Tuesday, November 4, 2025

சமூக மற்றும் கல்வி பிரச்சனைகளை சமூக நீதி அடிப்படையிலான நடவடிக்கைகளால் தீர்க்க வேண்டும் !

பிஎஸ்எம் அறிக்கை – 4 நவம்பர் 2025

சமூக மற்றும் கல்வி பிரச்சனைகளை சமூக நீதி அடிப்படையிலான நடவடிக்கைகளால் தீர்க்க வேண்டும்




நமது சமூகம் அதிகரித்து வரும் பல்வேறு சமூகப் பிரச்சனைகளை தற்போது எதிர்கொள்கிறது. இதில் குறிப்பாக, மலாக்காவில் ஒரு மாணவியைச் சார்ந்த கூட்டுப் பலாத்காரச் சம்பவம்பள்ளிகளில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் பகடிவதைச் சம்பவங்கள் (buli),
டிஜிட்டல் ஊடகங்களில் ஆபாச உள்ளடக்கங்கள் பரவல்மாணவர்களின் பாதுகாப்பு பிரச்சனைகள், மற்றும் உணர்ச்சி மற்றும் மன அழுத்தம் சார்ந்த சிக்கல்கள் என்பன குறிப்பிடத்தக்கவையாகின்றன.

நாங்கள், கல்வி அமைச்சர் Fadhlina Sidek அவர்களின்
மாணவர்களின் பாதுகாப்பு, பள்ளிகளில் நடைபெறும் பலியல் (buli)
பிரச்சனைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும்
மனநலம் குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தும்
அணுகுமுறையையும் அர்ப்பணிப்பையும் முழுமையாக ஆதரிக்கிறோம்.

எனினும், இந்நடவடிக்கைகள் மேலும் அடிப்படை மாற்றங்கள்
மூலம் விரிவுபடுத்தப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.

பாலியல் வன்முறை, பாலின சமமின்மை, உணர்ச்சி அழுத்தம், டிஜிட்டல் ஊடகங்களில் ஆபாச உள்ளடக்க பரவல் போன்றவை தனிநபர் குற்றச்செயல்கள் அல்ல — அவை “பாலியல் வன்முறை கலாச்சாரத்தின்” வெளிப்பாடுகள். அதாவது, வன்முறையும் பாலியல் துன்புறுத்தலையும் எளிதில் மன்னிக்கும் ஒரு சமூகம் அல்லது சூழல் அமைப்பு தான் இதற்குக் காரணம். பள்ளிகள், பணியிடங்கள் மற்றும் வீட்டில் கூட என்ன நடக்கிறது என்பதற்கான உண்மையான உதாரணங்கள் இங்கே:


  • ஆசிரியர்கள் பள்ளிகளில் “பொழுதுபோக்கு” என்ற பெயரில் ஆபாசமாகப் பேசுதல்.
    (“The 17-year-old exposing rape culture in Malaysian schools”, Al-Jazeera, 19 May 2021)

  • ஆண் மாணவர்கள் பெண்களை மரியாதை இல்லாமல் அணுகி,
    அவர்களை 
    பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள்.                                   (“Johor teenager nabbed for allegedly creating, selling lewd AI pics of schoolmates”, The Star, 9 April 2025)

  • பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் குறைத்து மதிப்பிடப்பட்டு புறக்கணிக்கப்படுகின்றன, இதில் குற்றவாளிகள் பெரும்பாலும் ஆண்கள், அவர்கள் விளைவுகளை சந்திப்பதில்லை.
    (உதாரணம்: tahfiz சம்பவங்கள் மற்றும் பல)

  • ஆண்கள் பெண்களின் எல்லைகளை மதிக்காத நிலை.
    (“Bandar Utama stabbing: Teen allegedly attacked over rejected advances”, Sinar Daily, 14 October 2025)

  • பெண்கள் மற்றும் டீனேஜ் பெண்களின் உடைகள் குறித்து சமூகம் பெரும்பாலும் விமர்சிக்கிறது..
    (“Malaysia to revise school textbook telling girls to cover up”, Reuters, 16 January 2019)


பள்ளியில் ஆண் மாணவர்கள் தங்கள் நடத்தை மற்றும் மனப்பான்மைகள் குறித்து பெண் மாணவர்களைப் போலவே அதே ஆய்வு மற்றும் விமர்சனத்தை எதிர்கொள்வதில்லை. இந்த சமமற்ற நடத்தை, பெண்களை கண்ணியமான மனிதர்களாக அல்லாமல், ஆண்களை மகிழ்விக்க அல்லது சேவை செய்ய இருக்கும் பொருட்களாக ஆக்குகிறது.இந்த சமமற்ற நடத்தை, பெண்களை கண்ணியமான மனிதர்களாக அல்லாமல், ஆண்களை மகிழ்விக்க அல்லது சேவை செய்ய இருக்கும் பொருட்களாக  காண்பிக்கிறது. இத்தகைய சமூக அமைப்பே “ஆணாதிக்கம்” (பேட்ரியார்க்கி) என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக, பாலியல் வன்முறையின் பாதிப்புக்குள்ளாகும் பெரும்பாலானவர்கள் பெண்களும் சிறுமிகளும் ஆவர், அதே சமயம் குற்றவாளிகள் பெரும்பாலும் ஆண்களாகவே இருக்கின்றனர்.


அதனால், கல்விக் கொள்கை சமூக நீதி என்ற அடிப்படைக் கொள்கையை மையமாகக் கொண்டு மீள வடிவமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இதில் அடங்குவது:

  • Inclusive Sex Education கல்வியை அறிமுகப்படுத்துதல்,

  • பாலின சமத்துவ விழிப்புணர்வை மேம்படுத்துதல்,

  • இலவச மனநல சேவைகளை வழங்குதல்,

  • மேலும் சமூக ஆதரவு அமைப்பை வலுப்படுத்துதல்.

இதன் நோக்கம் — கல்வி மனிதரை ஒடுக்குமுறை அமைப்பிற்கு ஏற்ப மாற்றும் கருவியாக அல்லாது, அவர்களை முழுமையாக விடுதலை செய்யும் சக்தியாக மாற வைக்கும்.


1. கல்வி அமைப்பின் தோல்வி – ஆண் ஆதிக்கமும் (பேட்ரியார்க்கி) பாலின அசமத்துவமும் எதிர்கொள்வதில் இயலாமை

மலேசியக் கல்வி அமைப்பு, “ஒப்புதல்” (Consent) என்ற கருத்து, பாலின விழிப்புணர்வு, மற்றும் மனித உரிமைகள் பற்றிய ஆழமான புரிதலை மாணவர்களிடம் வளர்த்திட தவறியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை  "மௌனமாக்கும்"    (Culture of Silence)கலாச்சாரம் இன்னமும் வேரூன்றியுள்ளது, ஏனெனில் அவர்கள் வெளிப்படையாகக் குரல் கொடுக்க பாதுகாப்பான இடங்கள் இல்லை அல்லது அணுக முடியாத நிலையில் உள்ளனர். அதனால், அரசு ஒப்புமை மிக்க மற்றும் முன்னேற்றவாத பாலியல் கல்வியை (Inclusive & Progressive Sex Education) அறிமுகப்படுத்த வேண்டும் — இது மாணவர்களின் வயதிற்கு ஏற்ப உணர்ச்சி, உடல் மற்றும் சமூக பரிமாணங்களை பற்றி கற்றுத் தரும் ஒரு நவீன கல்வி அணுகுமுறை ஆகும். அதே நேரத்தில், அரசு பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும்.


2. மாணவர்கள் மீது அதிகரித்து வரும் பகடிவதை சம்பவங்கள்  மற்றும் சமூக அழுத்தம்

முதலாளித்துவ அமைப்பின் கீழ் ஆதரவு, பரஸ்பர உதவி மற்றும் ஒற்றுமையை விட போட்டி மற்றும் ஆதிக்கத்தை மதிக்கும் நமது சமூகத்தைவ் பகடிவதை சம்பவங்கள்  பிரதிபலிக்கின்றன. இந்த பிரச்சனையை சமாளிக்க, அரசு முழுமையான (Holistik) மற்றும் ஒப்புமை மிக்க (Inklusif) கல்வி அணுகுமுறையை அமல்படுத்த வேண்டும் — இது மாணவர்களிடையே உணர்ச்சி நலன் (Emotional Well-being)பரிவு (Empati) மற்றும் சமூக ஒற்றுமையை (Solidariti Sosial) வலியுறுத்தும் வகையில் இருக்க வேண்டும்.


3. டிஜிட்டல் மூலதனவாதத்தின் (Kapitalisme Digital) சுரண்டலும் ஆபாச உள்ளடக்கப் பிரச்சனையும்

தொழில்நுட்ப முன்னேற்றம் பல நன்மைகளை வழங்கினாலும்,
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டீப்‌ஃபேக் (Deepfake) போன்ற தொழில்நுட்பங்கள் அதிகமாக தவறாகப் பயன்படுத்தப்பட்டு, பிறருக்கு தீங்கு விளைவிக்கின்றன. இது நம் சமூகத்தில் இன்னும் நிலைத்துள்ள ஆண் ஆதிக்க மனப்பான்மையும் (Patriarki)விமர்சன சிந்தனை (Critical Thinking) மற்றும் நெறி உணர்வின் (Etika) பற்றாக்குறையும் காரணமாகும். அரசு நாடு முழுவதும் டிஜிட்டல் கல்வி மற்றும் விழிப்புணர்வு (Digital Literacy) திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் — இதன் நோக்கம், குடிமக்களின் சமூக பொறுப்பு உணர்வை (Civic Mindset) மேம்படுத்தி, டிஜிட்டல் குற்றச்செயல்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமல்படுத்துவதாகும். இதன் மூலம், நாம் டிஜிட்டல் விழிப்புணர்வும், ஒழுக்க நெறியும் கொண்ட இளைய தலைமுறையை உருவாக்கி, முழுமையான (Holistik) மனித வளர்ச்சியை எட்ட முடியும்.


4. மாணவர்களின் மனநலம் மற்றும் உணர்ச்சி அழுத்தம்

அரசு, பள்ளிகளிலும் சமூகங்களிலும் முழுமையான (Comprehensive), இலவசமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய மனநல சேவைகளை வழங்க வேண்டும்.

இதில் அடங்குவது:

  • ஆலோசகர்கள் (Kaunselor) எண்ணிக்கையை அதிகரித்தல்,

  • ஆசிரியர்களுக்கான மனநலப் பயிற்சிகளை வலுப்படுத்துதல்,

  • மேலும் நண்பர் ஆதரவு (Peer Support) திட்டங்களை விரிவுபடுத்துதல்.

இந்த நடவடிக்கைகள், மாணவர்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சி அழுத்தம், கவலை மற்றும் மன உளைச்சல்களை சமாளிக்க முக்கியமானவை.

