6 அம்ச கோரிக்கையை முன்வைத்து பேராக் Ayer Kuning மாநிலத் தேர்தல் அறிக்கையை அறிமுகம் செய்தார் மக்கள் வழக்கறிஞரும் தேர்தல் வேட்ப்பாளருமான தோழர் பவாணி.
முன்னதாக உள்ளூர் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கண்டறிந்து அதன் பின்னரே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.
உள்ளூர்
மக்களின் கோரிக்கை
1. ஜாலான் கம்பாரில் இருந்து தெலுக் இந்தான் வரையில் புதிய சாலை அமைக்க வேண்டும்.
2. முழுநேர மருத்துவரை நியமித்து, கிராமப்புற மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும்.
3. பணப்பொறி (ஏடிஎம் இயந்திரம்) & அஞ்சலகச் சேவைகளை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
4. மின்சாரத் தடங்கல் சிக்கலுக்குத் தீர்வு காண்பதோடு, தொலைத்தொடர்பு வசதிகளையும் மேம்படுத்தவும் வேண்டும்.
5. பொதுப்
பேருந்து சேவைக்குப் `பேராக் திராண்சிட்`
பொறுப்பேற்க வேண்டும்.
6 அம்ச கோரிக்கையும் விளக்கமும்
1. வேலை
உத்திரவாதத் திட்டம்
·
வேலை
வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்
· பராமரிப்பு மற்றும் சமூகப் பணிகளில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்
2. உணவு
உத்தரவாதம்
·
உணவு
உற்பத்தியாளர்களை (விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் & மீனவர்கள்) அவர்கள் இடத்திலிருந்து
வெளியேற்ற வேண்டாம்.
· உணவு விலையைக் கட்டுபடுத்த வேண்டும் & உணவு உற்பத்தியாளர்களுக்கு மானியங்கள் வழங்க வேண்டும்.
3. சமூகப்
பாதுகாப்பிற்கு அதிகாரமளித்தல்
·
அனைத்து
மூத்தக் குடிமக்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
· அனைத்து
முறைசாரா துறை (குத்தகை / பகுதி நேரம் / நிரந்தரம் அற்ற) தொழிலாளர்களுக்கும் சொக்சோ
பாதுகாப்பை வழங்க வேண்டும்
4. மக்களுக்கான வீடுகள்
·
பி40
& எம்40 மக்களுக்கு மலிவு விலையில் வீடுகளைக் கட்டும் இலாப நோக்கமற்ற சிறப்பு வீட்டுவசதி
வாரியம்.
5. காலநிலை நெருக்கடியைக் கையாளுதல்
கடல் நீர்மட்ட உயர்வு, வெள்ளம், வறட்சி & வெப்பம் போன்று, இன்னும் பிற காலநிலை நெருக்கடி விளைவுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, மக்கள், குறிப்பாக விளிம்புநிலை சமூகங்கள் தயார் நிலையில் இருப்பதற்கான வசதிகள் மற்றும் திறனை அதிகரிக்க வேண்டும்.
6. தேசிய
நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம்
·
உள்ளூர்
ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், உள்ளூர் மக்கள் மீதான பொறுப்புக்கு உத்தரவாதம் அளிக்கவும்
உள்ளூராட்சி தேர்தலை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.
K இன்று KLINIK DESA AYER KUNING -கில், இன்று தோழர் பவாணி தனது ஆதரவாளர்களுடன் அவ்வறிக்கையை வெளியிட்டார்.
No comments:
Post a Comment