Tuesday, January 11, 2022

பி.எஸ்.எம்-கட்சியின் பொங்கல் வாழ்த்துகள் 2022


மலேசியாவின் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மலேசிய சோசலிசக் கட்சி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. நீடித்திருக்கும் கொரானா எனும் நோய் தொற்றிலிருந்து இன்னும் மீளாத நிலையில் தற்போது வெள்ளப் போரிடரின் தாக்கத்தையும் சந்தித்திருக்கிறோம். மிக சவாலான காலக்கட்டத்தில் மனதை ஆசுவாசப்படுத்த உழைக்கும் மக்களின் முக்கியத் திருநாளான பொங்கலை வரவேற்க்கிறோம்.

தோழர்களே…

கடந்த 50 ஆண்டுகளில் மலேசியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP அல்லது KDNK) ரிங்கிட்டின் மதிப்பில் கணக்கெடுப்பு செய்கையில் 24 மடங்கு அதிகரித்துள்ளது. (அதாவது பணவீக்கத்தின் விளைவுகளையும்  கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகு). ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்தச் செல்வத்தை உருவாக்க கடினமாக உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுடன் நாட்டின் செல்வம் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.

விவசாயிகள் மற்றும் கால்நடை-பண்ணை விவசாயிகள்தான்  நம் அனைவருக்கும் உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்கிறார்கள். ஆனால் நமது விவசாயிகளில் பெரும் பகுதியினர் துன்பத்தில் வாழ்கின்றனர். அவர்களால் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விற்பனை விலைகள் குறைந்த மட்டத்தில் உள்ளன, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலை உயர்ந்து வருகிறது, மேலும் அவர்களில் சிலர்  ",மேம்பாட்டுத் திட்டங்களின்" அடிப்படையில் தங்கள் பண்ணைகளில் இருந்து வெளியேற்றத்தை எதிர்கொள்கின்றனர்.

நமக்கு உணவுப் பொருட்களை வழங்கும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து நாம் அனைவரும் அதிக உணர்வுடன் இருக்க வேண்டும். நாட்டின் செல்வம் அவர்களுக்கும் பகிரப்பட வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நியாயமான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

அனைவருக்கும் மீண்டும் எனது பொங்கல் வாழ்த்துகள்

டாக்டர். ஜெயகுமார் 

மலேசிய சோசலிசக்கட்சி தேசியத்தலைவர்


No comments:

Post a Comment

இனப்படுகொலைக்கு முடிவு கட்டுவோம்! பாலஸ்தீனுக்காக ஒன்றிணைவோம் !

தென்கிழக்கு ஆசிய இடதுசாரி அமைப்புகளின் கூட்டு அறிக்கை: (இந்த கூட்டு அறிக்கை தென்கிழக்கு ஆசிய இடது சாரி வலையமைப்பால் தொடங்கப்பட்டது, மேலும் த...