Monday, October 21, 2024

பட்ஜெட் 2025: சாதாரண மக்களுக்கு பெரும் ஏமாற்றமே...

பட்ஜெட் 2025 தாக்கல், சாதாரண மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?!


டந்த வெள்ளியன்று, நாட்டின் நிதி அமைச்சராகவும் பிரதமராகவும் பதவி வகிக்கும் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த 2025 பட்ஜெட், முதலாளித்துவ மடானி அரசாங்கத்தின் தன்மையை பிரதிபலிக்கிறது. அவர் பயன்படுத்திய மர்ஹான் தொடர்பான பேச்சு இந்த அரசாங்கத்தின் கொள்கைகளாக இல்லை. மாறாக சாதாரண மக்களை அடிமைப்படுத்தவும், செல்வந்தர்களை மேலும் வளப்படுத்தவும் மட்டுமே தொடரக்கூடியதாக இருக்கிறது. மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) சேர்ந்த நாங்கள்,  இந்த வரவு செலவுத் திட்டம் குறித்து  எங்களின் கருத்துக்களை பின்வருமாறு சுருக்கமாகக் கூற கடமைபட்டுள்ளோம்.

 1. தனியார் துறையின் மேன்மை மற்றும் தீவிரமடையும் தனியார்மயமாக்குதலின் திட்டம்

இந்த பட்ஜெட், மடானி அரசாங்கத்தை ஒரு முதலாளித்துவ முகவராக அம்பலப்படுத்துகிறது. முதலாவதாக, இந்த அரசாங்கம் வேலை வாய்ப்புகளுக்காக Public-Private Partnership (PPP) மூலம் தனியார் துறையை பெரிதும் நம்பியுள்ளது. அவ்வகையில் வேலை வாய்ப்புக்காக தனியார் நிறுவனங்களைச் சார்ந்திருப்பது தெள்ளத் தெளிவாகிறது.

மலேசியத் தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் வசதிகள் மிகக் குறைவாக இருப்பதற்கு முக்கியக் காரணம் தனியார் உடைமை. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அதிகரிப்புக்கு,  பொருத்தமில்லாத ஊதிய உயர்வுடன் இதைக் காணலாம். 1970-ல் இருந்து தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் சராசரி ஊதியம் 1.4 மடங்கு மட்டுமே அதிகரித்துள்ளது. அதே சமயம் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24 மடங்கு அதிகரித்துள்ளது. தொழிலாளர்களின் வியர்வையிலிருந்து உற்பத்தியாகும் செல்வம், முதலாளிகளால் கைப்பற்றப்பட்டு முதலாளித்துவ கைகளில் சேகரிக்கப்படுவதை இது காட்டுகிறது. அது மட்டுமின்றி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இப்போது தனியார் துறையை நம்பியிருப்பதால், அவர்களுக்கு எதிராக வரிகளை உயர்த்துவதும் கடினமாக உள்ளது.

அதனால்தான் 1970ல் 40% ஆக இருந்த கார்ப்பரேட் வரி விகிதம் தற்போது 24% ஆகக் குறைந்துள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பெரும் பணக்காரர்கள் நமது தொழிலாளர்களின் முயற்சியின் பலனைத் தின்று, குறைந்த ஊதியத்தைதான் அதற்கு ஈடாக கொடுக்கிறார்கள்; தற்போதுள்ள தொழிலாளர் அமைப்பு முறையால், இந்தத் செல்வத்தை முற்போக்கான வரிவிதிப்பு மூலம் திரும்பப் பெற்று ஏழை மக்களுக்கு மறுபகிர்வு செய்யவும் முடியாது.

இப்படி ஒரு முறையை வைத்து, தொடர்ந்து இந்த சார்புநிலையை அதிகரிப்பது நியாயமா? மேலும், "பணம் செலுத்தும் பயனர்" உறுப்பை கணக்கில் எடுத்துக்கொண்டு அதன்படி பார்த்தால் நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு பொது-தனியார் கூட்டாண்மையும் அடிப்படை என்பது புரியும். அரசின் பொறுப்பில் இருக்க வேண்டிய பொது வசதிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது. இது பின்கதவு தனியார் தனியார்மயமாக்கலாகும் (backdoor privatisation).

பொருளாதாரத்தில் தனியார் துறையின் அதிகாரத்தை குறைக்க அரசு துணிந்து செயல்பட வேண்டும். தனியாருக்கு எதிராக, வேலை வாய்ப்புகளை அரசின் வேலை உறுதித் திட்டத்தின் மூலம் உருவாக்க வேண்டும். ஒரு முதலாளியாகவே அரசாங்கமும் இருப்பதால், அதன் மூலம், தனியார் துறையின் செல்வாக்கை, ஒரு நிலைக்கு குறைக்க முடியும். மேலும், மேம்பாடு அல்லது வளர்ச்சித் திட்டங்களில் தனியார் துறையை நம்புவதற்குப் பதிலாக  பொது வசதிகளை உருவாக்குபவர் என்ற முறையில் அரசாங்கம் தனது பொறுப்பை ஏற்க வேண்டும்.