சர்வதேச சிறந்த நடைமுறைகள் (Best International Practices) அடிப்படையில்,
மலேசியாவும் தனது கல்வி அமைப்பில் மனநலத்தை முக்கிய கூறாக இணைக்க வேண்டும்.

சர்வதேச சிறந்த நடைமுறைகள்

1. ஸ்வீடன் 

- ஆரம்பப் பள்ளியிலிருந்து ஒப்புமை மிக்க பாலியல் கல்வி (Inclusive Sex Education),  மற்றும் பாலின சமத்துவத்தில் கவனம் செலுத்தி, பாலியல் வன்முறை வழக்குகளைக் குறைத்துள்ளது. கடந்த சில தசாப்தங்களாக, ஸ்வீடன் HIV தொற்று, இளவயது கர்ப்பம் மற்றும் குறைந்தவயது திருமணங்கள் ஆகியவற்றை குறிப்பிடத்தக்க வகையில் குறைத்துள்ளது.


2. பின்லாந்து - 

முழு பள்ளி சமூகத்தையும் ஈடுபடுத்தும் பகடிவதை எதிர்ப்பு (Anti-Bullying) திட்டம் உலகளவில் முன்னுதாரணமாக உள்ளது. திட்டத்தின் முதல் ஆண்டிலேயே, 9–12 வயது மாணவர்களுக்கிடையேயான பள்ளி அகடிவதை குற்றங்கள் 30–40% வரை குறைந்துள்ளன.


3. நியூசிலாந்து - 

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலுவான சட்டங்கள் மற்றும் ஆதரவு மையங்கள், அத்துடன் மனித உரிமைகள் விழிப்புணர்வு கல்வி வழங்கப்படுகிறது. நியூசிலாந்தின் அணுகுமுறை, ஒரு சுயாதீன நீதித்துறை, ஒரு சுதந்திர ஊடகம் மற்றும் மனித உரிமைகளை மதிக்கும் ஒரு அரசியல் கலாச்சாரத்தால் ஆதரிக்கப்படும் போது கடுமையான சட்டங்களை நியாயமாக செயல்படுத்த முடியும் என்பதைக் காட்டுகிறது. இது கருத்து வேறுபாடு அல்லது சமூக ஆர்வலர்களை அடக்கும் துஷ்பிரயோகங்களைத் தவிர்க்கிறது.


4. தென் கொரியா

டிஜிட்டல் கல்வி (Digital Literacy) மிகவும் வலுவாக கற்பிக்கப்படுகிறது. அதே நேரத்தில், தகாத அல்லது ஆபாச உள்ளடக்கங்களைத் தடுக்கும் கடுமையான சட்டங்கள் அமலில் உள்ளன. அதே வேளையில் அதிகப்படியான கட்டுப்பாட்டைத் தவிர்க்க தெளிவான நடைமுறைகள் மற்றும் பொது கண்காணிப்பு உள்ளது. இதன் மூலம், குடிமக்கள் சைபர் குற்றங்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்றனர், அதேவேளை ஜனநாயக உரிமைகள் பாதிக்கப்படுவதில்லை.

5. கனடா - 

பள்ளிகளில் முழுமையான மனநல ஆதரவு அமைப்பு உள்ளது —
இதில் தொழில்முறை ஆலோசனை, சக நண்பர் ஆதரவு (Peer Support) மற்றும்
உணர்ச்சிப் பிரச்சினைகளைச் சுற்றியுள்ள களங்கத்தையும் குறைக்கின்றன.
இதனால் மாணவர்களின் மனநல பிரச்சனைகள் திறந்தவெளியில் பேசப்பட்டு,
அதற்கான உதவி முன்னதாகவே கிடைக்கிறது.

சமூக நீதி அடிப்படையிலான சமூக மற்றும் கல்வி செயல் திட்டம்

1. அரசின் பங்கு

அரசு, ஒப்புமை மிக்க கல்வி (Inclusive Education)பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான கடுமையான சட்டங்கள்இலவச மனநல சேவைகள், மற்றும் தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம்
ஆகியவற்றை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மேலும், வறுமை மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் பலவீனத்தால் ஏற்படும் சமூக மன அழுத்தத்தின் சிக்கல்களை அரசாங்கம் இன்னும் விரிவாகப் பார்க்க வேண்டும்.

இந்த முயற்சி பொருளாதாரக் கொள்கையின் ஒரு விஷயம் மட்டுமல்ல, மக்களின் நல்வாழ்வைப் பற்றியது.

அரசு கூடுதலாக:

  • ஆபத்து அதிகமான இடங்களில் சமூகப் பணியாளர்கள் (Social Workers) எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்,

  • சமூக ஆதரவை வலுப்படுத்த வேண்டும்

  • ஆசிரியர்களின் நிர்வாகச் சுமையைக் குறைக்கவும் அரசாங்கம் தேவை, இதனால் அவர்கள் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் உணர்ச்சி பூர்வமான மாற்றத்தில் கவனம் செலுத்த முடியும்.

நமது கல்வி முறை எண்ணிக்கை மற்றும் சந்தைத் தேவைகளுக்கு மட்டும் இல்லாமல், மனிதாபிமான, நீதியான மற்றும் சமநிலையான மக்களை உண்மையிலேயே வடிவமைக்க இந்த நடவடிக்கைகள் அவசியம்.


2. பெற்றோரின் பங்கு

பெற்றோர்கள், குழந்தைகளின் பண்புகள், நெறிமுறைகள், மதிப்புகள் மற்றும் சமூக அணுகுமுறைகளை வடிவமைப்பதில் மிக முக்கியமான மற்றும் மாற்றமேற்படுத்தும் பங்காற்றுகின்றனர். அவர்கள் வெறும் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பாளர்கள் மட்டுமல்ல; பள்ளிகளுடன் இணைந்து பகடிவதை பிரச்னைகள், பாலின சார்ந்த தொல்லை, மற்றும் உணர்ச்சி அழுத்தம் போன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முக்கிய கூட்டாளர்கள் ஆவர்.

பெற்றோர்கள் பாலின விழிப்புணர்வு (Gender Awareness) மற்றும் உணர்ச்சி கல்வி (Emotional Literacy) பற்றி போதுமான அறிவைப் பெற வேண்டும்; இதனால் அவர்கள் குழந்தைகளுக்கு மரியாதை, பரிவு (Empati) மற்றும் சமூக நீதி ஆகியவற்றின் முன்மாதிரியாக இருக்க முடியும்.

அதே நேரத்தில், பெற்றோர்கள் வீட்டில் திறந்த உரையாடல் மற்றும் நம்பிக்கையான சூழலை உருவாக்குவது அவசியம் —
இதனால் குழந்தைகள்:

  • தங்கள் உணர்வுகளைத் திறந்தவெளியில் பகிரலாம்,

  • பள்ளியில் அல்லது சமூகத்தில் எதிர்கொண்ட சிரமங்களை சொல்ல அஞ்சாமல் இருக்கலாம்,

  • உதவி கேட்கத் தயங்காமல் இருக்கலாம்.

இந்த வகையான பாதுகாப்பான தொடர்பு சூழல், குழந்தைகளின் உணர்ச்சி பாதுகாப்பு, நம்பிக்கை, மற்றும் தன்னிறைவு வளர்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியமான அடித்தளமாக அமைகிறது. மேலும், பெற்றோர்கள் பள்ளி வாரியங்கள், PIBG, komuniti program, dan aktiviti sokongan pelajar போன்றவற்றில் செயலில் கலந்து கொள்வதும் தேவையாகின்றது.பெற்றோர்களின் செயற்பாட்டு பங்கேற்பு மூலம்:

  • பள்ளியில் ஒற்றுமை வலுப்பெறும்,

  • குழந்தைகளுக்கான பாதுகாப்பு  ஒப்புமைகொண்ட (inklusif) மற்றும் பரிவு நிறைந்த சூழலை உருவாக்க உதவும்.

  • ஒவ்வொரு மாணவரும் மதிப்பு மற்றும் அன்பை உணர்வார்கள்.

இத்தகைய ஒட்டுமொத்த (holistik) ஆதரவு அமைப்பு, குழந்தைகள் உணர்ச்சி, சமூக மற்றும் மனிதாபிமான அடிப்படையில் ஆரோக்கியமாகவும் சமநிலையுடனும் வளர உதவுகிறது.


3. பள்ளிகளின் பங்கு

பள்ளிகள், மாணவர்கள் மரியாதை மற்றும் பரிவு அடிப்படையிலான சூழலில் வளரத் தேவையான நல்லிணக்க பண்பாட்டை உருவாக்குவது மிக முக்கியமானது. அதற்காக, ஆசிரியர் பயிற்சியை வலுப்படுத்துதல், மாணவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குதல், அத்துடன் டிஜிட்டல் மற்றும் பாலின கல்வியறிவு கல்வி வழங்குதல் வேண்டும்.


4. சமூகங்களின் பங்கு

சமூகத்தின் செயல்பாட்டும் சம அளவில் முக்கியமானது. உள்ளூர் மட்டத்தில் சமூக அதிகாரமளித்தல், பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் பாலின மற்றும் மனநல ஆதரவு மையங்களைத் திரட்டுதல்  தேவையானது


முடிவுரை (Kesimpulan)

பள்ளிகளில் இடம்பெறும் பாலியல் மற்றும் உடல் ரீதியான வன்முறைகளை ஒழிக்க பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் திட்டங்களை பள்ளிகளில் செயல்படுத்தினாலும், உண்மையான தீர்வு, சமூக நீதி, பாலின விழிப்புணர்வு மற்றும் வர்க்க ஒற்றுமையை மையமாகக் கொண்ட முறையான மாற்றம் மற்றும் விரிவான சமூக சீர்திருத்தத்தில் தான் உள்ளது. மனித உரிமைகள், பரிவு, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தும் சோசலிசக் கோட்பாடு வழியே தான் மலேசியக் கல்வி முறை, உண்மையில் நீதி, முன்னேற்றம் மற்றும் மனிதாபிமானம் நிறைந்த சமூகத்தை உருவாக்கும் அடித்தளமாக மாற்ற முடியும்.

எழுதியவர்:
கிருஷ்ண வேணி சிங்கம்
மலேசிய சோசலிசக் கட்சி (PSM)                                                                                            சோசலிச இளைஞர் குழு

Monday, November 3, 2025

மக்களின் பிரச்சனைகளை 100 ரிங்கிட் தீர்த்துவிடுமா?


“நாட்டிலுள்ள அடிதட்டு மக்களின் மனங்களைக் கவருவதற்கு 100 ரிங்கிட் போதும் என பிரதமர் அன்வார் தப்புக் கணக்கு போட்டுவிட்டார். ஏழைச் சமூகத்தின் பிரச்சனைகளைக் களைவதற்கு அது போதும் என்று அவர் எண்ணிவிட்டார்.”

