:
வரவிருக்கும் 15-வது பொதுதேர்தலில் சுயேச்சைகள், சிவில் சமூகம் மற்றும் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, சோசலிஸ்டுகள் தலைமையிலான மூன்றாவது சக்தியின் மையத்தை பி.எஸ்.எம்-
கட்சியினால் உருவாக்க முடியுமா?
ஆ.சிவராஜன்: ஆம், பேச்சு நடந்து கொண்டிருக்கிறது. பிஎஸ்எம் கடந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள பல CSO-க்கள் மற்றும் பிற குழுக்களுடன் சந்திப்புகளைத் தொடங்கி நடத்திவருகிறது. 15-வது பொதுதேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு இந்த CSO-க்களுக்கு பி.எஸ்.எம்-முடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் பலரிடையே உள்ளது. என்றபோதிலும் இன்னும் அதற்கான அடித்தளம் அமைக்கப்படவில்லை. ஆனால், மூன்றாம் படை அரசியல் கூட்டணிக்கான மாற்று திட்டம் பலமுறை முயற்சி செய்யப்பட்டுள்ளது.
2014-ல், 13-வது பொதுதேர்தலுக்குப் பிறகு, இடதுசாரிக் கூட்டணி எனப்படும் முற்போக்கான இடதுசாரிக் கூட்டணியைத் தொடங்கினோம். அது இடதுசாரி கட்சிகள் மற்றும் முற்போக்கு நபர்களின் கலவையாக இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கூட்டணியை ஒழுங்கமைக்கப்பட்டபோது அதில் ஒரே அரசியல் கட்சியாக இருந்தது பி.எஸ்.எம் மட்டுமே. மற்றவர்கள் தங்கள் தனிப்பட்ட திறனில் பங்கேற்கிறார்கள் அல்லது அவர்கள் வெறும் NGI மற்றும் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்களாக இல்லை. எனவே இந்த முயற்சி 14-வது பொதுதேர்தலுக்கான நம்பகமான மூன்றாம் படை அரசியல் கூட்டணியை உருவாக்கத் தவறிவிட்டது.
ஒரு
முற்போக்கான கூட்டணியை உருவாக்கும் யோசனைக்கு நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். ஆனால் நியாயமான ஆதரவுடன் வலுவான அமைப்பாக வர எங்களுக்கு தீவிரமாக செயற்படும் தோழர்கள் தேவை. ஆனால் உண்மையில், இந்த யோசனைக்கு ஆர்வமுள்ள பல நல்ல ஆர்வலர்கள் உள்ளனர், என்றாலும் அவர்களுக்கு அமைப்பு
மற்றும் வெகுஜன ஆதரவுகள் இல்லை. 3 -வது நம்பகமான அரசியல் சக்தியாக நம்மை முன்னிறுத்துவதற்கு, நாம் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டப் பேரவையில் பல இடங்களில் போட்டியிடும் கட்சிகளின் கூட்டணியாக இருக்க வேண்டும். இல்லையேல் மக்கள் நம்மை வீணடிக்கும் சுயேட்சை வேட்பாளர்களாகத்தான் பார்ப்பார்கள்.
கடந்த 14-வது பொதுதேர்தலின் போது, CSOக்கள் மற்றும் பிற குழுக்கள் பக்காத்தான் ஹரப்பானை (PH) முழுமையாக ஆதரித்து, பி.எஸ்.எம் கட்சியாக
தனித்தனியாக தனித்து போட்டியிட்ட
எங்களை கேலி செய்தனர். இப்போது PH -இன் உண்மையான நிறங்களைப் பார்த்த பிறகு, CSO-க்கள் மாற்று மூன்றாவது சக்தியை உருவாக்க தங்களை அர்ப்பணிக்கும் என்று நம்புகிறோம். பி.எஸ்.எம், PH இல் கூட்டணி சேராது என்று திட்டவட்டமான முடிவில்
இருக்கிறோம். அரசியலில்
மாற்றங்களை உருவாக்குவதில் தீவிரமாக இருப்பவர்கள், பி.எஸ்.எம்-உடன்தான் இணைய வேண்டுமே
தவிர மீண்டும்-மீண்டும் PH-ஐ நம்பி ஆதரிக்ககூடாது. அவர்கள் உறுதியுடன் எங்களுடன் (PSM) இணைவார்கள் என்று நம்புகிறோம்.
INS: மத்திய அரசாங்கத்தை அமைப்பதில்
PSM வெற்றிபெற்றால் PSM கொண்டு வரக்கூடிய சில முக்கிய கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் யாவை?
ஆ.சிவராஜன்: எங்களின் முக்கிய கவனம் சீர்திருத்தத்தில் மட்டுமல்ல, மாற்றங்களை கட்டமைப்பது உள்ளிட்ட பலதில் உள்ளன,
சிலவற்றை பட்டியலிடுகிறேன்…
-சீர்திருத்தத்தின் முக்கிய பகுதிகள் - உழைக்கும் மக்களுக்கு, வீட்டுடமை, சுகாதாரம், கல்வி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறுமை ஒழிப்பு.
- வேலைவாய்ப்பு சட்டத்தில் திருத்தங்கள், தொழில்உறவு சட்டம்
மற்றும் தொழிற்சங்க அமைப்பு சட்டம் ஆகியவை தொழிலாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதை உறுதி
செய்ய வேண்டும். தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளியின் உழைப்பைச் சுரண்டும் முதலாளிகளுக்கு
எதிராக அமலாக்கத்தை அதிகரித்தல்.