 


2. வீட்டுரிமையை புறக்கணித்துது  பொது மக்களின் கடனை அதிகரித்தல்

முந்தைய அரசாங்கங்களைப் போலவே, மடானி அரசாங்கமும் 2025 பட்ஜெட்டில் வீட்டுக் கடன்களுக்கான நடைமுறையை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம் காலாவதியான யோசனைகளைத்தான் பயன்படுத்தியிருக்கிறது. அதாவது வீட்டின் விலை மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதனூடான வீடுகளின் அடிப்படைப் பிரச்சினையை தீர்க்க முடியாது. உண்மையில், வீடுகளின் விலையை அதிகரிப்பது டெவலப்பர்களின் நம்பிக்கையை மட்டுமே அதிகரிக்கும், ஏனெனில் மக்கள் வீட்டுக்காக கடன் பெறுவது எளிது. அதனைத் தொடர்ந்து அதிக கடன் சுமையில் மக்கள் மூழ்கடிக்கப்படுகின்றனர்.  மற்ற அடிப்படைத் தேவைகளைப் போலவே வீடும் மக்களின் அடிப்படை உரிமையாகும். இருப்பினும், இது லாபம் ஈட்டுவதற்காக வாங்கி-விற்கும் மற்ற வியாபாரத்தை போன்றே ஒப்பிடப்படுகிறது. இதன் விளைவாக, இந்த லாப விகிதத்தை அதிகரிக்க வீடுகளின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. மக்களின் உணர்வுகளை மதிக்கும் அரசு இந்தப் பிரச்னையை பல்வேறு வழிகளில் தடுக்க நடவடிக்கை எடுக்கும். வீட்டுக்காக மக்கள் பெற்ற கடனை கட்டமுடியாமல், டெவலப்பர் அந்த வீட்டை விற்கும் நடவடிக்கை பற்றியெல்லாம் இந்த அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

 

அதிர்ஷ்டவசமாக, இந்த நெருக்கடியைக் கட்டுப்படுத்த PSM பல உத்திகளை முன்வைத்துள்ளது. அவற்றில், வாங்கும் முதல் வீட்டை சந்தையில் இருந்து அகற்ற வேண்டும். இலாப நோக்கற்ற ஒரு அமைப்பு, முழு அரசாங்க நிதியுதவியுடன் கட்டும் குறைந்த விலை வீடுகளை, தங்களிம் முதல் வீட்டை வாங்க விரும்பும் மலேசியர்களுக்கு விற்க வேண்டும். இந்த வீடுகளை முதலீட்டுப் பொருளாக வைத்திருமாமல்,  குடியிருப்புகளாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதோடு, சம்பந்தப்பட்ட வீட்டுக்கு அதிகாரம் கொண்டவர்கள் தவிர வேறு யாருக்கும் விற்க முடியாது என்ற நிபந்தனையுடன் இந்த வீடுகள் விற்கப்பட வேண்டும்.

இருப்பினும், முதல் 5 ஆண்டுகளுக்கு குறைந்த கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதிகளை வழங்கும் Step-Up Financing போன்ற திட்டங்களை மட்டுமே மடானி அரசு உருவாக்கியிருக்கிறது. ஆனால் அடுத்த 30 ஆண்டுகளில் வீடு வாங்கியவர்கள் கடனை அதிகமாக திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும், இதனால் டெவலப்பரின் லாபம் அதிகரிக்கும். அதைத்தவிர்த்து, விலையுயர்ந்த வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு சிறப்பு வரி, இரண்டாவது வீடு மற்றும் அதுமாதிரியான விவகாரங்களுக்கு முதன்மை நில மதிப்பு வரி மற்றும் முதன்மை சொத்து விற்பனையாளரின் மூலதன ஆதாயங்கள் ஆகியவை, மலிவு விலையில் வீடுகள் கட்டுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக்கொள்ளலாம். பகுதி அல்லது முழுமையாக ஆக்கிரமிக்கப்படாத சொத்துகள் மீதான வரி (under-occupancy and vacant tax)  வீட்டு ஊகங்களை குறைக்கலாம், இதனால் வீட்டு விலைகள் குறையும்.

3. தொழிலாளர்கள் மற்றும் சாதாரண மக்களின் நலனில் அக்கறை காட்டவில்லை

MADANI அரசாங்கம் குறைந்தபட்ச ஊதியத்தை மாதத்திற்கு RM1,500 லிருந்து RM1,700 ஆக உயர்த்தியது என்பதை நாம் இந்த பட்ஜெட்டின் வழி அறிவோம். இது தனியார் நிறுவனங்களுக்கு பிரதமரே கோரிய RM3,000 வெள்ளியை விட மிகக் குறைவு. தேசிய சம்பள ஆலோசனை மன்றத்தின் சூத்திரத்தின்படி, குறைந்தபட்ச சம்பளம் RM2,444 ஆக இருக்க வேண்டும்.  மேலும், 2018-ல் பேங்க் நெகாரா மலேசியா கூறியது, கோலாலம்பூரில் வசிக்கும் ஒரு தனி நபருக்கு கெளரவமான சம்பளம் RM2,700-ஆக இருக்க வேண்டும் என்று. அப்படிகூறி 6 ஆண்டுகள் முடிந்துவிட்டது.

PSM குறைந்தபட்ச ஊதியமாக RM2,000 கோருகிறது, மேலும் இந்த இலக்கை  அடையும் வரை குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க இந்த அரசாங்கத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். உண்மையில், குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஜனவரி 2025க்குள் 35 மாதங்கள் தாமதமாகும். ஒரு மலேசியத் தொழிலாளி  நிலுவையில் உள்ள தனது குறைந்தபட்ச ஊதியம் RM5,000 ரிங்கிட் சம்பளத்தை இழப்பார் (2025 இன் குறைந்தபட்ச ஊதியமான RM1,700 மாத ஊதியத்தின்படி கணக்கிடப்படுகிறது) - RM7 ,100 (2025 இன் குறைந்தபட்ச ஊதியமான RM2 ,000 மாதத்திற்கு கணக்கிடப்படுகிறது). இது நியாயமாக பார்க்கப்படுமா?

தனியார் துறையில் உள்ள பட்டதாரிகளுக்கு அதிக சம்பளம் வழங்குவதை ஊக்குவிக்க இந்த அரசாங்கம் ஆர்வமாக உள்ளது. அரசாங்கம், பட்டதாரிகளுக்கு தனியார் துறையினரின் பரிந்துரைக்காக சம்பள அளவுகோலை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இம்மாதிரியான விரைவு சட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் வற்புறுத்தலின்றி இந்த அளவுகோலை முதலாளிகள் பின்பற்றுவதன் நோக்கம் என்ன? இந்த பிரத்தியேக ஊதியக் கொள்கை, நிஜ உலகில் காலூன்றாத, உழைக்கும் வர்க்கத்தை அவமதிக்கும், மனத்தில் பிறந்த கனவு மட்டுமே.