இவ்வாறு மலேசிய  சோசலிசக் கட்சியைச் சேர்ந்த சிவரஞ்சனி மாணிக்கம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

‘மடானி அரசாங்கம் ஏழ்மையைத் துடைத்தொழிக்கிறதா,’ எனும் தலைப்பில் அண்மையில் நடைபெற்ற பொது விவாதமொன்றின் போது அவர் இவ்வாறு ஆக்ரோஷமாக தனதுக் கருத்துக்களை முன்வைத்தார்.

பல்வேறுத் துறைகளைச் சேர்ந்த மேலும் 4 பேர்களும் இவ்விவாத அரங்கில் பங்கேற்றனர்.

“பதினெட்டு வயதிற்கும் மேற்பட்டோருக்கு அரசாங்கம் வழங்கும் தலா 100 ரிங்கிட் உதவித் தொகை அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்த்துவிடுமா,” என தொடர்ந்து தனது கேள்விக் கணைகளை அவர் தொடுத்தார்.

“கடந்த காலத் தலைவர்களைப் போல்தான் அன்வாரும் நடந்து கொள்கிறார். அவருக்கு அசாதாரணமான சிந்தனை கிடையாது.”

“மக்களின் பெரும் பிரச்சனையான வீட்டுடமை பற்றி அவர் சிந்திக்க வேண்டும். விற்பனைக்கு வீடுகள் இருக்கிற போதிலும் நிறைய பேர்கள் அவற்றை வாங்க இயலாமல் பரிதவிக்கின்றனர்,” என்றார் அவர்.

“அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் கூட கட்டுப்படுத்தப்படாமல்  உச்சத்தில் உள்ளன,” என்று தொடர்ந்து அவர் குறிப்பிட்டார்.

“புதியத் திட்டங்களுக்கு பொருளாதாரம் போதவில்லை என்று கூறும் மடானி அரசாங்கம், பெரும் நிறுவனங்கில் உள்ள வசதி படைத்தோரிடம் வரி வசூலிப்பதில் கவனம் செலுத்தவில்லை,”

“ஆனால் ஜி.எஸ்.டி.(GST) எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிகளை அமல்படுத்தி அடிதட்டு மக்களின் ஏழ்மை நிலையை மேலும் மோசமாக்கிவிட்டது,” என சிவரஞ்சனி தனது ஆதங்கத்தைத் கொட்டினார்.

“மடானி அரசாங்கம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் புதிய கோணத்தில் படைப்பாற்றலுடன் சிந்திக்க வேண்டும். பெரும் திட்டங்களை மேற்கொள்ளாத வரையில் மாற்றங்களைக் காண முடியாது,” என்றார் அவர்.

“செய்ய வேண்டியக் காரியங்கள் நிறைய உள்ளன என்று ஒரு நீண்டப் பட்டியலை தேர்தலுக்கு முன் நீங்கள் காட்டினீர்கள். ஆனால் தற்பொழுது என்ன நடக்கிறது என்றால், அவற்றில் நிறைவேற்ற முடியாதவற்றிற்குக் காரணங்களைக் கூறுகிறீர்கள்,” என சிவரஞ்சனி சாடினர்.

நன்றி: எழுத்தாளர் இராகவன் கருப்பையா மற்றும் மலேசியகினி ஊடகம்

Sunday, October 26, 2025

டொனால்ட் டிரம்பிற்கு ஒரு திறந்த மடல் (கடிதம்)

PSM  தேசியத் தலைவர் ஜெயகுமார், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எழுதிய திறந்த மடல் 


அன்புள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப்,

அமெரிக்க அதிபரான நீங்கள், ஆசியான் உச்சிமாநாட்டை சிறப்பிக்க 26/10/25 அன்று மலேசியாவுக்கு வருகை தருவதைப் பற்றி அதிகம் விரும்பாத பல மலேசியர்கள் இருப்பதைக் கண்டு நீங்கள் குழப்பமடையக்கூடும் என்று நினைக்கிறேன். முடிந்தால், உங்களுக்காக இதைப் பற்றி நான் விளக்குகிறேன்.

உங்கள் வருகைக்கு மலேசியர்கள் உற்சாகமான ஆதரவு அளிக்காததற்கான முதல் காரணம், காசா பகுதியில் நிகழ்ந்து வரும் இனப்படுகொலை, அமெரிக்காவின் ஆதரவின்றி நடந்திருக்காது என்று பலர் நம்புவதுதான். அதிபர் அவர்களே, ஜனவரி மாதம் பதவியேற்றவுடன், இஸ்ரேலுக்கு ஆயுதங்களும்  வெடிமருந்துகளும் வழங்குவதை நிறுத்தியிருந்தால், அந்தக் கொடூரத்தை நீங்கள் தடுக்க முடிந்திருக்கும். அதனால், இரு நாடுகளும் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டியிருக்கும். ஆனால், நீங்கள் அப்படிச் செய்யவில்லை. அதன் விளைவாக, 2025 ஜனவரி மாதத்திலிருந்து மேலும் 20,000 முதல் 30,000 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த மனிதநேயத்திற்கு எதிரான குற்றத்தில் அமெரிக்கா நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளதாக மலேசியர்கள் பெரும்பாலோர் நம்புகின்றனர். 2023 அக்டோபர் மாதத்திலிருந்து, அமெரிக்கா இஸ்ரேலைக் குற்றம் சாட்டும் தீர்மானங்களை தடுக்க, பாதுகாப்பு கவுன்சிலில் தமது வீட்டோ அதிகாரத்தை ஆறு முறை பயன்படுத்தியுள்ளது; இது, அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்கு வழங்கி வரும் ஆயுத மற்றும் வெடிகுண்டு ஆதரவுடன் சேர்ந்து, குற்றச்செயலைப் பாதுகாத்து வந்துள்ளது என்பதற்கான உறுதியான சான்றாகும்.


நிச்சயமாக, இறுதியில் நீங்கள் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து போர்நிறுத்த ஒப்பந்தத்துக்கு சம்மதிக்கச் செய்தது எங்களை நிம்மதியடையச் செய்தது. எனினும், இது  முன்பே நடந்திருக்க வேண்டிய ஒன்று என்று நாங்கள் நம்புகிறோம். காசா அல்லது மேற்கு கரை பகுதிகளில் இஸ்ரேல் மீண்டும் பாலஸ்தீன சமூகங்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினால், அவர்களுக்கு வழங்கப்படும் ஆயுத உதவிகளை நீங்கள் நிறுத்துவீர்கள் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம்.


மலேசியர்கள் பலர் உங்கள் மலேசியா வருகைக்கு அதிருப்தி அடைவதற்கான இரண்டாவது காரணம் என்னவெனில், அமெரிக்கா பிற நாடுகள் தமது சமூகங்களைத் தாம் விரும்பியபடி உருவாக்கிக் கொள்ளும் தன்னாட்சி உரிமையை ஒருபோதும் உண்மையாக அங்கீகரிக்கவில்லை என்பதேயாகும்.

கியூபா, வெனிசுவேலா, ஈரான், லிபியா, சீரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில், அமெரிக்கா தன்னிச்சையாக கடுமையான பொருளாதாரத் தடைச் சட்டங்களை விதித்ததையும், அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சிகளுக்கு  நிதியளித்ததையும் நாங்கள் பார்த்துள்ளோம். ஏனெனில் இந்த நாடுகள் தங்கள் சமூகங்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து வேறுபட்ட பார்வையைக் கொண்டிருந்தன.

மலேசியாவிலுள்ள நாங்கள், மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளின் கொள்கைகள் மற்றும் கண்ணோட்டங்களின் அனைத்து அம்சங்களுடனும் ஒத்துப்போகாமல் இருக்கலாம். எனினும், ஒவ்வொரு நாடும் — அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் — தமது சொந்த வளர்ச்சி பாதையைத் தீர்மானிக்கும் உரிமை பெற்றிருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவ தலையீடுகள் அமெரிக்கா மற்றும் அதன் “தன்னார்வக் கூட்டணி” மூலம் அல்ல, ஐக்கிய நாடுகள் சபையின் பெரும்பான்மை (super-majority) ஒப்புதலின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும்.

அமெரிக்க அதிபர் ஒருவர் எங்கள் நாட்டிற்கு வருவது குறித்து நாங்கள் முழுமையாக மகிழ்ச்சியடையாத மூன்றாவது காரணம் என்னவெனில், அமெரிக்கா மக்கள் குடியரசு சீனாவுடன் மேற்கொண்டு வரும் மோதலான (bellicose) தொடர்புகள் தென் சீனக் கடலில் இராணுவ மோதலைத் தூண்டும் என்ற எங்களது அச்சமே ஆகும்.

மலேசியா, எங்கள் ஆசியானின் (ASEAN) அயல்நாடுகளுடன் இணைந்து, இப்பகுதியை “அமைதி, சுதந்திரம் மற்றும் நடுநிலைத்தன்மையின் மண்டலம்” (Zone of Peace, Freedom and Neutrality – ZOPFAN) என நீண்டகாலமாக அறிவித்துள்ளோம். இது இப்பகுதியைச் சார்ந்த எங்கள் கொள்கையாக இருந்து வந்துள்ளது, மேலும் ஆசியானின் பெரும்பாலான நாடுகள் அணு ஆயுதங்களை இப்பகுதிக்குக் கொண்டு வரக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளன. இதுவரை நாங்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருந்து, பெரிய அளவிலான போர்களைத் தவிர்த்துள்ளோம்.

சீனாவுடன் “ஒன்பது கோடு வரி” (Nine Dash Line) தொடர்பான சில பிரச்சனைகள் இருப்பது உண்மை. எனினும், அவை காலப்போக்கில் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்க்கப்படலாம் என்றும், அவ்வாறே தீர்க்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

அமெரிக்கா தொடர்ந்து சீனாவைத் தூண்டி வருவது, ஏதாவது தவறான கணிப்பின் விளைவாக, இராணுவ மோதலாக மாறிவிடுமோ என்ற பெரும் கவலை எங்களுக்கு உள்ளது. உலகம் இதற்கு ஒத்த நிகழ்வை கிழக்கு ஐரோப்பாவில் ஏற்கனவே கண்டுள்ளது — 1990களிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை நேட்டோ (NATO) அமைப்பு ரஷ்ய எல்லைகளுக்கு தன் செல்வாக்கை இடையறாது விரிவுபடுத்தியதன் விளைவாக, அவர்கள் இருத்தலியல் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக நம்பி, இராணுவ ரீதியாக பதிலளிக்க முடிவு செய்யும் சூழ்நிலைக்கு வழிவகுத்தது. உக்ரைன் போரின் தோற்றத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் அமெரிக்கா மற்றும் நேட்டோ தலைமைகள் மிகப் பெரிய பங்காற்றியுள்ளனர்.