- மக்களுக்கான
வீடுகள், மலிவு விலையில் வீடுகள் வழங்குவதற்கான அரசாங்கத்தின் பங்கை மீண்டும் தொடங்குதல்.
அரசாங்கம் B40க்கான வீட்டு வசதியை செயல்படுத்த வேண்டும் மற்றும் மேம்பாட்டாளர்களை நம்பி
இருக்கக்கூடாது. வாடகைக்கும் விற்பனைக்கும் PPR வீடுகளை மேம்படுத்துதல்.
- பொது சுகாதாரப்
பாதுகாப்பை வலுப்படுத்துதல், அதிக பொது மருத்துவமனைகளை உருவாக்குதல் மற்றும் பொது மருத்துவமனைகளின்
மருத்துவர்கள் தனியார் துறைக்குச் செல்லுவதை நிறுத்தப்படுதல். புதிய தனியார் மருத்துவமனைகள்
மற்றும் சுகாதார சுற்றுலா மீது தடை.
- அனைவருக்கும் முதற்பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி.
- வறுமையை நிவர்த்தி செய்வதற்கான இலக்கை அணுகுதல். வறுமைக் கோட்டின் கீழ் வாழும் ஏழைக் குடும்பங்களின் தரவுத்தளம் வரைதல். இந்தக் குடும்பங்களைச் சென்றடைய சமூக மற்றும் நலப் பணியாளர்களை அதிகக்படுத்துதல். கோவிட்-19 காரணமாக வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு நேரடி பண உதவி. எளிய பதிவு மற்றும் உதவி தேவைப்படும் அனைத்து ஏழைகளின் தரவுத்தளத்துடன் அனைவருக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட நலத்திட்டம் வழங்குதல்
-இன
வேறுபாடுகளின் இடைவெளியைக் குறைக்க சமூக உள்ளடக்கம் மற்றும் பாகுபாடு இல்லாத சட்டம்.
- உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துதல்; உள்ளூர் தொழில்களில் கவனம் செலுத்துதல், வேலைகள் மற்றும் பொருட்களை வழங்குவதற்கான திறமைகள் கண்டறிதல். வெளிநாட்டு முதலாளிகளின் வட்டியில்லாத முதலீட்டை திறம்பட கட்டுப்படுத்துதல்.மாநில வருவாயை அதிகரிக்க வெளிநாட்டு முதலாளிகளின்
மீது வரி விதித்தல்.
- செல்வாக்கு
உள்ள செல்வந்தர்களின் சொத்து வரி மற்றும் பரம்பரை வரியை அறிமுகப்படுத்துதல்
- இளைஞர்கள்
மற்றும் வேலையற்றோருக்கான வேலை உறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்துதல். முக்கிய முதலாளியாக
அரசாங்கமே இருத்தல்.
- வன காப்பகங்களில்
மரம் வெட்டுதல் மற்றும் சுரங்க உரிமங்கள் மீதான தடை.
INS: பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதற்கு கட்சி மேற்கொள்ள வேண்டிய சில முயற்சிகள் என்ன மற்றும் கட்சியின் முக்கிய வாக்காளர்கள் யார்?
ஆ.சிவராஜன்: நாங்கள் தேர்ந்தெடுத்திருப்பது இரண்டு தரப்பு மக்களை. ஒன்று அடிமட்ட களப்பணி மூலமாகவும் மற்றொன்று நமது தேசிய பிரச்சாரங்கள் மற்றும் செயல்பாட்டின் மூலமாகவும். கட்சியினால் அமைக்கப்பட்ட அடிமட்ட இயக்கம் ‘MARHAIN’ (பாமர மக்களுக்கான
ஒருங்கிணைப்பு குழு) என்று அழைக்கப்படுகிறது. இது தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், விவசாயிகள், கால்நடை விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தோட்டத் தொழிலாளர்கள், நகர்ப்புற குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள நகர்ப்புற ஏழைகள், பழங்குடியினர் போன்றவர்களுக்காக செயல்படுகிறது. இந்த அமைப்பு இன்னும் தொடக்க கட்டத்தில்தான் உள்ளது.
எல்லா மாநிலங்களிலும் இந்த அமைப்பை இன்னும் நிறுவவில்லை.
மேலும் தேசிய அரசியல் மற்றும் சமூக-பொருளாதாரப் பிரச்சினைகளில் நாம் எடுக்கும் பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் நிலைப்பாடுகள் மூலம் பெரும்பான்மை மக்களை எங்கள் இலக்கு சென்றடைந்துள்ளது. இதை தொடர்ந்து,காலநிலை மாற்றம், பழங்குடி மக்களுக்கு ஆதரவு மாற்று பாலினத்தவர்களின் மீதான தாக்குதல்களுக்கு குரல் கொடுத்தல்
பேச்சுரிமை மற்றும் ஒன்றுகூடல் சுதந்திரம் மற்றும் அரசாங்கத்தின் புதிய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான பிற முயற்சிகள் போன்ற எங்களின் தேசிய பிரச்சாரங்கள் மூலம் பலர் எங்களுடன் இணைந்துள்ளனர்.
No comments:
Post a Comment