மற்றொரு முட்டாள்தனமான கொள்கை, வயதான சமுதாயத்தை கையாள்வதற்கான ஒரு வழியாக EPF சேமிப்பை  தலைமுறைகளுக்கு இடையே மாற்றுவது. முதியோர் மற்றும் அவர்களது குழந்தைகளின் இபிஎஃப் கணக்கில் சேமிப்பு இல்லாததால், முதியோர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தைப் பெற PSM கடந்த 2 ஆண்டுகளாக, போராடி வருகிறது. தலைமுறைகளுக்கு இடையிலான பரிமாற்றங்கள் உண்மையில் முக்கியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக தனிநபர்களிடையே வறுமையின் வலியை மட்டுமே கூட்டுகின்றன.

மேற்கண்ட பகுப்பாய்விலிருந்து,  பணக்காரர்களின் கூட்டாளியாக இல்லாமல், உண்மையிலேயே மக்களுக்கான அரசாங்கமாக செயல்பட மடானி அரசாங்கத்தை பி.எஸ்.எம் கேட்டுக் கொள்கிறது. மலேசியாவில் உள்ள சாதாரண மக்களுக்கு விவேகம் மற்றும் பயனுள்ள கொள்கைகள் தேவை, மக்களின் கடினமான பிரச்சினைகளை வாக்குகளாக மாற்ற, அடிக்கடி தந்திரமாக துப்பிச் செல்லும் அரசியல்வாதிகளின் எச்சில் அல்ல. இதுபோன்ற கொள்கைகள் மடானி அரசாங்கத்தின் சிந்தனையில் இல்லை மாறாக எங்களைப் போன்ற மார்ஹேன் அமைப்புகளில் மட்டுமே இருப்பதாகவும் தெரிகிறது.  இங்குள்ள சாமானியர்கள் நெஞ்சில் கை வைத்து, அவர்களின் பசியை முன்னிறுத்தி கேட்க வேண்டும், உங்கள் ஆதரவைப் பெற யார் தகுதியானவர்?


- அரவிந்த் கதிர்ச்செல்வன்

மலேசிய சோசலிசக் கட்சி

மத்திய செயற்குழு உறுப்பினர்

(மொழிபெயர்ப்பு யோகி)

Friday, October 18, 2024

அரசு மருத்துவமனைகளில் தனியார் பிரிவுகள் – பரிதாபகரமான மொண்ணை பதில்!

 “ரக்கான் எம்ஓஹெச்” எனும் புதிய திட்டமாக, நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனியார் பிரிவுகளை உருவாக்க மடானி அரசு யோசித்து வருவதாகச் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்லி  அஹ்மட் கூறியதை கேட்டு பிஎஸ்எம் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளது.

 முழு கட்டணத்தைச் செலுத்தும் நோயாளி திட்டம் என்று அழைக்கப்பட்ட (எஃப்பிபி) 2007 இல் அப்போதைய அரசாங்கமான பிஎன்-னால் அறிவிக்கப்பட்டது. பின்னர், பிஎஸ்எம் இத்திட்டத்திற்கு எதிர்ப்புகளைத் தெரிவிக்க, 2011இல் இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு மருத்துவமனைகளில் அரசு சார்பற்ற  செயற்பாட்டாளர்களின் கூட்டமைப்பைத் திரட்டி  பி.எஸ்.எம் கண்டனத்தைத் தெரிவித்தோம்.

பிஎஸ்எமின் உரிமையியல் சமூகம் போராட்டத்தினால் இத்திட்டத்தை மேலும் செயல்படுத்துவதற்கு ஓரிரு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், அதன்பின், நாடு முழுவதும் உள்ள 11 பொது மருத்துவமனைகளில் ஆரவாரமின்றி முழு கட்டணம் செலுத்தும் நோயாளி திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியது.

முழு கட்டணம் செலுத்தும் நோயாளி திட்டத்திற்கு எதிராக பிஎஸ்எம் மக்களை திரட்டியது. ஏனெனில், ஒரு சாதாரண குடிமகனுக்கு இத்தகைய திட்டம் அபத்தமாக இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். அரசு மருத்துவமனைகளில் பிரச்சனை என்னவென்றால் மிகவும் சிக்கலான நோயிற்குச் சிகிச்சை அளிப்பதற்கும், இளைய மருத்துவ நிபுணர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கும் போதுமான மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களின் குறைபாடு இருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் பெற்ற 75% நிபுணர்கள் நாடு முழுவதும் வளர்ந்துள்ள தனியார் மருத்துவமனைகளில் உள்ளனர்.  மேலும், மூத்த நிபுணர்களின் குழுவில் 25% மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணிபுரிகிறார்கள். அவர்கள் உள்நோயாளிகளில் 75% மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் மற்றும் புது மருத்துவர்களுக்கு தக்க பயிற்சிகளை வழங்க முடியாமலும் போகிறது.

 அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையின் விளைவால், சிக்கலான நிலையில் உள்ள நோயறிதலில் மற்றும் சிகிச்சையில் தாமதம், தவறான நோயறிதல், நிபுணத்துவம் பெற முயற்சிக்கும் இளைய மருத்துவர்களின் பயிற்சி திட்டங்களில் போதாமை மற்றும் அதிக மன அழுத்தத்துடன் கூடிய நோயாளிகளின் நீண்ட நேரக் காத்திருப்பு எனப் பல சிக்கல்களை நோயாளிகளும் இளமருத்துவர்களும் சந்திக்க நேரிடுகிறது. இதனால்தான் 2011ல் எஃப்பிபி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.