ஆனால் இது நினைவில் கொள்ளப்பட வேண்டும் — இந்த மோதலின் பெரும்பகுதி சுமையைக் சுமந்தவர்கள் ஐரோப்பாவின் சாதாரண குடிமக்கள்தான். உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் ஊனமுற்றுள்ளனர். ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளில் பொருளாதார துன்பங்கள் மோசமடைந்துள்ளன, ஏனெனில் மலிவு விலையிலான எரிவாயுவை வழங்கிய நோர்டிக் குழாய் மர்மமான முறையில் சேதப்படுத்தப்பட்டது.

இதனால் உருவான பொருளாதார நெருக்கடியும், குடிமக்கள்மீது திணிக்கப்பட்ட மதவாதக் கொள்கைகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் “சமூக ஒப்பந்தத்தை” சிதைத்துவிட்டன. இதன் விளைவாக, மேற்கத்திய சமூகங்களை துண்டாடும் வலதுசாரி பேரினவாதக் கட்சிகள் எழுச்சிப் பெற்றுள்ளன. இல்லை, அதிபரே, எங்கள் உலகப் பகுதியில் அத்தகைய நிலைமைகள் உருவாக வேண்டுமென்று நாங்கள் விரும்பவில்லை.

திரு. அதிபர் அவர்களே, அமெரிக்கக் கொள்கையில் எங்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி பெரும்பாலும் அமெரிக்க அரசியல் உயரடுக்கினரிடம்தான் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். அமெரிக்காவின் சாதாரண குடிமக்களுடன் எங்களுக்கு முழு அனுதாபம் உள்ளது; அவர்கள் தங்களின் சொந்த அரசியல் தலைவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டு, பிரிக்கப்பட்டு, போதுமான முறையில் பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை என்பதே எங்களின் கருத்து.

கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்க அரசியல்  உயரடுக்கினர், உலக வங்கி மற்றும் உலக வர்த்தக அமைப்புடன் இணைந்து திணித்த “சுதந்திர வர்த்தகக் கொள்கைகள்”, நன்கு சம்பளம் வழங்கும் உற்பத்தி வேலைகளை ஆசியாவிற்கு இடம்பெயர்ந்தன. இதனால், அமெரிக்காவில் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க சரிவுக்கும் அது வழிவகுத்தது.

முன்னாள் தொழிலாளர் வர்க்கத்தினர் பலர் உங்கள் “Make America Great Again (MAGA)” என்ற வாக்குறுதியை நம்பி உங்களுக்கு வாக்களித்தனர், ஆனால் அவர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டனர். 

நீங்கள் மில்லியன் கணக்கான ஏழை அமெரிக்க குடிமக்களுக்கு மருத்துவம் மற்றும் உணவு  சலுகைகளைக் குறைத்து, பெருநிறுவன வரிகளைக் குறைத்துள்ளீர்கள்.  நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் விதிக்கப்பட்ட உங்கள் இறக்குமதி வரிகள், அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளன. இன்று, அமெரிக்க மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு பிரிந்து, கடுமையான எதிர்ப்போடு வாழ்கின்றனர்!

சாதாரண அமெரிக்க குடிமக்களுக்காக நாங்கள் பரிதாபப்படுகிறோம். அவர்கள் தங்களின் உண்மையான நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அரசியல் தலைவர்களை அறிவோடும் ஒற்றுமையோடும் தேர்ந்தெடுக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

திரு. அதிபரே, ஏன் இத்தனை மலேசியர்கள் உங்கள் கோலாலம்பூர் வருகையால் பெரிதும் உற்சாகமடையவில்லை என்பதை நீங்களும் உங்கள் ஆலோசகர்களும்  ஆராய்ந்து,  “அதிகப்படியான வலிமைமிக்க” வெளிநாட்டு கொள்கை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், சர்வதேச கொள்கைகளுக்கான அடிப்படையாக “அமெரிக்காவின் தனிச்சிறப்பு” என்ற கருத்தை மேற்கோள் காட்டுவதை நிறுத்தவும், உலக நாடுகளின் குடும்பத்தில் ஒரு பொறுப்புள்ள உறுப்பினராக நடந்து கொள்ளவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதை நீங்கள் செய்ய தவறினால், அமெரிக்காவின் கண்ணியமும் தாக்கமும் குறையும் வேகம் நிச்சயமாக மேலும் அதிகரிக்கும்.









எழுதியவர் :                                                                                                                                              டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ்                                                                                            மலேசிய சோசலிசக் கட்சியின் தேசியத் தலைவர்                                                    26 அக்டோபர் 2025

தோட்டத் தொழிலாளர்களின் 27 ஆண்டுகாலப் போராட்டத்தின் வெற்றி


உலு சிலாங்கூர் மற்றும் கோல சிலாங்கூர் பகுதிகளில் உள்ள 5 தோட்டங்களில்  அதாவது Ladang Mary, Ladang Sungai Tinggi, Ladang Minyak, Ladang Nigel Gardner dan Ladang Bukit Tagar  ஆகிய தோட்டங்களில்  26 ஆண்டுகளாக நீடித்துவந்த வீடமைப்பு பிரச்சனை   தீர்க்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் Nga Kor Ming வெளியிட்ட அறிவிப்பை மலேசிய சோசலிசக் கட்சி (PSM), தோட்ட மக்கள் சமூக ஆதரவு குழு (JSML) மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் வரவேற்கின்றனர்.

இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 245 தோட்டத் தொழிலாளர்கள் அரசாங்க மானியத்தோடு, மலிவு விலையில் நிலத்துடன் கூடிய வீடுகளை பெறவிருக்கிறார்கள். இதற்கான பெரும்பகுதி செலவுகளை மத்திய அரசும் மாநில அரசும் ஏற்கின்றன.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, மத்திய மற்றும் மாநில அரசுகள் சேர்த்து RM75 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளன, மேலும் பெர்ஜாயா கார்ப்பரேஷன் இந்த திட்டத்திற்கான நிலத்தை வழங்கியுள்ளது. கட்டுமான அனுமதி கிடைத்த பின், இந்த வீடமைப்பு திட்டம் 24 மாதங்களுக்குள் நிறைவு பெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு நிலம், குறைந்தக் கட்டண அடுக்குமாடி வீடுகள், மற்றும் நகரவீடுகள் வழங்கும் சலுகைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவர்கள் அவற்றை அனைத்தையும் நிராகரித்தனர், ஏனெனில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கை கோல சிலாங்கூர் மற்றும் உலு சிலாங்கூரிலுள்ள பரந்த தோட்ட நில ஒதுக்குப்புறங்களில் தரை வீடுகள் கோரி வந்ததால் அவை அனைத்தும் தோட்ட பாட்டாளிகளால் நிராகரிக்கப்பட்டன. 

கீழே எங்கள் பகுப்பாய்வு உள்ளது.

ஊடகச் சந்திப்பின் போது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி

ஐந்து தோட்டங்களின் வீட்டு வசதி பிரச்சினை தீர்வை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பின் போது நடந்த மிகப் பெரிய நகைச்சுவையும் கொசுறு நிகழ்ச்சியும் ஒன்று உள்ளது.  மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினரின் ஆதரவாளர்கள் சிலர் அவருக்கும் அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கும் சில பதாகைகளை கொண்டு வர மிகவும் ஆர்வமாக இருந்தனர்.

அவர்கள் அவசரமாக சில பதாதைகள் (plakad) கொண்டு வந்து, அதில் அந்த உறுப்பினருக்கும் அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கும் வாசகங்களை எழுதியிருந்தனர். அவர்கள் தொழிலாளர்களையே அந்தப் பதாதைகளை பிடிக்க வற்புறுத்தினர்.

இதில் நகைச்சுவையானது என்னவெனில் — அந்த அரசியல்வாதிகள் அறியாதது, இந்த தொழிலாளர்கள் இதற்கு முன் ஒவ்வொரு போராட்டத்திலும் பதாதைகளை தூக்கிச் சென்றவர்கள் என்பது தான். ஆனால் இன்று அவர்கள் வெற்றியை கொண்டாட வந்திருந்தார்கள், போராட்டத்திற்காக அல்ல.

இதுவே அந்த நிகழ்வை நகைச்சுவையுடனும் வரலாற்றின் ஒரு சுவாரஸ்யமான திருப்பமாகவும் ஆக்கியது.

இருப்பினும், நாங்கள் அமைச்சர் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுடன் புகைப்படம் எடுக்க முயன்றபோது, இந்தப் போராட்டத்தில் முன்பாகப் பெரிதாக பங்குபெறாத சில அரசியல்வாதிகள் திடீரென மேடையில் இடம் பிடிக்கப் போட்டியிட்டனர். அந்தச் செயலின் விளைவாக, தொழிலாளர்கள் நல்ல புகைப்படம் எடுக்க முடியவில்லை, ஏனெனில் அவர்கள் பார்வையிலிருந்து மறைத்து நின்றுவிட்டனர்.

கூடுதலாக, தொழிலாளர்கள் மேடைக்கு அருகில் நின்று கொண்டிருந்தபோது, ​​மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினரின் உதவியாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு பிரதிநிதி, தொழிலாளர்களை அங்கே நிற்க வேண்டாம் என்றும், மேடையை விட்டு விலகிச் செல்லுமாறும் கூறினார்.

சிலரின் அரசியல் நாடகங்கள் மற்றும் மலிவான காட்சிகள் இருந்தபோதிலும், நிகழ்ச்சி நல்ல முறையில் நடந்து முடிந்தது. முக்கியமானது, அறிவிப்பின் உள்ளடக்கம் மற்றும் வீடுகள் உண்மையில் கட்டப்படுமா என்பதே.  முடிவுகள் தெளிவாக உள்ளன. 26 வருடங்களாக அளித்த இந்த வாக்குறுதியை இறுதியாக நிறைவேற்றிவிட்டதாக அமைச்சர் Nga Kor Ming எங்களிடம் கூறினார்.

ஏன் இது முக்கியம்?

தோட்டத் தொழிலாளர்கள் இலவச மற்றும் மானிய விலையில் வீடுகளைப் பெறுவது இது ஒன்றும் புதிதல்ல, ஏனென்றால் PSM, JSML ஆகியவை பல தோட்டங்களைச் சேர்ந்த துணிச்சலான தோட்டத் தொழிலாளர்களுடன் சேர்ந்து இதற்கு முன்பு வீடுகளைப் பெற்றுள்ளனர்;

சிலாங்கூரில் இலவச வீடுகள் பெற்ற முதல் தோட்டத் தொழிலாளர் குழு 1991 ஆம் ஆண்டில் சுங்கை ராசா தோட்டத்திலிருந்து வந்தவர்கள். அவர்களின் வெற்றியே பின்னர் சிலாங்கூர் மாநில அரசின் கொள்கையாக மாறியது — அதாவது, எந்தத் தோட்டமும் அபிவிருத்திக்காக மாற்றப்படுமானாலும், அதிலுள்ள தொழிலாளர்களின் வீட்டு வசதி பிரச்சினை முதலில் தீர்க்கப்பட வேண்டும் என்பதாகும்.