 அடுத்தடுத்த ஆண்டுகளில் 11 மருத்துவமனைகளில் ரகசியமாக இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் அதைப்பற்றிய பெரும்பாலான அச்சங்கள் சரியானவை என்பதை மிகத் தெளிவாக நிரூபித்துள்ளது. எஃப்பிபி திட்டமானது மூத்த மருத்துவர்களை அரசு மருத்துவமனை வலாகத்தின் அலுவலக நேரத்திற்குப் பிறகு தனியார் நோயாளிகளைப் பார்க்கவும் அவர்களுக்குத் தனிப்பட்ட கட்டணத்தை வசூலிக்கவும் அனுமதிக்கிறது. பல மூத்த அரசாங்க வல்லுநர்கள் எஃப்பிபியில் நியாயமான முறையில் பங்கு கொண்டனர்.

மேலும், அவர்களது தனிப்பட்ட நோயாளி நேரத்தை வாரத்திற்கு 10 மணி நேரத்திற்கும் குறைவாகக் கட்டுப்படுத்தினர். ஆனால், கணிசமான எண்ணிக்கையிலான மருத்துவர்கள் தங்களின் நோயாளிகளைப் பார்ப்பதற்கு அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். அதிக ஆர்வமுள்ள வல்லுநர்கள் இத்திட்டத்தின் மூலம் தங்களின் அரசாங்க வேலையை விட இரண்டு மடங்கு அதிகமாகச் சம்பாதிக்க முடிந்தது. ஆனால், சாதாரண கட்டணம் செலுத்த முடியாத நோயாளிகளை கவனிக்கும் பொறுப்பைச் சுமக்கும் மற்ற நிபுணர்களின் மன உறுதியில் ஒரு மோசமான விளைவை ஏற்படுத்தியது. இவை இளம் நிபுணர்களின் பயிற்சியையும் பாதித்தது.

நீங்கள் கொஞ்சம் ஆழமாக யோசித்தால் எஃப்பிபி திட்டம் உண்மையில் அதில் பங்கேற்கும் நிபுணர்களுக்குள் ஒரு தீவிரமான மோதலை உருவாக்குகிறது. இலவச பொது கிளினிக்கில் காத்திருப்போர் பட்டியல் மிக நீளமாக இருந்தால் மட்டுமே நோயாளிகள் எஃப்பிபி கிளினிகளுக்கு வருவார்கள். பெரும்பாலும் அந்தந்த துறைகளில் மூத்த அரசாங்க நிபுணர்களாக இருப்பவர்களின் பொறுப்புகளில் ஒன்று தங்களின் செயல் திறனை மேம்படுத்துவதாகும்- அதாவது, காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதை பொருத்த மாட்டிலும். மேலும், தங்கள் துறையில் உள்ள இளநிலை நிபுணர்களைத் திறன் பெறச் செய்வதாகும். ஆகவே சிறப்பாக நடத்தப்படும் பொது மருத்துவமனைகளில் எஃப்பிபி கிளினிக்கு குறைவான நோயாளிகளையே வருவார்கள்.

 நோயாளி பராமரிப்பு, இளநிலை மருத்துவர்களின் பயிற்சி, மற்றும் அரசு  மருத்துவர்களின் மன உறுதி ஆகியவற்றில் இத்திட்டமானது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதைச் சுகாதார அமைச்சகம் உள்தணிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதை நாங்கள் உறுதியாக அறிவோம். இந்த உள்தணிக்கைகளில் பல குறைபாடுகளைக் கண்டறிந்து திட்டத்தை விமர்சிப்பதாக நாங்கள் கேள்விப்பட்டிருந்தோம். உள்தணிக்கைகளை தற்போது சுகாதார அமைச்சர் பார்வையிட்டாரா? ஒருவேளை அவர் பிஎஸ்எம் கூறியது போல மோசமாக இல்லை என்றால், எஸ்பிபி திட்டத்தின் மற்றொரு பரிணாமமான பிரைவேட் விங்ஸ் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன் அவற்றைப் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட வேண்டும்.

 டானி அரசாங்கத்தில் இருக்கும் எங்கள் நண்பர்களுக்கு, சாமானியர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அரசாங்கத்தைச் சீர்திருத்துவோம் என்ற வாக்குறுதியுடன் வந்ததை பிஎஸ்எம் நினைவுபடுத்த விரும்புகிறது. அரசாங்கம் எதிர்கொள்ளும் 1.2 டிரில்லியன் ரிங்கட் கடனைப் பற்றியும் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்திலிருந்து மூன்று சதவீதத்திற்கு அல்லது அதற்கும் குறைவான வரவு செலவு திட்டப் பற்றாக்குறை குறைக்கும் விருப்பத்தைப் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதை நாங்கள் முழுமையாக புரிந்து கொள்கிறோம்.

 ஆனால் சாதாரண மனிதர்களிடமிருந்து வளங்களைப் பறிக்கும் எந்த நடவடிக்கையும் நாம் கடுமையாக ஏற்கவில்லை. மூத்த நிபுணர்களின் பற்றாக்குறையால் நமது சுகாதார பாதுகாப்பு அமைப்பு போராடி வருகிறது. மக்களுக்கான நிபுணர்களின் இருப்பை குறைக்கும் இந்த நடவடிக்கையும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாங்கள் இத்திட்டத்தை மிகவும் கண்டிக்கிறோம்.

ஏன் இந்த பொறுப்பற்ற செயல்? ஏனென்றால், நீங்கள் மடானி தற்போதைய அரசாங்கம். பிஎன் அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சியில் நாம் ஒன்றாகப் பயணித்த போது உங்களிடம் இருந்த பலம் அதிகம். கடந்த 50 ஆண்டுகளில் உண்மையான அடிப்படையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (அதாவது பண வீக்கத்திற்கான தள்ளுபடிக்குப் பிறகு) 25 மடங்கு அதிகரித்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்திலிருந்து அதை தற்போதைய 14 சதவீதமாக குறைத்துள்ளது.. இதுதான் பிரச்சனையின் சமாச்சாரம் இல்லையா? இந்த நாடு ஈட்டும் வருமானத்தில் பெருகிய முறையில் சிறு பகுதி மட்டுமே அரசாங்கத்திற்குச் சேருகிறது.

அதனால்தான், சுகாதார பாதுகாப்பு மற்றும் முதியோர் ஓய்வூதிய திட்டத்தை தொடங்குதல், பசுமையாற்றலுக்கு மாற்றத்தை விரும்பப்படுத்துதல், நமது ஆறுகள் மற்றும் காடுகளை மறு சீரமைத்தல், நகராட்சி கழிவு மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் போதுமான நிதிகள் இல்லை. இவை அனைத்தும் லாபகரமான முயற்சிகள் அல்ல. எனவே, தனியார்த் துறையால் மேற்கொள்ளப்படாது. ஒழுங்காகச் செயல்படும் பொருளாதாரத்தில் சமூகத்தால் கூட்டாக உருவாக்கப்படும் செல்வத்தின் நியாயமான விகிதத்தில் தனியார் துறை ஆர்வம் காட்டாத அனைத்து திட்டங்களையும் மற்ற சேவைகளையும் நிதி அளிக்க அரசாங்கம் ஒதுக்க வேண்டும்.

 துரதிர்ஷ்டவசமாக, மலேசியாவிலும் பல நாடுகளிலும் அனைத்து குடிமக்களும் வாழ்க்கையும் மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் சமூக செல்வத்தின் விகிதம் காலப்போக்கில் குறைந்து வருகிறது. அது ஏன் இப்படி அதை மாற்ற முடியுமா? அரசு கவனிக்க வேண்டிய முக்கியமான பிரச்சினைகள் இவையா? மதானி அரசாங்கத்தில் உள்ள நீங்கள் இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவீர்களா? போன்ற கேள்விகளின் உள்ளடக்கம்தான் மக்கள் உங்களிடம் ஒப்படைத்துள்ள அதிகாரங்களைப் பொறுப்புடன் செயல்படுத்துவதாக இருக்கும்.

 நாட்டின் வருமானத்தின் தவறான ஒதுக்கீட்டை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக மக்களின் நல்வாழ்வைப் பாதிக்கும் மோசமான சிந்தனையற்ற கொள்கைகளை மதானி அரசாங்கம் தொடர்ந்தால் பிஎஸ்எமின் வேடிக்கை பார்க்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் ஒற்றுமையையும் முன்னிறுத்தி அக்கறையுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கான எமது மக்களின் விருப்பத்தின் உறுதியான வெளிப்பாடு பொதுச் சுகாதார பாதுகாப்பு முறைமையாகும். நமது பொது சுகாதார அமைப்பு மிகவும் உண்மையான வழியில் தேசத்தின் ஆன்மாவை வரையறுக்கிறது. ஆகவே அதைச் சீரழிக்கும் எந்த நடவடிக்கையும் பிஎஸ்எம் மட்டுமின்றி பல உரிமையியல் சமூக குழுக்களும் சிவப்பு கோடி கட்டி உங்களைத் தடுக்கும். தயவுசெய்து அதைக் கடக்காதீர்கள்.

 

டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ்

பி.எஸ்.எம் தேசியத் தலைவர்

தமிழில் தோழர் மோகனா

     

 

Friday, October 4, 2024

33 வருட போராட்ட வெற்றியின் சாவிகள்

தாமன் ஸ்ரீ ராயா, செராஸ் கைவிடப்பட்ட வீட்டமைப்பு திட்டம்

இன்று மதியம், நான் 5 முதியவர்களுடன் சேர்ந்து, மெனரா நாசா, TTDI, ஷா ஆலமில் உள்ள பி.என்.எஸ்.பி (PNSB) கட்டிடத்திற்கு, பங்சாபுரி தாமன் ஹார்மோனி, செராஸில் உள்ள கட்டிட வீடுகளின் சாவியைப் பெறச் சென்றிருந்தோம். இந்த நிகழ்வில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த மக்கள் 1989-ஆம் ஆண்டின் மத்தியில் தாமன் ஸ்ரீ ராயா, 9வது மைல், செராஸ் என்ற திட்டத்தில் குறைந்த விலையில் வீடுகளை வாங்கினார்கள். கட்டமைப்பு திட்டம் கௌசர் கார்ப்பரேஷன் (Kausar Corporation Sdn. Bhd. ) மூலம் உருவாக்கப்பட்டது, மற்றும் சிலாங்கூர் மாநில அரசாங்க அமைப்பான பெர்மோடாலான் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட் (PNSB) க்கு சொந்தமானது. இந்தக் குடும்பங்கள் RM 6,000 வைப்புத் தொகையாகவும், கௌசர் கார்ப்பரேஷனின் வழக்கறிஞருக்கு RM 200 சட்டக் கட்டணமாகவும், RM 127 நில வரியாகவும், RM 264 வயரிங் செலவுகளாகவும் செலுத்தியுள்ளனர். அவர்கள் விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தில் (SnP) கையொப்பமிட்ட பொழுது வீடுகள் 30 ஜூன் 1991-ஆம் திகதி முடிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

இன்று 33 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏழு குடும்பங்களில் ஐந்து குடும்பங்களுக்குத் தாமான் ஹார்மோனியில், மாற்று வீடாக, குறைந்த விலை பிளாட் கட்டிட வீடுகளுக்கான சாவியைப் பெற்றனர். சட்டக் கட்டணம், நில வாரியம், போன்றவற்றிற்கு முன்பு அவர்கள் செலுத்திய அனைத்து பணமும் அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகளும் வழங்கப்பட்டது. மக்கள் என்னிடம் எப்போதும் கேட்பார்கள் பி.எஸ்.எம்-மால் எப்படி இதைச் செய்ய முடிகிறது? பதில் எப்போதும் எளிதானதல்ல. விடாமுயற்சியும் கடின உழைப்பும் சேர்ந்து, மக்களும் தொடர்ந்து உரிமைகளுக்காகப் போராடத் தூண்டுகிறார்கள்.