1990-களின் தொடக்கத்தில், பல தோட்ட நிலங்கள் தொழிற்துறைக் காணிகளாக மாற்றப்பட்டு, ரியல் எஸ்டேட் சந்தையில் விற்கப்பட்டன.இதனால், தோட்ட நிறுவனங்கள் தங்கள் நிலங்களை பெரும் லாபத்துடன் விற்பனை செய்தன. அவை பெரும்பாலும் தொழிலாளர்களை வெளியேற்ற, அவர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் (CA) அல்லது தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையில் சிறிதளவு இழப்பீடு வழங்கின.

இதுவே பல தோட்டங்களில் எதிர்ப்பை எழுப்பியது. தொழிலாளர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு, வீட்டு வசதி உரிமையை வலியுறுத்தினர்.

அந்தக் காலத்தில், இதே போன்ற போராட்டங்கள் ப்ரேமர் தோட்டம், புகிட் ஜெலுதோங் தோட்டம், மிட்லாண்ட்ஸ் தோட்டம், ப்ரூக்லண்ட்ஸ் தோட்டம் மற்றும் பல இடங்களில் நடைபெற்றன.


தோட்டத் தொழிலாளர்களின் இந்த எதிர்ப்பு, சட்டத்தின் பெயரால் அல்லாமல் கொள்கையின் பெயரால்  (policy) ஒருவித பாதுகாப்பை ஏற்படுத்தியது.

1995 ஆம் ஆண்டு, பொது தேர்தலுக்கு முன்பாக, அப்போது மனிதவள அமைச்சர் இருந்த Lim Ah Lek , சிலாங்கூரின் கொள்கையைப் போன்ற ஒரு தேசியக் கொள்கையை அறிவித்தார். அதன்படி, எந்த தோட்டமும் அபிவிருத்திக்காக மாற்றப்படுவதற்கு முன், அதில் உள்ள தொழிலாளர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால், இது சட்டப் பிணைப்பில்லாத கொள்கை மட்டுமே என்பதால், தோட்டத் தொழிலாளர்களின் வீட்டு உரிமைகளை சட்டரீதியாகக் காக்க முடியாத நிலை உருவாகியது.

மிகவும் பாராட்டப்பட்ட துன் அப்துல் ரசாக் அவர்களின் வீட்டு வசதி கொள்கை — அதாவது, புதிய பொருளாதாரக் கொள்கையின் (DEB) ஒரு பகுதியாக 1973- ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வீடு சொந்தமாக்கும் திட்டம் (Skim Pemilikan Rumah) — இது  திட்டம் மட்டுமே, சட்டப் பிணைப்பில்லாதது.

இந்தத் திட்டத்திற்காக 10 மில்லியன் ரிங்கிட் சுழற்சி நிதி ஒதுக்கப்பட்டிருந்தபோதிலும், ஆயிரக்கணக்கான தோட்டங்களில் வெறும் சில தோட்டங்கள் மட்டுமே இந்தத் திட்டத்தை உண்மையில் நடைமுறைப்படுத்தின.


மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி எனக் கருதப்படுவது,
மத்திய நிர்வாகத் தலைநகர் புத்ராஜெயா உருவாக்கத்திற்காக நிலம் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு தோட்டங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட தொழிலாளர்களுக்காகதரை குடியிருப்புகள் (வீடுகள்) கட்டுவதற்கு அரசாங்கம் எடுத்த முடிவு. அந்த நேரத்தில் காலத்தில் மொத்தம் 4,600 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

அது மகாதீர், சாமி வேலு, மற்றும் சிலாங்கூர் முதல்வர் Muhammad Taib ஆகியோர் ஆட்சியில் இருந்த காலம். அவர்கள் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றி, டெங்க்கிலில் அமைத்த நான்கு குறைந்த தரமான அடுக்குமாடி வீடுகளுக்கு (Taman Permata flats) மாற்றினர். இந்த வீடுகள் அவசரமாகவும் தரமின்றியும் தற்காலிகமாக கட்டப்பட்டவை; இன்றுவரை அவற்றிற்கு தகுதிச் சான்றிதழ் (CF) வழங்கப்படவில்லை.

தொழிலாளர்கள் அங்கு குடியேறியபோது, அவர்களுக்கு முன்னதாக 1999-ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கு முன்RM20,000 தள்ளுபடி விலையில் வீடுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  இதையடுத்து, PSM மற்றும் சமூக மேம்பாட்டு மையம் (CDC) இணைந்து,இந்த தோட்டத் தொழிலாளர்களுடன் மற்றொரு மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இறுதியில், ஆகஸ்ட் 2017 இல், அதாவது 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன், அப்போது பிரதமராக இருந்த நஜிப் ரசாக்,
404 வீடுகள் கட்டும் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினார் — இதற்காக அரசு சுமார் RM60 மில்லியன் செலவிடப்பட்டது.

தன் உரையில் நஜிப் கூறினார்:

“இந்த வீட்டு திட்டம், நாட்டின் அபிவிருத்திக்காக தியாகம் செய்த மக்களின் குரலை அரசாங்கம் மதிக்கிறது என்பதற்கான சான்றாகும்.
இந்த நான்கு தோட்டங்களும் 400 குடும்பங்களும் இல்லையெனில், இன்று நாம் கொண்டிருக்கும் புத்ராஜெயாவும் இருக்காது.”

அவர் மேலும் அறிவித்தது —
RM60 மில்லியன் மதிப்புள்ள இந்த வீட்டு திட்டத்தின் கீழ் உள்ள வீடுகள்,
அசல் கட்டுமானச் செலவான RM150,000-க்கு பதிலாக, RM20,000 விலையில் மட்டுமே விற்கப்படும் என்று.




பெஸ்தாரி ஜெயா, லோட் 25 -இல் உள்ள 5 தோட்டங்களுக்கான வீட்டு வெற்றி மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் மடானி அரசு வரலாற்றில் முதன்முறையாக, இன்னும் வளர்ச்சியடையாத தோட்டப் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடுகள் கட்டும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. இது உண்மையில் ஒரு மிகவும் நேர்மையான மற்றும் முன்னேற்றமான நடவடிக்கை ஆகும், ஏனெனில் இன்று தோட்டத் தொழிலாளர்கள் பெறும் குறைந்த ஊதியத்தின் அடிப்படையில், RM250,000 மதிப்புள்ள வீடுகளை வாங்குவது அவர்களுக்கு சாத்தியமற்றது. எனவே, இந்த நடவடிக்கை மூன்று முதல் நான்கு தலைமுறைகளாக தோட்டங்களில் உழைத்து வந்த தொழிலாளர்களுக்கான அங்கீகாரம் மற்றும் நியாயமான பலனாக பார்க்கப்பட வேண்டும். அவர்களின் உழைப்பே நமது நாட்டின் பொருளாதார நலனுக்குக் காரணமாக இருந்தது, மேலும்  சைம் டார்பி போன்ற நிறுவனங்களை இன்றைய  பிராந்தியத்தின் மிகச்  பணக்கார நிறுவனங்களில் ஒன்றாக மாற்றியது.


இதுவரை, தோட்டத் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கே உரிமையாளர்கள் அல்லர், அந்த வீடுகள் தனியார் நிலங்களில் அமைந்துள்ள நிறுவனங்களுக்குச் சொந்தமானவை.

அவர்களின் நிலைமை FELDA குடியேற்றத்தார்களிடமிருந்து மாறுபட்டது,
ஏனெனில் FELDA குடியேற்றத்தார்கள் தங்கள் சொந்த வீடுகளைக் கொண்டுள்ளனர்; அதேபோல், பாரம்பரிய நிலங்களால் பாதுகாக்கப்படும் பழங்குடியினர் (Orang Asli) அல்லது சீனப் புதிய கிராமங்களில் வாழ்பவர்கள் ஆகியோருடன் ஒப்பிடும்போது, தோட்டத் தொழிலாளர்கள் எந்த சட்டபூர்வமான நில உரிமையும் கொண்டிருக்கவில்லை. எனவே, அவர்கள் ஓய்வுபெறும் போது அல்லது தங்கள் வேலையை இழக்கும் போது,  அவர்கள் தங்களது வசிப்பு வீடுகளையும் இழக்கின்றனர்.


பல வருட போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த வெற்றி

அரசாங்கம் வீடுகள் கட்டத் தொடங்கும் அறிகுறிகள் தென்பட்டவுடன், இரு தரப்பிலிருந்தும் சில உள்ளூர்த் தலைவர்களிடையே மோதல் ஏற்பட்டது, அவர்கள் அதை தங்கள் சொந்த முயற்சியாக சித்தரிக்க முயன்றனர்.

ஆனால் உண்மையில், இந்த வெற்றி என்பது தோட்டத் தொழிலாளர்களின் துணிச்சலான மற்றும் நீண்டகாலப் போராட்டத்தின் விளைவாகும்.
மேலும் தேசிய வீட்டு வசதி துறை (JPN)-இன் மூத்த அதிகாரி
தத்தோ என். ஜயசேலன் அவர்களின் சிறந்த முயற்சிகளின் பலனும் ஆகும்.


விரிவான விளக்கத்திற்கு ஒரு புத்தகமே தேவைப்படும்,  ஆனால் நான் இதன் நீண்ட கதையைச் சுருக்கமாகச் சொல்ல முயற்சிக்கிறேன். 

Vincent Tan  அவர்களுடைய பெர்ஜாயா நிறுவனமானது, 1998 -ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த SOCFIN நிறுவனத்திலிருந்து 11,500 ஏக்கர் நிலத்தை வாங்கியது. ஆரம்பத்திலிருந்தே பெர்ஜாயா நிறுவனம் உண்மையில் தோட்ட தொழில் நடவடிக்கைகளைத் தொடர்வதில் அதிக விருப்பம் கொண்டதாகத் தெரியவில்லை; மாறாக, அவர்கள் சில்லறை வணிகம், சூதாட்டம், உணவுத் தொழில், கட்டிட நிர்மாணம் போன்ற துறைகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். பெர்ஜெயா நற்பெயர் பெற,  1999 -ஆம் ஆண்டிலேயே  அந்தத் தோட்ட நிலம் அபிவிருத்தி செய்யப்படுமானால் வீடுகள் கட்டுவோம் என்று அறிவித்திருந்தனர்.