நீண்ட சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சத்தை காணும் போது ஏற்படும் மகிழ்ச்சியைப் போலச் சம்பந்தப்பட்டவர்களின் முகங்களில் சாதித்த இன்பத்தைக் காண்பதும் அளப்பரிய மகிழ்ச்சியை உண்டாக்கும்.

இந்த அற்புதமான கதையைச் சுருக்கமாக எழுதுகிறேன்.


2007-இல், வீட்டை வாங்கி 17 ஆண்டுகள் கழித்து, முருகா என்ற சிறுவன் அவனது தந்தை சுப்பிரமணியத்துடன் என்னை வந்து சந்தித்தார்கள். என்னிடம் விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தைக் காட்டி கைவிடப்பட்ட இந்த வீடமைப்பு திட்டத்தைப் பற்றிச் சொன்னார்கள். நாங்கள் அவ்விடத்தைப் பார்வையிட்டபோது அங்கு வெறும் காடு மட்டுமே இருந்தது. பணம் படைத்தவர்கள் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட வீடுகள் ஏற்கனவே கட்டப்பட்டிருந்தது, அதிலும் சிலர் குடியிருந்தார்கள். கட்டமைப்பு மேம்பாட்டாளர்கள் லாபம் ஈட்டக்கூடிய வீட்டு திட்டங்களை முதலில் உருவாக்கிவிட்டு, மீத பணமும் விருப்பமும் இருந்தால் மட்டுமே குறைந்த விலை வீடுகளை உருவாக்கத் தொடங்குவார்கள் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை தற்போது சிலாங்கூரில் மாற்றப்பட்டு, குறைந்த விலை வீடுகள் முதலில் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய பி.எஸ்.எம் காஜாங் குழுவினர் மற்றும் சிலர் இணைந்து கைவிடப்பட்ட திட்டத்தின் பகுதியில் ஒரு பதாகை வைத்தோம். ஒரு மாதம் கழித்து அதே தளத்தில் ஒரு சிறு கூட்டத்தைத் தொடங்கி நடவடிக்கைக்குழு அமைத்து மற்றொரு போராட்டத்தைத் தொடங்க முற்பட்டோம்.

ஆனாலும், பதாகை வைத்து ஒரு மாதம் கழித்து, வீடுகளை வாங்கி ஏமாற்றப்பட்ட ஏழு பேர் மட்டுமே முன்வந்தனர். மீதம் உள்ளவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருக்கலாம் அல்லது அவர்கள் வீடுகளை வாங்காமலும் இருந்திருக்கலாம். எனவே அவர்களின் உறுதிமொழி கிடைத்ததும் குழு அமைத்து பணிகளைத் தொடங்கினோம்.

அணிதிரண்ட ஏழு பேரும் சுமார் 40 யூனிட் குறைந்த விலை இரட்டை  அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படுவதாக அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினர். மற்ற ஆவணங்களை ஆராய்ந்து பார்த்த போது இத்திட்டம் தாமான் ஸ்ரீ ராயாமைல் 9, PT14689 - 14722 மற்றும் PT 10224-10228-இல்  மொத்தம் 407 யூனிட்குறைந்த நடுத்தர விலை வீடுகள் மற்றும் கடை வீடுகள் கட்டப்படவுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

வீடமைச்சு துறை முன்னே எதிர்ப்பு


எனவே ஏழு குடும்பங்களுடன் நாங்கள் போராட்ட பயணத்தைத் தொடங்கினோம். நான்கு க்டோபர் 2007 அன்றுநாங்கள் வீடமைச்சு துறையில்  எங்கள் முதல் எதிர்ப்பு மற்றும் புகார்களைத் தாக்கல் செய்தோம். அமைச்சகம் உடனடியாக மாநில அரசைச் சுட்டிக்காட்டி அவர்களுடன் இரண்டு வாரங்களுக்குள் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வோம் என்று உறுதி கூறியது. இரண்டு வாரங்கள் ஒரு வருடமாக மாறியது. இத்திட்டத்தின் மேம்பாட்டாளர்கள் அம்னோவில் (UMNO) இணைந்துள்ளதாகவும் மேலும் அக்கட்சி அவர்களைப் பிரச்சினையிலிருந்து பாதுகாக்கிறது என்றதையும் புரிந்து கொண்டோம்.

2008-ல் பாரிசான் அரசாங்கம் வீழ்ச்சி அடைந்தது மற்றும் பக்கத்தான் க்யாட் வெற்றியால் புதிய அரசாங்கம் மாறியது. எனவே அக்டோபரில் சிலாங்கூரில் கைவிடப்பட்ட திட்டங்களுக்கான பணிக்குழுவின் தலைவராக இருந்த மதிப்பிற்குறிய ஷாரி சுங்கிப் அவர்களை சந்தித்து சிக்கலைக் கொண்டு சேர்த்தோம். ஷாரி, ரெபோமாசி இயக்கத்தில் செயல்பட்டவர், மேலும் முன்னாள் .எஸ். கைதியாகவும் இருந்தவர். அவர் எங்கள் வேண்டுகோளுக்கு அனுதாபம் தெரிவித்தார்.

மதிப்பிற்குறிய ஷாரி சுங்கிப் பின்னர் ஆலோசித்து மூன்று செயல்திட்டங்களை நிறைவேற்ற உறுதியளித்தார். 1989-ஆம் ஆண்டு வாங்குபவர் கையொப்பமிட்ட அசல் விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விலைக்கு அதே இடத்தில் அடுக்குமாடி வீடுஅதாவது மாற்று வீடுகளைக் கட்டி முடிக்க சிலாங்கூர் மாநில அரசு ஒரு புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் என்று அவர் கூறினார்இரண்டாவதாகஅடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டுவதற்கான புதிய ஒப்பந்தக்காரருடன் கலந்துரையாடுவதற்காகப் பணிக்குழு கட்டுமான பகுதிக்குச் செல்லும். மூன்றாவதாக, மேம்பாட்டாளர் வீடுகளைக் கட்டத் தவறியதால்கௌசர் கார்ப்பரேஷன் சென். பெர்ஹாட் மற்றும் பி.என்.எஸ்.பி ஆகியவற்றிடம் சேதம் மற்றும் இழப்பீடு கோருவதாக அவர் உறுதியளித்தார்.

நவம்பர் 24, 2008 அன்று, மதிப்பிற்குறிய ஷாரி அந்த இடத்தைப் பார்வையிட்டுவீடுகளைக் கட்ட ஒப்பந்ததாரருடன் மாநில அரசு விவாதித்ததாக எங்களிடம் கூறினார். இது நம்பிக்கையைத் தந்தாலும்ஒவ்வொரு முறையும் எங்கள் குழு தளத்தைப் பார்வையிடும் போதுஎந்தவொரு மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும்மாற்று வீடுகளில்  கட்டுமான முன்னேற்றத்தைப் பின் தொடர்வதற்கு சந்திப்புகளை உறுதிப்படுத்துதலும் மற்றும் எக்சிகோவிடமிருந்து கருத்துகளை பெறுவதும் கடினமாகத் தொடங்கியது.

பின்னர் இறுதியாக மே 2010 இல்ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகுசிலாங்கூர் அரசாங்கத்தால் தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக அதே இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டத்தைப் புதுப்பிக்க முடியவில்லை என்று இறுதியாக எங்களிடம் கூறினார்கள். கட்டிடம் போடுவதற்கு மண் சரியில்லை என்று கூறப்பட்டது. எங்கள் கோபத்தைப் புரிந்து கொண்ட அவர்கள் பி.என்.எச்.பி-க்கு மாற்று வீடு வடிவில் புதிய திட்டம் உள்ளது அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கொடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

பின்னர் ஜூன் 21, 2011 அன்றுபி.எஸ்.எம் குழுவுடன்மாநில வீட்டுவசதி நிர்வாகி மதிப்பிற்குறிய இஸ்கந்தரை சந்தித்து விளக்கினோம். அதிகாரிகளைக் கூட்டத்திற்கு அழைத்து ஆலோசிப்பதாக அவர் உறுதியளித்தார்ஆனால் எதுவும் தகவலும் இல்லை. செப்டம்பர் 7, 2011 அன்றுசிலாங்கூர் மாநில வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் புகார் செய்தோம். எனினும், அவர்களும் பிரச்சினையைத் தீர்க்க எதுவும் செய்யவில்லை. டாக்டர். நசீர் ஹாஷிம்பி.எஸ்.எம் தலைவரும் சிலாங்கூர் மாநில சட்டசபையில் பிரச்சினையை எழுப்பினார்ஏனெனில் அவர் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

2012 பிப்ரவரி முதல், பிரச்சினைகளைத் தீர்க்க மாநில மந்திரி பெசாரை சந்திக்க அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தோம். அப்போது மந்திரி பெசாராக இருந்தவர் டான்ஸ்ரீ காலித் இப்ராஹிம். பல மாதங்களுக்குப் பிறகு, அவரது செயலாளரின் சந்திப்பு பெற முயன்று, இறுதியாக 1 ஜூன் 2012 அன்று அவரைச் சந்தித்தோம். அதைத் தொடர்ந்து, சிக்கலின் தீர்வைக் கண்டறியவும் பி.என்.எஸ்.பி-க்கு அறிவுறுத்தியது.


11hb அக்டோபர், 2013 அன்று, பி.என்.எஸ்.பி எங்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தனர். பி.என்.எஸ்.பி மேம்பாட்டாளருக்கு செலுத்தப்பட்ட பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூட்டத்தில் உறுதியளித்தது. ஆனால் இழப்பீடு அல்லது மாற்று வீடு போன்ற பிற விஷயங்களில் உடன்படவில்லை. இதற்கு நாங்கள் சம்மதிக்கவில்லை, இது எங்களுக்கு முதலில் அளிக்கப்பட்ட வாக்குறுதி என்பதால் மாற்று வீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

 பின்னர், மதிப்பிற்குறிய அஸ்மின் அலி புதிய மந்திரி பெசாரக ஆனார்; மற்றும் வான் அசிசா இந்த திட்டம் அமைந்துள்ள காஜாங் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.  நாங்கள் வான் அசிசாவுக்குக் கடிதம் அனுப்பினோம்; இந்தப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க ஒரு கூட்டத்தை அழைக்கவும், புதிய சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலிக்கு 28 அக்டோபர் 2014 அன்று ஒரு திறந்த கடிதம் அனுப்பினோம்.

 7-ஆம் திகதி ஜனவரி 2015, சிலாங்கூர் வீட்டுவசதி வாரியம் இப்போது உயர்த்தப்பட்ட இழப்பீடு தொகையை வழங்கியது மற்றும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் RM2,500 கருணைத் தொகை வழங்கப்படும் என்று கூறியது. இந்தச் சலுகை மீண்டும் மாற்று வீடு என்ற எங்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

திருப்புமுனை

இறுதியாக 18 நவம்பர் 2016, பி.என்.எஸ்.பி இரண்டு முக்கிய ஒருமித்த கருத்துகளை முன்மொழிந்தபோது ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. முதலாவதாகமைன்ஸுக்கு அருகாமையில் உள்ள தாமான் ஹார்மோனியில் ஒரு மாற்று வீடு முன்மொழியப்பட்டதுஇரண்டாவதாகமுன்பணம்சட்டக் கட்டணம் மற்றும் வாங்கும் போதும் அதற்குச் சம்பந்தப்பட்ட கட்டணங்கள் ஆகியவை இழப்பீடு தொகையாக கொடுக்கப்படும் என்பதாகும். நாங்கள் ஒப்புக்கொண்டால், பி.என்.எஸ்.பி வாரியம் டிசம்பரில் இது குறித்து முடிவெடுக்கும் என்றார்கள்.