எங்கள் துண்டுப்பிரசுரங்களில், இந்தத் தொழிலாளர்களுக்கான வீடுகளை வாக்குறுதி அளித்திருந்த பல அரசியல்வாதிகளின் பெயர்களை பட்டியலிட்டுள்ளோம். இவ்வாக்குறுதிகள் பெரும்பாலும் பொது தேர்தல் காலங்களில் அளிக்கப்பட்டவையாகும். 2008 ஆம் ஆண்டிற்கு முன்பு, இந்த அரசியல்வாதிகள் பெரும்பாலும் பாரிசான் நேஷனல் (BN) சார்ந்தவர்களாக இருந்தனர்;

அதேபோல், 2008 ஆம் ஆண்டிற்கு பின்னர், அவர்கள் பகாத்தான் ராக்யாட், பின்னர் பகாத்தான் ஹராப்பான் (PH) கூட்டணியில் சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களில் MIC கட்சியிலிருந்து பழனிவேல் மற்றும் சிவலிங்கம்PKR கட்சியிலிருந்து சேவியர் மற்றும் கணபதீராவ் போன்ற PH நிர்வாக சபை உறுப்பினர்கள், மேலும் UMNO கட்சியிலிருந்து Khir Toyo மற்றும் Noh Omar, அதனைத் தொடர்ந்து வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சராக இருந்த Zuraida ஆகியோரும் இருந்தனர்.


பெர்ஜாயா நிறுவனம் 2015 ஆம் ஆண்டு அந்த நிலத்தை  Tagar Properties  நிறுவனத்திற்கு விற்றபோது, பிரச்சினை மிகக் தீவிரமானது.  இதன் விளைவாக, 57 தொழிலாளர்கள் வெளியேற்ற அறிவிப்பை பெற்றனர்;அந்த அறிவிப்பில் அவர்கள் 2016 ஏப்ரல் 15 க்குள் தோட்ட வீடுகளை காலி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அதனால், 2016 ஏப்ரல் மாதம் பல நடவடிக்கைகள் நிறைந்த மாதமாக மாறியது. அந்த வெளியேற்ற அறிவிப்புக்கு எதிராக, நாங்கள் பெருமளவு காவல் நிலைய புகார்கள் செய்ததோடு,மாநில அரசுக்கும் பெர்ஜாயா நிறுவனத்திற்கும் கடிதங்கள் எழுதி, அந்த வெளியேற்றத்தைக் கடுமையாக எதிர்த்தோம்.


அந்த நேரத்தில் சிலாங்கூர் மாநில  அரசு நிர்வாகக் குழு  உறுப்பினராக (Exco) இருந்த கணபதிராவ் பெர்ஜாயா நிறுவனம் வீடுகளை கட்டத் தயாராக இருப்பதாக எங்களுக்கு தெரிவித்தார். ஆனால், அவர்கள் தண்ணீர் குழாய்களை அமைக்க வேண்டிய அவசியம் இருப்பதால்,
அதற்கான செலவு சுமார் 6 மில்லியன் ரிங்கிட் ஆகும் எனவும் கூறினார். வெளியேற்றத்தின் இறுதி நாளுக்கு இரு நாட்களுக்கு முன்பு, அதாவது 2016 ஏப்ரல் 13 அன்று, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சிலாங்கூர் மாநில அரசுத் தலைமையகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சிலாங்கூர் மந்திரி பெசாராக இருந்த அஸ்மின் அலியிடம் ஒரு மகஜர்  (memorandum)   வழங்கப்பட்டது.

அதற்குப் பிறகு, கணபதிராவ் அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.
அந்தக் கூட்டத்தின் போது, பெர்ஜாயா மற்றும் புதிய நில உரிமையாளரான Tagar Properties ஆகிய நிறுவனங்கள் வீட்டு பிரச்சினை தீர்க்கப்படும் வரை தோட்ட மக்களின் வெளியேற்றம் நடைபெறாது என்று உறுதியளித்தன.
இதனால், தொழிலாளர்கள் எதிர்கொண்ட வெளியேற்ற அச்சம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், 2016 நவம்பர் மாதத்தில், பெர்ஜாயா நிறுவனம் கணபதிராவ் வழியாக ஒரு இறுதி தீர்வு முன்மொழிந்தது — அதாவது அவர்கள் Rumah Selangorku வீடுகளை தள்ளுபடி விலையில் வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தனர்.

ஆனால், அந்த முன்மொழிவு மொத்தம் 69 தொழிலாளர்களுக்கே வழங்கப்பட்டது, ஆனால் எங்கள் கோரிக்கை, அங்கு இன்னும் வேலை செய்து கொண்டிருக்கும் அனைவரையும் சேர்த்து 245 தொழிலாளர்களுக்காக இருக்க வேண்டும் என்பதாக இருந்தது. நாங்கள் மேலும் வலியுறுத்தியது, தொழிலாளர்கள் கேட்டது அடுக்குமாடி வீடுகள் (flat) அல்ல, தரைத்தள (terrace) வீடுகள் தான் என்பதையும் தெளிவாக தெரிவித்தோம். இதனால், தொழிலாளர்கள் குறைந்த விலையிலான அடுக்குமாடி வீடுகளுக்கான முன்மொழிவை நிராகரித்தனர்.




இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 13, 2017 அன்று, இந்த எஸ்டேட்களில் இருந்து தொழிலாளர்கள் 5 பேருந்துகளில் கோலாலம்பூரில் உள்ள பெர்ஜெயா டைம்ஸ் சதுக்கத்திற்குச் சென்றனர். தொழிலாளர்கள் பெர்ஜெயா நிறுவனத்திடம் 2 கோரிக்கைகளை முன்வைத்தனர், அதாவது 245 தரை வீடுகளைக் கட்ட வேண்டும், வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை தோட்டத்திலிருந்து வெளியேற்றக்கூடாது.

வீட்டுவசதி பிரச்சினைகளை தீர்க்கும் வரை இந்த நிலத்தில் உள்ள அனைத்து பெர்ஜெயா மேம்பாட்டுத் திட்டங்களையும் முடக்குமாறு சிலாங்கூர் மாநில அரசுக்கு நாங்கள் கடிதம் எழுதினோம். NRD-யிடமிருந்து ஆலோசனையைப் பெற்ற பிறகு, 245 தொழிலாளர்களுக்கு தரை  வீடுகள் கட்டும் வகையில் நிலத்தின் பரப்பளவை 12.75 ஏக்கரிலிருந்து 20 ஏக்கராக அதிகரிக்கக் கோரி, செப்டம்பர் 21, 2017 அன்று வீட்டுவசதி மற்றும் உள்ளூர் அரசாங்க அமைச்சரும் அதிபருமான வின்சென்ட் டானுக்கு கடிதம் எழுதினோம்.

திடீரென்று, 14-வது பொதுத் தேர்தல் (PRU-14) நெருங்கியிருந்த 2018 மே மாதத்தில், அந்தக் காலக்கட்டத்தில்  வீடு மற்றும் ஊராட்சி அமைச்சராக இருந்த நொ ஓமர் (Noh Omar),  தஞ்சோங் காராங்கில் (Tanjung Karang) அமைந்திருந்த “பிபிஆர் பெஸ்தாரி ஜாயா (PPR Bestari Jaya)” என்ற ஒரு வீட்டு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இது தெளிவாகவே ஒரு தேர்தல் விளம்பர நாடகமாக இருந்தது, ஏனெனில் அப்போது பகாத்தான் ஹராபான் (PH) ஆட்சியில் இருந்த சிலாங்கூர் மாநில அரசு அந்தத் திட்டம் பற்றிய எந்தத் தகவலையும் அறியவில்லை. தேர்தல் முடிந்ததும்,  வீடு மற்றும் ஊராட்சி அமைச்சராக இருந்த  Zuraida -வுக்கு  நாங்கள்,  நோ ஓமர் முன்மொழிந்த அந்த அடுக்குமாடி வீட்டு (flat) திட்டத்தை ரத்து செய்யுமாறு எழுத்து வடிவில் கோரிக்கை அனுப்பினோம்.

இறுதியாக, 2019 பிப்ரவரி 26 அன்று, எங்கள் குழுவிற்கு, 2019 ஜனவரி 11 தேதியிட்ட பெர்ஜாயா (Berjaya) நிறுவனத்தின் கடிதம் கிடைத்தது. அந்தக் கடிதத்தில், அவர்கள் 20 ஏக்கர் நிலப்பரப்பை தரைத்தள  வீடுகள் கட்டுவதற்காக ஒதுக்க முடியும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்தத் தடை தீர்க்கப்பட்ட பிறகு, ஜுரைடாவிடமிருந்து RM96.5 மில்லியன் பட்ஜெட் இருப்பதாகவும், ஆனால் டெண்டர் செயல்முறை போன்ற புதிய சிக்கல்கள் எழுந்ததாகவும் அறிந்துகொண்டோம். பின்னர் நமது நாடு COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டது, மேலும் இந்த எஸ்டேட்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது.



பின்னர், வீட்டுகள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டை பெற நாங்கள் பல கடிதங்களை எழுதினோம், ஆனால் எந்தப் பதிலும் வரவில்லை. ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் பொருளாதார திட்டமிடல் பிரிவு (EPU), வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சகம் (KPKT), மற்றும் நிதி அமைச்சருக்கு இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை கடிதங்களை அனுப்பினோம், ஆனால் அது ஒருபோதும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறையின் புதிய அமைச்சரான Nga Kor Ming, ஆரம்பத்தில் மிகவும் அலட்சியமாக இருந்தார், குழுவின் எந்த கடிதங்களுக்கும் பதிலளிக்கவில்லை. 20 ஏக்கர் பெர்ஜெயா நிலம் குறித்து கணபதிராவ் நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கும் அமைச்சகம் அலட்சியமாகவும் உறுதிபாடில்லாமலும் பதில் அளித்தது. கடந்த மாநிலத் தேர்தலின் போது, ​​தற்போதைய கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான மறைந்த Lee Kee Hiong, ஆகஸ்ட் 31, 2023 க்கு முன்பு அமைச்சருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தார், ஆனால் அதுவும் நடக்கவில்லை.

பல உள்ளூர் பக்காத்தான் ஹரப்பான் (PH) தலைவர்கள், குறிப்பாக PKR உறுப்பினர்கள், எங்களைச் சந்தித்திருந்தபோதிலும், அவர்கள் அமைச்சருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய முடியவில்லை. நாங்கள் அமைச்சருடன் நேரடியாக ஒரு சந்திப்பு வேண்டியிருந்தது, ஏனெனில் நிலம் ஏற்கனவே கிடைத்திருந்தது — எங்களுக்கு தேவையானது வீட்டுமனைகள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு மட்டுமே. 

நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில்,  சிலாங்கூரின் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர் Papparaidu, தன்னுடன் நெருக்கமாக உள்ள ஒரு  ஒரு புதிய குழுவை அமைக்க முயன்றார் மற்றும் ஒரு புதிய ஆய்வையும் மேற்கொள்ள விரும்பினார். இதன் மூலம், பல ஆண்டுகளாக இந்தப் பிரச்சினையில் உழைத்து வந்த அசல் குழுவை புறக்கணிக்கவும் அவர் முயன்றார்.

இதைக் கேள்விப்பட்டதும், தோட்டத் தொழிலாளர்கள் மார்ச் 22, 2024 அன்று மந்திரி பெசாருக்கு எதிர்ப்புக் கடிதம் ஒன்றை அனுப்பினர். சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில், ஆட்சிக்குழு  உறுப்பினர் (எக்ஸ்கோ) தனது  நெருங்கிய நண்பர் ஒருவரை, நியமித்ததாக கூறினார்.  இவ்விவகாரம் தொடர்பில்  எங்கள் குழு கவலைக்குள்ளாகியுள்ளது, ஏனெனில் சம்பந்தப்பட்ட அந்நபர் முன்பே வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சித்தவர் மற்றும் அவர் புதிய தோட்ட உரிமையாளரின் கீழ் ஒப்பந்தப் பணியிலும் இருந்தவர்.


இடைத்தேர்தலால் காப்பாற்றப்பட்டது


கோலா குபு பாரு இடைத்தேர்தலுக்கு முன்பு, நிலைமை முற்றிலும் பதட்டமாகிவிட்டன, நாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தோம். பல அரசியல்வாதிகள் எங்களிடம் ஆவணங்களைக் கேட்டுக்கொண்டே இருந்தனர், ஆனால் ஒருவரும் அமைச்சருடன் அல்லது மந்திரி பெசாருடன் சந்திப்பு ஏற்பாடு செய்ய முடியவில்லை. புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் (எக்ஸ்கோ) ஒரு புதிய குழுவைத் தொடங்கினர், அதிக வேலைகளைச் செய்த உள்ளூர் குழுக்களைத் தவிர்த்து முழு செயல்முறையையும் மீண்டும் தொடங்க விரும்பினர்.

இந்த நம்பிக்கையற்ற சூழ்நிலையைப் பார்த்தபோது, இந்தப் போராட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க இரண்டு வழிகளை நாங்கள் யோசித்தோம்.  எங்களின் மனதில் தோன்றிய யோசனைகள் —

ஒரு பக்கம், அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் KPKT அலுவலகத்தை ஆக்கிரமிப்பது, மறுபக்கம், மக்களை நாடாளுமன்றத்திற்குத் திரட்டுவது என்பதுதான். அந்தச் சமயத்தில்தான், இடைத்தேர்தல் நடைபெறப்போகிறது என்ற செய்தி திடீரென வந்தது, அது முழு சூழ்நிலையையும் மாற்றியது.


நாங்கள் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தினோம்.
அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது — கடந்த வருடங்களைப் போல இந்த முறை அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்ற அனுமதிக்க மாட்டோம் என்பதுதான்.

அதனால், கூட்டத்தில் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த கூடாரங்களை அமைக்க வேண்டும், மேலும் அரசியல் கட்சிகள் அமைக்கும் கூடாரங்களில் அமரக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.

அதேபோல், எந்த அரசியல்வாதி நம்மிடம் ஆதரவை நாடி வந்தாலும், அவரிடம்

  • அவர்களின் வேட்பாளர் நம்முடைய கோரிக்கையை உறுதிப்படுத்தும் சத்தியப்பிரமாணக் கடிதத்தில் (SD) கையெழுத்திட வேண்டும்,

  • மேலும் நாங்கள் தயாரித்த பிரசுரத்தைக் கவனமாகப் படிக்க வேண்டும்
    என்பதை நாம் வலியுறுத்துவோம் என தீர்மானித்தோம்.

ஆளும் கட்சியிலிருந்து வருபவர்களுக்கு, மந்திரி பெசார் அல்லது வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சரைச் சந்திக்க விரும்புகிறோம் என்ற செய்தியை  தெளிவாகச் சொல்ல முடிவு செய்தோம்.


2024 ஏப்ரல் 24 அன்று, எங்கள் கோரிக்கைகளையும் நிபந்தனைகளையும் விளக்குவதற்காக ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. 5 தோட்டங்களில் இருந்து, Nigel Gardner மற்றும் Bukit Tagar என்ற இரண்டு தோட்டங்கள் மட்டுமே குவாலா குபு பாரு தேர்தல் தொகுதிக்குள் வந்தன. அந்த செய்தியாளர் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடந்தது — மொத்தம் 5 தோட்டங்களிலிருந்து சுமார் 60 தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்துவதற்காக பங்கேற்றனர். மாற்றாக, மாநில அரசாங்கத்தின் ஒரு EXCO உறுப்பினர் எதிர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார், ஆனால் அதில் Sungai Tinggi தோட்டத்திலிருந்து ஒருவர் மட்டுமே கலந்து கொண்டார்.


சிலர் சத்தியப்பிரமாணக் கடிதத்தை (SD) நையாண்டி செய்திருந்தாலும், அது உண்மையில் அரசியல்வாதிகளை அந்த SD-யில் குறிப்பிடப்பட்ட சிறப்பான கோரிக்கைகளை படிக்கவும் கவனிக்கவும் கட்டாயப்படுத்தியது. சில செய்தி ஊடகங்களும் இந்த விஷயத்தை முன்னிறுத்தின; மேலும் SD-க்கு கையெழுத்திடுவது என்ற நடைமுறை தானாகவே புதிய ஒரு முன்னேற்றமான நடவடிக்கையாக அமைந்தது. தேர்தல் பிரச்சாரம் தொடங்கியபோது, முன்பு "அமைதியான" என கருதப்பட்ட தோட்ட தொழிலாளர்களிடமிருந்து வாக்கு பெறுவது இலகுவல்ல என்பது வெளிப்பட்டது.

இரு முக்கியக் கட்சிகளும் தோட்டப் பகுதிகளில் தங்களது கொடி மற்றும் பதாகைகளை நிறுவுவதில் சிக்கல்களை அனுபவித்தனர், ஏனெனில் அங்குள்ள இளைஞர்கள் அவற்றை களைந்து விடவோ அல்லது வீடமைப்பு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அவற்றை அகற்றுமாறு கேட்கவோ செய்தனர். அரசியல்வாதிகள் இரு தரப்பிலும் ஒரே மாதிரியான  அணுகுமுறையை சந்தித்தனர். இது உண்மையில் ஒரு மக்கள் அதிகாரமடைதல் (empowerment) செயலாக இருந்தது.

பல பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோர் Nigel Gardner தோட்டத்திற்குள் சென்றபோது தொழிலாளர்களிடமிருந்து சூடான வரவேற்பை பெற்றனர் — அந்தச் செய்தி வேகமாக பரவியது. இது ஒரு இனிமையான விஷயம் அல்ல. பரிசுப் பெட்டிகள் கொடுத்தல் அல்லது பொழுதுபோக்கு ஏற்பாடு செய்தல் உள்ளிட்டவை வாக்குகளை உறுதி செய்யாது, ஏனெனில் மக்கள் தங்களது அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை மட்டுமே விரும்புகிறார்கள்.


அதற்குப் பிறகு, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கே இந்தச் செய்தி சென்றடைந்தது. பலரும் இந்த விஷயத்தை அமைச்சர், மந்திரி பெசார் மற்றும் பிரதமரிடம் எடுத்துரைத்தனர். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அன்வாரே அமைச்சர் Nga Kor Ming-விடம் அறிவுறுத்தியதாக குணராஜ் (ADUN) எங்களிடம் கூறினார். முந்தைய தேர்தல்களில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும், களத்தில் உள்ள உணர்வையும் அமைச்சர் Nga Kor Ming புரிந்துகொண்டதால், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்புவதாகவும் மற்றொரு வட்டாரத்திலிருந்து கேள்விப்பட்டோம். ஏனெனில் அவர் முன்தைய தேர்தல்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும்மக்களின் தற்போதைய உணர்ச்சியையும் (sentiment di lapangan) நன்றாகப் புரிந்துகொண்டிருந்தார்.


இறுதியில் அறிவிப்பும் சாதனையும்

இந்த வீட்டு பிரச்சினைக்கான தீர்வு குறித்து இறுதியாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. நீண்டநாள்  காத்திருப்பு (suspense) முடிவடைந்தது. ஒரு வேட்பாளர்கூட சத்தியப்பிரமாணக் கடிதத்தில் (SD) கையொப்பமிடவில்லை, ஆனால் அமைச்சரின் அறிவிப்பும், மந்திரி பெசாரின் ஆதரவும் தற்போது எங்களுக்கான உத்தரவாதமாக   உள்ளது. பலர் இதை ஒரு தேர்தல் நாடகமாக (gimik pilihan raya) கூறினாலும், நாங்கள் நிலம், வீட்டு பரப்பளவு, நிதி ஆதாரம் போன்ற பல அம்சங்களை மீண்டும் மீண்டும் சரிபார்த்தோம் — அனைத்தும் உண்மையானவையே என்று தெரிந்தது. JPN-ஐச் சேர்ந்த டத்தோ' என். ஜெயசீலனின் கூற்றுப்படி, இந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.



நாங்கள் நன்றி தெரிவிக்க வேண்டிய பலர் உள்ளனர்.
இந்தத் தோட்டத் தொழிலாளர்களின் நிலையை கேள்விக்குட்படுத்தி, அதனை சமூகத்தில் வெளிப்படுத்திய ஊடகங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல், அரசு கட்சியிலுள்ள சில அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அழுத்தம் கொடுத்தனர்; எதிர்க்கட்சியும் இந்தப் பிரச்சினையைத் தேர்தல் பிரசாரத்திற்காக முன்வைத்தது. சிறப்பாக குறிப்பிட வேண்டியது — JPN தலைமை இயக்குநர் டத்தோ என். ஜயசீலன், அவர் எங்கள் பல கேள்விகளுக்கும் மிகுந்த பொறுமையுடன் ஆலோசனையும் உதவியும் வழங்கினார்.


தேர்தல் பிரச்சாரத்தின் முதல் வார இறுதியில், நல்ல செய்தி கசியத் தொடங்கியபோது, ​​பல சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் பெருமை பெறத் துடித்தனர். மே 11, 2024 க்குப் பிறகு, கோல குபு பாருவில் விஷயங்கள் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நான் மக்களிடம் சொன்னேன். தொழிலாளர்கள் விஐபிகளாக பார்ப்பதை நிறுத்திவிடுவார்கள். வீட்டுக்கான unit-களை எவ்வாறு வாங்குவது, பெயர் பட்டியலை இறுதி செய்வது மற்றும் பிற விஷயங்களை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பது குறித்து நாம் இன்னும் விவாதங்களை நடத்த வேண்டும்.

நாங்கள் எப்போதும் சொல்வது போல், இந்தப் போராட்டத்தில் எண்ணற்ற மணிநேரங்களைச் செலவழித்து போராடிய குழுக்களும் தொழிலாளர்களும்தான் இறுதிப் பாராட்டுக்குப் பாத்திரமானவர்கள். வீட்டுவசதிக்கான இந்தப் போராட்டம் சுமார் கால் நூற்றாண்டு காலம் (25 ஆண்டுகள்) நீடித்தது, ஆனால் இது இந்த நிலத்தில் கடுமையாக உழைத்த மூன்று முதல் நான்கு தலைமுறையினருக்கான நியாயமான இழப்பீடாகும், மேலும் அவர்கள் நமது நாட்டின் செழிப்பு மற்றும் வளத்திற்கு அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் ஒரு வடிவமாகும்.