மேற்கூறியவற்றை நாங்கள் ஒப்புக்கொண்டோம்ஆகஸ்ட் 5, 2017 அன்றுதான், 7 வாங்குபவர்கள் மற்றும் பி.எஸ்.எம் பிரதிநிதிகளுடன் தாமான் ஹார்மோனியில் உள்ள மாற்று வீடுகளைப் பார்க்கச் சென்றிருந்தோம்.  சில பழுது பார்க்கும் வேலைகள் இருந்ததால் பி.என்.எஸ்.பி அதைச் சரி செய்ய ஒப்புக்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட ஏழு பேரில் ஒருவருக்குச் சொத்து பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களில் சிக்கல் இருந்ததாலும் அவர் ஏற்கனவே இழப்பீடு தொகையைப் பெற்றிருப்பதாகக் கூறியதாலும் அவருக்கு மாற்று வீடு வழங்க முடியாது என்ற செய்தி எங்களுக்கு வந்தது. இது தவறான செய்தி என்று பாதிக்கப்பட்டவர் கூறியதால்நாங்கள் இன்னும் இந்த வழக்குகளின் முன்னேற்றத்தைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். மீதமுள்ள ஆறு பேரின் வீடு பிரச்சனைகள் முதலில் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஜூலை 4, 2018 அன்றுமாநில அரசின் செயலாளர் ஏழ்வரில் ஆறு பேருக்கு மாற்று வீடுகளை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தார்மேலும் 6 வாங்குபவர்களுக்குச் சலுகைக் கடிதங்களை 22 நவம்பர் 2018 அன்று பி.என்.எஸ்.பி வழங்கியது. கிடைத்த சலுகை கடிதத்தை முழுவதுமாக ஆராய்ந்து தெளிவுபடுத்திய பிறகுநாங்கள் 7 பிப்ரவரி 2019 அன்று பி.என்.எஸ்.பி அலுவலகத்திற்கு ஏற்பு கடிதத்தை அனுப்பினோம்.

பின்னர் கோவிட் தொற்று  பரவலால்,  மேலும் 2 ஆண்டுகள் தாமதப்படுத்தப்பட்டது. பின்னர் கடந்த 2 ஆண்டுகளில்வழக்கறிஞர் அலுவலகமான மாக் ஃபரித் மற்றும் நிறுவனத்தில் வேலை அதிகமாக இருந்ததுஅத்துடன் மாநில அரசு மற்றும் மாவட்ட அலுவலகம் தீர்க்க வேண்டிய சில காலதாமதமான கட்டணங்களும் இருந்தன.

இறுதியாக 26 செப்டம்பர் 2024-ல், ஏழு குடும்பங்களில் ஐந்து குடும்பங்களுக்கு மாற்று வீடுகளின் சாவி வழங்கப்பட்டது. மற்றொரு குடும்பம் அவர்களது அடுத்த வாரிசு தீர்மானித்த பிறகு வீடுகளைப் பெற்றுக் கொள்ளலாம். சிறுவன் முருகா இப்போது பி.எஸ்.எம் உறுப்பினராக உள்ளார் மற்றும் அவரது தந்தை கடந்த ஆண்டு இறந்துவிட்டார். தங்கள் முயற்சி வீண் போகவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். பல ஆண்டுகளாகச் செய்த அனைத்து முயற்சிகளுக்கும் தோழர் செல்வம், சிவன் மற்றும் எனக்கும் நன்றிகளைத் தெரிவித்தனர். முகமட் யூனுஸ் இஸ்கந்தர் மற்றும் பி.என்.எஸ்.பி அதிகாரி திருமதி நோரைனி ஆகியிருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறோம். அதே போல் மாக் ஃபரித் வழக்கறிஞர் நிறுவனத்திற்கும் எங்களது நன்றிகள்.

இந்த குடும்பங்கள் காலம் கடந்து அவர்களது இழப்பீடு தொகையைப் பெற்றிருந்தாலும்கிள்ளான் பள்ளத்தாக்கில் ஒரு சொத்தைப் பெறுவது எளிதான காரியம் அல்ல. சில வாரங்களுக்கு முன்புஒரு இளைஞர் என்னைச் சந்தித்து எங்கள் போராட்டத்தைப் பற்றி அறிய விரும்பினார். நான் விளக்கிகோப்புகளைக் காண்பித்தபோது... இது 25 வருடப் போராட்டம்இது 20 வருடங்கள்இது 30 வருடங்கள் எனத் தெளிவுபடுத்தினேன். அவர் கவலைப்பட்டார். அதிகாரத்தில் இல்லாத நிலையிலும் பி.எஸ்.எம் எப்படித் தொடர் போராட்டத்தைக் கையில் எடுக்கிறது என்று அவர் கேட்டார். வழக்கமான புன்னகையுடன்முதுகில் தட்டிக் கொடுத்தேன். சரியான வெற்றிக்குக் குறுக்குவழிகள் இல்லைஒவ்வொரு வெற்றிக் கதையின் பின்னும்நிறையப் போராட்டமும் கடின உழைப்பும் இருக்கும். போராடுவோம். வெற்றி பெறுவோம்.


எஸ்.அருட்செல்வன்

மலேசிய சோசலிசக் கட்சி துணைத் தலைவர்

தமிழில் தோழர் மோகனா


பட்ஜெட் 2025: சாதாரண மக்களுக்கு பெரும் ஏமாற்றமே...

பட்ஜெட் 2025 தாக்கல்,  சாதாரண மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?! க டந்த வெள்ளியன்று, நாட்டின் நிதி அமைச்சராகவும் பிரதமராகவும் பதவி...