இது ஒரு முக்கியமான வெற்றி ஆகும், மேலும் இது மற்ற தோட்டத் தொழிலாளர்கள் சமூகங்களின் போராட்டங்களுக்கு ஒரு ஊக்கியாக அமையக்கூடும்.


எழுதியவர் :                                                                                                                    எஸ்.அருட்செல்வன்                                                                                                                  மலேசிய சோசலிச கட்சியின் (PSM) தேசிய துணைத் தலைவர்

Saturday, October 25, 2025

கம்போங் பாப்பான் – இது ஒரு மோசடியா?

 


பாண்டாமாரான், கிள்ளானில் அமைந்துள்ள கம்போங் பாப்பான் ஊர்வாசிகள் 1939 ஆம் ஆண்டு, அதாவது சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இங்கு வசித்து வருகின்றனர். தொடக்கத்தில் அவர்கள் கம்போங்  பாரு (புதிய கிராமம்) குடியிருப்பாளர்களாகக் கருதப்பட்டனர். பின்னர் 1968 முதல் 1989 வரையிலான காலகட்டத்தில் தற்காலிக குடியேற்ற அனுமதி (TOL) பெற்றிருந்தனர்.

ஆயினும், தற்போது மேம்பாட்டு நிறுவனம் மற்றும் நீதிமன்றத்தினால் அவர்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.

 எளிய முறையில் முக்கிய காலவரிசை விவரங்கள்:

1992 – மாநில அரசு, குடியேற்றக்காரர்களுடன் இணைந்து நில அளவீடு மற்றும் திட்டமிடல் பணிகளைத் தொடங்கியது. ஒவ்வொரு குடியேற்றக்காரரும் நில அளவீட்டுக்காக RM 70 செலுத்தினர். இந்த நடவடிக்கை அவர்கள் பின்னர் நில உரிமை பெறுவதற்கான அடிப்படையாகும் என்று அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.

1995 –  சிலாங்கூர் மாநில அரசு இந்த நிலத்தில் 95 ஏக்கர் நிலத்தை பேங்க் நெகாராவின் கீழ் உள்ள TPPT (Tabung Projek Perumahan Terbenkalai) க்கு மாற்றியது, இது குடியேறிகளுக்கு வீடுகளைக் கட்டுவதை நோக்கமாகக் கொண்டது. TPPT புதிய நில உரிமையாளராக மாறியது.

2007 –  TPPT, Melati Ehsan Consolidated Sdn. Bhd. என்ற மேம்பாட்டு நிறுவனத்தைக் கொண்டு வந்து, குடியேறிகளுக்கு வீடுகளைக் கட்டும் நோக்கத்துடன் மீண்டும்,  அதே நிலத்தின் மீது POA  (Power of Attorney வழங்கியது. 

2020 – COVID-19 காலத்தில், Melati Ehsan  நிறுவனம் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியேற்றக்காரர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தது; அவர்களை சட்டவிரோத குடியேற்றம் செய்தவர்கள் என குற்றம் சாட்டியது.

2024 – அந்நேரத்தில் , Melati Ehsan  நிறுவனம் 11 ஏக்கர் நிலத்தை சிலாங்கூர் அரசாங்கத்திடம் திருப்பித் தர திட்டமிட்டனர், இதனால் மாநில அரசு அதே குடியேறிகளுக்கு வீடுகளைக் கட்டித் தர முடியும்.


இந்தச் சம்பவங்கள் தொடர்ச்சியாக அமைந்த விதத்தைப் பார்த்தால், நாம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது —
சிலாங்கூர் மாநில அரசு, ஏன் இந்நிலத்தை TPPT-க்கு வழங்கியது?
அதன் பின்னர் TPPT, Melati Ehsan என்ற மேம்பாட்டு நிறுவனத்தை ஏன் இணைத்தது? இறுதியில், அதே நிறுவனமே நிலத்தின் ஒரு சிறிய பகுதியை மீண்டும் மாநில அரசுக்கு ஒப்படைக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?

TTDI மற்றும் Melati Ehsan அடிக்கடி முன்வைக்கும் ஒரு காரணம் என்னவெனில் —
குடியேற்றக்காரர்கள் “தந்திரமானவர்கள்/ஏமாற்றுபவர்கள்” என்றும்
முன்பே RM 42,000 மதிப்புள்ள குறைந்த விலை வீட்டு unitகள் வழங்கப்பட்டன என்றும் கூறப்படுவது. இந்தக் கூற்றை வலுவாக நாங்கள் மறுக்கிறோம்.  குறைந்த விலை வீட்டு ஒதுக்கீடுகள் அனைத்தும் சிலாங்கூர் மாநில வீடு மற்றும் சொத்து வாரியம் (LPHS)- ஆல் நிர்வகிக்கப்படுகின்றன. உண்மையில், குடியேற்றக்காரர்கள் இரட்டை கோரிக்கை செய்திருந்தால், அது தொடர்பான ஆதாரம் நிச்சயமாக இருக்கும் — அப்படி இருந்தால், அவர்கள் வீட்டு ஒதுக்கீட்டிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதற்கு மேலாக, மாநில அரசு மேற்கொண்ட  ஓர் ஆய்வில் 211 குடியேற்றக்காரர்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் மந்திரி பெசார்களும், ஒவ்வொரு குடியேற்றக்காரருக்கும் சுமார் RM 99,000 மதிப்பில் தரைத்தள வீடுகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர்.


2018 பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற MTES கூட்டம்,
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அலுவலகத்தின் தலைமையில் நடைப்பெற்றது, இதன் முடிவில் 181 நபர்கள் தான் உண்மையான முதன்மை குடியேற்றக்காரர்கள் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த எண்ணிக்கையில்:

  • 123 பேர்
    கம்போங் பாப்பான் முதன்மை குடியேற்றக்காரர்கள்;
    இவர்களுக்கு 20' x 70' அளவிலான தரைத்தள வீடுகள்
    RM 99,000 விலையில் வழங்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

  • 58 பேர்
    Selangorku வகை B (800 சதுர அடி) வீடுகள்
    RM 99,000 விலையில் வழங்கப்படும்.

  • சுமார் 30 குடும்பங்கள்
    ஏற்கனவே உள்ள தள அமைப்பைக் கொண்ட வீட்டு அமைப்புகளுடன் இருப்பவர்கள்; இவர்களுக்கு நடுத்தர விலை வீடுகள்
    (சந்தை விலைக்கு ஏற்ப) அல்லது Selangorku வகை B வீடுகள் வழங்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.


உயர் நீதிமன்றம் கட்டுமான நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்த போதிலும், இந்த வழக்கு இன்னும் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. இந்த பிரச்சினையில் குடியேறிகள் இங்கு பாதிக்கப்பட்டவர்கள் என்று தெளிவாக  நாங்கள் நம்புவதால், தீர்ப்புக்கான எழுத்துப்பூர்வ காரணங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

சிலாங்கூர் மாநில அரசின் நிலைப்பாட்டைப் திரும்பிப் பார்த்தால்:
முன்னாள் BN ஆட்சியின் கீழ், முதல்வர் Khir Toyo “Zero Squatter Policy” என்ற கொள்கையை அறிமுகப்படுத்தினார். ஆனால் அதன் பின்னர், பகாத்தான் ராக்யாட் அதனைத் தொடர்ந்து பகாத்தான் ஹரப்பான் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, புதிய கொள்கை அமல்படுத்தப்பட்டது —அதாவது, குடியேற்றவாசிகள் தங்கள் வீடுகளை இடிப்பதற்கு முன்பு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, மாற்று வீடுகள் வழங்கப்பட்ட பிறகே அவர்களின் வீட்டுக்கள் இடிக்கப்பட வேண்டும். இது B40 சமூகத்திற்கு மிகவும் மனிதாபிமான அணுகுமுறையாகும். 


தற்போது இந்நிலையைத் தீர்க்க மாநிலத்தின் தற்போதைய முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன். அதோடு கம்போங் பாப்பான் குடியேற்றக்காரர்களின் போராட்டத்தில் DAP நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ADUN-கள் நீண்ட காலமாகச் செயல்பட்டு வருகின்றனர். கம்போங் பாப்பானின் பல முன்னாள் தலைவர்களும் DAP கட்சியின் உறுப்பினர்களாக உள்ளார்கள். அப்படியிருக்கையில் இன்று, அவர்கள் மேம்பாட்டு நிறுவனத்துக்கு முன்பாக மென்மையான அணுகுமுறையில் இருக்கிறார்களா? இவ்வாறு கேட்பதற்கான காரணம் —  மேம்பாட்டு நிறுவனம் அவர்கள் விரும்பியபடி செயல்படுவதாக தோன்றுவதால் நான் இதைச் சொல்கிறேன்.


கடந்த வியாழக்கிழமை மந்திரி பெசார் அலுவலகம் முன்பு நடைபெற்ற எதிர்ப்பு போராட்டமும், மாநில நிர்வாகக் கவுன்சிலர் YB போர்ஹான் அவர்களுடனான சந்திப்பும், சிறு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. YB போர்ஹான் வழங்கிய உறுதிமொழிப்படி, தற்போது குடியிருந்து வரும் வீடுகள் இடிக்கப்படாது என்றும், குடியேற்றத்தாருக்கான மாற்று வீடு தீர்வுகள் குறித்து மேம்பாட்டு  நிறுவனத்துடன் நடவடிக்கைகள் / கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன என்றும் கூறினார்.


எனது உறுதியான வேண்டுகோள் —
குடியேற்றக்காரர்கள் எந்த வகையிலும் அச்சுறுத்தப்படவோ,
அடக்குமுறைக்குள்ளாக்கப்படவோ கூடாது. 
அவர்களின் உரிமைகளே முதன்மை பெற வேண்டும்; மேம்பாட்டு நிறுவனத்தின் லாபநோக்கங்களல்ல.


எழுதியவர் :                                                                                                                    எஸ்.அருட்செல்வன்                                                                                                                              PSM & Gabungan Marhaen இன் துணைத் தலைவர்                                                                    25 அக்டோபர் 2025

 

சமூக மற்றும் கல்வி பிரச்சனைகளை சமூக நீதி அடிப்படையிலான நடவடிக்கைகளால் தீர்க்க வேண்டும் !

பிஎஸ்எம் அறிக்கை – 4 நவம்பர் 2025 சமூக மற்றும் கல்வி பிரச்சனைகளை சமூக நீதி அடிப்படையிலான நடவடிக்கைகளால் தீர்க்க வேண்டும் நமது சமூகம் அதிகரி...